என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boat Capsizes"

    • மடகாஸ்கரில் கடலில் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் சிக்கி 22 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    அன்டநானரிவோ:

    ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் இருந்து பிரான்ஸ் நாட்டின் மயோட் தீவு நோக்கி ஒரு படகு சென்று கொண்டிருந்தது. சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் இந்தப் பயணங்கள் பெரும்பாலும் ஆபத்தானதாக அமைந்து விடுகின்றன. மொத்தம் 47 பேர் இந்த படகில் பயணம் செய்தனர். அப்போது இந்த படகு திடீரென கடலில் கவிழ்ந்தது.

    தகவலறிந்த கடலோர காவல் படையினர் உடனடியாக கடலுக்குள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    மாயமான சிலரை கண்டுபிடிக்கும் பணியில் மீட்புப்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    • நீரில் தத்தளித்தப்படி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 17 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர்.
    • மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

    துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு 2 படகுகளில் 50-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக புறப்பட்டனர். அப்போது திடீரென அதிக காற்று வீசியதால் அந்த படகுகள் கடலில் கவிழ்ந்தன.

    இதுகுறித்து தகவலறிந்த கடலோர காவல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    எனினும் இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். நீரில் தத்தளித்தப்படி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 17 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர்.

    இந்த விபத்தில் சிலர் மாயமானதாக கூறப்படுகிறது. அவர்களின் கதி என்ன என்பது தெரியாததால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. எனினும் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

    • நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    • இதில் 103 பேர் பலியாகினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அபுஜா:

    நைஜீரியாவின் வடக்கே நைஜர் மாகாணத்தில் உள்ள எக்போடி கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலர் இதில் பங்கேற்றனர்.

    திருமணம் முடிந்து 300க்கும் மேற்பட்டோர் ஒரு படகில் திரும்பிக் கொண்டிருந்தனர். மேலும் பலர் படகில் தங்களது பைக்குகளை எடுத்து வந்திருந்தனர். அப்போது அதிக பளு காரணமாக படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் சிறுவர்கள் உள்பட 103 பேர் பரிதாபமாக பலியாகினர். அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நடந்தது.

    தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் 100க்கு மேற்பட்டோரை மீட்டுள்ளனர். மேலும், மாயமான பலரை தேடி வருகின்றனர்.

    திருமணத்துக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய மக்கள் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பாக்மதி நிதியை கடக்கும்போது கவிழ்ந்து விபத்து
    • மீட்புப் பணி நடைபெற்று வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்

    பீகார் மாநிலம் முசாபர்புர் மாவட்டத்தில் பாக்மதி நதி ஓடிக்கொண்டிருக்கிறது. மதுபுர் பாத்தி காட் இடையே, 30 குழந்தைகளை படகு ஒன்று பள்ளிக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. இந்த படகு திடீரென கவிழ்ந்தது. இதனால் குழந்தைகள் தண்ணீர் தத்தளித்தனர்.

    உடனடியாக மீட்புப்பணி நடைபெற்றது. இதன் பயனாக 20 குழந்தைகள் மீட்கப்பட்டனர். ஆனால், 10 குழந்தைகளை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்தத் தகவல் அறிந்ததும் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் ''மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இவ்விவகாரத்தை அவசரமாக கவனிக்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் அரசு செய்யும்'' எனத் தெரிவித்துள்ளார்.

    • முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை அழைத்து, மாநிலத்தின் நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
    • படகில் 15 பயணிகள் இருந்ததாகவும், மீதமுள்ளவர்கள் நீந்தி தப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

    அசாம் முழுவதும் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழைக்கு மத்தியில், தெற்கு சல்மாரா-மங்காச்சார் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில், நான்கு வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மேலும், இரண்டு பேர் காணாமல் போனதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை அழைத்து, மாநிலத்தின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். மேலும் அனைத்து உதவிகளும் செய்வதாகவும் உறுதியளித்தார்.

    நேற்று மாலை முதல் மாநிலத்தின் பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை மற்றும் மழையுடன் கூடிய திடீர் புயல், மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் வீடுகளை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தியது என்று அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சிஇஓ ஞானேந்திர தேவ் திரிபாதி தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர், " நேபுரேர் ஆல்கா கிராமத்தில் நேற்று மாலை 5 மணியளவில் சிசுமாரா காட்டில் இருந்து நேபுரேர் ஆல்கா காட் நோக்கி பயணித்த நாட்டுப்படகு மூழ்கியது. இதில் ஒரு குழந்தையின் சடலத்தை உள்ளூர்வாசிகள் மீட்டனர் மற்றும் காணாமல் போன இரண்டு பேரை தேடி வருகின்றனர்" என்றார்.

    படகில் 15 பயணிகள் இருந்ததாகவும், மீதமுள்ளவர்கள் அருகிலுள்ள 'சார்' பகுதிகளிலிருந்து உள்ளூர்வாசிகளின் உதவியுடன் பாதுகாப்பாக நீந்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

    • ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
    • இச்சம்பவம் பாகிஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் மாவட்டம் மோட்ச்கா பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ராஜன்பூர் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு படகில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண எல்லையில் உள்ள இண்டஸ் ஆற்றில் பயணித்தபோது அந்தப் படகு எதிர்பாராத விதமாக ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் பயணித்த அனைவரும் ஆற்று நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், இந்த படகு விபத்தில் 19 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ள பலரை தேடும் பணிகள் தொடர்ந்து நடக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    விசாரணையில், அதிக அளவிலான மக்களை படகில் ஏற்றியது, நீரின் ஓட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது.

    திருமண வீட்டிற்கு சென்று திரும்பியவர்கள் ஆற்றில் மூழ்கி பலியான இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சீனாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பெய்ஜிங்:

    சீனா நாட்டின் கியுசூ மாகாணத்தில் உள்ள பான்ராவ் கிராமத்தில் டீய்பான் என்கிற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் நேற்று முன்தினம் 29 பயணிகளுடன் ஒரு படகு சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் ஆற்றில் மூழ்கினர்.  இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 8 பேர் மாயமாகினர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுவினர் படகுகளில் விரைந்து சென்றனர். ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த 11 பேரை பத்திரமாக மீட்டனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது இதில் 20 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #AssamBoatAccident
    கவுகாத்தி:

    அசாமம் மாநிலத்தின் பிரம்மபுத்திரா ஆற்றில் கவுகாத்தியில் இருந்து மத்திய கந்தாவிற்கு 45 பயணிகளுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

    தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் மற்றும் அசாம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விபத்திற்குள்ளான படகில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்தாகவும், இந்த விபத்தில் 20 பேர் பலியானதாகவும்  கூறப்படுகிறது.

    இந்தியாவின் மிகப் பெரிய ஆறான பிரம்மபுத்திரா அசாம், மேகாலயா வழியாக வங்கதேசத்துக்குச் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #AssamBoatAccident
    ×