என் மலர்
நீங்கள் தேடியது "Ayyappa"
- சேலத்தில் கார்த்திகை மாதம் நாளை ெதாடங்குவதால் சபரிமலை யாத்திரைக்குரிய பொருட்கள், விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- ஒரு மண்டலம் (48 நாள்) விரதம் இருந்து, சபரிமலைக்கு சென்று மகரஜோதி தரிசனம் செய்த பின், விரதத்தை முடிக்கின்றனர்.
சேலம்:
கார்த்திகை மாதம் நாளை ெதாடங்குவதால் சேலம் மாநகரில் உள்ள கடைகளில், சபரிமலை யாத்திரைக்குரிய பொருட்கள், விரதத்துக்கு தேவையான பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கார்த்திகையில் தொடங்கி தை மாதம் வரை, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள், துளசிமணி மாலை அணிந்து, சபரிமலைக்கு யாத்திரை செல்கின்றனர். கார்த்திகை மாதம் மாலை அணியும் பக்தர்கள், ஒரு மண்டலம் (48 நாள்) விரதம் இருந்து, சபரிமலைக்கு சென்று மகரஜோதி தரிசனம் செய்த பின், விரதத்தை முடிக்கின்றனர்.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக, ஐப்பசி மாதத்தின் கடைசி வாரத்திலேயே காவி வேஷ்டிகள், துண்டுகள், துளசிமணி மாலைகள், பூஜை பொருட்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டது. வழக்கமான பூஜை பொருள் விற்பனை கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. சபரிமலை யாத்திரைக்கு மாலை அணியும் பக்தர்களுக்காக, சேலம் கந்தாஸ்ரமம், பெங்களூரு பைபாஸ் அய்யப்பா ஆஸ்ரமம் ஆகிய இடங்களிலும் மாலை அணிவதற்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
காவி வேஷ்டி, துண்டு, சட்டை அடங்கிய செட் (ஒன்று), ரூ.350 முதல் 650 வரையிலும், வேஷ்டி மட்டும் ரூ. 150 முதல் 285 வரையிலும், துண்டு மட்டும் ரூ. 60 முதல், 125 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இருமுடி பை, ரூ. 100 முதல் 175 வரையிலும், பூஜை பொருட்கள் அடங்கிய பாக்கெட் ரூ. 100 முதல் 120 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய், பழம் போன்றவையும் விற்பனை செய்யப்படுகிறது.
பூஜை பொருட்கள் விற்பனை செய்யும், சேலம் சின்னக்கடை வீதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
சபரிமலைக்கு வழக்கமாக செல்லும் பக்தர்களுக்கு மட்டுமின்றி, புதிதாக மாலை அணியும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் விற்பனை செய்கிறோம். கோவில் நிர்வாகங்களும், பூஜை பொருட்களை மொத்தமாக வாங்கிச் சென்று, பக்தர்களுக்கு வழங்கி வருகின்றன. துளசி, படிகம், வெட்டிவேர் என தனித்தனியாகவும், கலந்தும் தயாரித்த மாலைகளையும் விற்பனைக்கு வைத்துள்ளோம். இருமுடி கட்டும் பைகள், போர்வை, இருமுடி கட்ட தேவையான பூஜை பொருட்கள் அடங்கிய பாக்கெட் ஆகியவற்றையும் விற்பனை செய்கிறோம். நெய் உட்பட அனைத்து பொருட்களையும், தரமானதாகவும், வழங்கி இறை பணியில் எங்களையும் இணைத்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
- ேசலம் மாவட்டத்தில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானவர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து கோவிலுக்கு செல்வது வழக்கம்.
- ஒருசில குருசாமிகள் தங்களது வீடுகளில் சிறப்பு பூஜை நடத்தி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
சேலம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ேசலம் மாவட்டத்தில் இருந்து ஏராளமானவர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து கோவிலுக்கு செல்வது வழக்கம்.
பக்தர்கள் விரதம் தொடங்கினர்
அந்த வகையில் இன்று கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி சேலம் மாவட்டத்தில் வசிக்கும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். பலமுறை விரதமிருந்து சபரிமலை சென்று வந்து பக்குவமடைந்த பழமலை ஐயப்பன்மார் ஒருவரைக் குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, கோவில்களிலோ குருநா தரை வணங்கி அவர் திருக்கரங்களால் மாலை அணிந்து ெகாண்டனர். மாலை அணிந்து கொண்ட வுடன், குருநாதருக்குத் தங்களால் இயன்ற தட்சி ணையைக் கொடுத்து அடி வணங்கி ஆசிபெற பெற்றனர்.
சில அய்யப்ப பக்தர்கள் தாய், தந்தையர்மூலமாகவோ, இறைவன் திருவடிகளில் வைத்து எடுக்கப்பெற்ற மாலை யினை அணிந்து கொண்ட னர். ஒருசில குருசாமிகள் தங்களது வீடுகளில் சிறப்பு பூஜை நடத்தி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
சிறப்பு பூஜை
கார்த்திகை மாத பிறப்பையொட்டி அய்யப்பன் கோவில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சேலம் குரங்குச்சாவடியில் சாஸ்தா நகர் அய்யப்பன் கோவிலில் அதிகாலை முதல் அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் வரத்தொடங்கினர். அவர்கள் மூலவர் அய்யப்பனை வணங்கி கோவில் குருசாமி மூல மாக மாலை அணிந்து கொண்டனர். கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆராதனை நடந்தது. இதில் அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
இதேபோல் சேலம் டவுன் ரெயில் நிலையம் அருகே உள்ள அய்யப்பன் கோவில், சேலம் சுகவனேசுவரர் கோவில், ராஜகணபதி கோவில், அம்மாப்பேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சாமி கோவில், ஊத்துமலை முருகன் கோவில் உள்பட மாநகரில் உள்ள பல்வேறு சிவன், விநாயகர், முருகன் மற்றும் அய்யப்பன் கோவில்களிலும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.
காவிரி வேஷ்டி விற்பனை அமோகம்
கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு இன்று சேலம் சின்னக்கடைவீதியில் உள்ள கடைகளில் துளசி மாலை, சந்தனம், ஜவ்வாது, இருமுடி பூஜை பொருட்களும், காவி, கறுப்பு நிற வேட்டி, சட்டை, துண்டுகள், பூ தேங்காய், பழம் உள்ளிட்டவைகளும் அதிக அளவில் விற்பனை ஆகின.
- அய்யப்பன் கோவிலுக்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து, சாமியை தரிசனம் செய்ய செல்வார்கள்.
- இதன்படி மேட்டூரில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் புது ஆடை அணிந்து, மாலை அணிந்தனர்.
மேட்டூர்:
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலையில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலுக்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டு சாமியை தரிசனம் செய்ய செல்வார்கள். கடந்த 2 ஆண்டாக கொரோனா பெருந்தொற்று காரணமாக சபரி மலை கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று தாக்கம் குறைந்துள்ளதால், கார்த்திகை மாத பிறப்பான இன்று, மேட்டூரில் ஏராளமான பக்தர்கள் அய்யப்பனுக்கு மாலை அணிந்து கொண்டனர். இதன்படி மேட்டூரில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் புது ஆடை அணிந்து, மாலை அணிந்தனர். இவர்கள் கடுமையான விரதம் மேற்கொண்டு உள்ளனர். அவரவர் வசதிக்கு ஏற்ப 48 நாட்கள் அல்லது 2 வாரம் என்ற கணக்கில் விரதத்தை மேற்கொள்வார்கள். விரத காலம் முடிந்ததும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நேரில் சென்று தரிசனம் செய்ய உள்ளனர்.
- அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கியனர்
- கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி
அரியலூர்:
கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி அரியலூர் மாவட்ட த்திலுள்ள பல்வேறு கோயிலி களில் ஆயிரம்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
கேரளம் மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை, மகர விளக்குப் பூஜை நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.
இதையடுத்து கார்த்திகை மாதம் முதல் நாளில் இருந்து அரியலூர் பால பிரசன்ன விநாயகர் கோயிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
இதை போல் மாவட்டத்திலுள்ள பெரும்பாலன கோயிலில்களில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். அவர்களுக்கு குருசாமிகள் சந்தன மாலை அணிவித்தனர்.கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- செந்தணல் வண்ணத்தில் ஓர் ஒளி தென்படும்.
- ஞானமாகிய அறிவு தானாகவே பிரகாசிப்பது ஜோதி.
மகர ஜோதியே ஐயப்பா!
ஞானமாகிய அறிவு தானாகவே பிரகாசிப்பது ஜோதி.
அந்த ஜோதியின் வடிவமாகவே ஐயப்பன் விளங்குகிறார்.
'காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா' என்ற கோஷம் வானைப்பிளக்கும் நட்சத்திரக் கூட்டத்தின் மத்தியில், செந்தணல் வண்ணத்தில் ஓர் ஒளி தென்படும்.
அதுதான் ஜோதி. சிறிது நேரமே தென்படும்.
இந்த ஜோதி எப்படி ஏற்படுகிறது என்பது இன்றைய விஞ்ஞான உலகத்தால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஜோதி வழிபாடுதான் ஆதிகாலம் முதற்கொண்டு இருந்து வருகிறது.
பண்டைத் தமிழர்கள் வழிபட்ட மும்மூர்த்திகள் சூரியன், சந்திரன்,நெருப்பு ஆகும்.
இறைவனை வேதம் "ஓம்" என்கிற ஒலி வடிவாக வணங்கும்.
அதற்கடுத்தபடி ஒளி வடிவமாக விளங்குகிறது.
இந்த விண்ணின் விளக்குதான் மகரஜோதி.
ஒளியே சிவம் என்பது ராமலிங்க சுவாமிகள் கருத்து. அவர் ஒளி விளக்குக்கே ஆலயம் அமைத்தார்.
திருநாவுக்கரசர் "நமச்சிவாய" மந்திரமே ஒளிமயமானது என்று வருணிக்கிறார்.
அஞ்ஞானம் என்ற இருளை அகற்றுவதற்காக நம் முன்னோர்கள் ஜோதி வழிபாட்டைக் கடைப்பிடித்தனர்.
இறைவன் ஒளிகளுக்கெல்லாம் ஒளியாகத் திகழ்கிறான். வானத்தில் ஒரே சமயத்தில் ஆயிரமாயிரம் கதிரவன்கள் தோன்றினால் அந்தப் பேரொளியை ஒருவாறு இறைவனுடைய ஒளிக்கு உவமையாகக் கூறலாம்.
உலகிருளை நீக்கும் கதிரவனும், மதியவனும், தாரகைகளும் அப்பரஞ்ஜோதியின் முன்பு மங்குகின்றன. மின்னொளியும், அக்கினியும் அங்கே சுடர் விடுவதில்லை.
"தீயளி பரப்பும் இறைவனே! மாந்தருக்கு வெளிச்சத்தைக் கொடுப்பதற்காக நீ வானத்தில் கதிரவனையும் எண்ணற்ற தாரகைகளையும் தோற்றுவித்தாய். நீயே மக்களின ஒளி. எங்கள் அருகில் இருந்து நீ எமக்கு நன்மையும் அன்பும் தருகிறாய்" என்று புகழ்கிறது ரிக்வேதம்.
- சுவாமி ஐயப்பன் தாம்பத்திய கோலத்தில் ஆரியங்காவில் அருள்பாலிக்கிறார்.
- முதுகுத் தண்டுக்குள் கடைசியில் உள்ளது மூலாதாரம்.
ஐயப்பனின் ஆறு ஆதாரத் தலங்கள்!
ஐயப்பன் நம்மைப் போலவே வாழ்ந்தவர்.
பால ரூபத்தில் குளத்துப் பிழையிலும்,
கௌமார கோலத்தில் சபரி மலையிலும்,
தாம்பத்திய கோலத்தில் ஆரியங்காவிலும்,
வானப்பிரஸ்த நிலையில் அச்சன் கோவிலிலும்,
ஜீவன் முக்த நிலையில் வான வெளியிலும்
திருக்கோலம் கொண்டு அருள்பாலிக்கிறார்.
ஐயப்பன் பக்தர்கள் சரணம் சொல்லும்போது இந்த தலங்களைக் குறிப்பிடுகிறார்கள்.
ஐயப்பன் குளத்துப்புழையில் பாலகனாகவும், சபரி மலையில் கௌமார கோலத்திலும், ஆரியங்காவில் தாம்பத்திய கோலத்தில் பூர்ணா புஷ்பகலா சமேதனாகவும், அச்சன் கோவிலில் வானப்பிரஸ்த கோலத்தில் அரசனாகவும், காந்தமலையில் ஜோதியாகவும், வீற்றிருப்பதாக ஐதீகம்.
இப்படி ஆராதிப்பதில் பெரும் தத்துவம் அடங்கியுள்ளது.
நமது தேகத்தில் ஆறு ஆதாரங்கள் உள்ளன.
முதுகுத் தண்டுக்குள் கடைசியில் உள்ளது மூலாதாரம்.
பிருத்வி மயமான அதில் கணபதி வீற்றிருக்கிறார். நெல்லை மாவட்டத்தில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில் மூலாதாரம்.
தொப்புகளுக்கு கீழ்ப்பகுதி சுவாதிஷ்டானம்.
ஜல மயமான அப்பகுதியில் நாராயணன் இருக்கிறார்.
அச்சன் கோவில் சுவாதிஷ்டானம்.
நாபி கமலத்திற்கு மணிபூரகம் என்று பெயர். அக்னி மயமான அப்பீடத்தில் இருப்பவர் சூரியன்.
ஆரியங்காவு மணிபூரகமாக கருதப்படுகிறது. வாயுமயமான ஹிருதய ஸ்தானம் அநாகதம். அங்கு பராசக்தி வீற்றிருக்கிறாள். குளத்துபுழா அநாகதமாக கருதப்படுகிறது.
ஆகாச மயமான கண்டத்திற்கு விசுத்தி என்று பெயர். அங்கே நீலகண்டனான பரமசிவன் வீற்றிருக்கிறார். பந்தனம் விசுத்தி என்ற பெயர் பெற்றுள்ளது.
ஆறாவது ஸ்தானம் பஞ்ச பூதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஸ்தானம். நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள அந்த ஸ்தானத்தில் ஐயப்பன் வீற்றிருக்கிறார். அது ஆக்ஞை எனப்படுகிறது.
"எங்கும் நிறைந்த ஜோதிஸ்வரூபன் ஐயன் மணிகண்டன்
ஏகாந்தத்தில் இருப்பவராமே ஐயன் மணிகண்டன்
ஐசுவரியத்தைத் தந்திடும் ஈசன் ஐயன் மணிகண்டன்
ஒன்பது இரண்டு படிகள் மேலமர்ந்தவன் ஐயன் மணிகண்டன்
ஓங்காரத்தின் உருவாய் வந்தார் ஐயன் மணிகண்டன்"
- சபரிமலையில் இந்த ஏழு அம்சங்களும் பொருந்தியுள்ளது.
- இத்தகைய இடத்திற்குப் போய் தரிசனம் செய்வதால் ஒருவருடைய அனைத்து பாவங்களும் நீங்கும்.
ஒரு தலம் மிகவும் சிறப்பான புண்ணிய தலம் என்ற சிறப்பை பெற வேண்டுமானால் கீழே உள்ள ஏழு அம்சங்களில் ஏதாவது ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.
1. சுயம்பு லிங்க பூமி - சுயமாக உண்டானதோ அல்லது இறைவனுடைய ஜீயோதிர்லிங்கம் உள்ளவை.
2. யாக பூமி - மகா யாகம் நடந்த தலம்.
3. பலி பூமி - பக்தி மார்க்க யுத்தம் நடந்த இடம்.
4. யோக பூமி - ரிஷி தவமிருந்த தலம்.
5. தபோ பூமி - யோகிமார் வாழ்ந்த தலம்.
6. தேவ பூமி - தேவர்களால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட பூமி.
7. சங்கம பூமி - நதி சங்கமிக்கும் தலம்.
இந்த ஏழில் ஒன்று இருந்தாலும் அது தீர்த்த பூமியாகும்.
இத்தகைய இடத்திற்குப் போவதாலும் தரிசனம் செய்வதாலும் ஒருவருடைய அனைத்துப் பாவங்களும் நீங்கி
கோடி புண்ணியம் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
சபரிமலையில் மேற்கண்ட ஏழு அம்சங்களும் பொருந்தியுள்ளதால் சபரிமலை வருபவர்களுக்கும்
ஐயப்பனை தரிசிப்பவர்களுக்கும் கோடி புண்ணியம் கிடைக்கிறது.
அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி மோட்சமடைய தகுதி பெறுகிறார்கள்.
இது சபரிமலைக்கு மட்டுமே இருக்கும் தனித்தன்மையாகும்.
- ஐயப்பனுக்குரிய நட்சத்திரம் உத்திர நட்சத்திரமாகும்.
- தோஷங்கள், தடைகள், பாவங்கள் தீர்ந்து நலம் பெற ஐயப்பனுக்குரிய உத்திர விரதம் உறுதி தருகிறது.
ஐயப்பனுக்குரிய நட்சத்திரம் உத்திர நட்சத்திரமாகும்.
அந்த நட்சத்திர நாளில் ஐயப்பனுக்குரிய விரதம் இருக்கலாம்.
அன்று காலை முதல் இரவு வரை, முறையான விரதம் அனுஷ்டித்து
மாதம் ஒரு நாள் ஸ்ரீ ஐயப்ப சுவாமியை மனதில் எண்ணி வணங்கலாம்.
தீபம் ஏற்றி, சரண கோஷம் இட்டு பானகம் நிவேதனம் செய்து, கற்பூர தீபம் ஏற்றிய பின் வணங்கி,
அருகில் உள்ள ஐயப்பன் அல்லது மற்ற ஆலயங்களுக்குச் சென்று வரலாம்.
பூரணா, புஷ்கலாம்பிகையுடன் உள்ள ஹரிஹரபுத்ர சுவாமி படத்தை வீட்டில் பூஜை செய்து,
10 முதல் 50 வயதுவரை உள்ள பெண்களும் விரதம் இருக்கலாம்.
தோஷங்கள், தடைகள், பாவங்கள் தீர்ந்து நலம் பெற ஐயப்பனுக்குரிய உத்திர விரதம் உறுதி தருகிறது.
- சபரிமலை செல்வதற்காக 48 நாட்கள் விரதம் இருந்தாக வேண்டும் என்பது சாஸ்திரம்.
- பக்தர்கள் ஒரு மண்டலம் விரதம் மேற்கொண்டால், கலிதோஷங்களிலிருந்து விடுபடலாம்.
சபரிமலை செல்வதற்காக 48 நாட்கள் விரதம் இருந்தாக வேண்டும் என்பது சாஸ்திரம்.
ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள் இது எப்படி வந்தது?
மொத்த நட்சத்திரங்கள் 27.
அவற்றுக்குரிய ராசிகள் 12, கிரகங்களின் எண்ணிக்கை 9, இவை மொத்தம் 48.
இந்த 48 தினங்களுக்கு ஒருவர் பகவானிடம் பக்தி வைத்து தரிசித்தால், எந்தவித கலிதோஷங்களும் பிடிக்காது.
நட்சத்திரங்கள், ராசிகள், கிரகங்களால் உண்டாகும் தொல்லைகளில் இருந்து விடுபட்டு,
பகவானுடைய பாதங்களில் சரணாகதி அடைந்து உலக துன்பங்களிலிருந்து மீண்டு வருவதற்காகவே
பக்தர்கள் ஒரு மண்டலமான 48 நாட்கள் காலம் விரதம் மேற்கொள்கின்றனர்.
- சபரிமலையில் முதன் முதலில் பரசுராமரே சாஸ்தா கோவிலை எழுப்பினார்.
- சபரி மலையில் மகர சங்கராந்தி தரிசனம் சிறப்பாக சொல்லப்படுகிறது.
சபரிமலையில் முதன் முதலில் பரசுராமரே சாஸ்தா கோவிலை எழுப்பினார்.
அப்போது தர்தசாஸ்தாவின் விக்ரகத்தை அவர் அங்கே பிரதிஷ்டை செய்தார்.
அவதார நோக்கமான மகிஷி சம்ஹாரம் முடிந்ததும், சின் முத்திரைக்காட்டி யோக பட்டம் தரித்து
தவக்கோலத்தில் அமர்ந்த ஐயப்பன், தவத்தின் நிறைவாக, பரசுராமர் அமைத்த தர்மசாஸ்தா விக்ரகத்தில் ஐக்கியமானார்.
அதன் பிறகே சின்முத்திரை காட்டி யோக பட்டம் தரித்து, அமர்ந்த நிலையில் உள்ள ஐயப்பனின் வடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஆதிகாலத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்த சாஸ்தாவின் வடிவிற்கு ஆண்டுக்கு ஒரு முறை மகர சங்கராந்தி, அன்று மட்டுமே வழிபாடுகள் நடத்தப்பட்டன.
ஐயப்பன் வடிவம் அமைந்த பிறகே மாத பூஜைகள், மண்டல பூஜைகள் மகரவிளக்கு பூஜைகள் தொடங்கப்பட்டன.
அதனால்தான் இன்று சபரி மலையில் மகர சங்கராந்தி தரிசனம் சிறப்பாக சொல்லப்படுகிறது.
- ஐயப்பன் என்றதும் சின்முத்திரை காட்டி, யோபட்டம் தரித்து அமர்ந்திருக்கும் வடிவமே நினைவுக்கு வரும்
- அஷ்டகோண சாஸ்தா பீடத்தில் யோக பத்ராசனத்திலும், வீற்றிருந்து அருள்கிறார்.
ஐயப்பன் என்றதும் சின்முத்திரை காட்டி, யோபட்டம் தரித்து அமர்ந்திருக்கும் வடிவமே பலருக்கும் நினைவுக்கு வரும்.
ஆனால் அவர் நான்கு விதமான ஆசனங்களில் அமர்ந்து,
நான்கு வகையான முத்திரைகளைக் காட்டுபவர் என்கிறது பூதநாததோ பாக்யானம்,
தியானபிந்து ஆசனத்தில் அபய சின்முத்திரை தரித்தும்,
கிருக நாரீயபீட ஆசனத்தில் யோகப் பிராண முத்திரையுடனும்,
குதபாத சிரேஷ்டாசனத்தில் அபான பந்த முத்திரையோடும,
அஷ்டகோண சாஸ்தா பீடத்தில் யோக பத்ராசனத்திலும்,
வீற்றிருந்து அருள்கிறார் ஐயப்பன்.
- ஹரிஹர புத்ரனாகிய மணிகண்டனுக்கு ஐயப்பன் என்ற பெயரின் பின்னால், ஒரு வரலாறு கூறப்படுகிறது.
- ”வழி தெரியாமல் நீங்கள் திணறாமல் இருக்க கருடன் உங்களுக்கு வழிகாட்டுவான்" என்று கூறி சென்றார்.
ஹரிஹர புத்ரனாகிய மணிகண்டனுக்கு ஐயப்பன் என்ற பெயர் வந்ததன் காரணமாக ஒரு வரலாறு கூறப்படுகிறது.
பந்தளராஜன் மகனாக வளர்ந்த மணிகண்டன், அவதார நோக்கம் முடித்து,
பந்தளராஜனை விட்டுப் பிரிய வேண்டிய நேரம் வந்தது.
அந்த சமயத்தில் கலங்கி நின்ற தனது வளர்ப்புத் தந்தையிடம் "நான் இனி வனத்தில் வாசம் செய்வேன்.
என்னை காண வேண்டும் என நீங்கள் நினைத்தால், கல்லும் முள்ளும் நிறைந்த காட்டு வழியே வர வேண்டும்.
வழி தெரியாமல் நீங்கள் திணறாமல் இருக்க கருடன் உங்களுக்கு வழிகாட்டுவான்"
என்று சொல்லி விடை பெற்றுச் சென்றார்.
தன் மைந்தன் மணிகண்டனைப் பார்க்க சென்ற போதெல்லாம் பந்தளராஜன் காடு, மலைக்களைக் கடக்க மிகவும் சிரமப்பட்டார்.
அப்போது ஐயனே, அப்பனே என்றெல்லாம் அவர் சொன்ன வார்த்தைகளே இணைந்து ஐயன், அப்பன் ஐயப்பன் என்றாகி விட்டதாக சொல்லப்படுகிறது.