என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus strike"

    • வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்துகளை பணிமனைகளுக்கு கொண்டு சென்றனர்.
    • ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்திவிட்டு டிரைவர், கண்டக்டர்கள் இறங்கி சென்றுவிட்டனர்.

    சென்னை:

    சென்னையில் இன்று மாலையில் திடீரென அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் உள்ளிட்ட பணிமனைகளில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்துகளை பணிமனைகளுக்கு கொண்டு செல்லத் தொடங்கினர்.

    பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்திவிட்டு டிரைவர், கண்டக்டர்கள் இறங்கிவிட்டனர். பயணிகளிடம் பஸ் போகாது என்று கூறிவிட்டனர். பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் டிரைவர், கண்டக்டர்கள் பேருந்துகளை நிறுத்தியதால், ஏராளமான பயணிகள் நடுவழியில் தவிக்கின்றனர். பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    அரசுப் போக்குவரத்து துறையை தனியார்மயமாக்குதலை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

    • அலுவலகம் முடிந்து பொதுமக்கள் வீடு திரும்பும் நேரம் என்பதால் கூட்டம் அதிகரித்தது.
    • போராட்டம் நடத்தும் ஊழியர்களை பயணிகள் கடுமையாக விமர்சித்தனர்.

    சென்னை:

    சென்னையில் இன்று மாலையில் திடீரென அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்துகளை பணிமனைகளுக்கு கொண்டு செல்லத் தொடங்கினர். பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்திவிட்டு டிரைவர், கண்டக்டர்கள் இறங்கிவிட்டனர்.

    பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் டிரைவர், கண்டக்டர்கள் பேருந்துகளை நிறுத்தியதால், ஏராளமான பயணிகள் நடுவழியில் தவித்தனர். ஒரு சிலர் அவசரமாக போகவேண்டும் என்பதால், வேறு வழியில்லாமல் அதிக பணம் கொடுத்து ஆட்டோக்களில் ஏறி சென்றனர்.

    அலுவலகம் முடிந்து பொதுமக்கள் வீடு திரும்பும் நேரம் என்பதால் நேரம் செல்லச் செல்ல பேருந்து நிலையங்கள் மற்றும் பேருநது நிறுத்தங்களில் கூட்டம் அதிகரித்தது. போராட்டம் நடத்தும் ஊழியர்களை பயணிகள் கடுமையாக விமர்சித்தனர். இதுபோன்று போராட்டம் நடத்துவதாக இருந்தால் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் கூறினர்.

    இதற்கிடையே போராட்டம் நடத்தும் ஊழியர்களிடம் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு பேருந்துகளை இயக்க தொழிற்சங்க நிர்வாகிகள் முன்வந்தனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது. ஒவ்வொரு பணிமனைளில் இருந்தும் பேருந்துகளை இயக்கத் தொடங்கினர்.

    அடுத்தகட்டமாக வரும் 31ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களுடனும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அதன்பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய உள்ளதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாலை நேரம் என்பதால் வேலை முடிந்து வீடு திரும்புவோர் அவதிப்பட்டனர்.
    • கையில் பணம் வைத்திருந்தவர்கள் ஆட்டோ மற்றும் டாக்சிகளில் செல்லத் தொடங்கினர்.

    சென்னை:

    சென்னையில் இன்று அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்துத் துறையில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமனம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து வழித்தடங்களிலும் இயங்கிக்கொண்டிருந்த பேருந்துகளை அப்படியே நிறுத்தினர். பல பேருந்துகளை பணிமனைகளுக்கு கொண்டு சென்றனர். இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    மாலை நேரம் என்பதால் வேலை முடிந்து வீடு திரும்புவோர், குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். நேரம் என்பதால் நேரம் செல்லச் செல்ல பேருந்து நிலையங்கள் மற்றும் பேருநது நிறுத்தங்களில் கூட்டம் அதிகரித்தது. பேருந்துகள் எப்போது இயங்கும் என்று உறுதியாக தெரியாத நிலையில், கையில் பணம் வைத்திருந்தவர்கள் ஆட்டோ மற்றும் டாக்சிகளில் செல்லத் தொடங்கினர்.

    பேருந்துகள் இயங்காத சூழ்நிலையை பயன்படுத்தி ஆட்டோ மற்றும் டாக்சிகளில் வழக்கமான கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் பயணிகள் மேலும் இன்னலுக்கு ஆளாகினர். ஒருபுறம் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி தங்களை தவிக்கவிட்ட நிலையில், இதுதான் கிடைத்த வாய்ப்பு என ஆட்டோ டிரைவர்களும், டாக்சி டிரைவர்களும் இப்படி கட்டணத்தை உயர்த்துகிறார்களே என ஆவேசம் அடைந்தனர்.

    இதையடுத்து ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் விதிகளுக்குட்பட்டு கட்டணம் வசூலித்து பொதுமக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியது.

    சுமார் 2 மணி நேரம் நீடித்த போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் படிப்படியாக பேருந்துகள் இயங்கத் தொடங்கின.

    • புதிதாக வாங்கப்படும் மாநகர பஸ்களை அரசு-தனியார் பங்களிப்புடன் ஓட்டுவதற்கு சாத்தியக்கூறுகளை போக்குவரத்து துறை ஆராய்ந்து வந்தது.
    • தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்பட பல்வேறு சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் மொத்தம் 3,233 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் தினமும் 30 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர்.

    மாநகர பஸ்களில் சாதாரண ஒயிட் போர்டு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளும் பயண சலுகையை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஒவ்வொரு பணிமனையிலும் 'ஸ்பேர் பார்ட்ஸ்' இல்லாத காரணத்தால் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளதாக தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.

    இதற்கிடையே போக்குவரத்து கழகத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக உலக வங்கி நிதி உதவியுடன் இந்த ஆண்டு 500 மின்சார பஸ்களை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டும் 500 பஸ்கள் வாங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

    புதிதாக வாங்கப்படும் மாநகர பஸ்களை அரசு-தனியார் பங்களிப்புடன் ஓட்டுவதற்கு சாத்தியக்கூறுகளை போக்குவரத்து துறை ஆராய்ந்து வந்தது.

    இதற்கு தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்பட பல்வேறு சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து சமீபத்தில் பேசி இருந்தார்.

    அப்போது அவர் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் சென்னை மாநகர போக்குவரத்தில் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி இருந்தார். மேலும் அரசு வழித்தடங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படாது என்றும் ஊழியர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படமாட்டார்கள் என்றும் கூறி இருந்தார்.

    இந்த சூழ்நிலையில் 12 போக்குவரத்து பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் (காண்டிராக்ட்) 400 ஊழியர்கள் நியமிக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகர பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் மத்தியில் நேற்று மாலையில் வேகமாக தகவல் பரவியது.

    இதனால் மாநகர பஸ் டிரைவர்கள் திடீரென்று ஆங்காங்கே பஸ்களை நிறுத்தி பயணிகளை கீழே இறக்கிவிட்டு போராட்டத்தில் குதித்தனர். பஸ்களையும் பணிமனைக்கு கொண்டு சென்றுவிட்டனர். இதனால் பொதுமக்கள் வீடு திரும்ப முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர். நடுரோட்டில் பல மணிநேரம் தவித்தனர்.

    போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு இந்த தகவல் தெரியவந்ததும் அவர் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம். காண்டிராக்ட் ஊழியர்கள் நியமனம் வாபஸ் பெறப்படுவதாகவும் அறிவித்தார்.

    இதை ஏற்று பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினார்கள். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று பஸ் ஊழியர்கள் தொழிற்சங்கத்தினரிடம் வற்புறுத்தி வருகின்றனர்.

    இதனால் பஸ் ஊழியர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை எடுத்து சொல்லவும், போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க கூடாது என்பதை பற்றி வலியுறுத்தி பேசவும் தொ.மு.ச. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி. போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டியை நாளை சந்தித்து பேச உள்ளார். அவருடன் தொ.மு.ச. தொழிற்சங்க நிர்வாகிகளும் சென்று சந்திக்கிறார்கள். அதன்பிறகு தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரையும் சந்தித்து பேச உள்ளனர்.

    இதுகுறித்து சண்முகம் எம்.பி. கூறுகையில் போக்குவரத்து துறையில் 'அவுட் சோர்சிங் இல்லை' என்று வாக்குறுதி தரப்பட்டதால் தொழிலாளர்களின் நேற்றைய போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டு உள்ளது. இருந்தாலும் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நாளை அதிகாரிகளையும், அமைச்சரையும் சந்தித்து பேச உள்ளோம் என்றார்.

    அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் இன்று மாலை போக்குவரத்து துறை செயலாளரை சந்தித்து முறையிட உள்ளதாக தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறியதாவது:-

    போக்குவரத்து துறையில் தனியார் மயம் வருவதை தடுக்க அண்ணா தொழிற்சங்கம் ஜனநாயக ரீதியாக பயணிகளை பாதிக்காத வகையில் போராடி வருகிறது.

    ஆனால் நேற்று ஒப்பந்த பணியாளர்கள் 500 பேர் பணிக்கு வர இருப்பதாக தகவல் அறிந்து தொ.மு.ச. தொழிற்சங்க தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.

    பயணிகள் பற்றி அக்கறை இல்லாமல், முன்னறிவிப்பு இல்லாமல் வழியிலேயே பஸ்களை நிறுத்திய சம்பவம் மக்களுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. நேற்றைய போராட்டத்தில் எங்களது அண்ணா தொழிற் சங்கம் பங்கேற்கவில்லை.

    ஆளும் கட்சியை சேர்ந்த தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்காது. ஆனால் நாங்கள் போராட்டம் நடத்தினால் வீடியோ எடுத்து அதில் உள்ளவர்களை கண்டறிந்து வேறு டெப்போவுக்கு மாற்றி விடுவார்கள்.

    அப்படித்தான் கடந்த முறை போராட்டம் நடத்திய 312 பேரை வெவ்வேறு இடத்துக்கு மாற்றி விட்டனர். எங்கள் தொழிலாளர்களை பழி வாங்கும் நோக்குடன் நடத்துகிறார்கள்.

    இதனால் நாங்கள் இன்று மாலை போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டியை சந்தித்து பேச உள்ளோம். எங்களது கோரிக்கைகளையும் எடுத்து கூறுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சி.ஐ.டி.யு. தொழிற்சங்க செயலாளர் சவுந்தரராஜன் கூறியதாவது:-

    போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க கூடாது. காண்டிராக்ட் ஊழியர்களை நியமிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் ஏற்கனவே ஏப்ரலில் ஸ்டிரைக் நோட்டீசு கொடுத்துள்ளோம். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஜூன் 6-ந்தேதிக்கு பிறகு ஸ்டிரைக் நடத்துவோம் என்று கூறிவிட்டோம்.

    இது சம்பந்தமாக ஏற்கனவே ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் முடிவு எட்டப்படவில்லை. மீண்டும் நாளை 2-வது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    தொழிலாளர்கள் நலத்துறை இணை கமிஷனர் முன்னிலையில் போக்குவரத்து கழக நிர்வாகமும் நாங்களும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறோம். மற்ற தொழிற்சங்கத்தினர் வந்தாலும் ஆட்சேபனை இல்லை. தேனாம்பேட்டையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு நாளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரையும் பார்த்து பேசுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எனவே நாளை பேச்சுவார்த்தைக்கு பிறகு 6-ந்தேதி பஸ் ஸ்டிரைக் நடைபெறுமா? இல்லையா? என்பது தெரியவரும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனியார்மயக் கொள்கையில் தி.மு.க. அரசு தீவிரமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.
    • காலிப் பணியிடங்களை முறையாக நிரந்தர அடிப்படையில் நிரப்பிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பஸ் போக்குவரத்தில் தனியார் அனுமதிக்கப்படுவர் என்ற செய்தி வந்தபோது அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது போக்குவரத்துக் கழகங்களுக்கான பணியாளர்களை வெளிமுகமை மூலம், அதாவது தனியார் ஏஜென்சி மூலம் தி.மு.க. அரசு பணியமர்த்தியுள்ளது தொழிலாளர்களிடையே மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது.

    இதிலிருந்து தனியார்மயக் கொள்கையில் தி.மு.க. அரசு தீவிரமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது. தனியார் ஏஜென்சி மூலம் ஒப்பந்த அடிப்படையில் முதற்கட்டமாக 500-க்கும் மேற்பட்ட பணியாளர்களை தி.மு.க. அரசு நியமித்து இருக்கிறது. இதனைக் கண்டித்து, சென்னை மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் திடீரென நேற்று மாலை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் கடும் அவதிக்குள்ளாயினர். தனியார் ஏஜென்சி மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமிப்பது தொழிலாளர் விரோத நடவடிக்கை என்பதையும், சமூகநீதிக்கு எதிரானது என்பதையும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படுத்தும் என்பதையும், போக்குவரத்துக் கழகங்கள் அழிந்துவிடும் என்பதையும் கருத்தில் கொண்டு, போக்குவரத்துக் கழகங்களில் வெளிமுகமை மூலம் ஆட்கள் அமர்த்தப்படுவதை உடனடியாக கைவிட்டு, பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாவதை இனி வருங்காலங்களில் தடுத்து நிறுத்தவும், காலிப் பணியிடங்களை முறையாக நிரந்தர அடிப்படையில் நிரப்பிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று 3-வது கட்ட பேச்சுவார்த்தை தேனாம்பேட்டையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா? அல்லது ஸ்டிரைக் அறிவிக்கப்படுமா? என்பது இன்று மாலை தெரியவரும்.

    சென்னை:

    போக்குவரத்து கழகங்களில் அவுட்சோர் சிங் மூலம் (காண்டிராக்ட்) டிரைவர், கண்டக்டர்களை வேலைக்கு பணியமர்த்துவதை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

    மாநகர போக்குவரத்து கழகத்தில் ரூ.22 ஆயிரம் சம்பளத்துக்கும், விரைவு போக்குவரத்து கழகத்தில் தினசரி 813 ரூபாய்க்கு பதில் 553 ரூபாய் சம்பளத்தில் பணியாற்ற டிரைவர்களை வேலைக்கு எடுப்பதை எதிர்த்தும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் ஏப்ரல் 18 அன்று ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

    இதன் மீது தற்போது 2 கட்ட பேச்சுவார்த்தையை நடத்திவிட்டது. இன்று 3-வது கட்ட பேச்சுவார்த்தை தேனாம்பேட்டையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர் துறை இணை கமிஷனர், போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் அனந்தராஜன், மாநகர போக்குவரத்து கழக பொதுச்செயலாளர் தயானந்தம், தலைவர் துரை, பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி, சம்மேளன இணைச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

    இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா? அல்லது ஸ்டிரைக் அறிவிக்கப்படுமா? என்பது இன்று மாலை தெரியவரும்.

    • பேச்சுவார்த்தையில் ஒப்பந்த முறையை நிறுத்தி வைப்பதாக கூறியுள்ளனர்.
    • விரைவாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் மொத்தம் 3,233 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் தினமும் 30 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர்.

    மாநகர பஸ்களில் சாதாரண ஒயிட் போர்டு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர்.

    திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளும் பயண சலுகையை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஒவ்வொரு பணிமனையிலும் 'ஸ்பேர் பார்ட்ஸ்' இல்லாத காரணத்தால் 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளதாக தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.

    இதற்கிடையே போக்குவரத்து கழகத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக உலக வங்கி நிதி உதவியுடன் இந்த ஆண்டு 500 மின்சார பஸ்களை வாங்க அரசு முடிவு செய்துள்ளது.

    அடுத்த ஆண்டும் 500 பஸ்கள் வாங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. புதிதாக வாங்கப்படும் மாநகர பஸ்களை அரசு-தனியார் பங்களிப்புடன் ஓட்டுவதற்கு சாத்தியக்கூறுகளை போக்குவரத்து துறை ஆராய்ந்து வந்தது.

    இதற்கு தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்பட பல்வேறு சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்த சூழ்நிலையில் 12 போக்குவரத்து பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் (காண்டிராக்ட்) 400 ஊழியர்கள் நியமிக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகர பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் மத்தியில் நேற்று மாலையில் வேகமாக தகவல் பரவியது.

    இதனால் மாநகர பஸ் டிரைவர்கள் திடீரென்று ஆங்காங்கே பஸ்களை நிறுத்தி பயணிகளை கீழே இறக்கிவிட்டு போராட்டத்தில் குதித்தனர்.

    போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு இந்த தகவல் தெரியவந்ததும் அவர் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

    இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று பஸ் ஊழியர்கள் தொழிற்சங்கத்தினரிடம் வற்புறுத்தி வருகின்றனர். இதனால் பஸ் ஊழியர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை எடுத்து சொல்லவும், போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க கூடாது என்பதை பற்றி வலியுறுத்தி பேசவும் தொ.மு.ச. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி. போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டியை இன்று சந்தித்து பேசினார்.

    அவருடன் தொ.மு.ச. தொழிற்சங்க நிர்வாகிகளும் சென்று சந்தித்தனர். அதன்பிறகு தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரையும் சந்தித்து பேசினர்.

    இந்நிலையில், அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை அடுத்து சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் பேட்டி அளித்தார். அப்போது அவர், பேச்சுவார்த்தையில் ஒப்பந்த முறையை நிறுத்தி வைப்பதாக கூறியுள்ளனர். வாக்குறுதியை மீறினால் மீண்டும் போராட்டம் நடக்கும்.

    வரும் 9-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். விரைவாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
    • பேருந்துகள் இன்று நள்ளிரவு 11.59 மணி வரை மட்டுமே இயக்கப்படும்.

    ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    ஆனால், தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களை வைத்து நாளை வழக்கம்போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

    இந்நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது என சிஐடியு சவுந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," தொலைதூரம் செல்லக்கூடிய பேருந்துகள் இன்று நள்ளிரவு 11.59 மணி வரை மட்டுமே இயக்கப்படும்" என்று கூறினார்.

    • நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது.
    • பேருந்துகளை இயக்குவது தொடர்பாக தொ.மு.ச. அறிக்கை.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. இதை தொடர்ந்து இன்று (ஜனவரி 8) நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது என சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில், தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களை வைத்து நாளை வழக்கம் போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்து இருந்தார். அதன் படி நாளை பேருந்துகளை இயக்குவது தொடர்பாக தொ.மு.ச. பொதுச்செயலாளர் மு. சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

     


    அதில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை துவக்கப்பட வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியாளர்களால் வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வு நிலுவை, தற்போதைய 4 மாத அகவிலைப்படி நிலுவை வழங்க வேண்டும்."

    "ஓய்வு பெற்றோர் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. ஆயினும் அரசு ஓய்வு பெற்றோர் அகவிலைப்படி உயர்வு சம்மந்தமாக நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்."

    "அதே நேரத்தில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறது நமது கழக அரசு. இப்பிரச்சினைகளையும் தீர்க்கும் என்ற வாக்குறுதியை ஏற்று, பொதுமக்கள் நலன்களை கருத்தில் கொண்டும், நமது தமிழ்நாடு முதல்வரின் நல்லாட்சிக்கு களங்கம் விளைவிக்க முயலும் அ.தி.மு.க. தொழிற்சங்க நடவடிக்கைகளை முறியடிக்க வழக்கம் போல் பேருந்துகளை இயக்க வேண்டுமாய் தொ.மு.ச. பேரவை சார்பில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களை தொ.மு.ச. பேரவை அன்போடு கேட்டுக் கொள்கிறது. கோரிக்கைகளை தீர்க்க தொ.மு.ச. பேரவை துணை நிற்கும் என உறுதியளிக்கிறோம்," என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • அனைத்து பணிமனைகளில் இருந்து எல்லா வழித் தடங்களிலும் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது.
    • பேருந்துகளின் இயக்கம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது- மேலாண் இயக்குனர்

    தமிழக அரசுடன் போக்குவரத்து சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். அதேவேளையில் அனைத்து பேருந்துகளையும் இயக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னை மாநகரப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின. மக்கள் எந்தவித அச்சமின்றி பயணம் செய்யலாம். அனைத்து பணிமனைகளில் இருந்து எல்லா வழித் தடங்களிலும் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது.

    அனைத்து டிரைவர்கள், கண்டக்டர்கள் வேலைக்கு வந்துள்ளனர். பேருந்துகளின் இயக்கம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆல்பின் ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    தமிழகம் முழுவதும் காலை ஐந்து மணி நிலவரப்படி 3850 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

    • மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பஸ்கள் ஓடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • சென்னை பாரிமுனையில் இருந்து வழக்கமான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    சென்னையில் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்ததால் இன்று முதல் வேலைநிறுத்தத்தை தொடங்குவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இருந்தாலும் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பஸ்கள் ஓடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில் சென்னையில் 32 பணிமனைகளில் இருந்து 2,749 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 3092 மாநகர பஸ்கள் இயக்கப்பட வேண்டிய நிலையில், 2749 பஸ்கள் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை பாரிமுனையில் இருந்து வழக்கமான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னையில் மாநகர பஸ்கள் வழக்கத்தை விட கூடுதலாக 103 சதவீதம் இயக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் அரசு விரைவு போக்குவரத்துகழக பஸ்கள் 100 சதவீதம் இயக்கப்படுகின்றன.

    • அதிமுக ஆட்சியில் நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.
    • இந்தியாவிலேயே எந்தவொரு போக்குவரத்து கழகத்திலும் இங்குள்ளது போன்ற கட்டமைப்பு இல்லை.

    சென்னை:

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

    போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:

    * தமிழகம் முழுவதும் பஸ்களை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

    * கூடுதலாக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான அகவிலைப்படியை, நிதி நெருக்கடியால் வழங்க முடியாத நிலை உள்ளது.

    * அதிமுக ஆட்சியில் நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.

    * கருணை அடிப்படையில் வேலை, புதிய பணியிடங்கள் நிரப்புதல் ஆகிய 2 கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    * கோரிக்கைகள் வைக்கப்படாமலேயே தீபாவளிக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டது.

    * அண்ணா தொழிற்சங்கத்தோடு மற்ற தொழிற்சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது.

    * திமுக எப்போதும் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய இயக்கம்.

    * முன்வைக்கப்பட்ட 6 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையை நிறைவேற்ற தான் அரசு சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.

    * தொழிற்சங்கம் என்பது மக்களுக்காக தான். கோரிக்கைளை முன்வைத்து போராட்டம் நடத்தலாம். ஆனால் அது மக்களை பாதிக்கக்கூடாது.

    * இந்தியாவிலேயே எந்தவொரு போக்குவரத்து கழகத்திலும் இங்குள்ளது போன்ற கட்டமைப்பு இல்லை.

    * 95 சதவீதத்திற்கும் மேல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×