என் மலர்
நீங்கள் தேடியது "BRICS"
- பிரிக்ஸ் அமைப்புகளின் வர்த்தக அமைப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- மேடையில் தலைவர்கள் நிற்கும் இடத்தை குறிக்க தரையில் இந்திய கொடியும், தென் ஆப்பிரிக்கா கொடியும் வைக்கப்பட்டிருந்தது.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கி ஆகஸ்ட் 24ம் தேதி வரை நடக்கிறது. அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.
இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று தென்ஆப்பிரிக்கா சென்றடைந்தார். ஜோகனஸ்பர்க் நகரில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், பிரிக்ஸ் அமைப்புகளின் வர்த்தக அமைப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, மேடையில் தலைவர்கள் நிற்கும் இடத்தை குறிக்க தரையில் இந்திய கொடியும், தென் ஆப்பிரிக்கா கொடியும் வைக்கப்பட்டிருந்தது.
அப்போது, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, அவர்கள் நாட்டு கொடியை கையில் எடுத்து எதிரில் இருந்த நபரிடம் கொடுத்தார்.
இதற்கிடையே, பிரதமர் மோடி மேடை ஏறியதும், தரையில் இருந்து இந்திய கொடியை எடுத்து எதிரில் இருந்த நபரிடம் கொடுக்காமல் தனது சட்டைப்பையிலேயே வைத்துக்கொண்டார். பிரதமர் மோடியின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#WATCH | Johannesburg, South Africa | PM Narendra Modi notices Indian Tricolour on the ground (to denote standing position) during the group photo at BRICS, makes sure to not step on it, picks it up and keeps it with him. South African President Cyril Ramaphosa follows suit. pic.twitter.com/vf5pAkgPQo
— ANI (@ANI) August 23, 2023
- பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது.
- இந்தியா, சீன எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிக்கு சீனா மதிப்பளிக்க வேண்டும் என்றார்.
ஜோகனஸ்பர்க்:
எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் நடத்தும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிகிறது.
இதற்கிடையே, ஜோகன்ஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 15-வது மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கலந்து கொள்ள தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். மாநாட்டுக்கு இடையே இரு நாட்டு தலைவர்களும் சந்தித்தனர். அப்போது இருவரும் கைகுலுக்கி, சிறிது நேரம் தனியாக பேசினர்.
இந்நிலையில், இரு நாட்டு தலைவர்கள் பேசியது குறித்து வெளியுறவுச் செயலர் வினய் மோகன் குவாத்ரா கூறியதாவது:
இந்தியாவின் லடாக்கில் படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது.
எல்லை பிரச்சினையில் இருதரப்பிலும் அமைதியை நிலைநாட்டுவதன் முக்கியத்துவம்.
இந்திய சீன எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு சீனா மதிப்பளிக்க வேண்டும் என இருவரும் முடிவு செய்துள்ளனர் என தெரிவித்தார்.
- பிரிக்ஸ் மாநாட்டில் சீன யுவானை செலாவணிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டது
- 2023ல் பல நாடுகள் தங்களுக்கிடையே மாற்று கரன்சியை பயன்படுத்த உடன்பட்டன
உலக நாடுகளில் வல்லரசாக அமெரிக்கா திகழ முக்கிய காரணம் அதன் ராணுவ பலமும், சர்வதேச வர்த்தகங்களில் அமெரிக்க கரன்சியான டாலர் (Dollar), பெருமளவில் பயன்படுத்தப்படுவதும்தான்.
அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை பல நாடுகள் சில ஆண்டுகளாக எடுக்க துவங்கின.
கொரோனாவிற்கு முந்தைய காலகட்டத்தில் சீனா அதன் கரன்சியை வர்த்தகத்திற்கு பயன்படுத்த பிரிக்ஸ் (BRICS) மாநாடுகளில் முன்மொழிந்தது. ஆனால், கோவிட் பெருந்தொற்றால் இந்த முடிவு தள்ளி போடப்பட்டது.

2021ல் துவங்கிய, டாலருக்கு மாற்றாக ஒரு கரன்சியை தேடும் டீ-டாலரைசேஷன் (de-Dollarization) எனப்படும் இந்த முயற்சி, 2023ல் வேகமெடுக்க தொடங்கியது.
ரஷியா மற்றும் அர்ஜெண்டினா சீனாவுடனான வர்த்தகத்திற்கு சீன யுவான் (Yuan) பயன்படுத்த தொடங்கின.
கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் சீனாவும், இந்தியாவும் தங்கள் நாட்டு கரன்சிகளை மாற்றாக கொண்டு வர முயற்சி எடுத்தன.
எண்ணெய் சாராத வர்த்தகத்திலும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கையும், செலாவணிக்கு "இந்திய ரூபாய்" பயன்படுத்த உடன்பட்டுள்ளன.
லத்தீன் அமெரிக்கா, தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் பல நாடுகள் டாலருக்கு மாற்று கரன்சிக்கான தேடுதலை துவங்கியுள்ளன.
ஒரு சில நாடுகள் டிஜிட்டல் கரன்சி மற்றும் கிரிப்டோகரன்சிகளில் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராகி விட்டன.
எதிர்காலத்தில் பல நாடுகள் டாலருக்கு மாற்றான வழிமுறையில் தீவிரமாக வணிகத்தில் ஈடுபடும் போது டாலருக்கான தேவை குறையும் என்றும் இதன் காரணமாக அமெரிக்காவிற்கு உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் சிக்கல்கள் அதிகமாகும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- முதல் பிரிக்ஸ் மாநாடானது 2009 ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று ரஷியாவின் ஏகட்ரின்பர்க் [Yekaterinburg] நகரில் வைத்து நடந்தது.
- ஐநாவுக்கான பிரான்சில் முன்னாள் நிரந்தர பிரதிநிதியான ஜீன் டேவிட் லெவிட்டே [Jean David Levitte] எழுப்பிய கேள்விக்கு ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.
BRICS கூட்டமைப்பு என்பது 2009 ஆம் ஆண்டில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய ஒரு அமைப்பாகும். இதில் 2010 இல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது. இந்த 5 நாடுகளில் பெயரில் உள்ள முதல் எழுத்தின் சுருக்கமே BRICS. கடந்த ஜனவரி 2024 இல் எகிப்து, எத்தியோப்பியா, இரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன.
BRICS கூட்டமைப்பின் முக்கிய நோக்கம், அமைதியை நிலைநாட்டுவது, பாதுகாப்பு , நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதே ஆகும். முதல் பிரிக்ஸ் மாநாடானது 2009 ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று ரஷியாவின் ஏகட்ரின்பர்க் [Yekaterinburg] நகரில் வைத்து நடந்தது. 16 வது பிரிக்ஸ் மாநாடானது வரும் அக்டோபர் 22 முதல் 24 வரை ரஷியாவின் காசன் [Kazan] நகரில் வைத்து நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க தற்போது ரஷியா சென்றுள்ள இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் இந்தியாவுக்கான அழைப்பு செய்தியைத் தெரிவித்துள்ளார் அதிபர் புதின்.
Egypt, Ethiopia, Iran and the United Arab Emirates. ஸ்விட்ஸ்ர்லாந்தில் உள்ள ஜெனிவா சென்டரில் நடந்த ஐநா சபை கருத்தரங்கில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் BRICS கூட்டமைப்பு ஏன் உருவானது என்பதற்கு புதிய விளக்கம் ஒன்றைக் கூறியுள்ளார். அதாவது, அமரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இடம்பெற்ற ஜி7 கூட்டமைப்பில் மற்ற யாரையும் அனுமதிக்காததால்தான் BRICS உருவானதாகக் கூறியுள்ளார்.
சர்வதேச பொருளாதார மற்றும் பாதுகாப்பு நல்லுறவுகளைப் பேண வளர்ச்சிப்பாதையில் இருக்கும் நாடுகளுக்குக் குழு தேவை. ஆனால் அதற்கான குழுவான ஜி7 இல் நீங்கள் யாரையும் நுழைய விடவில்லை. எனவே நாங்கள் எங்களுக்கான ஒரு குழுவை உருவாக்கினோம். நாளடைவில் அது மிகப்பெரிய ஒரு குழுவாகப் பரிணமித்துள்ளது. எல்லோரும் அந்த குழுவின் முக்கியத்துவத்தை உணரத் தொடங்கியுள்ளனர் என்று ஐநாவுக்கான பிரான்சில் முன்னாள் நிரந்தர பிரதிநிதியான ஜீன் டேவிட் லெவிட்டே [Jean David Levitte] எழுப்பிய கேள்விக்கு ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். சமீபத்தில் இத்தாலியின் நடந்த ஜி7 மாநாட்டில் மோடி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
- 2022 மற்றும் 2045க்கு இடையில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் கடுமையாக அதிகரிக்கும்
- கடந்த 2020 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்பு 12.8% அதிகரித்துள்ளது
இந்தியாவில் வரும் 2045 க்குள் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிக்கும் என்று தேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகமான ஐசிஎம்ஆர் [ICMR] எச்சரித்துள்ளது. BRICS நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவற்றில் புற்றுநோய் பாதிப்பு மற்றும் தாக்கம் குறித்த ஆய்வானது நடத்தப்பட்டது.
ஐசிஎம்ஆர் நடத்திய இந்த ஆய்வின்படி , 2022 மற்றும் 2045க்கு இடையில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் கடுமையாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை நடத்திய 5 பேர் கொண்ட குழு, இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்பு 12.8% அதிகரித்துள்ளதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள் அதிகம் உட்கொள்ளப்படுவதால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்புகளைக் குறைக்க முதற்கட்டமாக சுகாதார காரணிகளை மேம்படுத்தவேண்டும் என்று கூறப்படுகிறது.
- 16 வது பிரிக்ஸ் [BRICS] உச்சி மாநாடு நடைபெற உள்ளது
- BRICS கூட்டமைப்பு என்பது பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய ஒரு அமைப்பாகும்.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து கடந்த ஜூலை 9 ஆம் தேதி நடந்த 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி கடைசியாக ரஷியா சென்றிருந்தார். இதில் உக்ரைன் போர் குறித்து அதிபர் புதினுடன் விரிவாக உரையாடல் நடத்தினார்.
இந்த நிகழ்வின்போது மோடிக்கு ரஷியாவின் உயரிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் 22-23 ஆகிய தேதிகளில் ரஷியாவின் காசான் [Kazan] இல் வைத்து நடக்க உள்ள 16 வது பிரிக்ஸ் [BRICS] உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
BRICS கூட்டமைப்பு என்பது 2009 ஆம் ஆண்டில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய ஒரு அமைப்பாகும். இதில் 2010 இல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது. இந்த 5 நாடுகளில் பெயரில் உள்ள முதல் எழுத்தின் சுருக்கமே BRICS.கடந்த ஜனவரி 2024 இல் எகிப்து, எத்தியோப்பியா, இரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தற்போது நடக்க உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள ரஷியா பயணிக்கும் மோடி, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது. மேலும் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேசுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
- பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ்.
- 16-வது பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு ரஷியாவில் நடைபெற உள்ளது
பிரேசிலியா:
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு. இது கடந்த 2009-ம் ஆண்டில் உருவான ஒரு அமைப்பாகும். இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது.
கடந்த ஜனவரி 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன.
ரஷியாவின் காசான் பகுதியில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியானது. அங்கு உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
காயம் காரணமாக பிரேசில் அதிபர் பங்கேற்க மாட்டார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாநாட்டில் பங்கேற்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்பிரிக்கா நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
- இன்றும் நாளையும் பிரிக்ஸ் மாநாடு நடைபெற இருக்கிறது.
16-வது பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து ரஷியா புறப்பட்டார். இந்த மாநாட்டிற்கிடையே பிரிக்ஸ் உறுப்பினர் நாடுகள் தலைவர்களுடன் இருநாட்டு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு. இது கடந்த 2009-ம் ஆண்டில் உருவான ஒரு அமைப்பாகும். இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது.
கடந்த ஜனவரி 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன.
காயம் காரணமாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
- பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் நடைபெறுகிறது.
- இதில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷியா சென்றுள்ளார்.
மாஸ்கோ:
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு. இது கடந்த 2009-ம் ஆண்டில் உருவான ஒரு அமைப்பாகும். இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது.
கடந்த ஜனவரி 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, 16-வது பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து ரஷியா புறப்பட்டார்.
மாநாட்டிற்கு இடையே பிரிக்ஸ் உறுப்பினர் நாடுகள் தலைவர்களுடன் இருநாட்டு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காயம் காரணமாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி ரஷியாவின் காசான் நகர் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
விமான நிலையத்தில் பிரதமர் மோடி வந்தபோது, அங்கு குவிந்திருந்த ரஷியர்களில் சிலர் கிருஷ்ண பஜனை பாடல்களைப் பாடி அசத்தினர்.
- ரஷியாவில் உள்ள காசான் நகரில் பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது.
- இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு. இது கடந்த 2009-ம் ஆண்டில் உருவான ஒரு அமைப்பாகும். இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது.
கடந்த ஜனவரி 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன. இதற்கிடையே, 16-வது பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து ரஷியாவின் காசான் நகர் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
ரஷியா சென்றுள்ள பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேரில் சந்தித்தார். இருவரும் கைகுலுக்கி, ஒருவரை ஒருவர் கட்டியணைத்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.
- பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து ரஷியா புறப்பட்டு சென்றார்.
- விமான நிலையத்தில், மோடிக்கு ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
16-வது பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து ரஷியா புறப்பட்டு சென்றார்.
விமான நிலையத்தில், மோடிக்கு ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி ரஷிய அதிபர் புடினை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.
இதனிடையே 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவும் சீனாவும் எல்லை பகுதிகளில் ஒன்றாக ரோந்து பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஒரு உடன்பாட்டை தற்போது எட்டியுள்ளன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "பிரிக்ஸ் மாநாட்டையொட்டி பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நாளை இருதரப்பு சந்திப்பு நடைபெறும்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
- ரஷியா சென்றுள்ள பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேரில் சந்தித்தார்.
- அனைத்து பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்பதே எங்களின் நிலைப்பாடு
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு. இது கடந்த 2009-ம் ஆண்டில் உருவான ஒரு அமைப்பாகும். இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது.
கடந்த ஜனவரி 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன. இதற்கிடையே, 16-வது பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் நேற்று தொடங்கியது.
இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து ரஷியாவின் காசான் நகர் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரஷியா சென்றுள்ள பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேரில் சந்தித்தார். இருவரும் கைகுலுக்கி, ஒருவரை ஒருவர் கட்டியணைத்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.
பின்னர் புதினிடம் பேசிய மோடி, "ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையில் நாங்கள் இரு தரப்பினருடனும் தொடர்பில் இருக்கிறோம். அனைத்து பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்பதே எங்களின் நிலைப்பாடு. மோதல்களுக்கு அமைதியான தீர்வுகள் இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அனைத்து வகையிலும் உதவ இந்தியா எப்போதும் தயாராக உள்ளது" என்று தெரிவித்தார்.