என் மலர்
நீங்கள் தேடியது "Alexander Zverev"
- வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
- இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
வியன்னா:
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் மார்கோஸ் கைரன் உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி, அமெரிக்காவின் தியாபேவை 6-3, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதி சுற்றில் ஸ்வரேவ், இத்தாலியின் முசெட்டி உடன் மோதுகிறார்.
- வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
- இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வியன்னா:
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-2 என வென்ற ஸ்வரேவ், அடுத்த இரு செட்களை 6-7 (5-7), 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் கரன் கச்சனாவ், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் அரையிறுதி சுற்றில் இத்தாலியின் முசெட்டி, பிரிட்டனின் ஜாக் டிராபர் உடன் மோதுகிறார்.
- பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 3 வீரர் ஸ்வரேவ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
பாரீஸ்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று நடந்த இறுதிப்போட்டியில் நம்பர் 3 வீரரும் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
- இதில் நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
பெல்கிரேட்:
ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.
இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், தரவரிசையில் 7-ம் இடம் பிடித்தவரும், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார்.
இதில் சின்னர் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ரஷியாவின் ஆண்ட்ரூ ரூப்லெவ் உடன் மோதினார். இதில் ஸ்வரேவ் 6-4, 6-4 என்ற கணக்கில் வென்றார்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
- இதில் நம்பர் 2 வீரரான ஸ்வரேவ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
பெல்கிரேட்:
ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.
இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது லீக் போட்டியில் 2ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், 6-வது நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ்7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வென்றார்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
- இதில் நம்பர் 2 வீரரான ஸ்வரேவ் 3வது சுற்றில் வெற்றி பெற்றார்.
பெல்கிரேட்:
ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி நாளை மறுதினம் வரை நடக்கிறது.
இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொனடனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது லீக் போட்டியில் நம்பர் 2 வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், நம்பர் 3 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் ஸ்வரேவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதுகிறார்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
- இதில் நம்பர் 2 வீரரான ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பெல்கிரேட்:
ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி நாளையுடன் முடிவடைகிறது.
இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நம்பர் 2 வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.
இதில் பிரிட்ஸ் 6-3, 3-6, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரிட்ஸ், சின்னர் அல்லது ரூட் இவர்களில் ஒருவருடன் மோத உள்ளார்.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் முதல் சுற்றில் ஜெர்மனி வீரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.
இதில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.
முதல் செட்டை 6-4 என வென்ற ஸ்வரேவ், அடுத்த இரு செட்களை 6-7 (5-7), 6-7 (4-7) என இழந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடரில் இருந்து ஸ்வரேவ் வெளியேறினார்.

தற்போது ஷாங்காய் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. அரையிறுதி ஒன்றில் நோவக் ஜோகோவிச் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ்-ஐ எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-2, 6-1 என நேர்செட் கணக்கில் வீழ்த்தினார்.

இதன்மூலம் ஜோகோவிச் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த ரோஜர் பெடரரை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். திங்கட்கிழமை அதிகாரப்பூர்வ தரவரிசை வெளியிடப்பட இருக்கிறது.
பாரீஸ் நகரில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதியில் 3-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் (ஜெர்மனி), தரநிலையில் 8-வது இடத்தில் உள்ள டொமினிக் திம்மும் (ஆஸ்திரியா) மோதினர்.
ஆக்ரோஷமான ஷாட்டுகள் மூலம் தொடக்கத்தில் இருந்தே முழுமையாக ஆதிக்கம் செலுத்திய டொமினிக் திம் அடுத்தடுத்து செட்டுகளை தனதாக்கி அசத்தினார். ஆனால் இடது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் இயல்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஸ்வெரேவ், எதிர்ப்பின்றி பணிந்து போனார். டொமினிக் திம் 6-4, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தார்.
பின்னர் டொமினிக் திம் கூறுகையில், ‘பிரெஞ்ச் ஓபனில் தொடர்ந்து 3-வது முறையாக அரைஇறுதியை எட்டியிருப்பது வியப்பளிக்கிறது. எனது இளம் வயதில் இந்த மாதிரியான நிலையை அடைவேன் என்று ஒரு போதும் நினைத்தது இல்லை. இந்த ஆண்டில் மேலும் ஒரு படி முன்னேற வேண்டும்’ என்றார்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் குரோஷிய வீரர் மரின் சிலிச் 6-4, 6-1, 3-6, 6-7 (4-7), 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலியின் போக்னினியை தோற்கடித்தார். இந்த வெற்றியை பெற சிலிச் 3 மணி 37 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 13-ம் நிலை வீரர் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், தரவரிசையில் 98-வது இடத்தில் உள்ள யுலியா புதின்ட்செவாவை (கஜகஸ்தான்) எதிர்கொண்டார். 1 மணி 24 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் மேடிசன் கீஸ் 7-6 (7-5), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியை ருசித்து, அரைஇறுதிக்கு முன்னேறினார். இதுவரை எந்த செட்டையும் இழக்காத 23 வயதான மேடிசன் கீஸ் பிரெஞ்ச் ஓபனில் அரைஇறுதியை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.
மற்றொரு கால்இறுதியில் அமெரிக்க ஓபன் சாம்பியனான ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் கசட்கினாவை விரட்டியடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
ஸ்டீபன்ஸ் அரைஇறுதியில் சக நாட்டவர் மேடிசன் கீஸ்சுடன் மோத உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிஆட்டத்தில் சந்தித்து அதில் ஸ்டீபன்ஸ் வெற்றி கண்டது நினைவு கூரத்தக்கது. #FrenchOpen2018 #DominicThiem #tamilnews
இந்த ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான அலெக்சாண்டருக்கு போஸ்னியா வீரர் டமிர் கடும் சவாலாக விளங்கினார். முதல் செட்டை அலெக்சாண்டர் 6-2 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 3-6 என இழந்தார். 3-வது செட்டையும் 4-6 என இழந்தார்.
இதனால் 1-2 என அலெக்சாண்டர் பின்தங்கியிருந்தார். 4-வது செட்டில் தோற்றால் தொடரை விட்டு வெளியேறிய வேண்டியதுதான் என்பதால் சுதாரித்து விளையாடினார். இதற்கு போஸ்னியா வீரர் டமிர் கடும் எதிர்வினை ஆற்றினார்.

இருவரும் சளைக்காமல் விளையாட செட் டைபிரேக்கர் வரை சென்றது. இறுதியில் கடும்பாடுபட்டு அலெக்சாண்டர் 7(7) - 6(3) எனக் கைப்பற்றினார். இதனால் ஆட்டம் கடைசி செட்டிற்கு சென்றது. கடைசி செட்டிலும் போஸ்னியா வீரர் நெருக்கடி கொடுத்தால் இறுதியில அலெக்சாண்டர் 7-5 என கைப்பற்றி வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியை பெற அலெக்சாண்டர் ஸ்வேரேவிற்கு 3 மணி நேரம் 54 நிமிடங்கள் தேவைப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் அலெக்சாண்டர் காலிறுதிக்கு முந்தைய 4-வது சுற்றிற்கு முன்னேறியுள்ளார்.