என் மலர்
நீங்கள் தேடியது "Broker"
- சிறுமிகளின் நிறம், உயரம் மற்றும் வயதுக்கு ஏற்ப அவர்களின் 'விலை' நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- சிறுமிகளுக்கு 18 வயது ஆனதாக காட்டுவதற்கு போலியான ஆதார் கார்டுகளை தயார் செய்துள்ளார்.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை கடத்தி விற்கும் புரோக்கர்களிடம் இருந்து பெண்களை விலைக்கு வாங்கி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு ரூ.2.5 முதல் 5 லட்சத்திற்கு 'விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள சுஜன்புரா கிராமத்தில் காயத்ரி சர்வ சமாஜ் என்ற அறக்கட்டளையின் அலுவலகம் அமைந்துள்ளது.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி, ஏழை பெண்களை கடத்தி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு இந்த அறக்கட்டளை விற்று வந்துள்ளது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் இந்த அறக்கட்டளை அலுவலகத்தில் இருந்து தப்பித்து வந்து போலீசாரிடம் புகார் அளித்த பின்பு இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.
சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் அறக்கட்டளையின் அலுவலகத்தை சோதனை செய்து காயத்ரி, ஹனுமான், பகவான் தாஸ், மகேந்திரா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய காவல் அதிகாரி, பெண்களை கடத்தி விற்கும் கும்பல் ஒன்று பீகார், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை காயத்ரி சர்வ சமாஜ் அறக்கட்டளையின் இயக்குனரான காயத்ரி விஸ்வகர்மாவுக்கு விற்று விடுவார்கள். காயத்ரி, இந்தப் பெண்களை ரூ.2.5 முதல் 5 லட்சத்திற்கு திருமணம் செய்து கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு விற்றுவிடுவார்.
சிறுமிகளின் நிறம், உயரம் மற்றும் வயதுக்கு ஏற்ப அவர்களின் 'விலை' நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமிகளுக்கு 18 வயது ஆனதாக காட்டுவதற்கு போலியான ஆதார் கார்டுகளை தயார் செய்துள்ளார். இது மாதிரியான 1500 திருமணங்களை காயத்ரி நடத்தியுள்ளார். அவர் மீது பத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்று தெரிவித்தார்.
- கோவிலில் வைத்து ஒரு பெண்ணை புரோக்கர் காண்பித்தார்.
- இதுபற்றி வாலிபர் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
சூலூர்,
சூலூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பெண் தேடி வந்தார். அவருக்கு 40 வயதை கடந்து விட்டது. இருந்தாலும் பெண் கிடைக்காமல் பல திருமண புரோக்கர்களை நாடினார்.
அதேபோல ஆனைமலையைச் சேர்ந்த திருமண புரோக்கர் ஒருவர் பற்றி வாலிபருக்கு தெரியவந்தது. அந்த புரோக்கர் தன்னிடம் கேரளாவில் வரன் தேடும் பல பெண்களின் ஜாதகங்கள் உள்ளன, உங்களுக்கு நிச்சயம் பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பதாக அவர் தெரிவித்தார்.
உடனே தனக்கு ரூ.60 ஆயிரம் அனுப்பி வைக்கும்படி புரோக்கர் தெரிவித்தார். வாலிபரும் அவரை நம்பி புரோக்கர் கொடுத்த வங்கி கணக்கிற்கு ரூ.60 ஆயிரம் அனுப்பி வைத்தார். அந்த புரோக்கர் மூலம் கேரளாவைச் சேர்ந்த புரோக்கர், சூலூர் வாலிபரை தொடர்பு கொண்டார். நீங்கள் ஆலத்தூர் அருகே மாங்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வாருங்கள், அங்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சி வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். உடனே வாலிபரும் கேரளா சென்றார். கோவிலில் வைத்து ஒரு பெண்ணை புரோக்கர் காண்பித்தார். வாலிபருக்கும் பெண்ணை பிடித்து போக திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். அடுத்தக்கட்டமாக கேரளாவில் இருந்து சிலர் சூலூர் வாலிபரின் வீட்டுக்கு வந்து சென்றனர்.
அதன்பிறகு வாலிபர், ஆலத்தூர் புரோக்கரையும், பெண் வீட்டினரையும் தொடர்பு கொண்டு திருமணத்தை எப்போது வைத்து கொள்வது என விசாரித்தார். ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. உடனே ஆனைமலை புரோக்கரை பிடித்து வாலிபர் விசாரித்தார். அதற்கு அவர் வாலிபர் கொடுத்த பணத்தை கேரளாவைச் சேர்ந்த புரோக்கருக்கு கொடுத்து விட்டதாக தெரிவித்தார்.
உடனே வாலிபர் கேரளாவுக்கு நேரில் சென்று விசாரித்தார். அப்போது அந்த பெண் வீட்டார் கொடுத்த முகவரி போலி என்பது தெரியவந்தது. மேலும் அந்த பெண் திருமணம் ஆனவர் என்பதும், வாலிபரை ஏமாற்ற மணப்பெ ண்ணாக காட்டியதும் தெரியவந்தது. பணம் பறிக்கும் நோக்கத்தில் ஆலத்தூர் புரோக்கர் மற்றும் பெண் குடும்பத்தினர் நாடகமாடிய விவரம் தெரியவந்தது.
இதுபற்றி ஆலத்தூர் புரோக்கரை தொடர்பு கொண்டு வாலிபர் பணத்தை திருப்பி தரும்படி கேட்டார். ஆனால் அவர் பணம் திருப்பி கொடுக்க மறுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்தார். இதுபற்றி வாலிபர் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மோசடி செய்த நபர் ஹாங்காங்கில் இருப்பதும், அவரது தொடர்புடைய சிலர் சென்னையில் இருப்பதும் தெரியவந்தது.
- ஒரே நாளில் ரூ.4 கோடி வரை பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூர் உறுவையாறு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன். தனியார் நிறுவன ஊழியர்.
இவரது செல்போனுக்கு அண்மையில் பகுதி நேர வேலை இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் குறிப்பிட்ட செயலியில் வரும் கட்டளைக்கு ஏற்ப பதிவிட்டால் செலுத்தும் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறப்பட்டிருந்து.
இதை நம்பிய வீரபத்திரன் பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி பணம் இரட்டிப்பாகி யுள்ளது.
இதையடுத்து அவர் பல தவணைகளில் ரூ.7.08 லட்சம் வரை செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இரட்டிப்பான பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை.
இதுகுறித்து வீரபத்திரன் புதுச்சேரி இணையவழி குற்றத்தடுப்புப் பிரிவில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
மோசடி செய்த நபர் ஹாங்காங்கில் இருப்பதும், அவரது தொடர்புடைய சிலர் சென்னையில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களின் செல்போன், வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது ஒரே நாளில் ரூ.4 கோடி வரை பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
பின்னர் அவர்களிடம் விசாரித்ததில் வங்கிக் கணக்கை பணப் பரிவர்த்தனைக்கு அனுமதித்தால் ரூ.1 லட்சம் தருவதாக மர்ம நபர் கூறியுள்ளார். அதன்படி பலரும் வங்கிக் கணக்கை மர்ம நபர்களுக்கு கொடுத்தது தெரியவந்தது. அவ்வாறு 30 வங்கிக் கணக்குகளை போலீசார் முடக்கினர்.
மேலும் மோசடிக்கு முகவர்களாக செயல்பட்டதாக சென்னை எண்ணூர் காமராஜர் நகரைச் சேர்ந்த முகமது இலியாஸ், பாடி பகுதியைச் சேர்ந்த மோகன், தமிழ்வாணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன்கள், ரூ.75 ஆயிரம் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- தாரமங்கலம் அருகே வெளியூர்களில் இருந்து பெண்களை அழைத்துவந்து தனது வீட்டில் வைத்து விபசாரம் நடத்துவதாக தாரமங்கலம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
- சேலம் புது ரோட்டை சேர்ந்த அந்த பெண்ணை ேபாலீசார் மீட்டனர். மேலும் சிவலிங்கத்தை கைது செய்தனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகில் உள்ள கே.ஆர்.தோப்பூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 50). புரோக்கர். இவர் வெளியூர்களில் இருந்து பெண்களை அழைத்துவந்து தனது வீட்டில் வைத்து விபசாரம் நடத்துவதாக தாரமங்கலம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார், ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது கே.ஆர். தோப்பூர் பஸ் நிறுத்தம் அருகே நின்றுகொண்டு இருந்த வாலிபர்களை உல்லாசத்திற்கு தன்னிடம் பெண்கள் இருப்பதாக கூறி சிவலிங்கம் அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த போலீசார் பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது சிவலிங்கம் வீட்டில் ஒரு பெண் இருப்பதும் அவர் பாலியல் தொழிலுக்கு வந்ததும் தெரியவந்தது. சேலம் புது ரோட்டை சேர்ந்த அந்த பெண்ணை ேபாலீசார் மீட்டனர். மேலும் சிவலிங்கத்தை கைது செய்தனர்.

அங்கு விபசாரம் நடப்பதை உறுதி செய்த போலீசார் நேற்று வீட்டில் இருந்த ஒரு ஆண் மற்றும் 5 பெண்களை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பி.என்.பாளையத்தை கண்ணன்(52), சூலூர் சுமதி (45), சரவணம்பட்டி நாகமணி (37), சோமனூர் ஷப்னா(27), எட்டிமடை ரேகா(29), பல்லடம் மகேஸ்வரி(26) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
கண்ணன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்துள்ளார். அவரையும், 5 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews