என் மலர்
நீங்கள் தேடியது "AI Summit"
- இரண்டாம் உலக போரில் முக்கியத்துவம் வாய்ந்த இடம் பிலெட்ச்லி பார்க்
- ஏஐ தோற்றுவிக்கும் தொழில்நுட்ப ஆபத்து உலக நாடுகளை ஒன்றிணைக்கிறது
தொழில்நுட்ப துறையில் "ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்" எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்த கூடிய தாக்கம் குறித்தும், அதனால் ஏற்பட கூடிய நன்மைகள், தீமைகள் மற்றும் அதனை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு விதிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் ஆலோசிக்க வல்லரசு நாடுகளின் தலைவர்கள் முன் வந்தனர்.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் எடுத்த முயற்சிகளின் காரணமாக இது குறித்து ஆலோசிக்க தலைநகர் லண்டனுக்கு வெளியே, பிலெட்ச்லி பார்க் (Bletchley Park) எனும் இடத்தில் 25 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட இரு நாள் சந்திப்பு நடந்தது. இரண்டாம் உலக போரை முடிவுக்கு கொண்டு வர பிலெட்ச்லி பார்க்கில்தான் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பில், ஏஐ-யின் தாக்கத்தை குறித்து நாடுகளுக்கிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கவும், ஏஐ தோற்றுவிக்கும் தொழில்நுட்ப ஆபத்துகளை உடனுக்குடன் கண்டறியவும், அவற்றை திறம்பட எதிர்கொண்டு நீக்கும் கொள்கைகளை வகுக்கவும் தீர்மானங்கள் இயற்றப்பட்டு அனைத்து நாடுகளும் "பிலெட்ச்லி பிரகடனம்" (ப்ளேச்சலே Declaration) எனும் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இந்த சந்திப்பில் சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கான துணை மந்திரி வூ ஜாவோஹுய் (Wu Zhaohui), சர்வதேச கட்டமைப்பு ஒன்றை உருவாக்க சீனாவும் ஒத்துழைக்க தயாராக உள்ளதாக உறுதியளித்தார்.
"பல நாட்டு தலைவர்கள் ஒரே நோக்கத்திற்காக ஒற்றுமையுடன் கலந்து கொண்டுள்ளது ஒரு சாதனை. அடுத்த 6 மாதங்களில் தென் கொரியாவில் ஒரு மாநாடும், அதற்கடுத்த 6 மாதங்களில் பிரான்ஸில் ஒரு மாநாடும் நடக்க உள்ளது" என இந்த சந்திப்பு குறித்து இங்கிலாந்து தொழில்நுட்ப துறை அமைச்சர் மிசெல் டொனெலான் (Michelle Donelan) தெரிவித்தார்.
இந்தியாவின் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் இதில் கலந்து கொண்டார்.
2023க்கான அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தையாக "ஏஐ" உள்ளதாக இங்கிலாந்து நாட்டின் காலின்ஸ் அகராதி வெளியிடும் பதிப்பகம் சில தினங்களுக்கு முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று நினைத்தனர்.
- இவை என்னை சிரிக்க செய்தன.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்களை உருவாக்கி வருகிறார். மேலும் அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அவ்வாறு அவர் உருவாக்கிய போலி வீடியோ ஒன்றில் 1980-க்களில் பிரபலமாக "வோயேஜ் வோயேஜ்" பாடலுக்கு அவரே நடனமாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோவை உருவாக்கியவர்களை பாராட்டிய மேக்ரான் "வீடியோக்கள் அருமையாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இவை மிக அழகாக உள்ளன. இவை என்னை சிரிக்க செய்தன," என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஏ.ஐ. உச்சிமாநாட்டை ஊக்குவிக்கும் வகையில், மேக்ரான் இந்த வீடியோக்களை உருவாக்கி இருக்கிறார். இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டிற்கு இந்தியாவும் இணைந்து தலைமை தாங்குகிறது.
இது தொடர்பாக அதிபர் மேக்ரானின் இன்ஸ்டாகிராம் பதிவு அதிக பார்வையாளர்களை பெற்றதோடு, அதிகளவு பகிரப்பட்டும் வருகிறது. எனினும், சிலர் அதிபர் மேக்ரானின் சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று நினைத்தனர்.
- பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- தலைநகர் பாரிசில் நடந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் அவர் பங்கேற்று பேசினார்.
பாரிஸ்:
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் பாரிசில் செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வருங்காலத்தில் எல்லாருக்கும் நன்மை பயக்கும் என்பதை உறுதி செய்வதற்கான அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது.
பொதுநலனைக் கருத்தில் கொண்ட செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.
மனித குலத்தின் வரலாற்றில், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை காட்டிலும், செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தி வரும் முன்னேற்றங்கள் மிகவும் வித்தியாசமானவை.
உலகெங்கிலும் பல்வேறு துறைகளில் அது பயன்பாட்டுக்கு வரும்போது, அதனால் ஏற்படக்கூடிய குறைபாடுகளை, பிரச்சனைகளை சரிசெய்ய நாம் ஒன்றிணைய வேண்டியது அவசியம். அதற்கு இந்த மாநாடு பயன் தரும் என நம்புகிறேன்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஜனநாயகப்படுத்த வேண்டும். இணைய பாதுகாப்பு, தவறான தகவல் பரப்புதல் மற்றும் டீப் பேக் தொடர்பான கவலைகளை தீர்க்க வேண்டும்.
நிலையான செயற்கை நுண்ணறிவுக்கான கவுன்சிலில் ஏ.ஐ. அறக்கட்டளை அமைக்கும் முடிவை நான் வரவேற்கிறேன். அடுத்த ஏ.ஐ. உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவதில் பெருமை கொள்கிறது என தெரிவித்தார்.
- பிரான்ஸ் நாட்டில் சர்வதேச ஏ.ஐ. உச்சி மாநாடு நடைபெற்றது.
- ஏஐ மாநாட்டில் தொழில்நுட்ப துறையை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாடுகள் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டு சென்றுள்ளார். பிரான்ஸ்-இல் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்களை சந்தித்து பேசினார்.
அந்த வகையில், பாரிசில் நடைபெற்ற AI உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியை கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார். அப்போது, செயற்கை நுண்ணறிவு (AI) இந்தியாவிற்கு கொண்டு வரும் "நம்பமுடியாத வாய்ப்புகளை" எடுத்துரைத்தார்.
மேலும், நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தை முன்னேற்றுவதற்காக கூகுள் மற்றும் இந்தியா இடையே நெருக்கமான ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளையும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து பேசிய அவர், "AI உச்சி மாநாட்டிற்காக பாரிசில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சி. AI இந்தியாவிற்கு கொண்டு வரும் நம்பமுடியாத வாய்ப்புகள் மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் நாம் நெருக்கமாக இணைந்து பணியாற்றக்கூடிய வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, பாரிஸில் நடந்த இந்தியா-பிரான்ஸ் சி.இ.ஓ. கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார், அப்போது, பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதிலும் புதுமைகளை வளர்ப்பதிலும் இந்த கருத்தரங்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார்.