என் மலர்
நீங்கள் தேடியது "A snake entered the shop"
- கடைக்காரர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினார்
- ஆற்றங்கரையில் கொண்டு விடப்பட்டது
ஆலங்காயம்:
வாணியம்பாடி கச்சேரி சாலையில் சக்தி (வயது 30), என்பவர் மருந்து கடை நடத்தி வருகிறார்.
இவர் கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது, கடைக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதனைக் கண்டு அதிச்சடைந்த சக்தி கூச்சலிட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினார்.
இதனைப் பார்த்த பக்கத்துக் கடைக்காரர்கள், பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பாம்பு பிடிக்கும் நபர் விரைந்து சென்று, கடைக்குள் பதுங்கியிருந்த மஞ்சள் நிற சாரை பாம்பை பிடித்து ஆற்றங்கரையில் கொண்டு சென்று விட்டார்.
- இவர் கொட்டாம்பட்டி சாலையில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார்.
- இவரது கடையில் நல்லபாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்ததை.பார்த்த அவர் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
நத்தம்:
நத்தத்தை சேர்ந்தவர் பெரியநாச்சியப்பன்(45)). இவர் கொட்டாம்பட்டி சாலையில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நல்லபாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதை பார்த்த அவர் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லெட்சுமணன் உள்ளிட்ட வீரர்கள் கடைக்குள் இருந்த 5 அடி நீளமுள்ள நல்லபாம்பை லாவகமாக கருவி மூலம் பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கபட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.