என் மலர்
நீங்கள் தேடியது "bail plea"
- அரசியல் சார்ந்த கருத்துகளை தெரிவித்து வந்தார்.
- விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு தள்ளி வைப்பு.
கோவை:
பிரபல அரசியல் விமர்சகரான சவுக்குசங்கர் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் பல்வேறு அரசியல் சார்ந்த கருத்துகளை தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் இவர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பட்டியில் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது.
மேலும் மகளிர் போலீசார் குறித்தும் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் அளித்தார். அதன்பேரில் சவுக்குசங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து கடந்த 4-ந்தேதி தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கோவை போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்து மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் அவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்தனர்.
இது தொடர்பாக கோவை 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சரவணபாபு முன்பு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனு மீதான விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இதேபோல் இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்க கோரி அவரது சார்பில் அவரது வக்கீல் கோபாலகிருஷ்ணன் கோவை 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் தனது கட்சிக்காரரின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சரவணபாபு முன்பு வந்தது இந்த வழக்கு விசாரணையை 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். இதற்கிடையே போலீசார் சவுக்குசங்கரிடம் அவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை வழங்கினர்.
- பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது.
- பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் பிரஜ்வால் ரேவண்ணா ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடினார்.
ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் எச்.டி.ரேவண்ணா. இவரது மனைவி பவானி ரேவண்ணா. இவர்களது மகன்கள் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் சூரஜ் ரேவண்ணா.
பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. ஆவார். அவர் தற்போது ஆபாச வீடியோ வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரால் பாதிக்கப்பட்ட மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகரைச் சேர்ந்த பெண்ணை கடத்தியதாக எச்.டி.ரேவண்ணாவை போலீசார் கைது செய்தனர்.
தற்போது அவர் ஜாமினில் இருந்து வருகிறார். அதுபோல் இந்த வழக்கில் அவரது மனைவி பவானி ரேவண்ணாவும் முன்ஜாமின் பெற்றுள்ளார்.
இந்நிலையில், பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் பிரஜ்வால் ரேவண்ணா ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடினார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று பெங்களூரு செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பிரஜ்வால் ரேவண்ணாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல் வழக்கில் இன்னும் ஜாமின் கிடைக்காத நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஆபாச வீடியோ, பாலியல் தொல்லை, ஆள் கடத்தல், கொலை மிரட்டல் ஆகிய 4 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- மகாவிஷ்ணு ஜாமீன் கேட்டும் சைதாப்பேட்டை கோர்ட் டில் மனுதாக்கல் செய்தார்.
- மகாவிஷ்ணுவை போலீஸ் காவலில் எடுத்து தங்களுடன் அழைத்துச் சென்றனர்.
சென்னை அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை பள்ளிகளில் மாணவ-மாணவிகள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. சைதாப்பேட்டை கோர்ட்டில் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மனு மீதான விசாரணை நேற்று நடைபெறவில்லை.
இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை கோர்ட்டில் இன்று போலீஸ் காவல் கேட்கும் மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதற்காக புழல் சிறையில் இருந்து மகாவிஷ்ணு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு சைதாப்பேட்டை கோர்ட்டில் மதியம் 12.15 மணி அளவில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து காவலில் எடுக்கும் மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதன் முடிவில் மகாவிஷ்ணுவை போலீஸ் காவலில் எடுத்து தங்களுடன் அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையே மகாவிஷ்ணு ஜாமீன் கேட்டும் சைதாப்பேட்டை கோர்ட் டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையும் இன்று நடைபெற இருந்தது.
இந்நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனுவை மகாவிஷ்ணு திரும்ப பெற்றுள்ளார்.
காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறி ஜாமின் மனுவை மகாவிஷ்ணு வாபஸ் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
- அலிகான் துக்ளகிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
- ஜாமின் மனுவை விசாரித்த அம்பத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் போதைப் பொருள் வழக்கில் கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டார்.
போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக போலீசார் 2 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து அலிகான் துக்ளகிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, ஜாமின் கோரி அம்பத்தூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த அம்பத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக், ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நாளை இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4 வழக்குகளில் தண்டனை பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வயது மூப்பு, நீரிழிவு நோய் உள்ளிட்ட கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள அவர், தற்போது ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர் மற்றும் சிபிஐ தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, லாலுவின் ஜாமீன் விஷயத்தில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறி லாலுவின் ஜாமீன் மனுவை நிராகரித்தனர். #LaluPrasadYadav #FodderScam


சென்னை:
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்ய ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.
செங்குன்றம் அருகே குட்கா குடோன் வைத்துள்ள மாதவராவ் வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது சிக்கிய டைரி மூலம் லஞ்சம் பெற்றவர்கள் முழு விபரமும் தெரிய வந்தது.
லஞ்சம் பெற்றவர்களில் அமைச்சர் ஒருவரது பெயரும் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனரின் பெயர்களும் முக்கிய இடம் பிடித்திருந்தன. இவர்கள் தவிர போலீஸ் உயர் அதிகாரிகள், சுகாதார துறை அதிகாரிகள், உணவு துறை அதிகாரிகளும் அதிக அளவில் லஞ்சம் வாங்கி இருப்பது அந்த டைரி மூலம் உறுதியானது.
வருமான வரித்துறை இதுபற்றி தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தது. ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ள வில்லை.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் குட்கா ஊழல் விவகாரம் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன் பேரில் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை வந்து குட்கா அதிபர் மாதவராவ் உள்பட பலரை அழைத்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது குட்கா விற்பதற்கு பல கோடி ரூபாய் லஞ்சமாக கைமாறி இருப்பது தெரிந்தது. லஞ்சம் வாங்கிக் கொடுத்த இடைத்தரகர்களிடமும் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சமீபத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் 35 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
டி.ஜி.பி. அலுவலகம், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வீடு ஆகியவற்றில் நடந்த சோதனை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களும் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து குட்கா தயாரிப்பாளர்கள் மாதவ ராவ், சீனிவாசராவ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த 6 பேரில் 3 பேர் அரசு அதிகாரிகள் ஆவார்கள்.
இதற்கிடையே லஞ்சம் கொடுத்த தரகர்கள் 2 பேர் சி.பி.ஐ.யிடம் அப்ரூவர்களாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் கொடுத்த தகவல்களின் பேரில் சி.பி.ஐ. யின் அடுத்த பார்வை போலீஸ் உயர் அதிகாரிகள் மீது திரும்பி இருப்பது தெரிய வந்தது. எனவே குட்கா ஊழல் வழக்கில் சில போலீஸ் அதிகாரிகள் சிக்குவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் குட்கா ஊழலில் மேலும் 2 முக்கிய ஐ.பி.எஸ். அந்தஸ்துள்ள உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது. அந்த இரு போலீஸ் அதிகாரிகளையும் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். விரைவில் அவர்கள் இருவரும் சி.பி.ஐ.யின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகள் சிலரும் சி.பி.ஐ. கண்காணிப்பில் உள்ளனர். விரைவில் அவர்களில் சிலர் கைதாக வாய்ப்புள்ளது. எனவே சி.பி.ஐ.யின் அடுத்த அதிரடி எந்த நேரத்திலும் இருக்கும் என்று சொல்கிறார்கள்.
தற்போது 4 போலீஸ் அதிகாரிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் நெருங்கி உள்ளனர். அந்த போலீஸ் அதிகாரிகள் எப்போது கைது செய்யப்படுவார்கள் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டால்தான் தப்பு செய்த உயர் போலீஸ் அதிகாரிகளையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர முடியும் என்று கூறப்படுகிறது.
எனவே குட்கா ஊழலில் போலீஸ் அதிகாரிகள் கைது எப்போது இருக்கும் என்பதுதான் பிரதானமான கேள்வியாக உள்ளது. அந்த போலீஸ் அதிகாரிகள் கைதாகும் போது அரசு ஊழியர்கள் சிலரும் கைதாக வாய்ப்புள்ளது.
உணவு பாதுகாப்புத் துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் லஞ்சம் வாங்கியதை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆகையால் அவர்கள் மீது நடவடிக்கை பாய்வது உறுதியாகி விட்டது. அவர்களும் அப்ரூவர்களாக மாறினால் போலீஸ் உயர் அதிகாரிகள் மீதான பிடி இறுகும்.
ஏற்கனவே குட்கா தயாரிப்பாளர்கள் 2 பேரும் சி.பி.ஐ.யிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ் உயர் அதிகாரிகள் பற்றிய முழு தகவல்களையும் தெரிவித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Gutkha #GutkhaScam #CBIinquiry
தமிழகத்தில் குட்கா ஊழல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என பலருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் இந்த வழக்கு மிகவும் தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில் மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கடந்த 7-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அதில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் கலால் வரி கண்காணிப்புத்துறை அதிகாரிகளான செந்தில் முருகன், நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.
இன்று, அவர்களின் மனுவை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுத்து, அவர்களது மனுவை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் மேலும் ஒரு உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி சிவக்குமார் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. #GutkhaScam #CBI
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி முகர்ஜி (43), தனது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்திராணி முகர்ஜி மற்றும் சித்தார்த்தா தாஸ் உள்ளிட்டோருக்கு பிறந்ததாக கூறப்படும் ஷீனா போராவை அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, நிதி பிரச்சனை காரணமாக கொலை செய்துள்ளார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, இந்திராணி முகர்ஜியுடன் சேர்த்து அவரது இரண்டாவது கணவர் என்று கூறப்படும் சஞ்சீவ் கண்ணா, கார் ஓட்டுனர் ஷியாம்வர் ராய் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது மும்பை பைகுல்லா சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, கடந்த மாதம் இந்திராணி முகர்ஜி ஜாமீன் கேட்டு சி.பி.ஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தனது மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது. #SheenaBoraMurderCase #IndraniMukerjea #CBICourt