என் மலர்
நீங்கள் தேடியது "annabishekam"
- கலச அபிஷேகம், 16 வகை அபிஷேகம் நடந்தது.
- 16 வகை தீபாராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் உலக நன்மை வேண்டி அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பழனி முருகன் கோவிலில் கடந்த 2-ந்தேதியும், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் நேற்று முன்தினமும் அன்னாபிஷேகம் நடந்தது. இந்தநிலையில் நேற்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோவில் மண்டபத்தில் 3 வெள்ளி கலசங்கள் வைத்து விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், ஸ்கந்தயாகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சாயரட்சை பூஜையில் சிவபெருமான், பெரியநாயகி அம்மன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு கலச அபிஷேகம், 16 வகை அபிஷேகம் நடந்தது.
பின்னர் மஞ்சள் நிற அன்னத்தால் கிரீடம் வைத்து சிறப்பு அலங்காரம், அன்னாபிஷேகம் நடைபெற்றது. மேலும் 16 வகை தீபாராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உபயதாரர்களான கண்பத் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர்கள் ஹரிகரமுத்து, செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். பூஜை முறைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணி ஆகியோர் செய்தனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- ஐப்பசி மாத பவுர்ணமியன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது முக்கிய நிகழ்வாக உள்ளது.
- அதன்படி நடப்பாண் டிற்கான அன்னாபிஷேக விழா இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நடக்கிறது.
சேலம்:
ஐப்பசி மாத பவுர்ணமியன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது முக்கிய நிகழ்வாக உள்ளது. அதன்படி நடப்பாண் டிற்கான அன்னாபிஷேக விழா இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நடக்கிறது. பிரசித்தி பெற்ற சேலம் டவுன் சுகவனேஸ்வரர் கோவிலில் இன்று மாலை அன்னா பிஷேகம் நடக்கிறது. முன்னதாக சுகவ னேஸ்வரர், சொர்ணாம்பிக்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் அரிசி சாப்பாடு, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றால் சுகவனேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. பின்னர் பக்தர்களின் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படு கிறது. இதனிடையே இன்று நள்ளிரவு 1.05 மணி முதல் 2.23 மணி வரை சந்திரகிரணம் நிகழ்கிறது. இதனால் சுகவனேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் முடிந்தவுடன் இரவு 8.30 மணிக்கு கோவில் நடை சாற்றப்படுகிறது. தொடர்ந்து நாளை காலை 7 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனும திக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
- சிவபெருமான் அபிஷேகப் பிரியர்.
- வறுமையில் இருந்து விடுபட்டு பசியில்லாத வாழ்வைப் பெறுவார்கள்.
உலக உயிர்கள் அனைத்திற்கும் படியளப்பவர் சிவபெருமான். அந்த இறைவனுக்கு பக்தர்கள் அனைவரும் உணவை படைத்து வழிபடும் சிறப்புமிக்க நாளே, ஐப்பசி பவுர்ணமியில் வரும் ` அன்னாபிஷேகம்' திருநாள் ஆகும்.

தட்சனுக்கு 50 பெண் பிள்ளைகள். அவர்களில் அஸ்வினி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திர பெண்களை, சந்திரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான். சந்திரனோ. தன்னுடைய மனைவியர்களில் கார்த்திகை, ரோகிணி ஆகியோருடன் மட்டும் அதிக அன்பு காட்டினான். அதிலும் ரோகிணியுடன் அதீத அன்பு செலுத்தினான்.
இதனால் மற்ற பெண்கள் அனைவரும் தன்னுடைய தந்தையிடம் இதுபற்றி கூறினர். தன் மகள்கள் அனைவரையும் ஒன்றுபோல் பார்க்காததால், சந்திரனின் மீது கோபம் கொண்ட தட்சன். "ஒளி பொருந்திய கலைகளைப் பெற்றிருப்பதால்தான் நீ இப்படி நடந்து கொண்டாய். உன்னுடைய கலைகள் ஒவ்வொன்றாய் தேய்ந்து போகட்டும்" என்று சாபமிட்டார்.
அதன்படியே தினம் ஒரு கலையாக, சந்திரனின் கலைகள் தேய்ந்து வந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த சந்திரன், தன் சாபம் நீங்க வழிதேடி அலைந்தான். இறுதியில் சிவபெருமானே கதி என்று அவரை சரணடைந்தான்.
அப்போது சந்திரன், கலைகள் பலவும் தேய்ந்து மூன்றாம் பிறையாக உருமாறி நின்றான். அவனுக்கு அடைக்கலம் தந்த சிவ பெருமான், மூன்றாம் பிறை சந்திரனை தன்னுடைய தலை மீது சூடிக்கொண்டார்.
பின் சந்திரனை நோக்கி, "நீ உன் தவறை உணர்வதற்காக இன்று முதல் உன் கலைகள் ஒவ்வொன்றாக தேயவும், பின் வளரவும் அருள்புரிகிறோம். இருப்பினும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் மட்டும் உன்னுடைய 16 கலைகளுடனும் நீ மிளிர்வாய்" என்றார்.
அதன் காரணமாகத்தான் சந்திரன், ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் மட்டும் மிகுந்த ஒளியுடன் காட்சி தருகிறான். (அறிவியல் ரீதியாக ஐப்பசி தினத்தன்று. பூமிக்கு அருகாமையில் சந்திரன் வருவதால், இந்த அதிக ஒளிர்வு இருப்பதாக சொல்லப்படுகிறது.)
இத்தகைய சிறப்புமிக்க ஐப்பசி பவுர்ணமி நாளில் தான். சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.

நவ கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. எனவே தனக்கு சாப விமோசனம் அளித்த சிவபெருமானுக்கு தன்னுடைய தானியத்தால் சந்திரன் அபிஷேகிப்பதாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.
சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அவருக்கு 70 வகையான மங்கலப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். அதில் முக்கியமான ஒன்றுதான், அன்னம்.
ஐப்பசி பவுர்ணமி நாளில், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபாடு செய்வதால், உலகம் முழுவதும் சுபிட்சம் பெறும் என்று சிவாகமம் கூறுகிறது.

ஐப்பசி பவுர்ணமி நாள் அன்று, காலையிலேயே சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபாடு நடைபெறும்.
பின்னர் சாயரட்சை பூஜை நேரமான, மாலை வேளையில், புதிய நெல் கொண்டு அன்னம் படைத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள்.
அப்போது சிவலிங்கம் மறையும் அளவிற்கு அன்னத்தை சிவலிங்க திருமேனி முழுவதும் சாற்றுவார்கள்.
இந்த அன்னாபிஷேக அலங்காரமானது, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை அப்படியே இருக்கும். இந்த நேரத்தில் சிவபெருமானை தரிசனம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும். இரவு 8.30 மணிக்கு மேல் அன்னாபிஷேக அலங்காரம் பிரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
மேலும் அன்னத்தை திருக்குளம் அல்லது நீர்நிலைகளில் கரைப்பார்கள். நீர்வாழ் உயிர்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.
சிவபெருமானுக்கு செய்யப்பட்ட அன்னாபிஷேக அலங்காரத்தை காணும் பக்தர்கள், வறுமையில் இருந்து விடுபட்டு பசியில்லாத வாழ்வைப் பெறுவார்கள்.
- கிண்டல் செய்யும் விதமாக இந்தப் பழமொழி கையாளப்பட்டு வருகிறது.
- கோடி சிவலிங்கத்தை தரிசித்ததற்கான பலனைப் பெறுவர்.
சோறு கண்டால் சொர்க்கம் உண்டு என்பார்கள் முன்னோர்களும், சான்றோர்களும் சொல்லி வைத்த பழமொழிகளும், சொல் வழக்குகளும், இன்று அபத்தமான அர்த்தங்களைத் தரும் வகையில் திரிந்து நிற்பதை நாம் உணர முடியும்.
அவற்றில் ஒன்றுதான் 'சோறு கண்ட இடம் சொர்க்கம். சோறு எங்க கிடைக்கிறதோ, அங்கேயே தங்களின் புகலிடமாக மாற்றிக்கொள்பவர்களை, கிண்டல் செய்யும் விதமாக இந்தப் பழமொழி கையாளப்பட்டு வருகிறது.

உண்மையில் 'சோறு கண்டால் சொர்க்கம் என்பதே பழமொழியின் சரியான வாக்கியம். அதாவது ஐப்பசி பவுர்ணமியன்று சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். அதில் உள்ள ஒவ்வொரு பருக்கை அன்னமும், ஒவ்வொரு சிவலிங்கமாக கருதப்படும்.
எனவே அன்றயை தினம் சிவலிங்க தரிசனம் செய்பவர்கள் கோடி சிவலிங்கத்தை தரிசித்ததற்கான பலனைப் பெறுவர். மேலும் அன்னாபிஷேக தரிசனத்தை காண்பவர்களுக்கு மோட்சம் (பிறப்பில்லாத நிலை) கிடைக்கும் என்பது ஐதீகம். இதனைத் தான் `சோறு கண்டால் சொர்க்கம் என்று முன்னோர்கள் சொல்லிவைத்தனர்.
- அன்னபூரணி, சிவபெருமானுக்கு அன்னமிட்ட நாள் ஐப்பசி பவுர்ணமி திதி.
- சந்திரன் சாபம் நீங்கி பதினாறு கலைகளும் நிரம்ப பெற்று உதித்து வருவார்.
"சோறு கண்ட இடம் சொர்க்கம்" ன்னு ஒரு பழமொழி உண்டு.
சோற்றை கண்டதும் சொர்க்கம் கிடைக்குமா... சோறு பரிமாறப்படும் இடம் சொர்க்கம் போன்றதா என நிறைய கேள்விகள் மனதில்.
சோறு கண்டதும் சொர்க்கம் என சொல்லும் சொலவடையின் அர்த்தத்தைத் தேடும் போது தான் உலகிற்கே படியளக்கும் பரமசிவனாரின் மகிமை புரிய ஆரம்பித்தது.

நம்மில் நிறைய பேர் ஆலயத்திற்கு செல்லும் போது சுவாமிக்கு நடைபெறும் பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், நெய் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், தைல அபிஷேகம் மற்றும் சந்தனம், விபூதி, மஞ்சள், போன்ற பிற வாசனை பொருட்களால் நடைபெறும் அபிஷேகத்தை பார்த்திருப்போம்.
சோற்றால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுவதை நம்மில் வெகு சிலரே பார்த்திருப்போம். ஐப்பசி மாத பவுர்ணமி திதியின் போது சிவாலயங்கள் தோறும் அன்னாபிஷேகம் நடைபெறும்.
மும்மூர்த்திகளில் சிவபெருமானை போலவே பிரம்மனுக்கும் முன்பு ஐந்து தலை இருந்தது. அதனால் தானும் சிவனுக்கு நிகரானவர் என பிரம்மன் நினைத்தார்.
பிரம்மனின் அகந்தையை அடக்க பிரம்மனின் ஐந்து தலைகளுள் ஓர் தலையை சிவபெருமான் கொய்து பிரம்மனை நான்முகன் ஆக ஆக்கினார்.
சிவபெருமானால் துண்டிக்கப்பட்ட பிரம்ம தேவரின் தலையானது சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்டு சிவனாருக்கு பிரம்மஹத்தி தோஷத்தை ஏற்படுத்தியது.
சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்ட பிரம்மனின் கபாலம் ஆனது எப்போதும் பசியால் அனத்திக் கொண்டிருந்தது.
பிரம்மனால் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்க பிரம்மனிடமே உபாயம் கேட்டார் சிவபெருமான்.
தனக்கு போதும் என்ற அளவுக்கு உணவு கிடைக்கும் போது சிவபெருமானை விட்டு நீங்கி விடுவதாக பிரம்ம தேவரின் கபாலம் சிவனாரிடம் கூறியது.
சிவபெருமான் கபாலீஸ்வரர் எனும் திருநாமத்தோடு பிச்சாடனார் ஆக உருமாறி பூலோகம் வந்தார்.
அன்னமிட்டு நிறையும் போது மட்டுமே அந்த கபாலம் சிவபெருமானின் கையை விட்டு பிரியும் என்பது சிவனாருக்கு பிரம்மனால் கொடுக்கப்பட்ட சாபம் ஆகும்.
சிவ பெருமான் காசிக்கு செல்லும் போது அவருக்கு அன்னபூரணி அன்னமிடுகிறாள். அகிலம் காக்கும் அன்ன பூரணியின் அன்பினால் கபாலம் நிறைந்தது.
இதை அடுத்து சிவபெருமான் கையில் ஒட்டி கொண்டு அவரை படாத பாடுபடுத்திய பிரம்மனின் கபாலம் கீழே விழுந்தது. சிவபெருமானுக்கு பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.
அன்னபூரணி அன்னை சிவபெருமானுக்கு அன்னமிட்ட நாள் ஐப்பசி மாதம் பவுர்ணமி திதி. இதனால் சிவபெருமான் பிரம்மஹத்தி தோஷம் நீங்க பெற்ற ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் சிவாலயங்கள் அனைத்திலும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது .

ஐப்பசி பவுர்ணமி அன்று சந்திரன் தனது சாபம் நீங்கி முழு பொலிவுடன் பதினாறு கலைகளும் நிரம்ப பெற்று முழு பொலிவுடன் உதித்து வருவார்..
அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் சந்திர பகவானின் மனைவியர். இதில் ரோஹிணி நட்சத்திரத்தின் மேல் அதிக நாட்டமில்லாமல் சந்திரன் நடந்து கொண்டார்.
இதை தனது தந்தையிடம் ரோஹிணி புகார் செய்கிறாள். ரோஹிணியின் தந்தை உன் உடல் தேயட்டும்' என சந்திரனுக்கு சாபம் கொடுத்தார்.
சாபம் பெற்றதும் சந்திரனின் ஒவ்வொரு கலையாகக் குறையத் தொடங்கி, சந்திர பகவான் பொலிவிழந்தார். சந்திரன் தனது தவறை உணர்ந்து தமது சாபம் தீருவதற்காக திங்களூர் கைலாசநாதரை வணங்கினார்.
சிவபெருமான் அருளால் சாபம் நீங்க பெற்று சந்திரன் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று முழுமையாக பிரகாசித்தார். சந்திரன் பூமிக்கு மிக அருகில் தோன்றும் நாள் ஐப்பசி பவுர்ணமி ஆகும்.
சந்திரனை முடியில் சூடிய சிவபெருமானுக்கு அந்த சந்திரன் முழு பொலிவுடன் இருக்கும் நாளான ஐப்பசி பவுர்ணமி அன்று சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால் அன்று சிறப்பு வழிபாடு ஆக பிறை சூடிய பெருமான் ஆன சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
அன்னாபிஷேகத்தை தரிசித்தவருக்கு அந்த ஆண்டு முழுவதும் அன்னத்திற்கு குறைவு ஏற்படாது. நெல், அரிசி ஆகிறது. அரிசி, சோறாகிறது. சோறு தேகத்துக்குள் சென்று கலந்து வலிமையை அளிக்கிறது.
இது போலவே ஆத்மா எவ்வளவு ஜன்மங்கள் எடுத்தாலும் பரமாத்மாவோடு கலந்தால் ஒன்றாகிவிடும் என்பதை உணர்த்தவே அன்னாபிஷேகம் நடைபெறுகிறது என்றும் சொல்லலாம். அரிசி என்ற வார்த்தையிலேயே அரியும் சிவனும் அடங்கியுள்ளனர்.
சோறு கண்ட இடமே சொர்க்கம் என்பதன் பொருள் சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஒவ்வொரு சோறும் ஒவ்வொரு பருக்கையும் சிவலிங்கத்திற்கு சமம்.
நன்றாக சோற்றுப் பருக்கையை உற்று நோக்கினால் சோற்றுப் பருக்கையானது சிவலிங்க வடிவில் இருப்பதை காணலாம் .
ஐப்பசி மாத அன்னாபிஷேகத்தின் போது சிவபெருமானுக்கு சாற்றியிருக்கும் ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும் நம்மால் சிவலிங்கத்தைக் காண முடியும்.
ஒரே சமயத்தில் கோடி சிவலிங்க தரிசனம் பல ஜென்ம பாவத்தை போக்கும் அன்னாபிஷேகம் நடைபெறும் அன்று ஒவ்வொரு சோற்றிலும் ஒரு சிவலிங்கத்தை காணலாம் என ஈஸ்வரன் வரம் கொடுத்து இருப்பதால் அந்த வரத்தின் பயனாக நாம் அன்று கோடி கோடி லிங்கத்தை பார்த்த பலனைப் பெறலாம்.
சிவபெருமானுக்கு படைக்கப்பட்ட அபிஷேக சோற்றை யார் கண்ணார காண்கின்றார்களோ அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் விளைவாகவே சோறு கண்ட இடமே சொர்க்கம் என கூறப்பட்டது.
- மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.
- அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.
ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி திதி நேற்று தொடங்கி இன்று இரவு 3.42 மணிவரை இருக்கிறது. எனவே நேற்று இரவு முதலே பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.
இதனால் கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
அன்னாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை காத்திருந்திருந்தனர்.
இறைவனுக்கு எத்தனையோ அபிஷேகம் செய்யப்பட்டாலும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம்.
இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம் என தெரிவித்தனர்.
- 16 வகை தீபாராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
- முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. அதன்படி பழனி முருகன் கோவிலில் கடந்த 11-ந்தேதியும், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் நேற்றும் அன்னாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் இன்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கோவில் மண்டபத்தில் 3 வெள்ளி கலசங்கள் வைத்து விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், ஸ்கந்தயாகம் நடந்தது. அதையடுத்து சாயரட்சை பூஜையில் சிவன், பெரியநாயகி அம்மன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு கலச அபிஷேகம், 16 வகை அபிஷேகம் நடந்தது. பின்னர் மஞ்சள் நிற அன்னத்தால் கிரீடம் வைத்து சிறப்பு அலங்காரம், அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து 16 வகை தீபாராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உபயதாரர்களான கண்பத் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர்கள் ஹரிகரமுத்து, செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- மூலவருக்கு 16 வகை அபிஷேகம், 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடைபெற்றது.
- மஞ்சள் நிற அன்னத்தால் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகை தீபாராதனை காட்டப்பட்டது.
பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத கேட்டை நட்சத்திர நாளன்று அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அப்போது மழைவளம் பெருகவும், உலகநலன் வேண்டியும், மக்கள் பசி, பிணி இன்றி வாழவும் பூஜைகள் செய்யப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேக நிகழ்ச்சி சித்தனாதன் சன்ஸ் சார்பில் பழனி முருகன் கோவில் மண்டபத்தில் நடந்தது.
முன்னதாக தங்க சப்பரத்தில் 3 கலசங்களில் புனிதநீர், 108 வலம்புரி சங்குகளில் புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் ஆகியவை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 108 வலம்புரி சங்குகளுக்கு முன்பு கந்த ஹோமம், பூர்ணாகுதி நடைபெற்று, கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம், 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு மஞ்சள் நிற அன்னத்தால் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, கிரீடம் வைக்கப்பட்டு அன்னத்தால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 16 வகை தீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகர், பழனிவேலு, அசோக், செந்தில், கார்த்திக், குமரகுரு, தினேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். பூஜை ஏற்பாடுகள் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் கோவில் குருக்கள், மிராசுதாரர்கள் செய்திருந்தனர்.
இந்த கோவில் நேற்று காலை 10 மணிக்கு மகாதேவ அஷ்டமியையொட்டி ராமலிங்கசுவாமி, சிறப்பு கும்ப பூஜை நடந்தது. மதியம் 12 மணிக்கு அன்னாபிஷேகமும், இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அங்குள்ள பிண்டம் போட்ட ராமருக்கும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 2 மணிக்கு அன்னதானம் நடந்தது.
கார்த்திகை மாதம் தேய்பிறையில் வருகின்ற அஷ்டமி திதி, மகாதேவ அஷ்டமியாகும். இந்த தேய்பிறை அஷ்டமியில் தான் கால பைரவர் தோன்றினார். இதனால் அனைத்து சிவன் கோவில்களிலும் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறும். நெல்லையப்பர் கோவிலில் மகாதேவ அஷ்டமியையொட்டி சுவாமிக்கும், அம்பாளுக்கும், காலபைரவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதையொட்டி காலபைரவருக்கு பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் கோவிலில் உள்ள மகாதேவருக்கு நேற்று மாலையில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அதை தனக்குரியதாக மட்டுமே வைத்துக்கொள்ளும் எவராக இருந்தாலும், அவர்களை விட்டு இறையருள் விலகும் என்பதே வேதங்கள் கூறும் நிதர்சனமான உண்மை. அந்த வேத உண்மையை பறைசாற்றும் விதமாகவே கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னம், பிரசாதமாக பக்தர்களும், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் வழங்கப்படுகிறது.
தட்சன் என்பவனுக்கு 27 பெண்கள். அவர்கள் அனைவரையும் சந்திரன் மணம் முடித்துக் கொண்டான். ஆனால் அவர்களில் ரோகிணியிடம் மட்டுமே அவன் அதிக காதலுடன் இருந்தான். இதுபற்றி மற்ற பெண்கள் தன் தந்தையிடம் முறையிட்டனர். திருமணம் செய்து கொடுக்கும்போது, அனைத்து பெண்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறியிருந்த வார்த்தை சந்திரன் மீறிவிட்டதாக கருதிய தட்சன், சந்திரனுக்கு சாபம் கொடுத்தான்.
இதனால் சந்திரன் கலை இழந்து தேயத் தொடங்கினான். அதன்பிறகு சாபத்தில் இருந்து மீள, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான் சந்திரன். ஈசனின் அருளால் தனது முழு ஆற்றலையும் முழுமையாக சந்திரன் பெற்ற தினமே ஐப்பசி பவுர்ணமியாகும்.
சந்திரன் பெற்றது போலவே, நாமும் முழு ஆற்றலையும் அடையும் நோக்குடன் தான் ஐப்பசி பவுர்ணமி நாளில், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபாடு செய்கிறோம்.
சந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமியாகும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது. அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
சந்திரனின் சாபம் தீர்ந்ததற்காகவா நாம், ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறோம். அது மட்டுமே காரணம் அல்ல.. இந்த நிகழ்வுக்கு ஆன்மிக ரீதியான அறிவார்ந்த தத்துவம் ஒன்று குறிப்பிடப்படுகிறது.
சிவலிங்கம் என்பது ஆகாயம். ஆவுடையார் என்பது பூமி. இந்த ஆகாய லிங்கத்துக்கு கடலில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொண்டு போய் மேகங்கள் மழையாய் பொழிந்து அபிஷேகம் செய்கின்றன. நட்சத்திரங்கள் ஆகாய லிங்கத்துக்கு மாலையாகவும், திசைகளே ஆடையாகவும் இருக்கின்றன. ‘தரை உற்ற சக்தி’ என்ற திருமந்திரப் பாடலின் விளக்கம் இது.
இந்தத் தகவலைச் சொன்ன திரு மூலருக்கும் கூட ஐப்பசி மாதம் தான் குருபூஜை வருகிறது என்பது சிறப்பு சேர்க்கும் ஒரு விஷயமாகும். அதனால்தான் போலும் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் செய்கிறோம். ஆண்டவன் என்னும் ஆகாயத்தின், ஒரே கூரையின் கீழ்தான் நாம் அனைவரும் இருக்கிறோம். அதனால் ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து, அதை எந்த விதமான பேதமும் பார்க்காமல் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பது இதன் தத்துவார்த்தமாக இருக்கிறது. இதுபற்றி கந்தபுராணத்திலும், திருமூலரின் திருமந்திரத்திலும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
அன்றைய தினம் மாலையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, நன்கு துடைத்து விட்டு, இறைவனின் திருமேனியை மூடும் அளவுக்கு அன்னத்தை சாத்துவார்கள். பிறகு இறைவனுக்கு தீபாராதனைச் செய்யப்படும். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்படும். இறைவனின் திருமேனியில் உள்ள அன்ன அலங்காரத்தைக் களைந்து, அதில் சிறிதளவு அன்னத்தை எடுத்து லிங்கம்போல் செய்து பூஜிப்பார்கள். அதை எடுத்துக் கொண்டுபோய், ஊரில் உள்ள குளம், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளில் விடுவார்கள். இதனால் ஊரில் விளைச்சல் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது. பலருக்கு செல்வச் செழிப்பில் இருந்தாலும், உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் சாப்பிட முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது. இதை ‘அன்ன த்வேஷம்’ என்பார்கள். இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை, எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும்.
ஒருவன் எவ்வளவு பெரிய, பெரிய தான- தர்மங்களைச் செய்தாலும் கூட, அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நமது முன்னோர்களின் வாக்காகும். அது எவ்விதத்திலும் பொய்யில்லை என்பதே இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகமும், அதை அனைவருக்கும் கொடுக்கும் முறையும் உணர்த்துகிறது.