search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Army plane"

    • சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறார்.
    • ராணுவ விமானத்தைப் பயன்படுத்துவதால் அரசுக்கு கூடுதல் செலவு என அமெரிக்கா கூறியது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அதிபராக பதவியேற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறார்.

    அதன்படி, அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைதுசெய்து அந்நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான சி 17 விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு இந்தியா, பெரு, கவுதமாலா, ஹோண்டுராஸ், பனாமா, ஈக்வடார் உள்ளிட்ட நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். 12க்கும் மேற்பட்ட முறை சி12 விமானமும், 30க்கும் மேற்பட்ட அகதிகளை அழைத்துச் செல்வதற்கு என்றே உள்ள பயணிகள் விமானமும் பயன்படுத்தப்பட்டன.

    அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 3 முறை சி17 விமானம் மூலம் அகதிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்காக ஒவ்வொரு முறையும் 30 லட்சம் அமெரிக்க டாலர்( இந்திய மதிப்பில் சுமார் ரூ.26 கோடி) செலவானது. கவுதமாலாவுக்கு சிலரை மட்டும் அழைத்துச் செல்வதற்கு சுமார் 20 ஆயிரம் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.17 லட்சம்) செலவு செய்யப்பட்டுள்ளது.

    அரசு தகவல்களின்படி அமெரிக்க அகதிகள் மற்றும் சுங்க அமலாக்கத்துறை வசம் உள்ள அகதிகளுக்கு என்றே உள்ள விமானத்தை இயக்க ஒரு மணி நேரத்திற்கு 8,500 டாலர் செலாகும் . ஆனால், சி 17 விமானத்தை இயக்க ஒரு மணி நேரத்திற்கு 28,500 டாலர் செலவானது என கூறப்பட்டது.

    இந்நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற இனி ராணுவ விமானம் பயன்படுத்தப்பட மாட்டாது. ராணுவ விமானத்தை பயன்படுத்துவதால் அரசுக்கு கூடுதல் செலவு ஆகிறது. எனவே பயணிகள் விமானம் மூலம் அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

    அதிக செலவு காரணமாக அகதிகளை அனுப்புவதற்கு சி17 விமானத்தை பயன்படுத்துவதை மார்ச் 1 முதல் அமெரிக்க அரசு நிறுத்தி வைத்து உள்ளதாக தகவல் வெளியாகியது.

    மனிதாபிமான அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியை சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு வர இந்திய ராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பாஜக மாநில செயலாளர் கூறியுள்ளார். #Opanneerselvam
    பெரம்பலூர்:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் ராகவன் பெரம்பலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கொண்ட 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து தேர்தலுக்கு கட்சியை தயார் செய்யவேண்டும் என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 67 ஆயிரம் பூத் கமிட்டி அமைக்கப்படவுள்ளது. ஒரு பூத் கமிட்டியில் 4 பேர் என பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகிறது. அதன் பிறகு பூத் கமிட்டி பொறுப்பாளர்களை சந்திக்க பிரதமர் நரேந்திரமோடி வருகிற நவம்பர் மாதத்தில் வருகை தரவுள்ளார்.

    இந்திய ராணுவத்தை சேர்ந்த விமானம் இயற்கை இடர்பாடுகளில் இருந்து பொதுமக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதேபோல்தான் மனிதாபிமான அடிப்படையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியை சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு வர இந்திய ராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் ஒரு வகையில் மத்திய அரசின் கடமையாகும். இதில் ராணுவ மந்திரிக்கு பிரத்யேகமான முறையில் அதிகாரம் உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக தமிழகத்தில் கூட்டணி அமைத்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Opanneerselvam
    ×