என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A tragic death"

    • மாரியம்மாள் (வயது 54). இவருக்கு சற்று கண் பார்வை குறைபாடு உள்ளதாக கூறப்படுகிறது.
    • தண்ணீர் என நினைத்து கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை குடித்து விட்டார்.

    சேலம்:

    சேலம் மரவனேரி கோர்ட்டு ரோடு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சித்தன் . இவரது மனைவி மாரியம்மாள் (வயது 54). இவருக்கு சற்று கண் பார்வை குறைபாடு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி மாலை மாரியம்மாள் தண்ணீர் என நினைத்து பாட்டிலில் இருந்த கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை குடித்து விட்டார். அதைத்தொடர்ந்து கடும் வலியால் அவதிப்பட்ட மாரியம்மாளை உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மயில்சாமி பராமரிப்பில் இருந்து கொண்டு, கால்நடைகளை வளர்த்து வந்தார்.
    • காளியப்பன் கீழே விழுந்து நெஞ்சு, நெற்றி பகுதியில் காயம் ஏற்பட்டது.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பெரிய கள்ளிப்பட்டி கோட்டை புதூரை சேர்ந்த வர் காளியப்பன்(70). இவர், அவரது மகன் மயில்சாமி பராமரிப்பில் இருந்து கொண்டு, கால்நடைகளை வளர்த்து வந்தார்.

    கடந்த மாதம் 28-ந் தேதி காளியப்பன் அவரது 2 மாடு கன்றுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார். அப்போது, கன்று வேகமாக கயிறுடன் இழுத்து சென்றதில், காளியப்பன் கீழே விழுந்து நெஞ்சு, நெற்றி பகுதியில் காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து காளியப்பன் மீட்கப்பட்டு அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சோ்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நேற்று பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×