search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tesla"

    • இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் வெளியிட்டது.
    • இதன்மூலம் இந்தியாவில் டெஸ்டா நிறுவனம் கால் பதிப்பது உறுதியாகிவிட்டது.

    இந்தியாவில் நுழைய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் வரி விகிதம் காரணமாக டெஸ்லா பின்வாங்கியது. சமீபத்தில் கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. மேலும் குறைந்த பட்சம் 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் இந்தியாவில் முதலீடு மற்றும் தொழிற்சாலை அமைக்கும் மின்சார வாகன நிறுவனங்களுக்கு இறக்குமதி வரியை 15 சதவீதம் வரை குறைக்கப்படும் என இந்திய அரசு தெரிவித்திருந்தது.

    இதற்கிடையில் 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது பிரதமர் மோடி எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார்.

    இந்நிலையில் இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் 'லிங்க்ட் இன்' தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் மும்பையிலும், எஞ்சிய பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மும்பையில் பணியாற்ற வேண்டும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டு உள்ளது.

    இதன்மூலம் டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் டெஸ்லா அமெரிக்காவின் வரி விதிப்பை தவிர்க்க இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் இருந்தால் அது மிகவும் நியாயமற்றது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறுகையில் "மின்சார வாகனம் தயாரிக்கும் டெஸ்லா, அமெரிக்காவின் வரி விதிப்பை தவிர்ப்பதற்காக இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு திட்டம் இருந்தால் அது மிகவும் நியாயமற்றது" எனத் தெரிவித்துள்ளார்.

    கடந்த வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின்போது, கார்கள் மீதான இந்தியாவின் அதிக வரி தொடர்பாக வலியுறுத்தியதை நினைவு கூர்ந்த டொனால்டு டிரம்ப், விரைவில் முன்னதாக உள்ள வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கிச் செயல்படவும், வரிகள் தொடர்பான மோதலைத் தீர்க்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

    • 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றார்.
    • கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.

    இந்தியாவில் நுழைய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறது.

    ஆனால் வரி விகிதம் காரணமாக டெஸ்லா பின்வாங்கியது. எனவே சமீபத்தில் கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.

    இதற்கிடையில் 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்குடன் மோடி சந்திப்பு நிகழ்ந்தது.

    இந்நிலையில் இந்தியாவில் நுழைவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் 'லிங்க்ட் இன்' தளத்தில் வெளியிட்டுள்ளது.

    அதில் ஐந்து வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் மும்பையிலும், எஞ்சிய பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மும்பையில் பணியாற்ற வேண்டும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டு உள்ளது.

    இதன்மூலம் டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பிரதமர் மோடியை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் சந்தித்து பேசினார்.

    வாஷிங்டன்:

    பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர், அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் துளசி கப்பார்டை சந்தித்துப் பேசினார். அப்போது பயங்கரவாதம் , பாதுகாப்பு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    அடுத்து, பிரதமர் மோடியை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் சந்தித்துப் பேசினார்.

    இந்நிலையில், எக்ஸ் வலைதளம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

    இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவையை தொடங்கும் திட்டம் மற்றும் இந்தியாவில் இருந்து மின்சார வாகனங்களுக்கான பொருட்களை வாங்குவது அதிகரித்துள்ள சூழலில் அதுபற்றி விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    எலான் மஸ்க்கை பிரதமர் மோடி சந்திப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2015ம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த மோடி, சான் ஜோஸ் நகரில் எலான் மஸ்க்கை சந்தித்ததுடன் அவரது டெஸ்லா நிறுவனத்தை சுற்றிப் பார்த்தார்.

    இதைத் தொடர்ந்து அவர் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச உள்ளார்.

    • டெஸ்லாவுக்கு எதிராக பில்கேட்ஸ் ஷார்ட் பொசிஷனை அதிக அளவில் வைத்துள்ளார்.
    • டெஸ்லா நிறுவனத்தால் 1.5 பில்லியன் டாலரை இழந்ததாக கூறினார்

    உலக பணக்காரர்களான மைகோரோசாப்ட் நிறுவர் பில் கேட்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவர் எலான் மஸ்க் நீண்ட நாள் பகையாளிகள். பில் கேட்ஸை தனது கருத்துக்களால் அவ்வப்பொது எலான் மஸ்க் சீண்டுவது வழக்கம்.

    டிரம்ப் ஆதரவால் தற்போது அமெரிக்க அரசியலில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ள எலான் மஸ்க் சொத்துமதிப்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. எனவே தனக்கு சொந்தமான எக்ஸ் தளத்தில் மீண்டும் பில் கேட்ஸை சீண்டியுள்ளார்.

     

    'டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எதிராக பில்கேட்ஸ் முதலீடு செய்துள்ளார். ஆனால் டெஸ்லா உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுக்கும்பட்சத்தில் அது பில்கேட்ஸை கூட திவாலாக்கி விடும்' என்று எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

    டெஸ்லாவுக்கு எதிராக பில்கேட்ஸ் ஷார்ட் பொசிஷனை அதிக அளவில் வைத்துள்ளார். பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகள் சரிய போகிறது என்று கூறி அந்த விஷயத்தில் முதலீடு செய்வதே ஷார்ட் பொசிஷன் ஆகும்.

    டெஸ்லா நிறுவனத்தால் 1.5 பில்லியன் டாலரை இழந்ததாக கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு பில் கேட்ஸ் டெஸ்லா பங்குகளை ஷார்ட் செய்தார்.

    இதன்படி டெஸ்லா திவாலாகும்பட்சத்தில் அது பில் கேட்ஸ்-கு அதிக லாபத்தை வழங்கும். இதற்கு, எலான் மஸ்க் கடுமையான எதிர்வினையாற்றினார். அதிலுருந்து இருவருக்குமிடையில் பகை வளர்ந்தது.

     

     

    இந்த நிலையில்தான், தற்போது தனக்குள்ள செல்வாக்கை பறைசாற்றும் விதமாக டெஸ்லா திவாலாகாமல் ஒரு வேலை அதற்கு நேர்மாறாக உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக உயர்ந்தால் அதனால் பில் கேட்ஸ் கூட சொத்துக்களை இழந்து திவாலாகி விடுவார் என்று மஸ்க் தம்பட்டம் அடித்துள்ளார்.

    தற்போதைய நிலவரப்படி மைக்ரோசாப்டின் சந்தை மூலதனம் அல்லது சந்தை மதிப்பு $3.316 டிரில்லியன் ஆகும். அதேவேளை டெஸ்லாவில் சந்தை மதிப்பு $1.251 டிரில்லியன் ஆகும்.  

    • எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் என்ற இணைய சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
    • அமெரிக்க அதிபர் தேர்தலில் எலான் மஸ்க் நேரடியாகவே ட்ரம்பிற்கு ஆதரவு தெரிவித்தார்.

    உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும், எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் விரைவில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியர்களின் டேட்டா இந்தியாவிற்குள் இருக்க வேண்டும் மற்றும் பாதுகாப்பு தேவைகள் தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு ஸ்டார்லிங்க் ஒப்புக்கொண்டுள்ளது எனவும் இதனால் இந்திய தொலைத்தொடர்புத் துறையிடம் ஸ்டார்லிங்ககின் விண்ணப்பம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

    அதே சமயம் ஸ்டார்லிங்க் இந்த ஒப்பந்தத்தை முறையாக இந்திய தொலைத்தொடர்பு துறையிடம் தற்போது வரை சமர்ப்பிக்கவில்லை.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்ற பிறகு, எலான் மஸ்க்கின் கோரிக்கையை இந்தியா அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் எலான் மஸ்க் நேரடியாகவே ட்ரம்பிற்கு ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கனடாவில் டெஸ்லா கார் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.
    • விபத்தினால் டெஸ்லா காரின் பேட்டரி தீப்பிடித்தது.

    கனடாவின் டொராண்டோ அருகே டிவைடரில் மோதிய டெஸ்லா எலக்ட்ரிக் கார் தீப்பிடித்து எரிந்ததில் காரில் பயணித்த 4 இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

    குஜராத்தை சேர்ந்த கேட்டா கோஹில் (30) மற்றும் நில் கோஹில் (26) ஆகியோர் மேலும் 2 நபர்களுடன் டெஸ்லா எலக்ட்ரிக் காரில் பயணம் செய்துள்ளனர். அப்போது டிவைடரில் டெஸ்லா கார் மோதியுள்ளது. அதனால் டெஸ்லா காரின் பேட்டரி தீப்பிடித்தது. இதனால் சம்பவ இடத்திலேயே 4 பேரும் உயிரிழந்தனர்.

    இந்த விபத்தில் கடுமையான காயங்களுடன் உயிர் பிழைத்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்காக காரின் கண்ணாடிகளை உடைக்க சிலர் முயன்றதாக இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

    • டெஸ்லா நிறுவனத்தின் துணைத்தலைவர் ஸ்ரீலா வெங்கடரத்னம் அந்நிறுவனத்தில் இருந்து விலகினார்.
    • எலான் மாஸ்க்கிடம் வேலை பார்ப்பது இதயத்திற்கு நல்லதல்ல என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    வாஷிங்டன்:

    உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்சின் சி.இ.ஓ.வாக உள்ளார். எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது.

    டெஸ்லா கார் உற்பத்தி நிறுவனத்தின் துணை தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீலா வெங்கடரத்னம், கடந்த 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இவரது வருகைக்கு பின் ஆண்டு வருமானம் கணிசமாக உயர்ந்தது.

    இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் துணை தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் என ஸ்ரீலா வெங்கடரத்னம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரிவதை ஆரம்பத்தில் பெருமையாகக் கருதினேன். ஆனால் எலான் மஸ்கிடம் வேலை செய்வது இதயத்துக்கு நல்லதல்ல. மயக்கம் வரும் அளவுக்கு அங்கு பிரஷர் ஏற்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

    சமீப காலமாக டெஸ்லா நிறுவனத்தில் இருந்து உயர் பதவியில் உள்ளோர் விலகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இதற்கு 5'7 முதல் 5'11 வரை உயரம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • அசைவுகளைப் பிரதியெடுக்கும் மோஷன் கேப்ச்யூர் சூட் உடையையும் VR ஹெட் செட்டையும் அணிந்து கொண்டு நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் நடக்க வேண்டும்.

    தொழிலதிபர் எலான் மஸ்க் சிஇஓ ஆக உள்ள பிரபல வாகனங்கள் மற்றும் தொழில்நுட்ப பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனம் வேலைக்கு ஆட்கள் எடுத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் 7 மணிநேரம் நடப்பதுதான் அந்த வேலை. அதற்கு நாள் ஒன்றுக்கு இந்திய மதிப்பில் 28,000 ரூபாய் சம்பளமாகவும் டெஸ்லா நிறுவனம் வழங்குகிறது. இதற்கு 5'7 முதல் 5'11 வரை உயரம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

    வாகனங்கள் தயாரிப்பதைத் தவிர்த்து அதிநவீன அறிவியல் சாதனங்களைத் தயாரிக்கும் முயற்சியில் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மனிதனைப் போன்ற ஹியூமனாய்ட் ஆப்டிமஸ் ரோபோக்களை டெல்சா தயாரித்து அதை மனிதர்கள் செய்யும் விஷயங்களைச் செய்யப் பழக்கி வருகிறது. அப்படி அந்த ரோபோவுக்கு மனிதர்களின் செயல்பாடுகளைச் சொல்லித் தரவே இந்த வேலை.

     

    இதன்படி அசைவுகளைப் பிரதியெடுக்கும் மோஷன் கேப்ச்யூர் சூட் உடையையும் VR ஹெட் செட்டையும் அணிந்து கொண்டு நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் நடக்க வேண்டும். அப்படி நடக்கும்போது அந்த அசைவுகளை ரோபோவுக்கு கற்றுத் தர முடியும். டெஸ்லா நிறுவன தலைமையகம் அமைந்துள்ள கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் இந்த வேலைக்கு அப்ளிகேஷன்கள் குமிந்து வருகிறது. 

    • 2016 ஆம் ஆண்டு எலான் மஸ்க் நியூரோலிங்க் என்னும் நியூரோ டெக்னாலஜி நிறுவனத்தை தொடங்கினார்.
    • பார்கின்சன் மற்றும் ALS போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியும்.

    பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் ஸ்பேஸ் எகஸ் மற்றும் டெஸ்லா போன்ற நிறுவனங்களை தொடங்கி அதில் பல ஆராய்ச்சிகளும் புது விதமான எதிர்கால சிந்தனையுடன் செயல்படும் வாகனங்கள் மற்றும் ராக்கெட்டுகளையும் உற்பத்தி செய்து வருகிறார்.

    2016 ஆம் ஆண்டு எலான் மஸ்க் நியூரோலிங்க் என்னும் நியூரோ டெக்னாலஜி நிறுவனத்தை தொடங்கினார். எலான் மஸ்க் உடன் 7 விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் நிபுணர்கள் இணைந்து உருவாக்கப்பட்ட நிறுவனம் இது.

    இந்நிறுவனத்தின் பிரதான குறிக்கோள் என்னவென்றால் சாதாரண மனித ஆற்றலை கணினி மற்றும் ஏ.ஐ தொழில்நுட்ப உதவியுடன் பன்மடங்கு உயர்த்துவது தான். இந்த நிறுவனம் மனிதர்களின் மூளையில் சிப் பொருத்தி அவர்களை எண்ணங்களால் கணினி, லேப்டாப் போன்ற சாதனங்களை பயன்படுத்த வைக்கும் குறிக்கோளுடன் துவங்கப்பட்டது.

    இதன் மூலம் நரம்பு சம்பந்தப்பட்ட நோயான பார்கின்சன் மற்றும் ALS போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியும். இது தொடர்பான ஆராய்ச்சிகளில் நியூராங்க் ஆய்வாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.

    அராய்ச்சியை தொடர்ந்து நியூராலிங்க் உருவாக்கிய சிப் முதற்கட்டமாக விலங்குகளில் பொருத்தி சோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு, இதனை மனிதர்களிடமும் பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. அதன்படி முதற்கட்டமாக கடந்த ஜனவரி மாதம் நோலண்ட் அர்பாக் மூளையில் பயொனிக் சிப்பை பொறுத்தினர்.

    நோலண்ட் அர்பாக் பக்க வாத பாதிப்பு கொண்ட நபர். அவர் 8 ஆண்டுகளாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நியூரோ லிங்க் அறுவை சிகிச்சையின் மூலம் அவரால் தற்பொழுது கணினியில் சதுரங்கம் மற்றும் இதர கேம்களை விளையாட முடிகிறது. அவரின் மூளையில் உள்ள சிப்பை எண்ணங்களால் கட்டுப்படுத்தி கம்ப்யூட்டரை உபயோகிக்கவும் முடிகிறது.

    இந்த வெற்றியை கணக்கில் கொண்டு அதே சிப்பை மூளையில் இன்னும் ஆழமாகவும், வெவ்வேறு அடுக்குகளிலும் வைத்து நியூராலிங்க் ஆய்வாளர்கள் சோதனை செய்து வருகின்றனர். இதன் மூலம் மனிதனுக்கு கம்ப்யூட்டருக்கும் ஒரு தொடர்பு உருவாகும்.

    இதன் மூலம் கண்பார்வை இல்லாதவர்களுக்கு கூட கண்பார்வை வர வைக்க முடியும் எனவும், மற்ற சிப் பொறுத்திய மக்களிடம் டெலிபதி மூலம் தான் நினைத்ததை பறிமாற முடியும் என கூறுகிறார்.

    இந்த சிப் நமது செல்போன் போல் தானாக அப்டேட் ஆகும் வசதியுடன் உருவாக்கப் போவதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்த திட்டத்தின் அடுத்த இலக்கு கை, கால்கள் செயலிழந்த நபர்களிடமும் இந்த ஆராய்ச்சியை நடத்தவுள்ளனர்.

    எலான் மஸ்க் செய்வது ஒரு பக்கம் அறிவியல், விஞ்ஞானம் என மேலோங்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தாலும், மற்றொரு பக்கம் இது இயற்கைக்கு புறம்பானது. இதன் எதிர்வினை நாளை மனித இயல்பையும் , மனிதத்தையும் கேள்விக்குறியாக்கும் என்ற அச்சம் பரவலாக எழுகிறது.

    • பீர் குவளையை பிடித்தவாரும் மார்க் கடலில் சர்ஃபிங் செய்து விடுமுறையை கொண்டாடும் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
    • மார்க்கை கலாய்த்து எலான் மஸ்க் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    பேஸ்புக், வாட்சப், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட சமூக வலிதளங்களை நிர்வகிக்கும் மெட்டா சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் மற்றும் எக்ஸ் [ட்விட்டர்]  உரிமையாளரும் ஸ்பேஸ் எக்ஸ் டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க்கிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவது அனைவரும் அறிந்ததே.

     

    இந்நிலையில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தினத்தின்போது, கோட் சூட் அணிந்தவாறு ஒரு கையில் அமெரிக்க கோடியை ஏந்தியவாறும், மறு கையில் பீர் குவளையை பிடித்தவாரும் மார்க் கடலில் யாட்ச்சில் சர்ஃபிங் செய்து விடுமுறையை கொண்டாடும் வீடியோவை இன்ஸ்ட்டாகிராமில் பகிரவே அது  இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

    இந்த வீடியோ வைரலாக நிலையில் மார்க்கை கலாய்த்து எலான் மஸ்க் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அவர் யாட்ச்களில் பொழுதைப்போக்கி கொண்டாட்டங்களில் ஈடுபடட்டும்.அதைவிட நான் வேலை செய்யவே விரும்புகிறேன். I prefer to work என்று தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க் அறிக்கைபடி  பணக்காரர் பட்டியலில் மார்க் ஜூகர்பெர்கைவிட எலான் மஸ்க் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.   

    • நாட்டிற்கு திட்டமிடப்பட்ட பயணத்தை மஸ்க் ஒத்திவைத்ததை அடுத்து முடிவு.
    • இந்தியாவின் மின்சார வாகன சந்தை இன்னும் வளர்ந்து வருகிறது.

    இந்தியாவிற்கு வருகை தரயிருந்த எலான் மஸ்கின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் முதலீட்டுத் திட்டங்களை எலான் மஸ்க் நிறுத்தி வைத்துள்ளாதக தகவல் வெளியாகியுள்ளது.

    டெஸ்லா தனது முதலீட்டு திட்டங்களை இந்தியாவில் நிறுத்தி வைத்துள்ளது. இந்திய அதிகாரிகளுடனான தகவல்தொடர்புகளையும் நிறுத்தியுள்ளது. ஏப்ரல் பிற்பகுதியில் இந்தியாவிற்கு வர இருந்த எலான் மஸ்க் தனது பயணத்தை ஒத்திவைத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக, ப்ளூம்பெர்க்கின் அறிக்கையின்படி, டெஸ்லா இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது திட்டங்களை இடைநிறுத்தியுள்ளது,. எலோன் மஸ்க்கின் குழு இந்திய அதிகாரிகளுடனான தொடர்பை நிறுத்தியது.

    ஏப்ரல் பிற்பகுதியில் நாட்டிற்கு திட்டமிடப்பட்ட பயணத்தை மஸ்க் ஒத்திவைத்ததை அடுத்து, அவர் பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், மஸ்க் தனது பயணத்தை ஒத்திவைத்த பிறகு டெஸ்லா புதுடெல்லி அதிகாரிகளை அணுகவில்லை என்று அறிக்கை தெரிவிக்கிறது.

    டெஸ்லாவின் தற்போதைய மூலதனச் சிக்கல்களால் இந்தியாவில் புதிய முதலீடுகளை திட்டமிடவில்லை என்று அந்த அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.

    இது, டெஸ்லா உலகளாவிய டெலிவரிகளில் அதன் இரண்டாவது காலாண்டு வீழ்ச்சியுடன் ஒத்துப்போகிறது.

    மஸ்க் ஏப்ரல் மாதம் இந்தியா சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விரும்பினார். ஆனால் அவசர நிறுவன விஷயங்களால் ரத்து செய்யப்பட்டார்.

    கணிசமான உள்ளூர் முதலீடு மற்றும் உற்பத்திக்கு உறுதியளிக்கும் வெளிநாட்டு கார் உற்பத்தியாளர்களுக்கான EVகளின் மீதான இறக்குமதி வரிகளை இந்தியா குறைத்த சிறிது நேரத்திலேயே அவரது வருகை ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது.

    தற்போதைய இடைநிறுத்தம் இருந்தபோதிலும், டெஸ்லா மீண்டும் ஈடுபட முடிவு செய்தால் புதிய இறக்குமதி வரிக் கொள்கையின் கீழ் வரவேற்கப்படும் என்று இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இதற்கிடையில், EV உற்பத்தியை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் லிமிடெட் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் போன்ற உள்நாட்டு வாகன உற்பத்தியாளர்களின் மீது அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

    இந்தியாவின் மின்சார வாகன சந்தை இன்னும் வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு மொத்த விற்பனையில் பேட்டரி மூலம் இயங்கும் கார்கள் 1.3 சதவீதம் மட்டுமே.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த வருடத்தின் தொடக்கத்தில் தனது 12 வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்
    • ரகசியமாக வைத்தததாக கூறுவது சரியில்லை என்று தெரிவித்துள்ளார்.

    உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றின் நிறுவனருமான எலாம் மஸ்க் இந்த வருடத்தின் தொடக்கத்தில் தனது 12 வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் என்றும் அதை அவர் ரகசியமாக வைத்துள்ளார் என்றும் என்று சமீபத்தில் வெளியான ப்ளூம்பெர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    காதல் விவகாரங்களில் பலருடன் தொடர்பு வைத்துள்ள எலான் மஸ்க்கிற்கு கடந்த 5 வருடங்களில் மட்டும் 6 குழந்தைகள் பிறந்துள்ளனர். தற்போது பிறந்துள்ள 12 வது குழந்தை மஸ்க் உருவாக்கிய நிறுவனமான நியூரோடெக்னாலஜி துறையில் இயங்கிவரும் நியூராலின்க் நிறுவனத்தின் மேனேஜர்களில் ஒருவரான ஷிவோன் சிலிஸ் பெற்றேடுத்துள்ளார்.

     

    எலான் மஸ்க் - சிவோன் சிலிஸ் ஜோடிக்கு இது 3 வது குழந்தையாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு எலான் - சிலிஸ் இணையருக்கு ஸ்டிரைடர் - ஆஸுரே என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இதுதவிர பிரபல கனேடிய பாடகி கிரிம்ஸ், எலான் மஸ்க்கின் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

    தற்போது ஷிவோன் சிலிஸுக்கு பிறந்துள்ள எலான் மஸ்க்கின் 12 வது குழந்தை இந்த வருட ஆரம்பத்தில் பிறந்துள்ளது என்றும் குழந்தையின் பிறப்பு, பாலினம் மற்றும் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட புளூம்பெர்கின் அறிக்கைக்கு எலான் மஸ்க் ரியாக்ட் செய்துள்ளார்.

     

    அதாவது தனக்கு 12 வது குழந்தை பிறந்தது உண்மைதான் என உறுதிப்படுத்தியுள்ள எலான் மஸ்க் அதை ரகசியமாக வைத்தததாக கூறுவது சரியில்லை என்று தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்தது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியும். ஊடகத்திடம் அதை வெளிச்சம்போட்டு சொல்வில்லையே தவிர இதில் ரகசியம் என்று எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

     

    எலான் மஸ்க் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் அதிகம் பகிராதவராகவே இருந்து வருகிறார். சமீபத்தில் தனது நிறுவனத்துக்கு இண்டர்ன்ஷிப் வந்த பெண்ணுக்கு பாலியல் துப்புறுதல் அளித்ததாக எலான் மஸ்க் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×