என் மலர்
நீங்கள் தேடியது "after being hit"
- இவர் நேற்று தனது வீட்டிலிருந்து சென்னிமலைக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
- அப்போது துரை சாமி லாரியின் பின் சக்கரத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டார்.
சென்னிமலை
சென்னிமலை அடுத்த முகாசிபிடாரியூர் ஊராட்சி, சென்னியங்கிரிவலசு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (68). இவர் சென்னிமலையில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கி யில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று தனது வீட்டிலிருந்து சென்னிமலைக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஈங்கூர் ரோட்டில் வந்த போது அந்த வழியாக ஒரு லாரி வந்தது. அப்போது துரை சாமி லாரியின் பின் சக்கரத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த துரைசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் மணப்பாறையை சேர்ந்த கிருஷ்ணனை பிடித்து விசாரித்து வரு கிறனர்.
- லாரி ஒன்று துரைசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
- இதில் துரைசாமிக்கு தலையில் பலத்த அடிபட்டது.
கொடுமுடி:
கொடுமுடி அருகே சோளக்காளிபாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (65). விவசாயி. இவர் சம்பவத்த ன்று மாலைய வருந்தியாபா ளையம் அருகே நொய்யல் செல்லும் சாலையில் தனது மொபெட்டில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று துரைசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் துரைசாமிக்கு தலையில் பலத்த அடிபட்டது.
இதனால் உயிருக்கு போராடிக்கொ ண்டிருந்த துரைசாமியை அருகில் இருந்தவர் மீட்டு அவரை தனியார் ஆம்புல ன்ஸ் மூலம் கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற துரைசாமி பின்னர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் துரைசாமி யின் உடல்நிலை மோசமான தையடுத்து அங்கிருந்து சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக துரைசாமி அனுப்பி வைக்கப் பட்டுள்ளார்.
தற்போது சேலம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் துரைசாமி சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபர் டோல்கேட் அருகே ரோட்டை கடக்க முயன்ற பொழுது ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து திடீரென அவர் மீது மோதியது.
- அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் பகுதியில் டோல்கேட் அமைந்துள்ளது. இந்த டோல்கேட் பகுதியில் அடையாளம் தெரியாத சுமார் 30 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு வாலிபர் அடிக்கடி சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.
சம்பவத்தன்று இரவு அந்த வாலிபர் டோல்கேட் அருகே ரோட்டை கடக்க முயன்றள்ளார். அப்பொழுது ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து திடீரென அவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலை மற்றும் உடலில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.