என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assam"

    • சுமார் 24 லட்சம் மக்கள் வெள்ள பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்
    • ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்து கழுத்துவரை உள்ள வெள்ள நீரில் நீந்தித் சென்று பசுமாட்டைக் காப்பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.

    அசாம் மாநிலத்தில் கடந்த வாரம் முதல் பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் கரைபுரண்டோடி பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. மாநிலம் முழுவதும் வெவேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 52 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 30 மாவட்டங்களில் அபாயகரமான முறையில் வெள்ளம் வீதிகளை அடைத்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

    சுமார் 24 லட்சம் மக்கள் வெள்ள பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் வெள்ள பாதகிப்புகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒன்றான திப்ருகார் மாவட்டத்தின் துளியாஜான் நகரில் வீதியில் ஓடும் வெள்ளத்தில் சிக்கி மூழ்கிக்கொண்டிருந்த தனது பசுமாட்டை காப்பாற்றுவதற்காக உள்ளூர்வாசி ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்து கழுத்துவரை உள்ள வெள்ள நீரில் நீந்தித் சென்று பசுமாட்டைக்  காப்பற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

    இந்த  சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சாரார் அவரின் செயலைப் பாராட்டி வரும் நிலையில்  மற்றொரு சாரார் அவரின் செயல் ஆபத்தானது என்று  கமன்ட் tவருகின்றனர்.

    • அசாம் மாநிலம் முழுவதும் பருவமழை பெய்து வருகிறது.
    • மழை வெள்ளத்துக்கு 78 பேர் பலியாகி உள்ளனர்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் முழுவதும் பருவமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மதிக்கின்றன. மழை வெள்ளத்துக்கு 78 பேர் பலியாகி உள்ளனர். வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட இன்று அசாமுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சென்றார். இன்று காலை அசாமின் சில்சாருக்கு சென்றடைந்த அவரை காங்கிரஸ் கட்சியினர் வரவேற்று அழைத்து சென்றனர்.

    பின்னர் புலர்டல் பகுதியில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்ற ராகுல்காந்தி அங்கு தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

    அசாம் பயணத்துக்கு பிறகு ராகுல்காந்தி மணிப்பூருக்கு செல்கிறார். மணிப்பூரில் மெய்தி-குகி சமூகத்தினரிடையே கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். மணிப்பூரில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இதனால் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். தற்போதும் அடிக்கடி மோதல் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று மணிப்பூருக்கு செல்ல உள்ளார். ஏற்கனவே அவர் மணிப்பூருக்கு இரண்டு முறை சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். தற்போது எதிர்கட்சித்தலைவரான பிறகு முதன் முறையாக ராகுல்காந்தி மணிப்பூர் செல்கிறார்.

    • ஆற்றின் கிராம மக்கள் சூழ நின்றுகொண்டு வெள்ள பாதிப்புகள் குறித்து செய்தி வழங்கிக்கொண்டிருந்தார்
    • கிராம மக்களின் உதவியுடன் அவர் மீண்டு வரும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ள பாதிப்புகள் கடுமையாக ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி சுமார் 96 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 5.98 லட்சம் மக்கள் வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கைக்கு  திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மாநிலத்தில் பல பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளது.

    இந்நிலையில் ஆற்றின் கிராம மக்கள் சூழ நின்றுகொண்டு வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைக்காட்சி நேரலையில் செய்தி வழங்கிக்கொண்டிருந்த  தொலைக்காட்சி  ரிப்போர்ட்டர் ஒருவர் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

    கேமராவை பார்த்தபடி பேசிக்கொண்டிருக்க்கும் போது ஈரமான மணல் பகுதியால் நிலைதடுமாறி அவர் ஆற்றில் விழுந்தார். சமாளித்துக்கொண்டு நீந்தி வந்த அவரை கிராம மக்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால்  மேலே வர முடியாமல் அவர் திணறினார். கடைசியாக ஒருவழியாக சமாளித்துக்கொண்டு கிராம மக்களின் உதவியுடன் அவர் மீண்டு வரும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

    • ஒவ்வொரு 10 வருடத்திற்கும் இந்துக்களின் மக்கள் தொகை 16 சதவீதம் அதிகரிக்கிறது.
    • ஒவ்வொரு 10 வருடத்திற்கும் 30 சதவீத முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிக்கிறது.

    ஒவ்வொரு 10 வருடத்திற்கும் 30 சதவீத முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிக்கிறது எனக் கூறிய அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, 2041-ல் அசாம் முஸ்லிம் மெஜாரிட்டி மாநிலமாகும் எனத் தெரிவித்துள்ளார்.

    "புள்ளி விவரங்கள் மாதிரியின்படி அசாம் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் முஸ்லிம்கள். இதன்படி 2041-ல் அசாம் முஸ்லிம் மெஜாரிட்டி மாநிலமாகும். இது நிஜம், யாராலும் இதை தடுத்து நிறுத்த முடியாது.

    ஒவ்வொரு 10 வருடத்திற்கும் இந்துக்களின் மக்கள் தொகை 16 சதவீதம் அதிகரிக்கிறது. முஸ்லிம் மக்களை தொகையை கட்டுப்படுத்த தனது தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் காங்கிரசின் பணி முக்கியமானது.

    மக்கள் தொகை கட்டுப்படுத்துவதற்கான தூதராக ராகுல் காந்தி ஆனால், அவருடைய பேச்சை மட்டும் கேட்கும் சமூகத்தினரை அது கட்டுப்படுத்தும்" என்றார்.

    • 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை 20 ஆண்டுகளாக உயர்த்தப்படும்.
    • லவ் ஜிகாத் குறித்து யார் புகார் அளித்தலும் நடவடிக்கை எடுக்க முடியும்

    லவ் ஜிகாத் 

    இனம் மதம் மொழி கடந்ததுதான் காதல் என்ற அடிப்படையில் உலகம் இயங்கி வருகிறது. இதில் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட பல்வேறு மதத்தைப் பின்பற்றும் மக்கள் வாழும் ஒரு ஜனநாயக நாட்டில் காதலுக்கு தடையாக பெற்றோர், குடும்ப அமைப்புகள் இருந்து வந்த காலம் மாறி அரசாங்கமே தடை விதிக்கும் காலம் வந்துவிட்டது என்ற கருத்து நாளுக்குநாள் நடந்து வரும் மாற்றங்களால் உறுதிப்படத் தொடங்கியுள்ளது.

    குறிப்பாக இந்து- இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொள்வதற்கான சுதந்திரம் கேள்விக்குறியாக மாறியுள்ளதாக ஜனநாயக விரும்பிகள் கருதுகின்றனர். இந்து மதப் பெண்களை இஸ்லாமிய மத ஆண்கள் காதலித்து மதமாற்றம் செய்து திருமணம் செய்துகொள்வதாகக் குற்றம் சாட்டி தீவிர வலதுசாரி இந்து அமைப்புகள் முன்வைக்கும் பதம் 'லவ் ஜிகாத்'.

     

    ஆயுள் தண்டனை 

    அரசியல் களத்திலும் சமீக காலங்களாக இந்த பதத்தின் உபயோகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி அதித்தநாத் தலைமையிலான பாஜக அரசு, லவ் ஜிகாத்திற்கு எதிராக 2021 ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது.

    இந்த சட்டப்படி, ஒருவரை திட்டமிட்டு காதலித்து, பின் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்தால், அந்த திருமணம் செல்லாது என்றும் அவ்வாறு திருமணம் செய்தவரை ஜாமீனில் வரமுடியாத சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 50,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

     

    தற்போது அந்த சட்டத்தில் திருத்தும் கொண்டுவந்துள்ள உ.பி அரசு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை 20 ஆண்டுகளாக உயர்த்தப்படும். அபராத தொகை 50,000 ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது. முன்னர் பெண்ணின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் அளிக்கும் புகாரின் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று இருந்த நிலையில் தற்போது அதுபேன்ற திருமணங்கள் குறித்து யார் புகார் அளித்தலும் நடவடிக்கை எடுக்க முடியும் சட்டத்தில் திருத்தும் செய்யப்பட்டுள்ளது

    அசாம் 

    அசாமில் ஆட்சியில்  உள்ள பாஜக அரசு உ.பியை போன்று லவ் ஜிகாத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்க உறுதி பூண்டுள்ளது.

    இதுதொடர்பாக பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா சர்மா, தேர்தலின்போதே லவ் ஜிகாத் குறித்து நிறைய பேசினோம், லவ் ஜிகாத் குற்றத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டதை விரைவில் அறிமுகப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அசாம் மாநில அரசு பணிகளில் அசாமில் பிறந்தவர்கள் மட்டுமே சேர முடியும் என்ற விதியையும் கொண்டுவருவோம் என்று தெரிவித்தார்.

    லவ் ஜிகாத் குறித்த பாஜக ஆளும் மாநில அரசுகளின் இந்த முடிவுகள், மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை பறிக்கிறது என்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் கண்டனக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. 

    • கொல்கத்தாவில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
    • இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது.

    மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தக் குற்றத்தில் தொடர்புடைய சஞ்சய்ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், இவர் போலீஸ் என்று சொல்லி மிரட்டி பயிற்சி பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    கைதான சஞ்சய்ராயுடன் அந்த மருத்துவமனையில் உள்ள மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே, உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி கொல்கத்தா டாக்டர்கள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    இந்நிலையில், பெண் டாக்டர் கொலை தொடர்பான வழக்கு கொல்கத்தா ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அப்போது இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது. மாணவி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    கொல்கத்தா பெண் டாக்டர் கொலையை தொடர்ந்து, பெண் மருத்துவர்கள், மருத்துவ மாணவிகள் யாரும் வெளியில் தனியாக செல்ல வேண்டாம் என்றும் தெரியாத மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களுடன் பழக வேண்டாம் என்று அசாமில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.

    இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதனை மருத்துவ கல்லூரி நிர்வாகம் திரும்பப்பெற்றுள்ளது.

    பெண்களுக்கு அறிவுரை வழங்குவதை விட பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கல்லூரி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த சுற்றறிக்கை தொடர்பாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர்.

    • ‘உல்பா’ அமைப்பு குறிப்பிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
    • வெடிபொருள்களின் தன்மையை அறிய தடயவியல் துறைக்கு வெடிமருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் 78-வது சுதந்திர தின விழாவில் மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தேசிய கொடியை ஏற்றி வைத்து தனது உரையை முடித்த சில நிமிடங்களில் 'உல்பா' அமைப்பு ஊடகங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், 'அசாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை முதல் பிற்பகல் வரை குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடத்த திட்டமிடப்பட்டி ருந்ததது. ஆனால், சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடிக்கவில்லை' எனத் தெரிவித்தனா்.

    மேலும், அதனுடன் 19 குண்டுகள் வைக்கப்பட்ட சரியான இடங்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய பட்டியலை 'உல்பா' அமைப்பு வெளியிட்டது. ஆனால், மீதமுள்ள 5 இடங்களை சுட்டிக்காட்ட முடியவில்லை என மின் அஞ்சலில் தெரிவித்தனா்.

    இதையடுத்து, ராணுவம் உள்பட பாதுகாப்புப் படையினா் மற்றும் வெடி குண்டு செயலிழப்பு படைகள் இணைந்து மாநிலம் முழுவதும் 'உல்பா' அமைப்பு குறிப்பிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

    அதில், குண்டு வெடிப்பு நடத்த திட்டமிடப்பட்ட 24 இடங்களில் கவுகாத்தியில் உள்ள 8 இடங்களில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன என போலீசாா் தெரிவித்தனா்.

    இதில், அசாம் முதல்வா், பிற அமைச்சர்களின் அதிகாரபூா்வ இல்லங்களுக்கு அருகில் உள்ள இடங்களிலும் வெடி குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைக்கும் சாதனங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் வெடிபொருள்களின் தன்மையை அறிய தடயவியல் துறைக்கு வெடிமருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

    தொழில்நுட்ப கோளாறால் வெடிகுண்டுகள் வெடிக்காததால் உல்பா அமைப்பே மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு தகவலை அளித்ததால், வெடிகுண்டுகளை காவல் துறையினா் கண்டெடுத்தனா். இதனால் பெரும் நாசவேலை தவிா்க்கப்பட்டது.

    • 14 வயது மாணவி கோச்சிங் கிளாஸ் சென்று திரும்பியபோது கடத்தி வன்கொடுமை.
    • மூன்று குற்றவாளிகள் ஈடுபட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி டாக்டர் கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட செய்தி இந்தியாவையே உலுக்கியது. இந்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என பெண் டாக்டர்கள் இரண்டு வாரத்திற்கு மேலாக போராட்டம் நடத்திய நிலையில் தற்போது போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்பியுள்ளனர்.

    இதற்கு அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் 14 வயது சிறுமி கோச்சிங் கிளாஸ் சென்றுவிட்டு வீட்டிற்கு சைக்கிளில் திரும்பும்போது மூன்று பேர் வழிமறித்து மறைவான இடத்திற்கு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    இது தொடர்பாக தஃபுஜல் இஸ்லாம் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இருவரை தேடிவருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை போலீசார் கிரைம் சீனுக்காக (குற்றம் நடந்தது எப்படி என குற்றவாளியை நடித்துக்காட்டிச் சொல்லி போலீசார் வீடியோ ஆதாரம் எடுப்பது) குற்றம் நடைபெற்ற இடத்திற்கு தஃபுஜல் இஸ்லாமை அழைத்துச் சென்றனர்.

    அப்போது போலீசார் பிடியில் இருந்து தஃபுஜல் இஸ்லாம் தப்பிச் சென்றுள்ளார். போலீசார் அவரை விரட்டிச் செல்லும்போது அருகில் இருந்த குளத்தில் குதித்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின்போது போலீஸ் ஒருவரும் காயம் அடைந்துள்ளார்.

    தஃபுஜல் இஸ்லாம் உயிரழிந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில் "இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம். எங்கள் கூட்டு மனசாட்சியைத் தாக்கியுள்ளது. நாங்கள் யாரையும் விட்டுவைக்க மாட்டோம் மற்றும் குற்றவாளிகளை நீதி முன் நிறுத்வோம். விரைவான நடவடிக்கையை உறுதி செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    • முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் வகையில் சட்ட மசோதா தாக்கல்.
    • சிறுவர்கள் திருமணம் தடுத்து நிறுத்தப்படும்- அசாம் முதல்வர் ஹிமாந்தா சர்மா.

    அசாம் மாநில சட்டமன்றத்தில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து தகவல்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கான சட்ட மசோதாவை ஆளுங்கட்சி தாக்கல் செய்துள்ளது. இந்த சட்ட மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் அமளியில் ஈடுபட்டது.

    இருந்தபோதிலும் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. முன்னதாக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் மதக்குருக்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொள்வார்கள். அவர்கள்தான் திருமணத்திற்கு சாட்சி.

    இந்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டால் இனிமேல் முஸ்லிம் திருமணம், விவாகரத்து கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

    இந்த சட்டத்தின்படி 18 வயதிற்கு கீழ் உள்ள பெண், 21 வயதிற்கு கீழ் உள்ள ஆண் திருமணம் செய்து கொள்ள முடியாது. இதன்மூலம் சிறுவர்கள் திருமணம் தடுத்து நிறுத்தப்படும் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    உத்தரகாண்ட் மாநில பொது சிவில் சட்டத்தை நாட்டின் முதல் மாநிலமாக கொண்டு வந்தது. தற்போது அசாம் அதே வகையிலான சட்டத்தை கொண்டு வர இருக்கிறது.

    திருமணம் தொடர்பான இதற்கு முந்தைய சட்டம் ரத்து செய்யப்படுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் இந்த புதிய சட்டமும் நிறைவேற்றப்பட வேண்டும்.

    முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் வகையில், தேர்தல் வருடத்தில் வாக்காளர்களை பிளவுப்படுத்துவதற்கான இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    தன்னுடைய அரசு திருமணங்கள் தொடர்பான சட்டத்தை கொண்டு வரும் என ஏப்ரல் மாதத்திலேயே தெரிவித்திருந்ததாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். ஒருவர் திருமணம் செய்ய விரும்பினால், ஆறு மாதத்திற்கு முன்பே அரசிடம் தெரிவிக்க வேண்டும். இதில் கலப்பு திருமணங்களும் அடங்கும்.

    • அசாம் சட்டமன்றம் உருவாக்கப்பட்டது முதல் இருந்த இந்த இடைவேளை ரத்து செய்யப்பட்டுள்ளது
    • அசாம் முதல்வர் இதைக் கீழ்த்தரமான புகழுக்காகச் செய்திருக்கிறார். இஸ்லாமியர்களை பாஜக எளிமையான இலக்காக மாற்றியுள்ளது என்று சாடியுள்ளார்.

    அசாம் சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமை தோறும் இஸ்லாமிய எம்.எல்.ஏக்கள் தொழுகை செய்ய உணவு நேரத்துக்குப் பின் வழங்கப்பட்டு வந்த 2 மணி நேர இடைவேளை ரத்து செய்யப்பட்டுள்ளது. அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான  பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் இன்று  தொழுகை இடைவேளை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம்  நிறைவேறியுள்ளது. அசாம் சட்டமன்றம் உருவாக்கப்பட்டது முதல் இருந்த இந்த இடைவேளையை பாஜக அரசு ரத்து செய்துள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த உத்தரவு தொடர்பாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில், 2 மணிநேர ஜும்ஆ இசைவேலையை ரத்து செய்யப்பட்டதன் மூலம் [சட்டமன்றத்தின்] செயல்திறனுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு, மற்றொரு [ஆங்கிலேய] காலனிய கால சடங்கு தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 1937 ஆம் ஆண்டில் முஸ்லீம் லீக்கை சேர்ந்த சையத் சாதுல்லாவால் கொண்டுவரப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

     இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அசாம் முதல்வர் இதைக் கீழ்த்தரமான புகழுக்காகச் செய்திருக்கிறார். இஸ்லாமியர்களை பாஜக எளிமையான இலக்காக மாற்றியுள்ளது என்று சாடியுள்ளார்.  இதற்கிடையில் முஸ்லிம் திருமணம், விவாகரத்தை கட்டாய பதிவு செய்யும் மசோதா நேற்று அசாம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  மேலும் மதக் கலவரம் உருவாக்கும் விதத்தில் ஹிமந்த பிஸ்வா பேசி வருவதாக அசாமில் உள்ள  18 எதிர்க்கட்சிகள் இணைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததது குறிப்பிடத்தக்கது.

     

    • அசாம் மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ரிபுன் போரா விலகினார்.
    • அக்கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜிக்கு பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

    கவுகாத்தி:

    அசாம் மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து ரிபுன் போரா திடீரென விலகி உள்ளார்.

    இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜிக்கு பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

    அந்தக் கடிதத்தில், அசாமில் திரிணாமுல் கட்சி பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. திரிணாமுல் கட்சியை மேற்கு வங்கத்தின் பிராந்தியக் கட்சியாகக் கருதுவது உள்பட தொடர்ச்சியான பல சிக்கல்கள் எங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கின்றன. இந்த கருத்தை எதிர்க்க நாங்கள் பல பரிந்துரைகளை வழங்கினோம்.

    இந்தச் சிக்கல்களை நீக்க உங்களை மற்றும் முதல் மந்திரி மம்தா தீதி ஆகியோரை சந்திக்க கடந்த ஒன்றரை ஆண்டாக பலமுறை முயற்சித்த போதிலும் நான் வெற்றி பெறவில்லை என தெரிவித்துள்ளார்.

    ரிபுன் போரா திரிணாமுல் காங்கிரசின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அக்டோபர் 1 முதல் இந்த புதிய செயல்முறை தொடங்கும்.
    • சட்டவிரோத வெளிநாட்டினரின் ஊடுருவலை தடுப்பதற்காக இந்த புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அசாம் அரசு தெரிவித்துள்ளது.

    அசாம் மாநிலத்தில் புதிதாக ஆதார் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC ) விண்ணப்ப ரசீது எண்ணை (ARN) சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

    அக்டோபர் 1 முதல் இந்த புதிய செயல்முறை தொடங்கும் என்றும் சட்டவிரோத வெளிநாட்டினரின் ஊடுருவலை தடுப்பதற்காக இந்த புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    2019 ஆம் ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேடு நடத்தப்பட்ட போது தவறுதலாக பயோமெட்ரிக்ஸ் லாக் செய்யப்பட்ட 9.55 லட்சம் மக்களுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தாது என்றும் அவர்கள் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அசாம் மாநிலத்தின் 4 மாவட்டங்களில் உள்ள மக்கள்தொகை எண்ணிக்கையை விட அதிக அளவிலான ஆதார் கார்டு விண்ணப்பங்கள் வந்தது என்றும் ஆதலால் சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பதற்காக இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில பாஜக அரசு தெரிவித்துள்ளது.

    ×