என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Building Collapse"

    • கட்டிட விபத்தில் 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    • கட்டிட விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் நேற்று 4 மாடி கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தஹு.

    இந்த விபத்தில் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், 3 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு குடும்பம் மட்டுமே வசித்து வந்தது. தரை தளத்தில் பல கடைகள் உள்ளன.

    நேற்று முதல் தளத்தில் இரண்டாவது தளத்தின் கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. கட்டிட விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை 8.50 மணி அளவில் அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் கட்டிட இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிக்கி அலறினார்கள்.

    இதைத்தொடர்ந்து 4 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்போது, அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளனர்.

    மேலும், இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • மும்பையில் நான்கு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.
    • பாழடைந்த கட்டிடம், யாரும் வசிக்கக் கூடாது என மும்பை மாநகராட்சி நோட்டிஸ் விடுத்துள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் போரிவலி (மேற்கு) பகுதியில் இன்று பிற்பகல் 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

    சாய்பாபா கோவில் அருகே சாய்பாபா நகரில் உள்ள கீதாஞ்சலி கட்டிடம் மதியம் 12.34 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

    மும்பை மாநகராட்சி அதிகாரிகளால் பாழடைந்த கட்டிடம் என நோட்டீஸ் வழங்கப்பட்டு, யாரும் வசிக்கக் கூடாது எனக்கூறி முன்னதாகவே குடியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். இருந்தாலும் சிலர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    தகவலறிந்து பெருநகர தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை வாரியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

    துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏழு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். #Istanbulbuildingcollapse
    இஸ்தான்புல்:

    துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரின் கர்தால் மாவட்டத்தில் ஏழு மாடி கட்டிடம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. இதற்கிடையே, மேலும் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இஸ்தான்புல் நகரில் ஏழு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.



    இதுதொடர்பாக, மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தனர்.

    கட்டிட விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் சந்தித்து ஆறுதல் கூறினார். #Istanbulbuildingcollapse
    துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏழு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். #Istanbulbuildingcollapse
    இஸ்தான்புல்:

    துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரின் கர்தால் மாவட்டத்தில் ஏழு மாடி கட்டிடம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. இதற்கிடையே, மேலும் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று ஐந்து வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தனர்.

    விசாரணையில், கட்டிடத்தின் 3 மாடிகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து உள்ளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். #Istanbulbuildingcollapse
    அரியானாவில்அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். #GurugramBuildingCollapse
    சண்டிகர்:

    அரியானாவில் உள்ள குருகிராமம் பகுதியை சார்ந்த உல்லவாஸ் கிராமத்தில் நான்கு மாடி கட்டிடம் இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது.

    இந்த விபத்தில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    தகவலறிந்து அங்கு சென்ற தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கிய 5 பேரை காயத்துடன் மீட்டனர்.

    இந்நிலையில், அரியானாவில்அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்தனர்.

    அடுக்குமாடி கட்டிட விபத்து பற்றி அறிந்த முதல் மந்திரி மனோகர் லால் கட்டார், விபத்தில் பலியானோருக்கு தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், பலியானோர் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். #GurugramBuildingCollapse
    ஈரான்-ஈராக் எல்லையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 750 பேர் காயமடைந்தனர். #IranEarthquake
    டெஹ்ரான்:

    ஈரானின் தெற்கு பகுதியில் எகிப்து நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள கெர்மன்ஷா மாகாணத்தின் சர்போல்-இ-சகாப் நகரில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 163 கி.மீ. தொலைவிலும், ஈரானின் சர்போல்-இ-சகாப் நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

    இந்த நிலநடுக்கமானது கெர்மன்ஷா மாகாணத்தில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை கடுமையாக உலுக்கியது. வீடுகள், வணிகவளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பலமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்த வெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர்.



    பல இடங்களில் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தால் 716 பேர் காயம் அடைந்ததாக ஈரான் அரசு தகவல் வெளியிட்டது.

    மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீசார், ராணுவத்தினர் மற்றும் மீட்புகுழுவினர் குவிக்கப்பட்டு தீவிர மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதே போல் இந்த நிலநடுக்கம் ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள கலார் நகரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அங்கு வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. அங்கு இந்த நிலநடுக்கத்துக்கு ஒருவர் பலியானார். மேலும் 43 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
    ஈரானின் மேற்கு பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 170 பேர் காயமடைந்தனர். #IranEarthquake
    தெஹ்ரான்:

    ஈரானின் மேற்கு பகுதியில், ஈராக் எல்லையை ஒட்டியுள்ள கெர்மன்ஷா மாகாணம், சர்போல் இ ஸகாப் அருகே நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, கட்டிடங்கள் சேதம் அடைந்தன. மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால்  பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர்.


    இந்த விபத்தில் 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் பலருக்கு லேசான காயங்களே ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் மட்டுமே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    நிலநடுக்கம் தாக்கிய இடங்களில் 6 மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #IranEarthquake
    உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியானார். மேலும் 17 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். #BuildingCollapse
    லக்னோ :

    உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.

    இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டதாக முதல் கட்டமாக தெரிவித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து 17 பேரை உயிருடன் மீட்டனர். மேலும், இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பரிதாபமாக பலியானார் என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து காவல் ஆணையர் ரன்வீர் பிரசாத் ஊடகங்களிடம் கூறுகையில், ’கட்டிட விபத்து தொடர்பாக விசாரணை நடத்தபட்டுள்ளது. கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அவர் தெரிவித்தார். #BuildingCollapse
    டெல்லியில் மூன்றடுக்கு வீடு இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. #childrenkilled #Delhibuildingcollapse
    புதுடெல்லி: 

    டெல்லியின் வடமேற்கில் உள்ள அசோக் விஹார் பகுதியில் ஒரு மூன்றடுக்கு மாடி வீடு இன்று காலை 9.30 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் வசித்துவந்த பல குடும்பத்தினர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். 

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இடிபாடுகளில் இருந்து சிலரை காயங்களுடன் மீட்டனர். மேலும், 10 வயதுக்குட்பட்ட இரு சகோதர்கள், 5 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன் மற்றும் அவனது சகோதரி, ஒரு பெண் ஆகிய 5 பேர் பிரேதமாக மீட்கப்பட்டனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.



    இந்நிலையில், மூன்றடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், இடிபாடுகளில் சிக்கி இறந்த ஒரு பெண் மற்றும் ஒரு ஆணின் சடலம் மீட்கப்பட்டது. இதையடுத்து, வீடு இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்தனர். 

    சுமார் 20 ஆண்டுகள் பழைமையான அந்த கட்டிடத்தை கடந்த 3 வாரங்களுக்கு முன் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #childrenkilled  #Delhibuildingcollapse
    ×