என் மலர்
நீங்கள் தேடியது "adulteration"
- டீக்கடைகள் உணவகங்கள் பழக்கடை குளிர்பான கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
- 2 டீக்கடைகளில் கலப்பட தூள் வைத்திருந்த 2 கிலோ டீ தூள் அழிக்கப்பட்டது,
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி, பண்ருட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு உள்ளிட்ட பகுதியில் உள்ள டீக்கடைகள் உணவகங்கள் பழக்கடை குளிர்பான கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது காலா வதியான பொருட்கள், குளிர்பானங்கள், கலப்பட டீ தூள், பழக்கடைகளில் கார்போக்கல் வைத்து பழங்கள் பழுக்க வைக்க படுகிறதா என்பதை குறித்து ஆய்வு மேற்கொண்டனர் 2 டீக்கடைகளில் கலப்பட தூள் வைத்திருந்த 2 கிலோ டீ தூள் அழிக்கப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
குன்னத்தூர்:
குன்னத்தூர் சித்தாண்டி பாளையத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் இந்த கடையில் வாங்கப்பட்ட ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதி பொதுமக்கள் கலப்படம் செய்யப்பட்ட பிளாஸ்டிக் அரிசியை தனியாக எடுத்து பத்திரப்படுத்தி வைத்துள்ளனர்.
ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பிளாஸ்டிக் அரிசியை கலப்படம் செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த 20 ஆண்டுகளாகச் செயற்கை பால் மற்றும் பன்னீர் விற்பனை செய்து வந்துள்ளார்.
- செயற்கைப் பாலை அதன் தோற்றம், சுவை அல்லது வாசனையால் யாரும் வேறுபடுத்த முடியாது.
உத்தரப் பிரதேசத்தில் ரசாயனத்தை பயன்படுத்தி போலி பால் மற்றும் பன்னீர் தயாரித்த விநியோகம் செய்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் அகர்வால் டிரேடர்ஸ் உரிமையாளர் அஜய் அகர்வால் உண்மையான பால் போல் தோன்றும் வகையில் ரசாயனங்களில் செயற்கை இனிப்புகள் மற்றும் சுவைகளை கலக்கிறார். இந்த முறையில் கடந்த 20 ஆண்டுகளாகச் செயற்கை பால் மற்றும் பன்னீர் விற்பனை செய்து வந்துள்ளார்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் அகர்வாலின் கடை மற்றும் 4 குடோன்களில் சோதனை நடத்தி, தொடர்புடைய ரசாயனங்களைப் பறிமுதல் செய்தனர்.
அகர்வால் போலி பாலை உருவாக்க பயன்படுத்திய ரசாயனங்கள் என்ன என்று இன்னும் கண்டறியப்படாத நிலையில் அதில் 5 மில்லிலிட்டர்களை மட்டுமே பயன்படுத்தி 2 லிட்டர் வரை போலி பாலை THAYAARIKAமுடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது 1 லிட்டர் ரசாயனத்தைப் பயன்படுத்தி 500 லிட்டர் போலி பாலை தயாரிப்பதற்குச் சமமாகும்.
சுவையூட்டிகள் பயன்படுத்தப்படுவதால் செயற்கைப் பாலை அதன் தோற்றம், சுவை அல்லது வாசனையால் யாரும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
இந்த கெமிக்கல் பார்முலாவை உள்ளூர் கிராம பால் விற்பனையாளர்களுக்கும் அகர்வால் கற்றுக்கொடுத்துள்ளார். இந்த பார்முலாவை அவர் எங்கு தெரிந்துகொண்டார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.