என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bhagavathi amman"

    • அம்மனுக்கு விசேஷ பூஜைகள் மற்றும் அருள்வாக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    கூடலூர் சுற்றுவட்டார கிராமங்களில் ஆதிவாசி மற்றும் மவுண்டாடன்செட்டி சமூகத்தினர் கணிசமாக வசித்து வருகின்றனர். அவர்கள் வாழை, பாக்கு, தென்னை, நெல் மற்றும் காய்கறி விவசாயத்தில் ஆண்டு முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது நிலத்தில் விளைந்த பொருட்களை குலதெய்வ கோவில்களில் படைத்து வழிபடுவதை வழக்கமாக கடைபிடித்து வருகின்றனர்.

    நடப்பாண்டில் கடந்த மாதம் 27-ந் தேதி கூடலூர் புத்தூர்வயலில் புத்தரி எனும் நெல் அறுவடை திருவிழாவை கொண்டாடினர். இதற்காக விரதம் இருந்து வயலில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து தங்களது பாரம்பரிய பழமையான கோவில்களில் வைத்து வழிபட்டனர். அதன் பின்னரே சுற்று வட்டார கிராமப்புறங்களில் விளைந்த நெற்கதிர்களை விவசாயிகள் அறுவடை செய்து கோவில்களில் வைத்து வழிபடுகின்றனர்.

    கூடலூர் தாலுகா பாடந்தொரை அருகே தைத மட்டம் கிராமத்தில் தங்களது நிலத்தில் விளைந்த நெற்கதிர்களை விவசாயிகள் அறுவடை செய்தனர். பின்னர் செண்டை மேளம் முழங்க நெற்கதிர்களை ஊர்வலமாக எடுத்து வந்து தரவாடு பகவதி அம்மன் கோவிலில் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு விசேஷ பூஜைகள் மற்றும் அருள்வாக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டனர். பின்னர் நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறும்போது, நெல் மட்டுமின்றி வாழைத்தார்கள் அறுவடை செய்யும்போது கடவுளுக்கு படையல் செய்வது வழக்கம். விளைபொருட்களை அறுவடை செய்யும் போது குலதெய்வ கோவில்களில் வைத்து வழிபட்டால் விவசாயம் செழித்து மக்கள் வளமுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம். இதனால் ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் சார்ந்த விழாக்கள் நடத்தப்படுகிறது என்றனர்.

    • இன்று மாலை 4 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது.
    • இன்று மாலை 5.27 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்ம னை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம்.

    அதேபோல மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும். இந்த நிலையில் இன்று மாலை 5.27 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த சந்திரகிரகண நேரத்தில் கோவில்களில் மூலஸ்தானகருவறையில் கிரகணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக கோவில் நடை அடைக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று மாலை 4 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுவதற்கு பதிலாக 3¾ மணி நேரம் தாமதமாக இரவு 7.45 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சந்திர கிரகண நேரத்தில் கிரகணத்தினுடைய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பகவதி அம்மன் விக்ரக சிலையைசுற்றி தர்ப்பை புல்லால் கட்டி பட்டு துணி யால் மூடி வைக்கப்படுகிறது.

    சந்திர கிரகணம் முடிந்த பிறகு கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு பகவதி அம்மன் விக்ரக சிலைக்கு அபிஷேகம் நடத்தி கோவில் நடை திறக்க ப்படுகிறது. அதன் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    • அம்மன் ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்த நிலையில் உள்ளார்.
    • அம்மன் 5 முகங்களைக் கொண்டவள்.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. கடற்கரையோரமாக அமைந்துள்ள இந்த கோவில் தென்னந்தோப்புகள், மரங்கள் நிறைந்த தோட்டங்கள், வயல்வெளிகளுக்கு மத்தியில் இயற்கை எழில் சூழ்ந்து, அழகுற காட்சி அளிக்கிறது. இந்த ஊரின் பெயரைக் குறித்த விளக்கம் கோவிலுடன் தொடர்புடையதாக உள்ளது. மணல்+தைக்காடு=மண்டைக்காடு ஆனது என்றும் மந்தைகள்+ காடு= மந்தைக்காடு என்பது மருவி மண்டைக்காடு ஆனது என்றும் கூறப்படுகிறது.

    புற்று வடிவில் அம்மன்

    இந்த கோவிலில் பகவதி அம்மன் வடக்கு முகமாக புற்று வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அம்மன் ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்த நிலையில் உள்ளார். சுமார் 15 அடி உயரம் கொண்ட பெரிய மண் புற்றே இங்கு அம்மனாக வணங்கப்படுகிறது. அம்மன் 5 முகங்களைக் கொண்டவள். புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தரும் அம்மனுக்கு முன்பாக, வெள்ளி சிலையாக அமர்ந்த கோலத்திலும், வெண்கல சிலையாக நின்ற கோலத்திலும் பகவதி அம்மன் காட்சி தருகிறார். மேலும் கோவில் வளாகத்தில் பிரசன்ன விநாயகர் சன்னதியும், பைரவர், கடல் நாகர் (கடலில் இருந்து கிடைத்த கடல் நாகர் சிலை) சன்னதிகளும் உள்ளன.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் எந்த ஆண்டு உருவானது என்பதற்கு சரியான சான்றுகள் இல்லை. மண்டைக்காடு காடாக இருந்த போது ஒரு சித்தர் இங்கு வந்தார். அந்த இடத்தில் தெய்வ ஒளி பரவியதைக் கண்டு அங்கே அமர்ந்தார். ஒரு இடத்தில் ஸ்ரீசக்கரம் வரைந்து தியானம் செய்தார். ஒரு நாள் அவர் மாயமாய் மறைந்து விட்டார்.

    சித்தர் ஸ்ரீசக்கரம் வரைந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் மண்டைக்காடு ஊர் சிறுவர்கள், கால்நடைகளை காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்கள். அப்படி ஒருநாள் கால்நடைகளை அழைத்துச் சென்ற சிறுவர்கள் பனங்காயை தூக்கிப்போட்டு கம்பால் அடித்து விளையாடியுள்ளனர். அப்படி அடித்த பனங்காய் ஒன்று அந்த பகுதியில் இருந்த புற்று மீது விழுந்தது. அதனால் புற்று உடைந்து அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள், ஊர் மக்களிடம் கூறினர். புற்று இருந்த இடத்துக்கு ஓடி வந்த ஊர் மக்கள் அப்படியே திகைத்து நின்றனர். அப்போது ஒருவர் சாமி ஆடி குறி சொல்லியிருக்கிறார். இந்த புற்று, தேவி பத்திரகாளி என்றும், பூஜைகள் செய்து வழிபட்டால் வேண்டிய நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் புற்றின் உடைந்த பகுதியில் சந்தனம் பூசினால் ரத்தம் வருவது நிற்கும் என்றும் அந்த நபர் கூறினார். அதன்படி சந்தனம் அரைத்து புற்றின் மீது பூசியிருக்கிறார்கள். உடனே ரத்தம் வருவது நின்றது என்றும் கூறப்படுகிறது.

    கேரள பக்தர்கள்

    இதேபோல் கேரள மாநிலம் கொல்லம் நகரில் இருந்து பெண் யோகினி மண்டைக்காடு வந்ததாகவும், அந்தப் பெண் கடற்கரையில் தவம் இருந்த இடத்தில் புற்று வளர்ந்ததாகவும், அதுவே பிற்காலத்தில் பகவதி தேவியாக வழிபாட்டுக்குரியதானதாகவும் கூறப்படுகிறது. எனவே யோகினியின் பக்தர்கள் இப்போதும் கொல்லத்தில் இருந்து மண்டைக்காடு கோவிலுக்கு வருகிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

    கேரளத்தில் இருந்து குமரி மாவட்டம் பிரிந்த காலகட்டத்தில் தமிழக அரசால் இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு கொடிமரமும் நடப்பட்டது. தற்போது தாமிரத்தகடு பொதியப்பட்ட நிரந்தர கொடிமரம் உள்ளது. இந்த கோவிலின் கருவறை, நமஸ்கார மண்டபம் அல்லது பஜனை மண்டபம் அனைத்தும் கேரள பாணியில் ஓடுகளால் வேயப்பட்ட மேற்கூரையால் ஆனது. கருவறையில் புற்று வடிவில் காட்சி தரும் அம்மனுக்கு 1909-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 30 முதல் 40 துலாம் அரைத்த சந்தனம் பூசப்படுகிறது. வடக்குத் திருமுகம் வெள்ளியிலானது. வெள்ளி மகுடமும் உண்டு. அர்ச்சனா படிமமும், விழாப்படிமும் கருவறையில் உள்ளன.

    மாசி கொடை விழா

    இந்த கோவிலின் நேர்ச்சைகளாக வில்லுப்பாட்டு, மரம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட கை, கால் உறுப்பு காணிக்கை, வெடி வழிபாடு, முத்தப்பம், மண்டையப்பம், பொங்கல், கைவிளக்கு, பூமாலை, குத்தியோட்டம், கறுப்பு வளையல், விளைச்சலில் முதல் பொருள் ஆகியன உள்ளன. வில்லிசைக்கலை என்ற கிராமியக் கலைநிகழ்ச்சி பாடுமாறு நேர்ந்து கொள்ளுதல் இந்த கோவிலின் சிறப்பு. காணிக்கை கொடுப்பவரின் ஊரில் இருந்து மண்டைக்காடு வரையுள்ள இடங்களை பாடுவது இதன் சிறப்பு.

    முள்முருங்கை போன்ற மரங்களில் செய்யப்பட்ட சாயம் பூசப்பட்ட கை- கால் உறுப்புகளை வாங்கி கோவில் தட்டுப்பந்தலில் எறிவது மற்றொரு நேர்ச்சை. 27 நெய் தீபம் ஏற்றி அம்மன் சன்னதியை வலம் வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தலைநோய் தீர அம்மனுக்கு மண்டையப்பமும், அம்மை நோய் வராமலோ, வந்தால் குணமாகவும் முத்தப்பமும் நேர்ச்சையாக படைத்து வழிபடுகின்றனர். இவை தவிர வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் முதலியவையும் நைவேத்தியமாக கொடுக்கப்படுகிறது. எடைக்கு எடை துலாபாரம் வழங்குவதும் இந்த கோவிலின் கூடுதல் சிறப்பாகும்.

    கோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் நடைபெறும் கொடை விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த கோவிலில் திதி அல்லது நட்சத்திரம் அடிப்படையில் அல்லாமல் கிழமையை அடிப்படையாகக் கொண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். மாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமைகளில் விழா நிறைவடையும் வகையில் 10 தினங்களுக்கு முன் கொடி ஏற்றுவிழா தொடங்கும். 6-ம் நாள் விழாவான வெள்ளிக்கிழமை அன்று வலிய படுக்கை பூஜை என்ற சிறப்பு பூஜை நள்ளிரவு 12 மணிக்கு நடக்கும்.

    இந்த பூஜையில் திரளி கொழுக்கட்டை, அவல், பொரி, முந்திரி, கற்கண்டு, 13 வகை வாழைப்பழங்கள், இளநீர், பிற பழவகைகள் ஆகியவை அம்மனுக்கு முன் குவியலாக படைக்கப்பட்டு அவற்றின் மேல் தீப்பந்தங்கள் வைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும். 9-ம் நாள் திருவிழா அன்று பெரிய சக்கர தீவட்டி நடைபெறும். 10-ம் நாள் திருவிழாவன்று ஒடுக்கு பூஜை நடைபெறும். இதில் சாஸ்தா கோவிலில் தயாரிக்கப்பட்ட பருப்பு உள்பட 11 வகை கறி, குழம்புகள், சாதம் ஆகியவற்றை தலையில் சுமந்து வந்து கோவிலின் கருவறையில் வைப்பார்கள். நள்ளிரவு 1 மணிக்கு பூஜை நடைபெறும். இவற்றை தயாரிக்கும் முறை, கொண்டு வருதல் ஆகியவற்றின் மரபுவழி முறை இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.

    பெண்களின் சபரிமலை

    சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் விரதமிருந்து, இருமுடிகட்டி செல்வதைப்போல, மாசிக்கொடை விழாவுக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களால் முடிந்த அளவு விரதமிருந்து இருமுடிகட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வருவார்கள். இதனால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. ஆவணி மாதம் அஸ்வதி நட்சத்திரம் அன்று நடைபெறும் பொங்கல் விழாவும் இந்த கோவிலின் சிறப்பு நிகழ்வாகும். இதில் கோவிலின் முன்பு 4 திசைகளிலும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.

    பங்குனி மாதத்தில் பரணி நட்சத்திர கொடை விழா அன்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளியன்றும் வலிய படுக்கை பூஜை நடைபெறும். திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த கோவிலில் பரணி நட்சத்திரம் தோறும் தங்கத்தேரில் அம்மன் பவனி வருவார். பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற ரூ.1,500 கட்டணம் செலுத்தி தங்கத்தேர் இழுக்க அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு கட்டணம் செலுத்துபவர்களுக்கு பிரசாதம், அர்ச்சனைத்தட்டு, சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படும்.

    கோவிலில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, மதியம் 12.30 மணிக்கு உச்சகால பூஜை நடத்தப்பட்டு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8 மணிக்கு அத்தாள பூஜை நடத்தி நடை சார்த்தப்படும்.

    • இந்த கோவிலின் மாசிக்கொடை விழா தான் சிறப்பு.
    • திருவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. கடற்கரையோரமாக அமைந்துள்ள இந்த கோவில் தென்னந்தோப்புகள், மரங்கள் நிறைந்த தோட்டங்கள், வயல்வெளிகளுக்கு மத்தியில் இயற்கை எழில் சூழ்ந்து, அழகுற காட்சி அளிக்கிறது. இந்த ஊரின் பெயரைக் குறித்த விளக்கம் கோவிலுடன் தொடர்புடையதாக உள்ளது. மணல்+தைக்காடு=மண்டைக்காடு ஆனது என்றும் மந்தைகள்+ காடு= மந்தைக்காடு என்பது மருவி மண்டைக்காடு ஆனது என்றும் கூறப்படுகிறது.

    இந்த கோவிலில் நடந்த தீ விபத்தில் சேதம் அடைந்த ஓடுகளால் ஆன மேற்கூரை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியும், இன்னும் பல பணிகளும் தற்போது ரூ.1 கோடிக்கு மேல் நடந்து வருகிறது.

    இந்த பணிகள் நிறைவடைந்ததும் வருகிற தை மாதம் கலசாபிஷேகம் நடத்த திட்டமிட்டு குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி வினிஷ் குருக்கள் (வயது 36) கூறியதாவது:-

    இந்த கோவிலில் எங்கள் குடும்பத்தினர் தான் பரம்பரை, பரம்பரையாக பூஜை செய்து வருகிறோம். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் புற்று வடிவில் உள்ளது. புற்று வடிவான அம்மன் ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்துள்ளார். பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் இந்த கோவிலின் மாசிக்கொடை விழா தான் சிறப்பு. அம்மனை நினைத்து வேண்டினால் என்ன வேண்டுதல் வைத்தாலும் நிறைவேறும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    கை, கால் முடக்கம் போன்ற பிரச்சினைகளுக்கும் அம்மனை வேண்டினால் தீர்வு கிடைக்கும். தீ விபத்து சம்பவத்தின் காரணமாக அம்மன் கருவறை மேற்கூரை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. பிரசன்னம் பார்த்ததில் அம்மனுக்கு எந்த குறையும் இல்லை என்றும், அம்மனின் புகழ் உலகம் முழுவதும் பரவுவதற்காகவும், தன்னை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த தீ விபத்து நடந்துள்ளது என தெரிய வந்தது. எனது முன்னோர்கள் காலத்தில் இந்த கோவிலின் புற்று வளர்ந்து மேற்கூரையை தட்டும்போது அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்களின் கனவில் அம்மன் தோன்றி எனது தலை தட்டுவதால் கோவில் மேற்கூரையை மாற்றித்தருமாறு கூறியதாக தெரிவித்திருக்கிறார்கள் என்றார்.

    கருங்கல் அருகே உள்ள தொழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பெண் பக்தர் பத்மலதா (வயது 55) கூறியதாவது:-

    நான் இந்த கோவிலுக்கு சிறுவயதில் இருந்தே வந்து வழிபாடு செய்கிறேன். வருடந்தோறும் பொங்கல் வழிபாட்டில் கலந்து கொள்வேன். கடந்த ஆவணி அஸ்வதி பொங்கல் விழாவில் பங்கேற்று பொங்கலிட்டேன். திருவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். எனக்கும் பல்வேறு காரியங்கள் நடந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது திருப்பணிகள் நடந்து வருவது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பணிகள் முடிந்து விரைவில் கலசாபிஷேகம் நடைபெற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கன்னியாகுமரியில் சபரிமலை ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.
    • வருகிற 17-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக தினமும் அதிகாலை4.30மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல தினமும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக வருகிற 16-ந்தேதி திறக்கப்படுகிறது. அன்று முதல் தமிழ்நாடு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டு கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் கன்னியாகுமரிக்கு வந்து முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை வழிபடுவது வழக்கம்.

    இதனால் அன்று முதல் கன்னியாகுமரியில் சபரிமலை ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க கோவிலின் நடை திறக்கும் நேரத்தை நீட்டிக்க குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

    அதன்படி வருகிற 17-ந்தேதி முதல் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசனையொட்டி பக்தர்களின் தரிசனத்துக்கு வசதியாக பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படும் நடை மதியம் 1 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. அதேபோல இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப்படுகிறது.

    • பெண்களின் சபரிமலை என்று இந்த கோவில் அழைக்கப்படுகிறது.
    • 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது

    கேரளாவில் ஆலப்புழை மாவட்டம் திருவல்லாவை அடுத்த நீரேற்றுபுரத்தில் புகழ்பெற்ற சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் உள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது எனவும், பெண்களின் சபரிமலை எனவும் இந்த கோவில் அழைக்கப்படுகிறது.

    பம்பை ஆறும், மணிமலை ஆறும் இருபுறமும் பெருக்கெடுத்து ஓட, இயற்கை வளம் சூழ்ந்த பிரதேசத்தின் நடுவில் இக்கோவில் அமைந்திருக்கிறது. எட்டு கரங்களுடன் கருணை மழை பொழியும் அருள் முகத்துடன் தேவி சர்வேஸ்வரியும், அன்ன பூரணியும் அருள்பாலிக்கிறார்கள். சக்குளத்துக்காவு பகவதியின் அருளைப் பெற பெண்கள் விரதம் இருந்து புண்ணிய சுமையாக இருமுடி கட்டி வந்து சக்குளத்துகாவு பகவதி அம்மனை தரிசிக்க வருகிறார்கள்.

    பொங்கலிடும் பெண்கள்

    சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி செல்வது போல் இந்த கோவிலுக்கு பெண்கள் வருகிறார்கள். அதே போல சபரிமலைக்கு செல்லும் வழியில் அய்யப்ப பக்தர்களும் சக்குளத்துக்காவு அம்மனை தரிசனம் செய்கின்றனர்.

    இங்கு கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை அன்று அம்மனின் இஷ்ட நிவேத்யமான பொங்கல் வைத்து பக்தர்கள் அருளை பெறுகிறார்கள். இந்த நாளில் சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் மைதானங்களிலும் இரு புறங்களிலும் திரண்டு புதிய மண் பானைகளில் ஒரே நேரத்தில் பொங்கலிடுவார்கள்.

    மிகவும் பிரபலமானது

    கோவில் முன்புறம் வைக்கப்படும் பண்டார அடுப்பில் முக்கிய காரியதரிசி ராதாகிருஷ்ணன் நம்பூதிரி சுப முகூர்த்த வேளையில் தீ மூட்டி பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைப்பார். அதைத் தொடர்ந்து பெண்கள் தாங்கள் அமைத்துள்ள அடுப்பில் தீயை மூட்டி பொங்கலிடுவார்கள். இந்த பொங்கல் வழிபாடு கேரளாவில் மிகவும் பிரபலமானதாகும்.

    கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்த பிறகு நல்ல நிலையில் இருப்பவர்களும், வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருப்பவர்களும் பொங்கல் விழா நடைபெறும் நாளில் குடும்ப சகிதமாக இங்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருக்கார்த்திகை அன்று இங்கு சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதன் மூலம் தீமைகள் அகன்று வாழ்வில் நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம்.

    பெண்களுக்கு பாத பூஜை

    மேலும் இங்கு நடைபெறும் பெண்களுக்கான பாதபூஜையும் (நாரி பூஜை) மிக சிறப்பு வாய்ந்தது. அதாவது பெண்களை பீடத்தில் அமரச் செய்து அம்மனாக பாவித்து அவர்களின் பாதத்தை தலைமை பூசாரி தனது கைகளால் கழுவி அவர்களுக்கு பூஜைகள் செய்து வணங்குவார்கள். எங்கெல்லாம் பெண்கள் ஆராதிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒரு பெண்ணிற்கு முதல் மரியாதை கொடுக்கப்பட்ட பிறகு ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பாத பூஜை நடத்தப்படும். 2022-ம் ஆண்டின் நாரி பூஜை அடுத்த மாதம் 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனின் சகோதரி கே.ஆர்.கவுரி அம்மாள், நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், கேரள முன்னாள் முதல்-மந்திரி கே.கருணாகரனின் மகள் பத்மஜா ஆகியோருக்கு கடந்த ஆண்டுகளில் பாத பூஜை நடத்தப்பட்டுள்ளது.

    ஒரு லட்சம் கலச அபிஷேகம்

    டிசம்பர் 27-ந் தேதி மண்டல பூஜை நாளில் குழந்தைகளின் ஆயுள், ஆரோக்கியம் பெருகவும், நன்கு படிப்பதற்கும் வித்யாகலசம், திருமண பாக்கியம் கிடைக்க மாங்கல்ய கலச பூஜை ஆகியவை நடைபெறும். அன்றைய தினம் ஒரு லட்சம் கலசங்களில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரே நாளில் இவ்வளவு கலசங்களில் அபிஷேகம் செய்யப்படுவது வேறு எங்கும் நடைபெறுவதில்லை. அன்றைய தினத்தில் தங்கத் தேரில் திருவாபரணங்கள் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சார்த்தப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்படும்.

    வெள்ளிக்கிழமை விசேஷம்

    இங்கு தமிழ் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மிக முக்கிய நாளாகும். வெள்ளிக்கிழமை அன்று பல மூலிகைகள் கொண்டு தீர்த்தம் தயாரிக்கப் பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்ததும் அந்த தீர்த்தத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அதை குடித்தால் பலவித நோய்கள் தீர்ந்து விடுகிறது என்பது நம்பிக்கை. மேலும் மது குடிப்பவர்களும், போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களும் இந்த கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று அழைத்து வரப்படுகிறார்கள். தலைமை பூசாரி மந்திரங்களை உச்சரிக்க வைத்து வெற்றிலை, மிளகு பிரசாதத்தை சாப்பிட வைத்து, அம்மனின் வாளைத் தொட்டு சத்தியமும் வாங்கப்படுகிறது. அதன்பிறகு மது குடிப்பவர்கள் குடியை நிறுத்துகிறார்கள் என நம்பப்படுகிறது. மேலும் சத்தியத்தை மீறுபவர்களுக்கு உடனடியாக தண்டனை கிடைக்கிறதாம். இங்கு பார்க்கப்படும் ஜோதிட பிரசன்னமும் புகழ்பெற்றது.

    சிறப்பு பஸ்கள் இயக்கம்

    கேரளாவின் பல பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் நேரடியாக கோவிலுக்கு தினசரி இயக்கப்படுகிறது. திருவல்லா ரெயில் நிலையத்தில் இருந்து தகழி சாலையில் 10 கி.மீ. தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கோட்டயம், சங்கனாச்சேரி, ஆலப்புழை, செங்கன்னூர் ஆகிய இடங்களில் இருந்து செல்வதற்கு சாலை வசதி உள்ளது. சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலின் சார்பாக ஏழை, எளிய மக்களுக்கு உதவிட மக்கள் சேவை சங்கம் செயல்பட்டு வருகிறது.

    இது கேரளாவில் முக்கிய ஊர்கள் மட்டுமின்றி புதுடெல்லி, மும்பை, பெங்களூருவிலும் இதன் கிளைகள் இயங்கி வருகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம், தேனி மாவட்டம் சின்னமானூரிலும் இந்த மக்கள் சேவை மையம் அமைந்துள்ளது.

    • டிசம்பர் 16-ந் தேதி நாரி பூஜை நடைபெறும்.
    • 27-ந் தேதி திரு ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

    சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் பொங்கல் வழிபாடு சிறப்பானதாகும். இந்த ஆண்டின் பொங்கல் வழிபாடு குறித்து கோவிலில் முக்கிய பூசாரி ராதாகிருஷ்ணன் நம்பூதிரி கூறியதாவது:-

    நடப்பாண்டின் பொங்கல் வழிபாட்டு திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் சிறப்பு பூஜைகள் நடைபெறும். காலை 10.30 மணிக்கு பொங்கல் வழிபாடு ஆரம்பமாகும். அதை தொடர்ந்து நிவேத்தியம் மற்றும் பிரசாத வினியோகம் நடைபெறும். மதியம் 12.30 மணிக்கு உச்ச தீபாராதனை, மற்றும் அபிஷேகம், 6.30 மணிக்கு திருக்கார்த்திகை விளக்கு மற்றும் சொக்கப்பனை கொளுத்துதல் நடைபெறும்.

    டிசம்பர் 16-ந் தேதி நாரி பூஜை நடைபெறும். அன்று முதல் 27-ந் தேதி வரை 12 நோன்பு திருவிழா நடைபெறும் இந்த நாட்களில் பெண் பக்தர்கள் விரதம் இருந்து இரு முடி கட்டி வந்து அம்மனை வழிபடுவார்கள். டிசம்பர் 26-ந் தேதி கலச பூஜை மற்றும் திருவாபரண ஊர்வலம் நடைபெறும். 27-ந் தேதி திரு ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அம்மன் பாதத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது. காலை 10 மணிக்கு அபிஷேகமும், அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு உச்சிகால பூஜையும், உச்சிகால தீபாராதனை, மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு கோவில் மேல்சாந்தி மேளதாளத்துடன் தனிப்படகில் சென்று விவேகானந்தர் பாறையில் அமைந்துள்ள அம்மன் பாதத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    பின்னர் மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி மேளதாளம் முழங்க வீதி உலா வரும் நிகழ்ச்சியும், 9 மணிக்கு கன்னியாகுமரி சன்னதி தெருவில் பனை ஓலைகளால் வேயப்பட்ட சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து வருடத்தில் 5 முறை மட்டுமே திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    • 26-ந் தேதி கலச பூஜை மற்றும் திருவாபரண ஊர்வலம் நடைபெறுகிறது.
    • 27-ந் தேதி திரு ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

    கேரள மாநிலம் திருவல்லாவை அடுத்து ஆலப்புழை, பத்தனம்திட்டை மாவட்டங்களின் எல்லையில் நீரேற்றுபுரத்தில் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு இந்த ஆண்டுக்கான பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று பொங்கல் வழிபாடு நடந்தது.

    இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நிர்மால்ய தரிசனம் தொடர்ந்து கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. 10.30 மணிக்கு கோவில் முன் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பிரதான அடுப்பில் முக்கிய காரியதரிசி ராதாகிருஷ்ணன் நம்பூதிரி தீ மூட்டி பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கோவில் வளாகம் மற்றும் கோவிலை சுற்றி 20 கிமீ சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். பின்னர் பகல் 11.30 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் நிவேத்தியம் செய்யப்பட்டது.

    பொங்கல் விழாவின் தொடர்ச்சியாக சக்குளத்துகாவு பகவதி அம்மன் கோவிலில் இம்மாதம் 16-ந் தேதி நாரி பூஜை நடைபெறுகிறது. அன்று முதல் 27-ந் தேதி வரை நோன்பு திருவிழா நடைபெறுகிறது. இந்த நாட்களில் பெண் பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவார்கள். 26-ந் தேதி கலச பூஜை மற்றும் திருவாபரண ஊர்வலம் நடைபெறுகிறது. 27-ந் தேதி திரு ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • வலிய படுக்கை பூஜை ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும்.
    • பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் வலிய படுக்கை பூஜை முக்கியமானது. இது ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும். மாசிக்கொடை விழாவில் ஆறாம் நாள், அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்த பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையன்றும் நடைபெறும்.

    நாளை கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் நள்ளிரவு வலியபடுக்கை பூஜை நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்குநடை திறப்பு, உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, பிற்பகல் 12 மணிக்கு உச்சபூஜை, தொடர்ந்து அன்னதானம், மாலை 5 மணிக்கு பஜனை, சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு நாதஸ்வரம், அத்தாழபூஜை, அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலிய படுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அன்றைய தினம் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • இந்த விழா 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 15-ந்தேதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    முன்சிறை பகவதி அம்மன் கோவில் கார்த்திகை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 10 நாட்கள் நடைபெறுகிறது. நேற்று மாலையில் திருவிளக்கு பூஜை, கணபதி ஹோமம், பஜனை ஆகியவை நடந்தது.

    14-ந்தேதி காலையில் கணபதி ஹோமம், உஷ பூஜை, கலச பூஜை, இரவு பகவதி அம்மன் யானை மீது எழுந்தருள செய்தல் மற்றும் பரிவேட்டை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. 15-ந்தேதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அன்று கொடி இறக்கப்படுகிறது.

    • அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.
    • பக்தர்கள் அம்மனுக்கு திருக்கண் சாத்தி வழிபட்டனர்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று வலியபடுக்கை பூஜை நடந்தது.

    இதையொட்டி நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, அன்னதானம் நடந்தது. மாலையில் பஜனை, சாயரட்சை தீபாராதனை, நாதஸ்வரம், அத்தாழபூஜை ஆகியவை நடைபெற்றது.

    இரவு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் அம்மனுக்கு திருக்கண் சாத்தி வழிபட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகாபூஜை நடந்தது.

    இந்த பூஜை மாசி திருவிழாவின் ஆறாம் நாள் விழாவின் போதும், மீனபரணி கொடை விழாவன்றும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    வலியபடுக்கை மகா பூஜையின் போது அம்மனை மலர்களால் அலங்கரித்து இருந்தனர். அம்மனுக்கு அவல், பொரி, தேன், கற்கண்டு, முந்திரி, சர்க்கரை, பச்சரிசி, தேங்காய், பழ வகைகள், இளநீர், பாயாசம், கரும்பு, அப்பம் போன்ற உணவு பதார்த்தங்களும் படைக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். வலியபடுக்கை பூஜையை காண கேரளாவில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்திருந்தனர்.

    ×