என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Airline Services"
- மைக்ரோசாப்ட் சேவைகளில் பிரச்சினை ஏற்பட்டதை கிரவுட்ஸ்டிரைக் உறுதிப்படுத்தி இருக்கிறது.
- பாதிப்பை பயனர்கள் தாங்களாகவே சரி செய்ய முயற்சிக்க வேண்டாம் என்று அறிவிப்பு.
விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்கள் புளூ ஸ்கிரீன் (Blue Screen of Death) பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இந்த பாதிப்பு விண்டோஸ் இயங்குதளத்தின் கிரவுட்ஸ்டிரைக் சென்சார் வெர்ஷனில் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.
மைக்ரோசாப்ட் சேவைகளில் பிரச்சினை ஏற்பட்டதை கிரவுட்ஸ்டிரைக் உறுதிப்படுத்தி இருக்கிறது. பாதிப்பை சரி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது. மேலும், இந்த பாதிப்பு ஏற்பட என்ன காரணம் என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
பாதிப்பை பயனர்கள் தாங்களாகவே சரி செய்ய முயற்சிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், விண்டோஸ் முடங்கியதன் எதிரொலியால் ஐடி, மீடியா, ஏர்லைன்ஸ், வங்கிகள், மருத்துவமனை சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, நாடு முழுவதும் விமான நிறுவனங்களின் ஆன்லைன் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விமான நிலையங்களில், ஆன்லைன் சேவைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், விமான நிறுவனங்கள் மேனுவல் முறையை பின்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆன்லைனில் டிக்கெட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விமான நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
அதனால், உடனடி பயணத் திட்டங்களைக் கொண்ட பயணிகளை செக்-இன் செய்ய முன்கூட்டியே விமான நிலையத்தை அடையுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் வின்டோஸ் பயன்படுத்தும் பல ஆயிரம் கம்ப்யூட்டர்கள், லேப்டாப் செயல் இழந்துள்ளது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவைகள் நேற்று காலை முதல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், உலகின் பல நாடுகளில் ஐ.டி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்துறை பணிகள் முடங்கியுள்ளன.
- சேலம் மாவட்டம் ஓமலூரில் சேலம் விமான நிலையம் உள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது.
- இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் சேலம் விமான நிலையம் உள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது. இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது.
2 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பியதுடன் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் அவர் நேரில் சந்தித்து கோரிக்கை அளித்தார்.
இந்த நிலையில் நேற்று முதல் சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது. உதான்-5 திட்டத்தின் கீழ் அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் சார்பில் பெங்களூர்-சேலம்-கொச்சின் வழித்தடத்தில் விமானம் இயக்கப்பட்டது.
மதியம் 1.30 மணியளவில் பெங்களூரில் இருந்து சேலம் வந்த விமானத்தில் 34 பயணிகள் வந்தனர். தொடர்ந்து இங்கிருந்து கேரள மாநிலம் கொச்சினுக்கு செல்லும் விமான சேவையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த விமானத்தில் சேலத்தில் இருந்து 16 பயணிகள் கொச்சின் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், ஓசூர் பிரகாஷ், சேலம் கலெக்டர் கார்மேகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசு, செல்வகணபதி, சிவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து விமான நிலைய இயக்குனர் ரமேஷ் கூறும்போது விமானம் கொச்சின்-சேலம்-பெங்களூர் வழித்தடத்தில் மீண்டும் இயக்கப்படும். வாரத்தில் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற 5 நாட்களில் விமான சேவை நடைபெறும். இதேபோன்று அக்டோபர் மாத இறுதியில் இன்டிகோ நிறுவனம் சார்பில் அக்டோபர் 29-ம் தேதி பெங்களூர்-சேலம்-ஹைதராபாத் வழித்த டத்தில் விமான சேவை தொடங்கப்படுகிறது. மீண்டும் ஐதராபாத்-சேலம்-பெங்களூர் வழித்தடத்தில் விமானம் இயக்கப்படும் என கூறினார்
பெங்களூரில் இருந்து விமானத்தில் வந்த பயணி வக்கீல் மணிகண்டன் கூறும்போது, முதல் நாள் விமானத்தில் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த உதான் திட்டத்தின் மூலம் விமான சேவையை சேலம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சேலம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றார். மேலும் விமான சேவை மீண்டும் செயல்படுத்திய விமான நிறுவனம், எம்.பி. உள்ளிட்டவருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
- இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையத்தில், உள்நாட்டு விமான முனையத்தை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளது.
- குடியுரிமைச் சோதனை அறைகள், சுங்கச் சோதனை பிரிவு அறைகள் ஆகியவை அகற்றப்பட்டு உள்நாட்டு முனையமாக மாற்றப்படும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சர்வதேச விமான முனையம் கடந்த 7-ந்தேதி முதல் முழு அளவில் இயங்கத் தொடங்கியது.
இதனால் ஏற்கனவே சர்வதேச விமான முனையமாக செயல்பட்டு வந்த, டெர்மினல்-3, மற்றும் டெர்மினல்-4 ஆகியவை கடந்த 10-ந் தேதியில் இருந்து, முழுமையாக மூடப்பட்டு உள்ளது. அடுத்த சில வாரங்களில், டெர்மினல்-3 (டி3)யை இடிக்கும் பணி தொடங்க இருக்கிறது. அது முழுமையாக இடிக்கப்பட்ட பின்பு, சென்னை விமான நிலையத்தின் 2-ம் கட்ட கட்டுமான பணி விரைவில் தொடங்க உள்ளது.
இதற்கிடையே சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தற்போது, பயணிகள் போக்குவரத்து, விமான சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் தற்போதைய உள்நாட்டு விமான நிலையத்தில், இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் உள்நாட்டு விமான சேவைகள் இயக்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையத்தில், உள்நாட்டு விமான முனையத்தை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளது.
சென்னை விமான நிலையத்தில், ஏற்கனவே சர்வதேச முனையமாக செயல்பட்ட டி3 புதிய முனையம் கட்டுமான பணிக்காக, இடிக்கும் நிலையில் உள்ளது. ஆனால் டி4 முனையம் புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் நல்ல நிலையில் காணப்படுகிறது. எனவே டி 4 முனையத்தை இடிக்காமல் புதிய உள்நாட்டு முனையமாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் தற்போது மூடப்பட்டு உள்ள பழைய சர்வதேச முனையமான டி3, டி4 ஆகியவற்றில், உள்ள குடியுரிமைச் சோதனை அறைகள், சுங்கச் சோதனை பிரிவு அறைகள் ஆகியவை அகற்றப்பட்டு உள்நாட்டு முனையமாக மாற்றப்படும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
அடுத்த ஓரிரு மாதங்களில் இப்பணிகள் நிறைவடைய உள்ளது. அதன் பின்பு வருகிற செப்டம்பர் மாதத் தில் இருந்து சென்னையில் உள்நாட்டு விமான நிலையம் இரு பகுதிகளாக இயங்க திட்டமிடப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இப்போது உள்நாட்டு முனையமாக உள்ள டி1 முனையத்தில், ஏர் இந்தியா, விஸ்தாரா, ஸ்பைஸ்ஜெட், ஏர் ஏசியா, ஆகாஷா, அலையன்ஸ் ஏர், ட்ரூ ஜெட் உள்ளிட்ட விமான நிறுவ னங்களின் உள்நாட்டு விமான சேவைகளையும், புதிதாக உருவாக்கப்படும் டி 4 உள்நாட்டு முனையத்தில், இண்டிகோ ஏர்லைன்ஸ் உள்நாட்டு விமானங்களையும் இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, சென்னை உள்நாட்டு விமான நிலையம், இரு பகுதிகளாக பிரிக்கப்படுவதால், சென்னையில் இருந்து கூடுதலாக உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்படும். மேலும் பயணிகளுக்கும் தாராளமாக இட வசதி கிடைக்கும். விமான நிலையத்தில் நெரிசல்கள் குறையும் என்றனர்.