என் மலர்
நீங்கள் தேடியது "blast"
- அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டு வெடித்துள்ளது
- சமீபத்தில் கல்வி நிலையத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 53 பேர் கொல்லப்பட்டனர்
காபூல்:
ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்துறை அமைச்சக வளாகத்தில் உள்ள மசூதியில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்துள்ளனர்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை ஆளும் தலிபான் அமைப்பு உறுதி செய்தது. அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் அந்த மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டு வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்காலம் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் மக்களை கடும் பீதியில் ஆழ்த்தி உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் கல்வி நிலையத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 53 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- உதம்பூர் நகரில் சில மணி நேரங்களுக்குள் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவம் இதுவாகும்.
- வாகனம் பலத்த சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளன.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உதம்பூர் நகரில் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் இன்று காலை குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
உதம்பூர் நகரில் சில மணி நேரங்களுக்குள் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவம் இதுவாகும். நேற்று இரவு டோமெயில் சௌக்கில் உள்ள பெட்ரோல் பம்ப் அருகே நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் இருவர் காயமடைந்தனர்.
இன்று அதிகாலை 5.40 மணியளவில் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், வாகனம் பலத்த சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளன.
- விபத்து குறித்து நிபுணர்களைக் கொண்டு விசாரணை நடத்த உத்தர பிரதேச அரசு உத்தரவு.
- தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹாபூர்:
உத்தர பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் திடீரென வெடித்ததால் அந்த பகுதி முழுவதும் தீப்பிடித்தது. உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்பு பணியில் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியே கரும்புகையாக காட்சி அளித்தது.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து அறிந்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளையும் வழங்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், விபத்து குறித்து நிபுணர்களைக் கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் யோகி ஆதித்யநாத் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஹாபூர் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹாபூர் ரசாயன தொழிற்சாலை விபத்து நெஞ்சை பதற வைக்கிறது, இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்றும் பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஹாபூர்:
உத்தரப் பிரதசே மாநிலம் ஹாபூரில் மின்னணு பொருட்கள் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெடிவிபத்தில் ஏற்பட்ட தீயில் தடுகாயமடைந்த மேலும் 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்.. காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை- துப்பாக்கிகள் பறிமுதல்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் எல்லைக்கோட்டு பகுதியில் உள்ள மெந்தர் பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினர் இன்று கண்காணிப்பு மற்றும் ரோந்துசார்ந்த பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
காலை சுமார் 9.30 மணியளவில் அப்பகுதியில் திடீரென்று சக்திவாய்ந்த குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்ததனர். படுகாயமடைந்த இருவர் அருகாமையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவனந்தபுரம்:
இலங்கையில் கடந்த 21-ந்தேதி தேசிய தவ்ஹீத் ஜமாத் பங்கரவாதிகள் உதவியுடன் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தற்கொலை தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர்.
இதே போன்று மீண்டும் ஒரு தற்கொலை தாக்குதலை நடத்த இலங்கையில் சிலர் முயற்சி செய்வதாக நேற்று பரபரப்பு தகவல் வெளியானது. ராணுவ உடையில் ஊடுருவி இந்த தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.
இலங்கையில் நாசவேலை செய்த பயங்கரவாதிகளுக்கு வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளாவில் உள்ளவர்களுடன் தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள் தொடர்பில் உள்ளனர் என்பதை தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) கண்டு பிடித்தது.
இதைத் தொடர்ந்து இலங்கையில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர்களுக்கு, தமிழ்நாடு, கேரளாவில் உள்ள யாரேனும் உதவி செய்தார்களா? என்ற விசாரணை நடந்தது. அப்போது இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவன், சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்கு வந்து சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து இந்தியா முழுவதும் உஷார்படுத்தப்பட்டது. தென் மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பின் தலைவனாக செயல்பட்ட ஜக்ரான் ஹசீம் கொழும்பில் நட்சத்திர ஓட்டலில் மனித வெடிகுண்டாக மாறி தற்கொலை தாக்குதல் நடத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவன்தான் தமிழகத்திலும், கேரளாவிலும் பலருடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஆதரித்து இவன் பேசும் உணர்ச்சிமயமான பேச்சுகள், கேட்பவர்களை மனித வெடி குண்டாக மாற்றும் சக்தி படைத்தவை.
அத்தகைய அவனது பேச்சை கோவையிலும், கேரளாவிலும் பலர் இணையத்தளம் மற்றும் பெண் டிரைவ் மூலம் பார்த்து இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக கேரளாவில் பாலக்காட்டைச் சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் என்பவனும், காசர்கோட்டைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக், அகமது அராபத் ஆகியோரும் ஜக்ரான் ஹசீம் பேச்சை கேட்டு பயங்கரவாதிகளாக மாறி இருப்பது தேசிய புலனாய்வு அமைப்பின் தொடர் கண்காணிப்பு மூலம் தெரிய வந்தது.
ரியாஸ் அபுபக்கர், அபுபக்கர் சித்திக், அகமது அராபாத் மூவரும் ஜக்ரான் ஹசீமுக்கு உதவிகள் செய்து இருப்பார்கள் என்ற சந்தேகம் தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு வலுத்தது. இதனால் பாலக்காடு, காசர் கோட்டில் உள்ள அவர்களது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. பிறகு மூன்று பேரும் கொச்சியில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரிக்கப்பட்டனர்.
அப்போது பாலக்காடு ரியாஸ், ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் மிக, மிக நெருங்கிய தொடர்பில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிரியாவில் உள்ள முக்கிய ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் அவன் ஆன்லைன் மூலம் தினமும் பேசி வந்ததும் தெரிய வந்தது.
தலைமறைவு பயங்கரவாதிகளான அப்துல் ரஷீத், அப்துல்லா, அப்துல் கயாம் ஆகியோருடனும் ரியாஸ் அடிக்கடி பேசி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவனை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.
29 வயதான ரியாஸ் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதி ஜக்ரான் ஹசீம் பேச்சுக்களை கேட்டு வந்ததாகவும், அந்த பேச்சின் அடிப்படையில் கேரளாவில் மனித வெடிகுண்டாக மாறி தற்கொலை தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கேரளாவில் உள்ள முக்கிய நகரில் அவன் தற்கொலை தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருந்ததை ஒப்புக் கொண்டான்.
அவனிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று (செவ்வாய்க்கிழமை) மூன்றாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையில் கேரளாவில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருக்கும் மேலும் சிலர் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாம்.
அந்த தகவல்களின் அடிப்படையில் அதிரடி சோதனை நடத்தி அந்த பயங்கரவாதிகளையும் வேட்டையாட தேசிய புலனாய்வு அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே காசர்கோட்டைச் சேர்ந்த அபுபக் கர் சித்திக், அகமது அராபத் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இலங்கை பயங்கரவாதிகளுக்கு கேரளா வழியாக உதவிகள் சென்றதா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. #SriLankabombings #colomboblasts
கொழும்பு:
இலங்கையில் கடந்த 21-ந்தேதி ஈஸ்டர் தினத்தன்று பயங்கரவாதிகள் தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த தாக்குதல் 8 இடங்களில் நடத்தப்பட்டது. இதில் 253 பேர் உயிர் இழந்தனர். 500 பேர் காயம் அடைந்தனர்.
தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவு பெற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புதான் காரணம் என்பது தெரிய வந்தது. அந்த இயக்கத்தினரை வேட்டையாடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இலங்கையில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக இந்தியா தகவல் தெரிவித்து இருந்தும், இலங்கை அரசு அதை அலட்சியப் படுத்தியதால்தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இது சம்பந்தமாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இலங்கை தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் மீது இப்போது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் தடுக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற் கொண்டு இருக்கிறோம்.
இந்த தாக்குதலை தடுக்காமல் விட்டதற்காக நாங்கள் பொறுப்பேற்று கொள்கிறோம்.
இலங்கையில் ஒருங்கிணைந்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்த குண்டு வெடிப்பு விஷயத்தில் பல விவகாரங்கள் இருக்கின்றன. தாக்குதல் நடத்தலாம் என இந்திய உளவுத்துறை மூலம் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலை அவர்கள் போலீஸ் மற்றும் தடுப்பு குழுக்களுக்கு அனுப்பி இருக்க வேண்டும். எனக்கும் அது தெரிந்திருக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறு செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் இது தடுக்கப்பட்டு இருக்கும்.
இந்த விஷயத்தை பொறுத்த வரை உரிய அமைப்புகள் ஏன் சரியாக செயல்படவில்லை என்பது தான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது.
இது, பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்டது. இதில் என்ன நடந்தது? என்பது பற்றி விசாரிக்க ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்து இருக்கிறார்.
அதன் முடிவு வந்த பிறகுதான் எதையும் சொல்ல முடியும். எனக்கு முன்கூட்டியே உளவுத்துறையிடம் இருந்து தகவல்கள் எதுவும் வரவில்லை. எனவே, முன்கூட்டி விஷயம் தெரியாததால் இதுபற்றி வேறு எதுவும் சொல்வதற்கில்லை.
தற்போது உளவுத்துறையினர் பல்வேறு தகவல்களை தந்து கொண்டு இருக்கிறார்கள்.
நாட்டின் பாதுகாப்பு குறித்து நானும், ஜனாதிபதியும் மந்திரிசபை கூட்டம் மற்றும் தேசிய கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து இருக்கிறோம்.
எனக்கும், ஜனாதிபதிக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் இது போன்று நடந்ததாக சொல்வதை ஏற்க முடியாது. எனக்கு அவர்கள் தகவல் கொடுத்திருந்தால் நான் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பேன்.
எனக்கு இதில் முதன்மை பொறுப்பு உள்ளது. நான் நாட்டின் தலைவன். எனக்கு உரிய தகவல் வந்திருந்தால் நிச்சயம் இது நடந்திருக்காது.
எல்லாத்துறையும் இதில் ஒருங்கிணைந்து செயல்பட்டு இருந்தால் தாக்குதலை தவிர்த்து இருக்கலாம். அரசு மீது மக்கள் கோபத்தில் இருப்பதை நாங்கள் உணர்ந்து இருக்கிறோம்.
இந்த தாக்குதலுக்கு எங்கள் அரசு எந்திரம் சரியாக செயல்படாமல் இருந்ததுதான் காரணம் என்பதை ஒத்துக்கொள்கிறோம்.
இருந்தாலும் இனி இன ரீதியாக எந்த பாதிப்பும் இல்லாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கிறோம்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பு வழங்குவது எங்களது கடமை. அதை செய்வோம். தற்போது கிறிஸ்தவர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
நாங்கள் அவர்களோடு இருக்கிறோம். கார்டினால்கள் மற்றும் பாதிரியார்களை நாங்கள் சந்தித்து பேசினோம். அவர்களுடன் 3 மணி நேரம் இருந்தோம்.
மேலும் தாக்குதலுக்கு எதிர்விளைவாக தங்கள் மீது தாக்குதல் நடந்து விடுமோ? என முஸ்லிம்களும் பயப்படுகிறார்கள். அவற்றையும் நாங்கள் தடுத்து நிறுத்துவோம்.
இன, மத ரீதியாக பிரச்சினை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இப்போது சிறு தவறு நடந்து விட்டது. இனிமேலும் அவ்வாறு நடக்காது. இந்த பிரச்சினையால் பெரிய அளவில் மோதல் வெடிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
நாட்டின் பாதுகாப்பு திட்டங்கள் மாற்றி அமைத்து சீரமைக்கப்படும் என ஜனாதிபதி கூறி இருக்கிறார். இது சம்பந்தமாக சில திட்டங்களை அவர் முன் வைத்து இருக்கிறார். அது பற்றி நாங்கள் விவாதித்து இருக்கிறோம். சரியான நேரத்தில் அதை அமலுக்கு கொண்டு வருவோம்.
என்னிடம் இருந்த சட்டம்- ஒழுங்கு துறையை நீண்ட காலத்துக்கு முன்பு ஜனாதிபதி எடுத்து தன்னிடம் வைத்துக்கொண்டதுதான் இந்த பிரச்சினைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதை நாங்கள் உணர்ந்து இருக்கிறோம்.
சட்டம்-ஒழுங்கு துறைக்கு தனியாக ஒரு மந்திரி வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதுபற்றி நாங்கள் விவாதித்து வருகிறோம்.
ராஜபக்சே ஆட்சி காலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதில் இப்போது குறைபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறுவதை ஏற்க முடியாது.
நாங்கள் பலவிதமான அரசுகளை கையாண்டு இருக்கிறோம். பல சூழ்நிலைகளை எதிர் கொண்டு இருக்கிறோம். விடுதலைப்புலிகளை ஒழித்து வெற்றி கண்டதற்கு அப்போதைய ராணுவ தளபதி சரத் பொன்சேகாதான் முக்கிய காரணம்.
தற்போது பாதுகாப்பு விஷயத்தில் பெரிய தவறு நடந்து விட்டதாக பலரும் சொல்கிறார்கள். ஆனாலும், மீண்டும் கடுமையான நிலையை நாங்கள் எடுத்து இருக்கிறோம். மிகவும் ஆழமாக ஊடுருவி சென்று சம்பந்தப்பட்டவர்களை ஒடுக்குவோம்.
தற்போது எழுந்திருக்கும் பிரச்சினையால் விடுதலைப் புலிகள் மீண்டும் வலுப் பெறுவார்கள் என்ற சூழ்நிலை ஏற்படவில்லை.
இந்தியா - இலங்கை இடையே உளவுத்தகவல் பரிமாற்றம் நல்ல நிலையில் உள்ளது. இதில், எந்த பிரச்சினையும் இருப்பதாக கருதவில்லை.
இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறினார். #srilankablasts #RanilWickremesinghe
போரூர்:
போலீஸ் காவல் கட்டுப் பாட்டு அறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் இலங்கையில் வெடிகுண்டு வைத்தது நான் தான். தற்போது சென்னை மேட்டுக் குப்பத்தில் வெடிகுண்டு வைத்து உள்ளேன் என்று தெரிவித்தார்.
அந்த நபர் தொடர்பு கொண்ட செல்போன் எண் கோயம்பேடு போலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகர் பகுதியில் இருந்து பேசியது தெரிய வந்தது. மர்ம நபரை கோயம்பேடு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு நெற்குன்றம் வள்ளியம்மை நகரைச் சேர்ந்த மிரட்டல் ஆசாமி மைக்கேல் பிரீடி என்பவரை கைது செய்தனர்.
அவர் அளித்த வாக்கு மூலத்தில் நான் அலுமினியம் பேப்ரிகேஷன் வேலை செய்து வருகிறேன். நேற்று முன்தினம் வீட்டில் மனைவியுடன் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மனைவியுடன் தகராறு ஏற்பட்டது.
உடனடியாக எனது மனைவியிடம் 100-க்கு தொடர்பு கொண்டு உன் மீது புகார் கொடுக்க போகிறேன் என்று கூறிவிட்டு கோபத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன். பின்னர் மது அருந்தினேன். டி.வி.யில் இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகளை தொடர்ந்து பார்த்து வந்ததாலும் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மன உளைச்சல் அடைந்ததாலும் நான் எனது செல்போன் மூலம் காவல் கட்டுபாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடி குண்டு வைத்து உள்ளதாக கூறினேன் என்று தெரிவித்தார்.
மேலும் என்னுடைய செல்போன் எண் பழைய வீட்டின் முகவரியில் இருப்பதால் போலீசாரால் என்னை பிடிக்க முடியாது என நினைத்தேன் என்றும் தெரிவித்தார். #SriLankaAttacks

