என் மலர்
நீங்கள் தேடியது "Avocado"
- கொழுப்பே இல்லாத புரத உணவுகள் தான் லீன் புரோட்டின் என்று அழைக்கப்படுகின்றன.
- இந்த ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை ஏற்படும்போது தான் உடலில் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன.
லீன் புரோட்டீன் உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் தசை வளர்ச்சியில் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் தசையின் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கெட்ட கொழுப்பை எரிக்கவும் முடியும்.
புரத உணவுகள் எல்லாவற்றிலும் குறிப்பிட்ட அளவில் கொழுப்பும் இருக்கும். ஆனால் கொழுப்பே இல்லாத புரத உணவுகள் தான் லீன் புரோட்டின் (மெலிந்த உணவுகள்) என்று அழைக்கப்படுகின்றன. அதோடு மெலிந்த புரத உணவுகள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி கொழுப்பை வேகமாக எரிக்கின்றன.
நம்முடைய உடலின் உள்ளுறுப்புகள் செயல்பாட்டுக்கும் செல் வளர்ச்சியை மேம்படுத்தவும் உடலுக்கு சீரான ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும் தேவை.
இந்த ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை ஏற்படும்போது தான் உடலில் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன. அத்தகைய சிக்கலை சரிசெய்யும் வேலையை தான் இந்த லீன் புரோட்டீன் செய்கிறது. லீன் புரோட்டீன் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு உடலில் உள்ள கொழுப்பையும் குறைக்க உதவி செய்யும்.
லீன் புரோட்டீன் உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலின் உள்ளுறுப்பு கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும் வேலையை செய்யும். பொதுவாக உள்ளுறுப்பு கொழுப்புகள் அவ்வளவு எளிதாகக் கரையாது. அதை கரைக்க இந்த மெலிந்த புரதங்களை டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆனால் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கெண்டால் டைப் 2 நீரிழிவு, இதய நோய், புற்றுநோய் போன்ற உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தும். அதனால் அளவோடு எடுத்துக்கொண்டால் உடல் எடையையும் குறைக்கலாம். ஆரோக்கியமாகவும் வாழலாம்.
பயறு வகைகள்
பருப்பு மற்றும் பயறு வகைகளில் அதிக அளவில் புரதங்கள் இருக்கின்றன. 100 கிராம் பயறுகளில் கிட்டதட்ட 24 கிராம் அளவுக்கு புரதச்சத்துக்கள் கிடைக்கும். அதேசமயம் அவற்றில் கொழுப்பு 0 சதவீதம். அதனால் கொழுப்பு அதிகமுள்ள புரதங்களான இறைச்சியை எடுத்துக்கொள்வதை விட பயறு வகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
காய்கறி சாலட் போன்றவற்றில் வேகவைத்த அல்லது முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்துக் கொள்ளலாம். அது சுவையையும் அதிகரிக்கும். வைட்டமின் தேவையையும் நிறைவு செய்யும்.
சோயா பீன்ஸ், கிட்னி பீன்ஸ், ராஜ்மா போன்ற பீன்ஸ் வகைகளில் அதிக அளவு மெலிந்த புரதங்கள் இருக்கின்றன. 100 கிராம் பீன்ஸ் வகைகளில் இருந்து 21 கிராம் அளவு புரதம் கிடைக்கும். ஆனால் இவற்றில் கொழுப்பு கிடையாது. ஜீரண ஆற்றலை மேம்படுத்த காய்கறிகளுடன் சேர்த்து வேகவைத்த பீன்சை சேர்த்து சாலட்டாக எடுத்துக் கொள்ளலாம். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடல் எடையையும் குறைக்க உதவி செய்யும்.
கொண்டைக்கடலை நிறைய ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கிறது. அதில் மிக முக்கியமாக அதிக அளவு புரதங்களைக் கொண்டிருக்கிறது. 100 கிராம் கொண்டைக்கடலையில் இருந்து 20 கிராம் அளவு புரதங்களை பெற முடியும். இதை உணவில் சூப், சுண்டல், சாலட் என பல வழிகளில் இந்த கொண்டைக்கடலையை உணவில் சேர்த்து்க் கொள்ளலாம்.
முந்திரி பருப்பை சூப்பர் ஃபுட்ஸ் என்று சொல்லுவோம். முந்திரியில் ஊட்டச்சத்துக்கள் மிக அதிக அளவில் கொண்டது. குறிப்பாக லீன் புரதங்கள் முந்திரியில் அதிகம். 100 கிராம் முந்திரியில் 25 கிராம் அளவு புரதங்கள் கிடைக்கும். ஆனால் இதை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அளவோடு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் குறைந்த அளவில் எல்டிஎல் கொலஸ்டிராலும் இருக்கிறது.
அவகேடோவில் 100 கிராமில் இருந்து வெறும் 2 கிராம் அளவு மட்டுமே புரதங்கள் கிடைக்கின்றது. ஆனால் இந்த அவகேடோவில் நிறைய கொழுப்பு அமிலங்களும் நார்ச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. தினசரி உணவில் அவகேடோ பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு உடல் எடையைக் குறைக்கவும் உதவி செய்யும்.
லீன் புரோட்டீன்களை உங்களுடைய டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினால் அதற்கு முட்டை ஒரு பெஸ்ட் சாய்ஸ். ஒரு வேகவைத்த முழு முட்டையில் 6 கிராம் அளவு புரதங்களும் 70 கலோரிகளும் இருக்கின்றன. அதில் பெரும்பகுதி புரதம் முட்டையின் வெள்ளைப் பகுதியி்ல இருந்து தான் கிடைக்கிறது. கொலஸ்டிரால் பிரச்சினை உள்ளவர்கள் மஞ்சள் கருவை தவிர்த்துவிடலாம். ஆனால் சிறப்பான புரதங்கள் நிறைந்த காலை உணவிற்கு முட்டையைத் தேர்வு செய்யுங்கள். எடையும் குறையும். ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
வால்நட்டில் புரதங்கள் அதிகம். அதோடு ஊட்டச்சத்து மதிப்புகளும் அதிகமாக இருக்கின்றன. புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு உடலுக்கு கிடைக்க வால்நட் மிகச்சிறப்பாக உதவி செய்யும். இதனால் ஆரோக்கியமான முறையில் எடையையும் குறைக்கலாம். 100 கிராம் அளவு வால்நட்டில் 15 கிராம் அளவு புரதங்கள் நிறைந்திருக்கிறது. இது ஜீரண ஆற்றலை மேம்படுத்தி குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
100 கிராம் அளவு சோயா மாவில் இருந்து மட்டும் கிட்டதட்ட 35 கிராம் அளவுக்கு மெலிந்த புரதங்களும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களும் அதிகப்படியான நார்ச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. அதனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் பல வழிகளில் தங்களுடைய டயட்டில் சோயாவை சேர்த்துக் கொள்ள முடியும். சோயா எண்ணெய், சோயா பீன்ஸ் சுண்டல், டோஃபு, சோயா சங்க் மசாலா, சோயா சாலட் என தினமும் வெவ்வேறு வகைகளில் சோயாவை எடுத்துக் கொள்ளலாம்.
பொதுவாக விதைகளை நாம் சூப்பர் ஃபுட்ஸ் என்று சொல்லுவோம். அதில் முதன்மையானது இந்த பூசணி விதை. பூசணி விதையில் 100 கிராம் உலர்ந்த விதையில் 24 கிராம் அளவுக்கு புரதங்கள் இருக்கின்றன. இவற்றிலுள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் சரும செல்கள் சேதமடையாமல் பார்த்துக் கொள்ளும்.
- மன ஆரோக்கியத்திற்கும், உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
- மன அழுத்தத்தை தூண்டக்கூடிய உணவுகளை தவிர்க்கவும்.
நமது உடல் நலனில் உணவு எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறதோ, அதே அளவு நமது மன ஆரோக்கியத்திற்கும் உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மன அழுத்தம் மற்றும் பதட்டம் மீது உணவின் மீதான தாக்கத்தை புரிந்து கொள்வது அவசியம்.
மன அழுத்தத்தை தூண்டக்கூடிய உணவுகளை தவிர்க்கவும், அதே நேரத்தில் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் பெர்ரி பழங்கள், நட்ஸ் வகைகள், விதைகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
சரிவிகித உணவு, உணர்வு சீரமைப்பை ஆதரிக்கக் கூடிய குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் மற்றும் நமது ஒட்டுமொத்த மன ஆரோக்கியம் இந்த காலகட்டத்தின் முக்கியமான தேவையாக அமைகிறது. ஆகவே, மன அழுத்தத்தை குறைக்க உதவும் ஒரு சில உணவுகளின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பெர்ரி பழங்கள்:
பெர்ரி பழங்களில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்கள் இருப்பதால் அவை செல் சேதத்தை தவிர்த்து மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.

முந்திரி:
முந்திரிப் பருப்பில் 14-20 சதவீதம் வரையிலான பரிந்துரைக்கப்பட்ட ஜிங்க் அளவு உள்ளது. இது பதட்டத்தை குறைப்பதற்கு பயனுள்ளதாக அமைகிறது.

மெக்னீசியம் நிறைந்த உணவுகள்:
சியா விதைகள், பூசணி விதைகள் மற்றும் முட்டைகளில் காணப்படும் மெக்னீசியம் மனநல மேம்பாட்டுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன.

முட்டை:
முட்டைகளில் நிறைந்து இருக்கக்கூடிய டிரிப்டோபேன், செரட்டோனின் உற்பத்தியை தூண்டுகிறது. இது நமது மனநிலையை மேம்படுத்துவதற்கு உதவும் ஒரு ஹார்மோன் ஆகும்.

அவகேடோ:
அவகேடோ என்று சொல்லப்படும் வெண்ணெய் பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து வைட்டமின் சி மற்றும் பி6 நிறைந்துள்ளது. இது மன அழுத்தத்தை குறைப்பதற்கும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கும் உதவுகிறது.

பச்சை இலை காய்கறிகள்:
பச்சை இலை காய்கறிகளில் நிறைந்து காணப்படும் ஃபோலேட் சத்து நியூரோ டிரான்ஸ்மிட்டர் உற்பத்திக்கு ஆதரவு தருவதன் மூலமாக பதற்றம் மற்றும் கவலை உணர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது.

சால்மன்:
சால்மன் மற்றும் மத்தி மீன்களில் வைட்டமின் டி சத்து அதிக அளவில் உள்ளது. இது பதட்டம் போன்ற மனநிலை சம்பந்தப்பட்ட கோளாறுகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு உதவுகிறது.

பால் சார்ந்த பொருட்கள்:
டிரிப்டோபேன், மெலடோனின் மற்றும் பி வைட்டமின்கள் உள்பட பால் சார்ந்த பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மன அழுத்தத்தை குறைத்து தூக்கத்தை வரவழைக்கிறது.
- தக்காளியில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் சி நிறைந்துள்ளன.
- வால்நட்டில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கொலாஜன் உற்பத்திக்கு உதவும்.
சருமத்துக்கு அழகு சேர்ப்பதற்கு அழகுசாதனப் பொருட்களை சார்ந்திருப்பதால் மட்டும் பலன் கிடைக்காது. உண்ணும் உணவுப்பொருட்களும் சருமத்திற்கு பொலிவு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அப்படிப்பட்ட பொருட்களில் சிலவற்றை பார்ப்போம்.

தக்காளி:
தக்காளியில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் சி நிறைந்துள்ளன. அவை சருமத்திற்கு பளபளப்பை அளிக்கக்கூடியவை. தக்காளியை `ஸ்கிரப்பாக' சருமத்திற்கு பயன்படுத்தலாம். சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்றுவதற்கு உதவும். சருமத் துளைகள் அதிகம் இருப்பவர்கள் சரும பராமரிப்புக்கு தக்காளி உபயோகிக்கலாம். சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் தக்காளி உதவும்.

டார்க் சாக்லேட்:
சாக்லேட் அதிகம் சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சேரும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் டார்க் சாக்லேட்டை பொறுத்தவரை இதயத்திற்கும், சருமத்துக்கும் ஆரோக்கியம் சேர்க்கக்கூடியது. இந்த சாக்லேட்டில் கார்டியோபிராக்டிவ் பண்புகள் உள்ளன. அவை நோய்த்தொற்றுகளில் இருந்து இதயத்தை பாதுகாக்கக்கூடியவை. மேலும் இதில் உள்ள பிளவோனால்கள், தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்கள் உள்ளிட்டவற்றில் இருந்து சருமத்தை பாதுகாக்கக் கூடியவை.

அவகேடோ:
வைட்டமின்கள், தாதுக்கள் என ஏராளமான ஊட்டச்சத்துகள் அவகேடோவில் நிரம்பி உள்ளன. இதில் இருக்கும் வைட்டமின் ஈ, சருமத்துக்கு பாதுகாப்பு அரணாக செயல்படக்கூடியது. குறிப்பாக சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கும் முதன்மை பணியை மேற்கொள்ளும்.
அத்துடன் அவகேடோவில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் சரும செல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். இதனை உட்கொள்வது சருமச் சுருக்கம், கரும்புள்ளிகள், விரைவில் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் நுண்ணிய கோடுகள் போன்றவற்றை தடுத்து சருமத்துக்கு புத்துணர்ச்சி தரும்.

வால்நட்:
இதில் சருமத்திற்கு ஆரோக்கியம் சேர்க்கும் கொழுப்புகள், வைட்டமின் ஈ, துத்தநாகம், செலினியம், புரதம் போன்ற சத்துகள் உள்ளடங்கி உள்ளன. அடிக்கடி பூஞ்சைத் தொற்று பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் வால்நட்டை தவறாமல் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். வால்நட்டில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கொலாஜன் உற்பத்திக்கு உதவும். மன அழுத்த அறிகுறிகளை கட்டுப்படுத்தி சரும நலனை பாதுகாக்கும்.
- இந்தியாவில் உயர்தர அவகேடோ செடிகளை கண்டுபிடிப்பதும் சவாலாக இருந்தது.
- அவகேடோ பழங்களின் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விலையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிறந்து வளர்ந்தவர் ஹர்ஷித் கோதா. அவர் 2013-20-ல் இங்கிலாந்தில் உள்ள பாத் பல்கலைக்கழகத்தில் வணிகப் படிப்பை படித்தார்.
வணிக மாணவராக இருந்து விவசாயியாக மாறியது தொடர்பாக அவர் கூறுகையில், நான் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றபோது, அவகேடோ பழங்கள் எளிதாகக் கிடைத்தன. ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி ஆகியவற்றில் நான் நாட்டம் கொண்டதால், சத்துக்கள் நிறைந்த பழத்தை விரும்ப ஆரம்பித்தேன்.
விரைவில், அவகேடோ பழத்தை தினமும் சாப்பிட ஆரம்பித்தேன். இருப்பினும், கோடை காலத்தில் இந்தியாவிற்கு வரும்போதெல்லாம், அவகேடோ பழங்களை என்னால் வாங்க முடியவில்லை. மேலும் இங்கு கிடைக்கும் அவகேடோ பழங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. இதனால் அவகேடோ விவசாயத்தை இங்கு தொடங்க எண்ணினேன்.
பழங்களின் இருப்பு மற்றும் விலையில் உள்ள ஏற்றத்தாழ்வுக்கான காரணத்தை பற்றி ஆர்வமாக இருந்த ஹர்ஷித், சில ஆராய்ச்சிகளின் மூலமாக இங்கிலாந்தில் கிடைக்கும் அவகேடோ பழங்கள் இஸ்ரேலில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதைக் கண்டுபிடித்தார்.
வறண்ட மற்றும் வெப்பமான நாடான இஸ்ரேல் அவகேடோ பழங்களை பயிரிட்டு ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்வது அவரை சிந்திக்க செய்தது. இந்த உண்மையைக் கண்டு ஆச்சரியமடைந்த அவர், அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, போபாலில் அவகேடோ பழத்தை பயிரிடுவதில் உறுதியாக இருந்தார்.
அவகேடோ சாகுபடியை இந்தியாவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன், ஹர்ஷித் இஸ்ரேலில் உள்ள அவகேடோ விவசாயிகளை தொடர்பு கொள்ளத் தொடங்கினார். அப்போது அவர் பலரிடம் பேசினார். சிலர் அவருக்கு கற்பிக்க மறுப்பு தெரிவித்தனர். மற்றவர்கள் நிறைய பணம் கேட்டார்கள். இருப்பினும், ஒரு நபர் அவரை வழிநடத்த ஒப்புக்கொண்டார்.
மேலும் ஒரு இஸ்ரேலிய கிராமத்தில் தங்குவதற்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்தார். ஹர்ஷித் அங்கு சென்று ஒன்றரை மாதங்கள் இருந்தார். மதியம் வேலை செய்வது கூலித்தொழிலாளிகளால் வெயில் தாங்க முடியாது என்பதால் காலை 5 மணி முதல் 10 மணி வரை வயலில் வேலை செய்தோம் என்று அவர் கூறுகிறார். பின்னர் அவர் உழைத்து, அவகேடோ சாகுபடிக்கு இஸ்ரேலியர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைகள் பற்றி தெரிந்துகொண்டார்.
பயிற்சியை முடித்த ஹர்ஷித் இந்தியா திரும்பினார். இருப்பினும், மண்ணின் நிலை, நீர் இருப்பு மற்றும் காலநிலை ஆகியவற்றை ஆய்வு செய்வதே மிகப்பெரிய தடையாக இருந்தது. இதற்காக இஸ்ரேலில் இருந்து தனது வழிகாட்டியை தனது சொந்த செலவில் இந்தியாவிற்கு வரவழைத்தார். அவர் போபாலில் உள்ள மண் மற்றும் தட்பவெப்ப நிலைகளை மதிப்பீடு செய்து, அங்கு சில அவகேடோ வகைகளை வெற்றிகரமாக வளர்க்கலாம் என்று கூறினார்.
இந்தியாவில் உயர்தர அவகேடோ செடிகளை கண்டுபிடிப்பதும் சவாலாக இருந்தது. இதை எதிர்த்து, 2019-ம் ஆண்டு இஸ்ரேலில் இருந்து உள்ளூர் காலநிலைக்கு ஏற்ற அவகேடோ வகைகளை இறக்குமதி செய்ய ஹர்ஷித் முடிவு செய்தார்.
இறக்குமதி செயல்பாடு தாமதம், கொரோனா வைரஸ் போன்ற பல தடைகளுக்குப் பிறகு, இறுதியாக இஸ்ரேலில் இருந்து 2021-ல் அவகேடோ செடிகள் முதன்முதலில் அனுப்பப்பட்டது. அதை நான் 2023-ல் எனது தோட்டங்களில் நட்டேன். அதற்கு முன், இந்த செடிகள் நர்சரியில் வைக்கப்பட்டன. நடவு செய்த 14 மாதங்களில் செடிகள் காய்க்க ஆரம்பித்தன.
யுனிரேம் (UniRam) என்பது ஒரு நுட்பமாகும், இது ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு நாளும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உரத்தைப் பெறுவதை உறுதி செய்கிறது. இந்தியாவில் தினசரி உரமிட வேண்டிய ஒரே பயிர் அவகேடோ மட்டுமே என்றார்.
தற்போது 10 ஏக்கர் நிலத்தில் அவகேடோ சாகுபடி செய்து ஹர்ஷித் ஆண்டுக்கு ரூ.1 கோடி வருமானம் ஈட்டி வருகிறார். ஹர்ஷித் கூறும்போது, அந்தச் செடியின் விலை அதன் வயதைப் பொறுத்து, ஒன்றரை வருட செடிகள் ரூ.2 ஆயிரத்து 500-க்கும், இரண்டு வருட செடிகள் ரூ.3 ஆயிரத்திற்கும் விற்கப்படுகிறது.
அவகேடோ பழங்களின் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விலையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.250-300 ஆகவும், சில்லறை விற்பனையில் ஒரு அவகேடோ பழம் ரூ.200-250 ஆகவும் உள்ளது.
ஒரு அவகேடோ பழம் 250-300 கிராம் எடை கொண்டது. ஒவ்வொரு செடியும் 40-50 ஆண்டுகள் பழம் தரும். வருமானம் பல்வேறு வகையைச் சார்ந்தது, ஆனால் சராசரியாக ஒரு நபர் ஒரு ஏக்கருக்கு 6-12 லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும்.
கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தியாவில் அவகேடோ இறக்குமதி சுமார் 400 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, சந்தையில் அவகேடோ பழங்களை விற்பனை செய்வது ஒரு பிரச்சனை அல்ல.
எனவே, விவசாயிகள் தங்கள் விவசாயத்தை பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்துகிறார். அதிக லாபம் தரக்கூடிய பயிர்களை பயிரிடுங்கள். புளூபெர்ரி (அவுரிநெல்லிகள்) மற்றும் அவகேடோ பழங்கள் வேகமாக வளர்ந்து வரும் சந்தையை கொண்ட பழங்கள், என்று கூறுகிறார்.