என் மலர்
நீங்கள் தேடியது "Anura Kumara Dissanayake"
- கடினமான காலங்களில் இந்தியா - இலங்கை இணைந்து செயல்பட்டது.
- இலங்கை வாழ் தமிழர்களுக்கு 10,000 வீடுகள் கட்டி தரப்படும்.
தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் நேற்று இரவு இலங்கைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வெளிவிவகாரத்துறை மந்திரி விஜித ஹேரத் தலைமையிலான உயர் நிலைக்குழு வரவேற்றது.
இன்று காலை தலைநகர் கொழும்புவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு முப்படைகளின் சம்பிரதாய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். பீரங்கி குண்டுகள் முழங்கவும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கைக்கு வருகை தரும் ஒரு தலைவருக்கு முப்படை வரவேற்பு அளிப்பது இது முதல் முறையாகும்.
வரவேற்பு முடிந்ததும் பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர், மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்பின் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.
திரிகோணமலையின் சம்பூரில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத் திட்டம், தம்புள்ள என்ற இடத்தில் 5 ஆயிரம் மெட்ரிக் டன் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப் படுத்தக்கூடிய குளிர்பதன வசதித் திட்டம், இலங்கை முழுவதும் உள்ள சுமார் 5 ஆயிரம் மத வழிபாட்டுத் தலங்களின் மேற்கூரைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவும் திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.
இதையடுத்து இலங்கை நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி அந்நாட்டின் அதிபர் அனுர குமார திசநாயக கவுரவித்தார்.
பிரதமர் மோடிக்கு இலங்கை நாட்டின் உயரிய விருதான மித்ரா விபூஷணா விருது வழங்கப்பட்டது. அந்த விருதை மோடிக்கு அதிபர் அனுர குமார திச நாயகே அணிவித்தார்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி கூறியதாவது:
* இது எனது 4-வது இலங்கை வருகை. எனது கடைசி வருகை ஒரு முக்கியமான காலகட்டத்தில் நிகழ்ந்தது. அந்த நேரத்தில், இலங்கை எழுச்சி பெற்று வலுவாக உயரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
* இலங்கை மீண்டும் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் கண்டு நான் இன்று மகிழ்ச்சியடைகிறேன். உண்மையான அண்டை நாடாக இலங்கையுடன் நின்றது எனக்கு பெருமை அளிக்கிறது.
* 2019 பயங்கரவாதத் தாக்குதலாக இருந்தாலும் சரி, கோவிட் தொற்றுநோயாக இருந்தாலும் சரி, சமீபத்திய நிதி நெருக்கடியாக இருந்தாலும் சரி, நாங்கள் எப்போதும் இலங்கை மக்களுடன் உறுதுணையாக இருந்து வருகிறோம்.
* கடினமான காலங்களில் இந்தியா - இலங்கை இணைந்து செயல்பட்டது.
* இலங்கைவாழ் மக்களின் தைரியத்தை நான் பாராட்டுகிறேன்.
* இலங்கை தனது வீழ்ச்சியில் இருந்து வலுவாக எழுந்து வரும்.
* இலங்கை வாழ் தமிழர்களுக்கு 10,000 வீடுகள் கட்டி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.
- இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
பிரதமர் மோடி, தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை கடந்த 3-ந்தேதி தொடங்கினார்.
முதலில் தாய்லாந்துக்கு சென்றடைந்த அவர், பிம்ஸ்டெக் அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றார். மேலும் உறுப்பு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் நேற்று இரவு இலங்கைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வெளிவிவகாரத்துறை மந்திரி விஜித ஹேரத் தலைமையிலான உயர் நிலைக்குழு வரவேற்றது.
பின்னர் தலைநகர் கொழும்புவில் உள்ள தாஜ்சமுத்ரா நட்சத்திர விடுதியில் தங்கினார். அப்போது அங்கு அவரை இந்திய வம்சாவளியினர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இதுதொடர்பாக மோடி தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் கூறும்போது, கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினர் எனக்கு வழங்கிய ரம்மியமான வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை. அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
மோடியை வரவேற்கும் வகையில் சாலைகளில் பிரமாண்ட விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே கடந்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன. இதையடுத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும், இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடி இலங்கை பயணத்தை மேற்கொண்டார்.
இன்று காலை 9 மணியளவில் தலைநகர் கொழும்புவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு முப்படைகளின் சம்பிரதாய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். பீரங்கி குண்டுகள் முழங்கவும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கைக்கு வருகை தரும் ஒரு தலைவருக்கு முப்படை வரவேற்பு அளிப்பது இது முதல் முறையாகும். இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, பிரதமர் மோடியை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இலங்கை அதிபர் ஒரு சம்பிரதாய வரவேற்புடன் வரவேற்றார்.
நமது மக்களின் பகிரப்பட்ட எதிர்காலம் மற்றும் பரஸ்பர செழிப்புக்கான கூட்டாண்மையை வளர்ப்பதற்கான இருதரப்பு விவாதங்கள் நடக்கிறது என்று தெரிவித்தார். மேலும் சுதந்திர சதுக்கத்தில் ஒரு வெளிநாட்டுத் தலைவருக்கு இதுபோன்ற வரவேற்பு அளிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே உடன் இருந்தார். வரவேற்பு முடிந்ததும் மோடிக்கு இலங்கை பிரதமர், மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்பின் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.
திரிகோணமலையின் சம்பூரில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத் திட்டம், தம்புள்ள என்ற இடத்தில் 5 ஆயிரம் மெட்ரிக் டன் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப் படுத்தக்கூடிய குளிர்பதன வசதித் திட்டம், இலங்கை முழுவதும் உள்ள சுமார் 5 ஆயிரம் மத வழிபாட்டுத் தலங்களின் மேற்கூரைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவும் திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.
பின்னர் இலங்கை அதிபரின் செயலகத்தில் பிரதமர் மோடி-இலங்கை அதிபர் அனுர குமாரதிச நாயகே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாட்டு மந்திரிகள், அதிகாரிகள் கொண்ட உயர் நிலைக் குழு பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன்முடிவில் ராணுவம் உள்பட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு முக்கிய சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இது இந்தியா-இலங்கை ராணுவ உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாக உள்ளது. இரு நாடுகள் இடையே முதல் முறையாக ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் பின்னர் தாஜ் சமுத்ரா நட்சத்திர தங்கும் விடுதியில் பிரதமர் மோடியை இலங்கைப் பிரதமர், வெளியுறவு மந்திரி மற்றும் அரசியல் தலைவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசுகிறார்கள். இன்று மாலை அமைதி காப்புப் படையின் நினைவிடத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, உயிர்த் தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். இதையடுத்து, அதிபர் மாளிகையில் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்கப்படுகிறது.
நாளையும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்கிறார். நாளை காலை கொழும்பில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அனுராதபுரத்தில் உள்ள விமானப்படை தளத்துக்கு பிரதமர் மோடியும் அதிபர் அனுரா குமார திசாநாயகேவும் செல்கிறார்கள்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக ஜெயஸ்ரீ மகாபோதி ஆலயத்துக்குச் சென்று வழிபடுகின்றனர். பின்னர், காலை 10 மணியளவில் அனுராதபுரம் ரெயில் நிலையத்தில் புதிதாக மேம்படுத்தப்பட்டுள்ள மஹவ-ஓமந்தை ரெயில் பாதை திறப்பு மற்றும் மஹவ-அனுராதபுரம் ரெயில் சமிக்கை வசதியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த இரண்டும் இந்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களாகும்.
இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அனுரா குமார திசநாயகே தனது முதல் அரசு முறை வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வந்தார். தற்போது அவரது தலைமையில் அரசு அமைந்த பிறகு முதல் வெளிநாட்டு தலைவராக பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு உள்ளார்.
இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது. குறிப்பாக இந்திய பெருங்கடல் பகுதியில் தன்னை நிலைநிறுத்த சீனா விரும்பும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து இலங்கைக்கு செல்வது இது 4-வது முறையாகும். கடைசியாக 2019-ம் ஆண்டு இலங்கைக்கு சென்றிருந்தார்.
- தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவானது.
- 50 சதவீத வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
கொழும்பு:
இலங்கையில் அதிபராக உள்ள ரணில் விக்ரம சிங்கேவின் பதவி காலம் முடிவடைவதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது.
இதற்காக 13,421 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இலங்கையில் 1.70 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவானது. மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்ததும் பதிவான வாக்கு சீட்டுகள், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
அதன்பின் சில மணி நேரங்களுக்குள் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் பின்னர் வாக்குப் பெட்டிகளின் வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட்டன. விடிய, விடிய வாக்குகள் எண்ணும் பணி நடந்தது.
தேர்தலில் 50 சதவீத வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இலங்கையில் முன்னுரிமை வாக்கு என்ற முறை பின்பற்றப்படுகிறது.
ஒரே வாக்குச்சீட்டில் 1, 2, 3 என மூன்று வேட்பாளர்களுக்கு, தங்கள் வாக்கை, வாக்காளர்கள் அளிக்க வேண்டும். வாக்குச்சீட்டில் 'ஒன்று' என்று குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர், அந்த வாக்காளரின் முதல் முன்னுரிமையைப் பெற்றவர் ஆகிறார்.
இரண்டு, மூன்று என அடுத்தடுத்த இடங்களில் குறிப்பிடப்பட்ட வேட்பாளர்கள், அந்தந்த வாக்காளர்களின் அடுத்தடுத்த முன்னுரிமைகளை பெறுவார். 1-ம் எண் கொண்ட முன்னுரிமை கொண்ட வாக்குகளை, 50 சதவீதத்துக்கும் அதிகமாக பெறும் வேட்பாளர் அதிபராக தேர்வு செய்யப்படுவார்.
ஒருவேளை எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லை என்றால் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஏற்கனவே நடந்த வாக்கு எண்ணிக்கையில், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் மட்டுமே, அடுத்த சுற்றுக்கு செல்வார்கள்.
இந்த இரண்டாம் சுற்றில், வாக்குச்சீட்டுகளில் 2 மற்றும் 3 -ம் எண்ணாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னுரிமை வாக்குகள் எண்ணப்படும். இதில் இரண்டு வேட்பாளர்களுக்கும் கிடைத்த வாக்குகள், மொத்த வாக்குகளுடன் சேர்த்து கணக்கிடப்படும்.
அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயகே, நமல் ராஜபக்சே உள்பட38 பேர் களத்தில் இருந்தனர்.
ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயகே முன்னிலை வகித்தார். மொத்தமுள்ள 22 மாவட்டங்களில் பெரும்பாலானவற்றில் அனுர குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்தார்.

தமிழர் பகுதிகளில் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாச ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ஆனால் ஓட்டு மொத்தமாக அனுர குமார திசாநாயகே முன்னிலையில் இருந்தார்.
அம்பாந்தோட்டை, காலே, கொழும்பு, மாத்தறை, கண்டி, அனுராதபுரம், குருநாகல், பதுளை, கம்ப ஹா, கேகாலை, ரத்தினபுரி, மொனராகலை, மாத்தளை, பொலன்னறுவை, திகாமடுல்ல, நுவற-எலியா, புத்தளம், திரிகோணமலை ஆகிய மாவட்டங்களில் முன்னிலை வகித்த அனுர குமார திசநாயகே அங்கு 50 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளை பெற்றார்.
இன்று காலை 7 மணி நிலவரப்படி எண்ணி முடிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் அனுர குமார திசாநாயகே 50 சதவீதத்துக்கு மேலாக வாக்குகள் பெற்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில் அனுர குமார திசா நாயகே வாக்கு சதவீதம் திடீரென குறைந்தது.
2-வது இடத்தில் சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையேயான வாக்கு சதவீத வித்தியாசம் 2 சதவீதமாக இருந்தது. பின்னர் அனுர குமார திசா நாயகேவின் வாக்குகள் எண்ணிக்கை அதிகரித்த தால் அவர் சதவீதம் உயர்ந்தது.
மதியம் 12 மணி நிலவரப்படி அவர் 40.07 சதவீத (23 லட்சத்து 82 ஆயிரத்து 208 வாக்குகள்) பெற்றிருந்தார்.
2-வது இடத்தில் சஜித் பிரேமதாச (33.38 சதவீதம்), 3-வது இடத்தில் ரணில் விக்ரமசிங்கே (17.41 சதவீதம்) பிடித்தார். தமிழ் பொது வேட்பாளர் அரிய நேத்திரன் பாக்கிய செல்வம் 3.45 சதவீத வாக்குகளும், நமல் ராஜபக்சே 2.29 சதவீத வாக்குகளும் பெற்றனர்.
ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அனுர குமார திசாநாயகே 50 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை முதல் சுற்றில் 50 சதவீத வாக்கு களை எந்த வேட்பாளரும் பெறாதபட்சத்தில் 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதில் அனுர குமார திசநாயகே, சஜித் பிரேம தாசா ஆகியோருக்கு விழுந்த வாக்குகள் எண்ணப்படும்.
இதற்கிைடையே அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயகே வெற்றி பெற்று இருப்பதாக அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சி தெரிவித்துள்ளது. அவர் இன்று மாலை அதிபராக பதவி ஏற்பார் என்றும் அக்கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி தலைவரான ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக களம் இறங்கினார். இலங்கை பொருளாதார நெருக்கடியால் சீர்குலைந்த சமயத்தில் அதிபராக பதவியேற்ற அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். பின்னர் இலங்கை பொரு ளாதார நெருக்கடியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டது.
இதனால் நம்பிக்கையுடன் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கே படுதோல்வியை சந்தித்துள்ளார். அவரை யும், சஜித் பிரேமதாசாவையும் பின்னுக்கு தள்ளி அனுர குமார திசநாயகே இலங்கை அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்.
2022-ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் கிளர்ச்சி யால் கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலகினார்.
அதன்பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் அதன் முடிவுகள் உலக அளவில் கவனம் ஈர்த்தன என்பது குறிப் பிடத்தக்கது.
- இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக வெற்றி பெற்றுள்ளார்.
- இதன்மூலம் அவர் இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்கிறார்.
புதுடெல்லி:
இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயக வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் இலங்கையின் 9-வது அதிபராக நாளை காலை 9 மணிக்கு அனுர குமார திசநாயக பதவியேற்கிறார்.
அதிபர் தேர்தல் வெற்றியை தொடர்ந்து, நாம் ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம் என அனுர குமார திசநாயக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அனுர குமார திசநாயகவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள். இந்தியாவின் அண்டை நாடுகளில் பாலிசி மற்றும் விஷன் சாகர் ஆகியவற்றில் இலங்கை சிறப்பு இடம் பெற்றுள்ளது. இந்திய மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக எமது பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், உங்களுடன் நெருக்கமாக பணியாற்றவும் ஆவலாக உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
- அனுர குமார திசநாயக நேற்று அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார்.
- பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல்.
கொழும்பு:
இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி தலைவர் அனுர குமார திசநாயக வெற்றி பெற்றார். அவர் நேற்று அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இதற்கிடையே பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய அதிபர் தலைமையில் புதிய அரசு அமைவதற்கு வசதியாக பதவியை ராஜினாமா செய்ததாக தினேஷ் குணவர்தனே தெரிவித்தார். இதனையடுத்து அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி விலகியது.
இந்த நிலையில் அதிபர் அனுர குமார திசநாயக தலைமையில் 4 இடைக்கால அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.

மேலும் இன்று இரவு இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் அனுர குமார திசநாயக உத்தரவை பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் 55 முதல் 66 நாட்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண் டும். இதனால் இலங்கை பாராளுமன்றத்துக்கு வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
- இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக பதவி ஏற்றுக் கொண்டார்.
- இலங்கை பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி தலைவர் அனுர குமார திசநாயக வெற்றி பெற்றார். அவர் நேற்று அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இதற்கிடையே பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி விலகியது.
இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய பதவியேற்று கொண்டார். இவர் இலங்கை வரலாற்றில் மூன்றாவது பெண் பிரதமர் ஆவார்.
கொழும்பில் உள்ள அதிபர் அலுவலகத்தில் அதிபர் அனுர குமார திசநாயக முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
- அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பாராளுமன்றம் கலைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று முன்தினம் இவர் அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுகிறது. இதில் நள்ளிரவு (நேற்று) முதல் அமலுக்கு வரும் என அறிவித்தார். அத்துடன் நவம்பர் மாதம் 14-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்தார்.
அனுர குமார திசநாயகா அதிபராக பதவி ஏற்றதும் பாராளுமன்றம் கலைப்பு அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்தத நகர்வாக பார்க்கப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றம் தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பதவிக்கலாம் 2025 ஆகஸ்ட் வரை உள்ளது. இருந்த போதிலும் 11 மாதங்களுக்கு முன்னதாக நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 21-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஆட்சியில் இருந்த ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே உள்பட 38 பேர் போட்டியிட்டனர். தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் வெற்றி பெறத்தேவையான 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை யாரும் பெறாததால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில் நீண்ட இழுபறிக்கு பிறகு தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயக (வயது 56) வெற்றி பெற்றார். இதனையடுத்து இலங்கையின் புதிய அதிபராக அனுரா குமார திசநாயகா நேற்று முன்தினம் பதவியேற்றார். அதனை தொடர்ந்து இலங்கையின் பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் பெண் தலைவரான ஹரினி அமரசூரியாவை அதிபர் அனுரா குமார திசநாயகா நியமதித்தார். இதையடுத்து, அவர் இலங்கை பிரதமராக நேற்று பதவியேற்றார். இதன் மூலம் இலங்கை வரலாற்றில் 3-வது பெண் பிரதமர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
54 வயதான ஹரினி அமரசூரியா சமூக ஆர்வலர், பல்கலைக்கழக பேராசிரியர், அரசியல் தலைவர் என பன்முகங்களை கொண்டவர் ஆவார்.
பிரதமராக பொறுப்பேற்றுள்ள அவருக்கு நீதி, கல்வி, தொழிலாளர், தொழில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீடு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஹரினி அமரசூரியாவுடன் தேசிய மக்கள் சக்தி கட்சியின் எம்.பி.க்களான விஜித ஹேரத் மற்றும் லக்ஸ்மன் நிபுனாராச்சி ஆகியோர் கேபினட் மந்திரிகளாக பதவியேற்றனர்.
- இனி வரும் காலங்களில் இலங்கையின் சர்வதேச நிலைப்பாடு குறித்து திசநாயக விளக்கம் அளித்துள்ளார்.
- பிராந்திய பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன
இலங்கை அதிபராகப் பதவியேற்றுள்ள இடதுசாரி தலைவர் அனுர குமார திசநாயக கொள்கை ரீதியாக சீனாவுக்கே அதிக ஆதரவு அளிப்பார் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இனி வரும் காலங்களில் இலங்கையின் சர்வதேச நிலைப்பாடு குறித்து திசநாயக விளக்கம் அளித்துள்ளார்.
அதிகரித்து வரும் பிராந்திய பிரச்சனைகளுக்கு இடையே இலங்கையின் வெளியுறவுக் கொள்கை நாட்டின் இறையாண்மையைப் பேணுவதையே பிரதானமாக கொண்டு அமையும். புவிசார் அரசியல் சண்டைகளில் நாங்கள் பங்குபெறப் போவதில்லை. எந்த பக்கமும் நாங்கள் சாயமாட்டோம்.

குறிப்பாக இந்தியா சீனா இடையில் நாங்கள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. இரண்டு நாடுகளின் நடப்பையும் நாங்கள் போற்றுகிறோம். எங்கள் அரசின் கீழ் இனி வரும் காலங்களில் இரு நாடுகளுடனும் நெருக்கத்தை அதிகரிக்க முயற்சிப்போம். மேலும், ஐரோப்பிய யூனியன், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனும் நட்புறவு ஏற்படுத்த விழைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
- வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை சென்றார்.
- அவர் அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்தார்.
கொழும்பு:
இலங்கையில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அனுரகுமரா திசநாயகே தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி பெற்றது.
இலங்கை அதிபராக அனுரகுமரா திசநாயகே பொறுப்பேற்றுள்ளார். இலங்கை பிரதமராக ஹரினி அமரசூரிய பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை சென்றார். புதிய அரசு அமைந்தபின் இலங்கை செல்லும் முதல் வெளிநாட்டு முக்கிய தலைவர் ஜெய்சங்கர் ஆவார்.
இலங்கை சென்ற மந்திரி ஜெய்சங்கர் அந்நாட்டு அதிபர் அனுரகுமரா திசநாயகே மற்றும் பிரதமர் ஹரினியை தனித்தனியாகச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது இந்தியா-இலங்கை இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துதல், இலங்கையில் இந்தியாவின் உதவியில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை மேலும் அதிகரித்தல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
- 3-ல் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
- நவம்பர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புதிய எம்.பி.க்களுக்கான அறிமுகக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசநாயகா வெற்றிப்பெற்று அதிபரானார்.
அந்த சமயத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்ததால் அவர் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இடைக்கால பிரதமராக பெண் எம்.பி. ஹரிணி அமரசூரியாவை நியமித்தார்.
இந்த நிலையில் 225 இடங்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடந்தது. இதில் 159 இடங்களை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றிப் பெற்றது. 3-ல் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமர் மற்றும் மந்திரி சபையை அதிபர் திசநாயகா நாளை (திங்கட்கிழமை) நியமிப்பார் என்று தேசிய மக்கள் சக்தி கூட்டணி அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் மூத்த செய்தி தொடர்பாளர் டில்வின் சில்வா செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாங்கள் திங்கட்கிழமை ஒரு மந்திரிசபையை நியமிப்போம். அதன் பலம் 25-க்கும் குறைவாக இருக்கும். பொது செலவை குறைக்க சிறிய அளவிலான மந்திரி சபையை தேசிய மக்கள் சக்தி கூட்டணி பரிந்துரைக்கிறது. அதே வேளையில் துணை மந்திரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். மந்திரிகளுக்கு துறைகளை ஒதுக்குவதில் அறிவியல்பூர்வமான முடிவுகள் எடுக்கப்படும்" என கூறினார்.
இலங்கை அரசியலமைப்பின் 46-வது பிரிவின்படி, மொத்த கேபினட் மந்திரிகளின் எண்ணிக்கை 30 ஆகவும், துணை மந்திரிகளின் எண்ணிக்கை 40 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே புதிய பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் வருகிற 21-ந்தேதி தொடங்கும் எனவும், அப்போது அதிபர் திசநாயகா தனது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்பிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 225 உறுப்பினர்களைக் கொண்ட புதிய பாராளுமன்றத்தில் 150-க்கும் மேற்பட்ட புதிய முகங்களுக்காக நவம்பர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புதிய எம்.பி.க்களுக்கான அறிமுகக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இலங்கை தேர்தலில் அபார வெற்றி பெற்ற அனுர குமார திசநாயக அதிபராக பதவியேற்றார்.
- இலங்கை அதிபர் டிசம்பர் 15ம் தேதி 2 நாள் பயணமாக இந்தியாவுக்கு பயணம் மேற்கிறார்.
கொழும்பு:
இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயக அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக் டிசம்பர் 15ம் தேதி 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார் என அந்நாட்டு அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வரும் அதிபர் திசநாயக ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது இருநாடுகள் இடையே நிலவும் மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
திசநாயகே இலங்கை அதிபராக பதவி ஏற்ற சில நாட்களில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர், இலங்கை அதிபரை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட திசநாயகே இப்போது இந்திய பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இலங்கை தேர்தலில் வெற்றிபெற்ற அனுர குமார திசநாயக அதிபராக பதவியேற்றார்.
- இலங்கை அதிபர் திசநாயக நாளை 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார்.
புதுடெல்லி:
இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயக அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.
அனுர குமார திசநாயகே இலங்கை அதிபராக பதவியேற்ற சில நாட்களில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர், இலங்கை அதிபரை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார்.
அந்த அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக் டிசம்பர் 15ம் தேதி 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார் என அந்நாட்டு அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக் நாளை இந்தியா வருகிறார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா வரும் அதிபர் திசநாயக ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பின்போது இருநாடுகள் இடையே நிலவும் மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இலங்கை அதிபரின் இந்திய வருகையின்போது புத்த கயா செல்ல உள்ளார்.