என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "amman temple"

    • திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற புகழ் பெற்ற தலமாக இந்த கோவில் விளங்குகிறது.
    • இந்த கோவிலில் அழகம்மன் சுந்தரேஸ்வரர் சமேதராக காட்சி தருவது சிறப்பு.

    நாகர்கோவில் நகரின் மையப்பகுதியான வடிவீஸ்வரத்தில் அமைந்துள்ள பழமையான கோவில் அழகம்மன் கோவில். வடிவு என்றால் அழகு. அதனுடன் ஈஸ்வரன் என்ற சொற்கள் இணைந்து வடிவீஸ்வரம் ஆனது என்றும் வடிவு ஈஸ்வரிபுரம் வடிவீஸ்வரம் ஆனது என்றும் கூறுகிறார்கள். பழையாற்றின் வலது கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் அழகம்மன் சுந்தரேஸ்வரர் சமேதராக காட்சி தருவது சிறப்பு.

    திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற புகழ் பெற்ற தலமாக இந்த கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் அம்மன் தெற்கு பார்த்து பக்தர்களுக்கு அருள் காட்சி தருகிறார். அம்மன் அருகே வலது புறத்தில் சுந்தரேஸ்வரர் காட்சி தருகிறார். சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு முன்பு நந்தி பகவானும், அவருக்கு அடுத்து நேர் எதிரே அழகிய கொடி மரமும் அமைந்துள்ளது. இந்த கொடிமரத்தின் இடது புறம் கொடி மர முருகரும், வலது புறமும் கொடி மர விநாயகரும் காட்சி அளிக்கிறார்கள். கொடி மரத்தின் மேல் பகுதியில் கோவிலின் தளத்தில் நவ கிரகங்கள் காட்சி அளிக்கிறது.

    கொடிமரத்தை தரிசிப்பவர்கள் நவக்கிரகங்கள் மற்றும் முருகர், விநாயகரை தரிசித்து விட்டு சன்னதிக்குள் நுழையலாம். அதன் பிறகு அழகம்மன், சுந்தரேஸ்வரரின் அருள் காட்சியை தரிசிக்கலாம்.

    இந்த கோவிலில் சூரிய பகவான், தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், நாகராஜர், சாஸ்தா, காசி விஸ்வநாதர், வள்ளி -தெய்வானையுடன் சுப்பிரமணியர், சண்டிகேசுவரர், சந்திரன், ஸ்ரீதேவி- பூதேவியுடன் மகாவிஷ்ணு ஆகியோர் தனி சன்னதிகளில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள்.

    இந்த கோவிலில் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 5.45 மணிக்கு பள்ளியறை பூஜை, 6.00 மணிக்கு அபிஷேகம், காலை 11 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 6.30 மணிக்கு தீபாராதனை, 7.45 மணிக்கு ஸ்ரீபலி, 8.00 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. அழகம்மன் கோவிலில் ஆடி மாதம், ஆடி பூரம் அன்று அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் நடத்துவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதே போல ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி பூரம் ஆகிய வையும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறும் மாசி திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் போது தேரோட்டமும், 10-ம் நாளில் அம்மனுக்கு ஆராட்டும் நடைபெறும். ஐப்பசி மாதம் திருக்கல்யாணம், கந்தசஷ்டி விழா ஆகியவை நடைபெறுகிறது.

    கார்த்திகை மாதம் சோமவாரம் திங்கள் கிழமை தோறும் கடை பிடிக்கப்படுகிறது. திருக்கார்த்திகை அன்று கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடக்கிறது. அதே போல சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த விழாக்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    மார்கழி மாதம் நடராஜருக்கு திருவாதிரை திருவிழாவும், ஆனி மாதம் நடராஜருக்கு திருமஞ்சனமும் நடைபெறுகிறது. அதே போல வருஷாபிஷேகம் மற்றும் புனர்பூசமும் சிறப்புடன் நடைபெறுகிறது. அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவிலில் கடந்த 14-6-1991-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் போது இந்த கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று உள்ளது. மேலும் 3 நிலைகளுடன் தெற்கு கோபுரமும் இங்கு அமைக்கப்பட்டது. இந்த கோவிலில் அழகிய தெப்பக்குளமும் அமைந்துள்ளது. இந்த தெப்ப குளத்தின் கரையில் தான் அம்மனுக்கு ஆராட்டு நடைபெறும்.

    அழகம்மன் கோவிலில் வழிபாடு செய்தால் திருமண தோஷம், தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகம். சுவாமி, அம்மன் தனி சன்னதியில் இங்கு காட்சியளிப்பதால் இங்கு வழிபாடு செய்யும் பெண் பக்தர்களுக்கு மாங்கல்ய தோஷம் நீங்கும். ஐப்பசி மாதம் நடைபெறும் திருக்கல்யாணத்தில் பங்கேற்றால் விரைவில் திருமணம் நடைபெறும். தனித்தனி சன்னதியில் நவக்கிரங்கள் இருப்பதால் நவக்கிரக தோஷமும் நிவர்த்தியாகும்.

    • இந்த கோவில் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது.
    • இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா பிரமாண்டமாக நடக்கும்.

    குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில். இந்த கோவிலானது குமரி மாவட்டத்தின் தென் மேற்கு பகுதியில் மார்த்தாண்டம் - தேங்காய்பட்டினம் வழியில் பைங்குளம் சந்திப்பு அருகே அமைந்துள்ளது.

    கோவில்செம்பன் என்னும் பெரியவர் தனது மகளுக்கு குழந்தை வரம் வேண்டி இப்பகுதியில் பீடம் அமைத்து வழிபட்டார்.

    நாளடைவில் செம்பன் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. இந்த அதிசயத்தை செம்பன், மக்களிடையே பக்தி பரவசமாக சொல்ல தொடங்கியதை தொடர்ந்து ஊர் மக்கள் அப்பகுதிக்கு வந்து பத்திரகாளி அம்மனை வழிபட தொடங்கினர். பின்னர் பீடத்தை சுற்றி ஒரு சிறு கோவில் கட்டினர். காலரா நோயினால் பாதிக்கப்பட்ட தனது ஒரே குழந்தையை கண்டு கண் கலங்கிய தாய்ஒருவர் நம்பிக்கையுடன் இந்த ஆலயத்துக்கு வந்து கதறி அழுதார். இரவு அப்பெண்மணியின் கனவில் அம்மன் தோன்றி வலது கையால் குழந்தையை தடவி நோயில் இருந்து உன் குழந்தை குணமடைந்து விட்டான் என்று கூறி மறைந்தது. அம்மன் கனவில் கூறியபடி அந்த குழந்தைக்கு காலரா நோய் முற்றிலும் தீர்ந்தது.

    அதன்பின்பு இக்கோவிலில் அம்மனின் அற்புதங்கள் ஏராளம் நடந்ததால் குமரி மாவட்டம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா பிரமாண்டமாக நடக்கும். இந்த திருவிழாவில் நடைபெறும் பால்குட ஊர்வலமும், அம்மன் தென்வீதி ஆறாட்டும், 10-ம் நாள் திருவிழா அன்று நள்ளிரவில் நடைபெறும் போட்டி வாண வேடிக்கையும் பிரசித்தி பெற்றது.

    குழந்தையில்லா தம்பதிகள் குழந்தை வரம் வேண்டி இந்த கோவிலில் வழிபடுகிறார்கள். பின்னர் நேர்ச்சையாக வாழைக் குலைகளை வழங்குவர். மேலும் பால்குட நேர்ச்சை, பொங்கலிடுதல் உள்ளிட்ட வழிபாடுகளும் நடைபெறுகிறது. ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் மாலை 6 மணிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் பெண்கள் திரளாக பங்கேற்பார்கள்.

    • இங்கு மிகப்பெரிய நாகப் புற்று உள்ளது.
    • மரச்சிலை அம்மன் என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு.

    சுவாமி : தேவி கருமாரியம்மன்.

    தீர்த்தம் : வேலாயுத தீர்த்தம்.

    தலவிருட்சம் : கருவேல மரம்.

    தலச்சிறப்பு :

    இந்த தலத்தின் அம்மனுக்கான விசேஷ நாளாக ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்நாளில் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தந்து தங்கியும் செல்கின்றனர். இங்கு மிகப்பெரிய நாகப் புற்று உள்ளது. புற்றில் பாலூற்றி வழிபடுவோர்க்கு வாழ்வு அளித்து இராகு கேது போன்ற கிரகங்களால் வரும் தோஷங்களை நீக்குவேன் என்பது அன்னையின் அருள் வாக்கு. ஆடி உற்சவத்தின் போது புற்றுக்கு பால் ஊற்றுதல் சிறப்பு நிகழ்ச்சியாக செய்யப்படுகின்றது.

    மரச்சிலை அம்மன் என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு. இங்கு ரூபாய் நோட்டு மாலையாக அம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது. இந்த சந்நிதியில் நாணயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கடன் தீர்த்தல், வியாதி, வழக்குகளில் நொடிந்து போனவர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொள்கின்றனர். பூட்டுகளை கொண்டு வந்து சந்நிதி முன்பாக பூட்டி தொங்க விட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது. இப்படிச் செய்வதால் தங்கள் பிரச்சினைகள் தீர்வதாக நம்பப்படுகிறது.

    தல வரலாறு :

    அந்த காலத்தில் வெள்வேல மரங்கள் இவ்விடத்தில் அதிகம். எனவே வேற்காடு எனப்பெயர் பூண்டது. நான் மறைகளே வெள்வேல மரங்களாகி நின்ற வரலாறு இதோ! வெள்ளத்தால் உலகம் ஒரு முறை அழிவுற்றது. சிவன் உலகை மீண்டும் படைக்க எண்ணினார். வெள்ளம் வற்றியது, பின் வேதங்களை குறிப்பிட்ட இடத்தில் மரங்கள் ஆக்கினார். அவற்றின் அடியில் லிங்கம் தோன்றியது. லிங்கத்துடன் அன்னையும் தோன்றினாள்.

    அன்னையின் அருளால் மீண்டும் தேவர்களும், மும்மூர்த்திகளும் தோன்றினர். மீண்டும் உலகம் இயங்க ஆரம்பமானது. வெள்வேல மரமும், அதனடியில் லிங்கமும், அன்னையும் தோன்றிய இடம் திருவேற்காடு. தேவர்கள் தோன்றிய இவ்விடத்தின் ஒரு பகுதி 'தேவர் கண்ட மடு' என்று அழைக்கப்படுகிறது. இதுவே திருவேற்காடு வரலாறு. இந்த திருவேற்காடு பாலி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

    நடைதிறப்பு : காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.

    பூஜை விவரம் : ஆறு கால பூஜை, (குறிப்பு:- அர்த்தஜாம பூஜை ஞாயிறு இரவு 10.30 மணிக்கு நடைபெறுகிறது)

    திருவிழாக்கள் :

    சித்ராபௌர்ணமி,

    ஆடித் திருவிழா(12 வாரங்கள்),

    தைப்பூசம்,

    மாசிமகம்,

    ஆங்கில புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 12.00 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    கோவில் முகவரி :

    அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில்,

    திருவேற்காடு – 600 077,

    சென்னை,

    திருவள்ளூர் மாவட்டம்.

    • கள்ள சத்தியம் செய்தால் அம்மன் கடுங்கோபம் கொள்வாள் என்று பக்தர்கள் கருதுகிறார்கள்.
    • ஆண்டு தோறும் சித்திரை மாதம் 10 நாள் திருவிழா நடக்கிறது.

    கொட்டாரம் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெருமாள்புரத்தில் வெட்டிமுறிச்சான் இசக்கிஅம்மன் கோவில் உள்ளது. முன்பு இந்த கோவில் தெற்கு கிழக்காக சிறிய கோவிலாக இருந்தது. கோவிலில் குடிகொண்டிருந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். அப்போது திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீமூலம்திருநாள் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இந்த கோவில் வழியாக பேச்சிப்பாறை கால்வாய் வெட்ட முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த இடத்தை பார்வையிட தலைமை பொறி யாளர் மூக்கன்துரை என்ற ஆங்கிலேயர் வந்தார்.

    கால்வாய் வெட்ட கோவில் ஆலமரம் இடையூறாக இருப்பதாக கருதிய அவர் அதை வெட்டி அகற்ற முடிவு செய்தார். இதை அறிந்த இப்பகுதி பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கோவிலின் சக்தியை மூக்கன்துரைக்கு எடுத்துரைத்தனர். அம்மன் சிறப்பை கேட்ட மூக்கன்துரை, நான் கூப்பிட்டால் அம்மன் வருவாளா? என் குரலுக்கு பதில் குரல் தருவாளா? என்று மேட்டு அம்மா என்று அழைத்ததாகவும் அதற்கு அன்னையிடம் இருந்து பதில் குரல் வந்ததாகவும் கூறப்படுகிறது.

    ஆனால் அன்னையின் குரல் தூரத்தில்தான் கேட்கிறது. எனவே மரத்தை வெட்டியே ஆக வேண்டும் என்று மூக்கன்துரை தனது பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். பணியாளர்கள் மரத்தை வெட்டினார்கள். அப்போது அதிசயம் நடந்தது. வெட்டப்பட்ட மரத்தில் இருந்து ரத்தம் வடிந்ததாகவும் மரத்தை வெட்டியவர்களில் சிலர் இறக்க நேரிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் வருந்திய மூக்கன்துரை இதை மன்னரின் பார்வைக்கு கொண்டு சென்றார். தகவல் அறிந்த மன்னர் கால்வாய் வெட்டும் திட்டத்தை கைவிட்டார்.

    அத்துடன் தற்போது இருக்கும் கோவிலின் உள்பகுதியை கட்டிக்கொடுத்து தேவியை புதிய கோவிலுக்கு எழுந்தருளுமாறு வேண்டினார். ஆனால் இருப்பிடத்தை மாற்றக்கூடாது என்று மகாராஜாவின் கனவில் அன்னை கூறியதாக தெரிகிறது. இதனால் அவர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அன்னை அமர்ந்திருக்கும் ஆலமரத்தின் வேர்களுக்கு மேல் செங்கல் அடுக்கி சுவர் எழுப்பப்பட்டது.

    தற்போது பல ஆண்டுகள் ஆகியும் சுவருக்கு எந்தவித சேதமும் ஏற்படாமல் இருப்பது அன்னையின் அருளை காண்பிக்கிறது. இந்தப் பகுதியை சுற்றியுள்ள மக்கள் சத்தியத்தை காப்பாற்ற தவறு இழைக்கிறவர்களை கோவிலுக்கு அழைத்துச் சென்று சத்தியம் செய்ய சொல்வார்கள். கள்ள சத்தியம் செய்தால் அம்மன் கடுங்கோபம் கொள்வாள் என்று பக்தர்கள் கருதுகிறார்கள்.

    இங்கு வாரத்துக்கு 2 நாள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் இங்கு வருகிறார்கள். இந்துக்கள் மட்டும் அல்லாமல் வேறு மதத்தினரும் வந்து வழிபட்டு செல்வது சிறப்பு. இந்த அம்மை கேரளாவில் சோட்டாணிக்கரை பகவதிஅம்மன் கோவிலுக்கு இந்த கோவில் ஒப்பானது.

    வெள்ளைக்கார என்ஜீனியர் மூக்கன்துரை முன்னிலையில் மரம் வெட்டப்பட்டதை நினை வுபடுத்தியே இந்த கோவில் வெட்டிமுறிச்சான் இசக்கி அம்மன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

    ஆடி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் பழைய கோவிலில் மதியம் 12 மணிக்கு பூஜையும், புதிய கோவிலில் 1 மணிக்கு பூஜையும் நடக்கிறது. அப்போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். கடைசி வெள்ளிக்கிழமை அன்று இரவில் சிறப்பு பூஜை முடிந்ததும் சமபந்தி விருந்து நடக்கிறது.

    ஆண்டு தோறும் சித்திரை மாதம் 10 நாள் திருவிழா நடக்கிறது. கார்த்திகை மாத கடைசி வெள்ளி அன்று சிறப்பு கொடை நடக்கிறது.

    • இந்த கோவில் தொடர்பான கதை சுசீந்திரம் தலப்புராணத்தில் உள்ளது.
    • செவ்வாய்க்கிழமைகளில் அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்யப்படுகிறது.

    குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த போது பத்மநாபபுரத்தில் நவராத்திரி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். பின்னர் குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்ததும் நவராத்திரி விழா கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது.

    இந்த விழாவில் குமரி மாவட்டம் குமாரகோவில் முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஆகிய 3 சிலைகளும் பங்கேற்று வருகின்றன. ஆண்டு தோறும் இந்த 3 சாமி சிலைகளும் வெகுவிமரிசையான ஊர்வலத்துடன் திருவனந்தபுரம் சென்று வருகின்றன. கொரோனா பிரச்சினை இருந்த போதும் பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சாமி ஊர்வலம் நடைபெற்றது.

    சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும்போது அம்மனுக்கு போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செலுத்துவார்கள். மேலும் போலீசாரின் பேண்டு வாத்தியமும் இடம்பெறும். இத்தகைய சிறப்புமிக்க முன்னுதித்த நங்கை அம்மன் கோவில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளக் கரையில் உள்ளது.

    இந்த கோவில் தொடர்பான கதை சுசீந்திரம் தலப்புராணத்தில் உள்ளது. லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகிய 3 பேரும் குழந்தை வடிவில் இருந்த தங்கள் கணவர்கள் மீண்டும் வடிவம் பெற கார்த்தியாயினி நோன்பு இருந்தபோது காட்சி கொடுத்த தாய்த் தெய்வம் இவள். கவுதமரின் சாபம் நீங்க இந்திரன் 300 கன்னியரை சாட்சியாக வைத்து பூஜித்தபோது தோன்றியவள் என்றும் கதைகள் கூறுகின்றன.

    கோவில் வடக்கு பார்த்தது என்றாலும் தெற்கு வாசல் வழியே தான் பக்தர்கள் செல்ல முடியும். இதன் வழி சென்று தெற்கு வடக்காக அமைந்திருக்கும் கோவிலின் வடக்கு முன் மண்டபத்தை அடையலாம். கருவறையின் முன் அர்த்த மண்டபம் இருந்தாலும் முக மண்டபத்திலிருந்தே பக்தர்கள் இறைவியை தரிசிக்க முடியும். செவ்வாய்க்கிழமைகளில் அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்யப்படுகிறது.

    நினைத்த காரியத்தை நிறைவேற்றுபவள் முன்னுதித்த நங்கை என்கிறார்கள். அந்த பகுதி பெண் பக்தர்கள். திருமண தடை மற்றும் குழந்தையில்லா பெண்கள் அம்மனை வேண்டி பலன் பெறுகிறார்கள். பிறகு நேர்ச்சையாக உருவங்களையும், தொட்டில்களையும் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

    உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளும் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்து விட்டு செல்கிறார்கள். முன்னுதித்த நங்கை அம்மனின் சிறப்புகளை அறிந்த நடிகரும், எம்.பி.யுமான சுரேஷ் கோபி, அம்மனின் தீவிர பக்தராகி விட்டார். நேரம் கிடைக்கும் வேளைகளில் கோவிலுக்கு வரும் அவர் அம்மனை தரிசித்து விட்டு செல்கிறார். மேலும் கோவிலில் சில நற்பணிகளையும் அவர் நிறைவேற்றி உள்ளார்.

    மற்ற அம்மன் கோவில்களை போல் இங்கும் ஆடி மாதம் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. ஆடி மாதம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் அம்மனுக்கு வித, விதமான அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு குழந்தை வடிவில் அலங்காரம் செய்யப்படுகிறது. ஆடி செவ்வாய்க்கிழமைளில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

    தாணுமாலையன் கோவிலின் திருவிழாவிற்கும், இந்த கோவிலுக்கும் இடையேயான உறவு காலங்காலமாக தொடருகிறது. தாணுமாலையன் கோவில் திருவிழா ஆங்காரபலி இங்கே தான் நடக்கிறது. தேர்த்திருவிழாவிற்கு முந்திய நாள் இரவில் இங்கே பூஜை நடைபெறும்.

    பூஜை விவரம்: காலை 5.30 மணிக்கு நடை திறப்பு, 6 மணிக்கு பூஜை, 7 மணிக்கு பூஜை, மாலை 5 மணிக்கு நடை திறப்பு, 7 மணிக்கு பூஜை, 8 மணிக்கு நடை அடைப்பு.

    • கா்நாடக மாநிலம் மைசூர், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திற்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் தசரா திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.
    • காலை 10.40-க்கு கோவிலில் கால்கோள் நடைபெற்றது.

    நெல்லை:

    கா்நாடக மாநிலம் மைசூர், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திற்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் தசரா திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.

    தசராதிருவிழா

    இந்த ஆண்டு தசரா விழா வருகிற செப்டம்பா் 25 -ந் தேதி அம்மாவாசை அன்று பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

    அதனை முன்னிட்டு இன்று கால்கோள் விழா நடைபெற்றது. இதற்காக பாளை ஆயிரத்தம்மன் கோவில் காலை நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தாிசனம் மற்றும் காலை அபிஷேகம் நடைபெற்றது.

    8 ரதவீதி

    சிறப்பு அலங்காரத்தில் ஆயிரத்தம்மன் அருள்பாலிக்க பாிவார தேவதைகளுக்கு படையல் வைக்கப்பட்டது. தொடா்ந்து கால்கோள் விழாவிற்கான கொடிகம்பு மஞ்சள் தடவி பூக்களால் அா்ச்சனை செய்யப்பட்டு 8 ரதவீதிகளில் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டடது.

    காலை 10.40-க்கு கோவிலில் கால்கோள் நடைபெற்றது. பின்னா் கம்பத்திற்கு பூஜைகள் நடைபெற்று கம்பத்திற்கும் மூலவா் அம்மனுக்கும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    41நாட்கள் விரதம்

    இன்றிலிருந்து தசரா விழாவிற்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்கவும், பந்தல் போடுவது, 41 நாள் விரதம் இருப்பது மற்றும் சப்பரங்கள் நிற்கும் இடங்களை தூய்மைப்படுத்ததுதல் என விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

    இதே போல் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பிற அம்மன் கோவில்களான தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், யாதவர்உச்சினிமாகாளி, கிழக்கு உச்சினிமாகாளி, வடக்கு உச்சினிமாகாளி, விஸ்வகர்மா உச்சினி மாகாளி, புதுப்பேட்டை உலகம்மன், புது உலகம்மன், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில்கலும் கால்நாட்டு வைபவம் நடைபெற்றது.

    திரளான பக்தர்கள்

    கொரோனா காரணத்தால் கடந்த 2 வருடங்களாக முழுவதுமாக நடக்காமல் இருந்த தசரா திருவிழா இந்த வருடம் கால்நாட்டுடன் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு முழுமையாக நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

    • ‘இசக்கி’ என்ற சொல்லுக்கு ‘மனதை மயக்குபவள்’ என்று பொருள்.
    • முப்பந்தலில் கருவறையில் அம்மன் வடக்கு பார்த்த வண்ணம் காட்சி தருகிறாள்.

    ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும் இடையில் உள்ளது இசக்கி அம்மனின் தலைமை பீடமான முப்பந்தல். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். கன்னியாகுமரி– திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும் இடையில் உள்ளது இசக்கி அம்மனின் தலைமை பீடமான முப்பந்தல். தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இவ்விடத்தில் கூடி பந்தல் அமைத்து, அதன் கீழ் தங்களின் பிரச்சினைகளை அவ்வையார் தலைமையில் பேசி தீர்த்துக் கொண்டனர். இதன் அடிப்படையிலேயே இந்த இடம் முப்பந்தல் என்று பெயர் பெற்றது.

    தல வரலாறு :

    முப்பந்தல் அருகில் உள்ளது பழவூர். இந்த ஊரில் நாட் டிய பெண்மணி ஒருத்தி தனது மகள் இசக்கியுடன் செல்வச் செழிப்பில் வசித்து வந்தாள். அவளது சொத்தின் மீது ஆசை கொண்ட ஒருவன், இசக்கியை காதல் மொழி பேசி வஞ்சனையால் வீழ்த்தினான். பின்னர் இசக்கியை வீட்டில் உள்ள நகை பணத்துடன் அருகில் இருந்த காட்டுக்கு வரவழைத்தவன், இசக்கி அவன்பால் கட்டுண்டு இருந்த போது தலையில் பாறாங்கல்லை தூக்கிப்போட்டான். இதில் இசக்கி துடிதுடித்து இறந்துபோனாள்.

    பின்னர் அந்தக் கயவன், நகை– பணத்துடன் காட்டு வழியாக சென்று கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று தீண்டியதில் அவனும் இறந்துபோனான். இந்த நிலையில் தெய்வ பிறவியான இசக்கி, சிவபெருமானிடம் தன்னை வஞ்சனையால் கொன்றவனைத் தானே அழிக்க வேண்டும் என்று வரம் பெற்று மீண்டும் தன்னையும், தன்னை ஏமாற்றியவனையும் உயிர்த்தெழச் செய்யுமாறு வேண்டினாள். சிவனும் வரம் கொடுத்தார்.

    கள்ளியை, குழந்தையாக மாற்றி...

    அதன்படி பாம்பு தீண்டி இறந்து கிடந்த இசக்கியை கொன்றவன் வீடு திரும்பினான். இசக்கியோ காட்டில் அலைந்து திரிந்தாள். ஒருநாள், காட்டில் இருந்த கள்ளிச் செடியை ஒடித்து அதனை அழகிய குழந்தையாக மாற்றி னாள் இசக்கி. பின்னர் அந்த குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு, தன்னை ஏமாற்றிய கயவனின் ஊருக்கு சென்று பஞ்சாயத்தை கூட்டி, தன்னையும், தனது குழந்தையையும் அவன் ஏற்க மறுப்பதாக புகார் கூறினாள்.

    விசாரணைக்கு வந்த இசக்கியை ஏமாற்றியவன், அவள் தனது மனைவியல்ல, அது என் குழந்தை அல்ல என்று மன்றாடினான். ஒரு கட்டத்தில் இசக்கி தனது இடுப்பில் இருந்த குழந்தையை கீழே இறக்கி விட்டாள். அந்த குழந்தை நேராக, குற்றம் சாட்டப்பட்டவனிடம் சென்று அப்பா என்றது. இதனை பார்த்த பஞ்சாயத்து தலைவர், 'குழந்தை பொய் சொல்லாது, எனவே நீ உன் மனைவியுடன் பேசி ஒரு முடிவுக்கு வா' என்று கூறி ஒரு வீட்டில் இருவரையும் உள்ளே வைத்து பூட்டி சென்று விட்டனர்.

    முப்பந்தலில் அமர்ந்தாள் :

    இந்த நேரத்திற்காக காத்திருந்த இசக்கி, நள்ளிரவு ஆனதும் விஸ்வரூபம் எடுத்தாள். பின்னர் தன்னை ஏமாற்றி கொன்றவனை, தனது கையால் கொன்று பழிதீர்த்தாள். அதன்பிறகு பழவூரை விட்டு, மேற்கு நோக்கி நடந்தாள். அப்போது அவ்வையார் முப்பந்தல் பகுதியில் மூவேந்தர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவ்வழியாக சென்ற இசக்கியை அழைத்து, சாந்தப்படுத்தி, 'இனி நீ இருக்க வேண்டிய இடம் இதுதான்' என்றார். இசக்கியும் அங்கேயே தங்கினாள். இதனை கயிலையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சிவபெருமான் பார்வதியை நோக்க, உடனே பார்வதிதேவி தன் வீரசக்தியை இசக்கிக்கு அளித்தாள். அன்று முதல் ஊரை காக்கும் தெய்வமானாள் இசக்கி. முப்பந்தலில் அமர்ந்ததால் முப்பந்தல் இசக்கி அம்மன் என்று பெயர் பெற்றாள்.

    அவ்வைக்கு தனி சன்னிதி :

    இசக்கியை, அவ்வையார் சாந்தப்படுத்தியதால் முப்பந்தலில் அவ்வையாரம்மன் என்ற பெயரில் அவ்வைக்கு தனி சன்னிதி உள்ளது. மேலும் இசக்கியின் சகோதரனான நீலனுக்கும் தனி சன்னிதி அமைந்துள்ளது. திருமாலே இசக்கியின் தமையனாக வந்ததாக கூறப்படுகிறது. 'இசக்கி' என்ற சொல்லுக்கு 'மனதை மயக்குபவள்' என்று பொருள். முப்பந்தலில் கருவறையில் அம்மன் வடக்கு பார்த்த வண்ணம் காட்சி தருகிறாள். வலதுபுறம் பிராமணத்தி அம்மன் உள்ளார். கருவறை சுற்றுச்சுவரில் வைஷ்ணவி, துர்க்கை, பிரத்தியங்கரா தேவி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

    கோவில் சுற்றுப்பிரகாரத்தில் வலம்புரி விநாயகரும், பாலமுருகனும், அவ்வையாரம்மனும் தனி சன்னிதியில் பாங்குடன் அருள்புரிகின்றனர். முகப்பில் காவல் தெய்வங்களான சுடலைமாடனும், அவருக்கு எதிரில் பட்டவராயரும் தனி சன்னிதிகளில் உள்ளனர். இந்த கோவிலின் அருகில் மற்றுமொரு இசக்கி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கும் சுடலை மாட சுவாமி காவல் தெய்வமாக கனகம்பீரமாக அமர்ந்துள்ளார். இந்தக் கோவில் கருவறை முன் மண்டபம் கேரள பாணியில் ஓடு வேயப்பட்டுள்ளது. இங்குள்ள இசக்கி அம்மன், ஆதி இசக்கி அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். ஆலயத்தின் வெளியே மிகப் பெரிய அளவில் இசக்கி அம்மன் இடது காலை மடித்து, வலது காலை தொங்க விட்ட நிலையில் அமர்ந்துள்ளார்.

    • ஐந்து ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே அன்னை வெளியே வந்து காட்சி தருகிறாள்.
    • அவளுக்கு எதை படைத்தாலும் ஆயிரம் எண்ணிக்கையில் தான் படைக்கப்படுகிறது.

    தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் அன்னை பராசக்தி நீக்கமற நிறைந்து கோவில் கொண்டு அருளாட்சி புரிந்து வருகிறாள். அவளின் பேராற்றல் மற்றும் அற்புதங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒவ்வொரு ஊரிலும் கனவிலும் எண்ண இயலாத அதிசயங்களை செய்து வருகிறாள்.

    அந்த வகையிலே பாண்டிசேரி மாநிலம் காரைக்காலிற்கு அருகில் திருமலைராயன் பட்டினத்தில் அமைந்த சக்தி திருத்தலமே "ஆயிரங்காளியம்மன்" கோவில் ஆகும்.

    ஆயிரங்காளி தல வரலாறு

    அன்னை ஆயிரங்காளி திருமலைராயன்பட்டினதிற்கு தானாக வந்தவள் ஆவாள். முற்காலத்தில் வடக்கே காளி வழிபாடு மேலோங்கி இருந்த காலமது. அங்கே இருந்த மன்னன் ஒருவன் அன்னை காளியை திருவுருவம் வைத்து பூசித்து வந்தான். அன்னைக்கு எதை படைத்தாலும் ஆயிரம் என்ற எண்ணிக்கையில் படைத்து பூசித்தான்.

    அவனது பகுதியில் மயங்கிய அன்னை அவனை ஆட்கொண்டாள். நாட்டின் பஞ்சம் நீங்க வரமளித்தாள். மேலும் தான் இங்கே இருந்தது போதும் தன்னை பெட்டியிலே வைத்து கடலில் போட்டுவிடும் படி ஆணையிட்டாள். பின் அவன் முன் ஒரு பேழை தோன்றியது அதில் அன்னையை வைத்து. வங்க கடலில் விட்டுவிட்டு. மன்னன் அன்னையின் பதம் அடைந்தான்.

    பேழையும் மூழ்காமல் மிதந்து கொண்டே யார் கையிலும் அகப்படாமல் திருமலைராயன் பட்டினம் வந்தது. அருகில் இருந்த மீனவர்கள் பெட்டியை எடுக்க முயற்சித்தும் எடுக்க முடியவில்லை. அன்று இரவு செங்குந்தர் மரபை சார்ந்த சிவனேயரின் கனவில் தோன்றி. தான் பெட்டியில் மிதந்து வந்திருப்பதாகவும். தன்னை எடுத்து ஒரு இடத்தில் நிலையாக வைத்து பூசிக்குமாறும் அன்னை கூறினாள்.

    விடிந்ததும் அவரும் ஊராரிடம் நடந்தவற்றை கூறி மேள தாள வாத்தியங்களோடு கடற்கரைக்கு அனைவருடனும் சென்றார். அவர் வந்தவுடன் யாருக்கும் அகப்படாத பெட்டி வேகமாக அவருக்கு அருகில் வர அவரும் பேழையை அணைத்து தூக்கி வந்தார். பின் அவ்வூரில் இருந்த மடத்தில் பேழையை வைத்து திறந்தனர். அதில் அன்னையின் அற்புதமான திருவுருவமும் ஒரு ஓலையும் இருந்தது.

    ஓலையில்

    "அருள்மிகு ஆயிரங் காளி அம்மன்

    இருளினை நீக்கி இன்பம் அளிப்பவள், அன்னைக்குப் படைக்கும் பொருள்கள் யாவும்

    எண்ணில் ஆயிரம் ஆதல் வேண்டும்

    ஆண்டுகள் ஐந்திற் கொருமுறை

    திண்ணமாய்ப் பூசித்துத் திருவெலாம் பெறுகவே!" என்று இருந்தது.

    அன்றிலிருந்து ஐந்து ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே அன்னை வெளியே வந்து காட்சி தருகிறாள். அவளுக்கு எதை படைத்தாலும் ஆயிரம் எண்ணிக்கையில் தான் படைக்கப்படுகிறது. எனவே தான் ஆயிரங்காளி எனப் பெயர் கொண்டாள்.

    அதிசய நிகழ்வுகள்

    ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வரும் நேரத்தில் பேழையில் இருந்து கொலுசு சத்தம் கலீர் என்று கேட்கும். அதன் பின்பே பேழை திறக்கப்படும். ஐந்தாண்டுகளாக பெட்டியினுள் சாற்றப்பட்ட மாலை, எழுமிச்சை, மஞ்சள் எதுவும் வாடாமல் அன்று அணிவித்தது போலவே புதிதாக இருக்கும்.

    கேட்ட வரம் தருவாள் ஆயிரம் காளி!

    அன்னையை வெளியே எடுக்கும் நாள் இரவு வெளியே எடுத்து அலங்கரிக்கபடுவாள். பின் அடுத்த நாள் காலை முதல் தரிசனம் தருவாள். அடுத்த நாள் விடிவதற்குள் பெட்டிக்குள் வைக்கப்படுகிறாள்.

    இவளிடம் என்ன வரம் கேட்டாளும் வாரி வழங்குகிறாள். தங்களால் இயன்றதை ஆயிரம் எண்ணிக்கையில் காணிக்கை ஆக்குகின்றனர். தனது பக்தர்கள் துயர் தீர்க்கும் கற்பக விருட்சமாக அன்னை ஆயிரங்காளி கோவில் கொண்டுள்ளாள்.

    இனி 2022-ஆம் ஆண்டு மீண்டும் ஆயிரங்காளி வெளியே வருவாள். அனைவரும் திருமலைராயன் பட்டினம் சென்று அன்னையை தரிசித்து அவள் அருள் பெறுவோம்.

    • கோயம்புத்தூர் மாவட்டம் கொழுமம் என்ற தலத்தில் மாரியம்மன் ஆலயம் உள்ளது.
    • ஆச்சரியமூட்டும் மூன்று அம்மன்களை பற்றி பார்க்கலாம்.

    நாடு முழுவதும் சிறப்புமிக்க ஏராளமான அம்மன் கோவில்கள் உள்ளன. அதில் ஆச்சரியமூட்டும் மூன்று அம்மன்களை பற்றி பார்க்கலாம்.

    மடிசார் கட்டிய அம்பாள்

    லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலின் அம்பிகை ஸ்ரீப்ரவிருத்தஸ்ரீமதி (ஸ்ரீபெருந்திரு பிராட்டி) என்று அழைக்கப்படுகிறாள். இவள் லட்சுமிக்கே லட்சுமி கடாட்சம் தந்த அம்பாள்.

    சுவாமி கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். அம்பாள் மேற்கு நோக்கியவாறு மாலை மாற்றும் வடிவில் அருள்பாலிக்கிறாள். நித்தியகல்யாணியாக மடிசார் புடவையுடன் எப்போதும் காட்சி தரும் அம்பாள் தன் காதுகளில் ஸ்ரீசக்கர தாடங்கம்(காதணி) அணிந் திருக்கிறாள்.

    லிங்க வடிவில் அம்மன்

    கோயம்புத்தூர் மாவட்டம் கொழுமம் என்ற தலத்தில் மாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள மாரியம்மன், லிங்க வடிவில் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    லிங்கத்தின் கீழ் ஆவுடையாரும் உள்ளது. இந்த மூலவரைப் பார்க்கும்போது, அம்மனுக்குரிய எந்தவித அம்சமும் தென்படாது. இருப்பினும் கூட இந்த லிங்கத்தை, அம்மனாக பாவித்து, புடவை அணிவித்து பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.

    சிவனை தழுவிய கோலத்தில் அம்பாள்

    பட்டீஸ்வரம் மக்களால் சின்னக்கோவில் என்று அன்புடன் அழைக்கப்படும் சக்திமுற்றம், பிரம்மாண்ட ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு முகமாய் காட்சி தருகின்றது. இந்த கோவிலில் மூலவர் சிவக்கொழுந்தீசு வரர் கிழக்கு முகமாய் காட்சி தருகின்றார்.

    இவருக்கு சக்திவனேஸ்வரர் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இவரை வணங்கி, சண்டிகேசுவரரை வழிபட்டு வரும்போது, சுவாமி சன்னிதிக்கு இடதுபுறம் சக்தி தழுவிய நாதரின் திருமேனியும், அதன் பின்புறம் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யும் அம்மன் திருமேனியும் நம்மைப் பரவசப்படுத்துகின்றன.

    அம்பாள் ஒற்றைக் காலைத் தரையில் ஊன்றி, மற்றொரு காலை ஆவுடையாரின் மீது மடக்கி வைத்து, தன் இரு கைகளாலும் சிவலிங்கத்தைத் தழுவி நிற்கும் இத்திருக்கோலம் வேறெந்த ஆலயத்திலும் காண முடியாத சிறப்பாகும். இத்தலத்தை வழிபடுவோருக்குத் திருமணம் கைகூடும்.

    • மாரியம்மன் கோவில்களில் கடைசி ஆடிவெள்ளியையொட்டி சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
    • ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் பகுதியில் உள்ள மாகாளியம்மன், செல்லாண்டியம்மன், கண்ணபுரம் மாரியம்மன், எல்.கே.சி நகர். புற்றுக்கண் நாகாத்தாள், மயில்ரங்கம் திருமலை அம்மன், மாரியம்மன், உத்தமபாளையம் மாரியம்மன் கோவில்களில் நேற்று கடைசி ஆடிவெள்ளியையொட்டி சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன, ஆடிவெள்ளியையொட்டி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

    வெள்ளகோவில் தர்மசாஸ்தா ஐயப்ப சாமி கோவிலில் கடைசி ஆடி வெள்ளியையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    • பச்சைவாழி அம்மன் கோவில் தீமிதி திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது.
    • முன்னதாக கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

    புதுச்சேரி:

    பாகூர் தொகுதி கன்னிய கோவில் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மன்னாதீஸ்வரர் உடனுரை பச்சைவாழி அம்மன் கோவில் தீமிதி திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது.

    முன்னதாக கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு சாமி வீதியுலா நிகழ்ச்சி நடை பெற்று வந்தது.

    பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர் மேலும் நேர்த்திக்கடனாக மொட்டை அடித்து வழிபாடு செய்தனர். பிற்பகல் 12.30 மணிய ளவில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி விமர்சியாக நடந்தது. மாலை 5 மணிக்கு கோவில் எதிரில் தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.

    தீமிதி விழாவில் புதுவை, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குவிந்து வருகின்றனர்.

    ×