என் மலர்
நீங்கள் தேடியது "air crash"
- ஹெலிகாப்டரை மேக கூட்டத்தின் நடுவே செலுத்தினார்.
- நிலைதடுமாறி நிலத்தில் விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியது.
குன்னூர்:
குன்னூரில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முன்னாள் முப்படை தளபதி பிபின்ராவத் உள்பட 14 பேர் பலியானார்கள்.
இந்த விபத்திற்கு மனிதப் பிழையே காரணம் என விமானப்படை அறிக்கை அளித்துள்ளது. இதுதொடர்பான தகவல்கள் பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் தாக்கலான பாதுகாப்புக்கான நிலைக்குழு அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
அதில் 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 34 விமானப்படை விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் விபத்தில் சிக்கி இறந்த ஹெலிகாப்டர் விபத்தும் அடங்கும்.
இந்த விபத்திற்கு விமானியின் தவறே காரணம். வானிலை மாற்றம் காரணமாக தடுமாறிய விமானி, ஹெலிகாப்டரை மேக கூட்டத்தின் நடுவே செலுத்தினார். பின்னர் நிலைதடுமாறி நிலத்தில் விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியது.
ஹெலிகாப்டரில் இருந்த ரிகார்டரில் பதிவான விபரங்களின் அடிப்படையிலேயே, பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதற்கு மனித பிழையே காரணம் என விமானப்படை அறிக்கை அளித்துள்ளது.
- மிராஜ் 2000 விமானம் பயிற்சியின் போது, சிஸ்டம் கோளாறால் விபத்துக்குள்ளானது.
- விபத்துக்கான காரணத்தை அறிய இந்திய விமானப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
மத்தியபிரதேச மாநிலம் ஷிவ்புரியில் ராணுவ பயிற்சி விமானம் ஒன்று வயல்வெளியில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக விமானம் கீழே விழுவதற்குள் விமானிகள் வெளியேறியதால் உயிர் தப்பினார். ஆனாலும் விமானிகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரியும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இது தொடர்பாக இந்திய விமானப்படை பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 விமானம், சிவ்புரி (குவாலியர்) அருகே இன்று வழக்கமான பயிற்சியின் போது, சிஸ்டம் கோளாறால் விபத்துக்குள்ளானது. விமானிகள் இருவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விபத்துக்கான காரணத்தை அறிய இந்திய விமானப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று பதிவிடப்பட்டுள்ளது.
