search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cake Mixing Event"

    • பண்டிகைக் காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இத்திருவிழா உற்சாகமாக நடைபெற உள்ளது.
    • லுலு ஹைப்பர் மார்க்கெட், பிரத்யேக சலுகைகள் மற்றும் தயாரிப்புகளுக்கு அற்புதமான தள்ளுபடிகளுடன் தயாராகி வருகிறது.

    கோயம்புத்தூர் லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேக் மிக்சிங் திருவிழா வரும் செப்டம்பர் 28ம் தேதி நடைபெறுகிறது.

    பண்டிகைக் காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இத்திருவிழா உற்சாகமாக நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியில், புகழ்பெற்ற Cookd TVன் சிஇஓ அதித்தியன் கலந்து கொண்ட சிறப்பிக்க உள்ளார்.

    கொண்டாட்டம் மற்றும் ஒற்றுமையின் அடையாளமான பாரம்பரிய கேக் மிக்சிங் விழா, வரவிருக்கும் விடுமுறை காலத்தினை சிறப்பிக்கும் வகையில் அமைய இருக்கிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், லூலு ஹைப்பர்மார்க்கெட் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பண்டிகைக்கால அனுபவத்தை வழங்குவதற்கான அர்ப்பணிப்பை இந்த விழா சிறப்பித்துக் காட்டுகிறது.

    அதே நேரத்தில், லுலு டோனட் விழாவை நடத்துகிறது. இது அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாடிக்கையாளர்கள் கிளாசிக் சுவைகள் முதல் அற்புதமான புதிய வகைகள் வரை டோனட்களின் மகிழ்ச்சிகரமான வகைப்படுத்தலில் ஈடுபடலாம் என்றும் இது அனைத்து இனிப்பு பிரியர்களுக்கும் தவறவிடக்கூடாத நிகழ்வாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளத.

    நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், லுலு ஹைப்பர் மார்க்கெட், பிரத்யேக சலுகைகள் மற்றும் தயாரிப்புகளுக்கு அற்புதமான தள்ளுபடிகளுடன் தயாராகி வருகிறது.

    பண்டிகை இனிப்புகள் முதல் வீட்டிற்குத் தேவையான பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பல வகைகளில் நம்பமுடியாத சலுகைகளை வாங்க இருக்கிறது.

    லுலுவின் நவராத்திரி மற்றும் தீபாவளி ஆஃபர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக காத்திருங்கள் மற்றும் பண்டிகை காலத்தின் உற்சாகத்தில் எங்களுடன் இணைந்திருங்கள் என்று லுலு ஹைப்பர் மாக்கெட் தெரிவித்துள்ளது.

    லுலு ஹைப்பர் மார்க்கெட் கோயம்புத்தூர் உங்கள் அனைத்து ஷாப்பிங் தேவைகளுக்கும், முறியடிக்க முடியாத சலுகைகள் மற்றும் மகிழ்ச்சிகரமான அனுபவங்களுடன், ஒரே இடத்தில் இருக்கும் இடமாகத் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே இந்த கேக் தயாரிப்பு விழா நடந்து வருகிறது.
    • 25-வது ஆண்டாக ஜெம் பார்க் ஹோட்டலில் கேக் மிக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஊட்டி

    ஊட்டியில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களிலும் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் விழா ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் நடத்தப்படும்.

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே இந்த கேக் தயாரிப்பு விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் சம்பந்தப்பட்ட ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த கேக்கை தயாரிப்பார்கள்.

    மைதா மாவுடன் உலர் திராட்சை, செர்ரி, வால்நட், பாதாம், பிஸ்தா உள்பட 30-க்கும் மேற்பட்ட பொருட்கள் ஒன்றாக கலக்கப்படும். அதனுடன் ரம், ஒயின் உள்ளிட்ட மது வகைகளும் கேக் கலவையுடன் ஒன்றாக கலக்கப்படும்.

    பிறகு இந்த கலவையை குறைந்தது ஒரு மாதத்துக்காவது பாதுகாப்பாக வைத்து பின், கேக் தயாரிக்கப்படும். எவ்வளவுக்கு எவ்வளவு இந்த பொருட்கள் ஊறி வருகிறதோ அந்த அளவுக்கு கேக்கின் ருசியும் அதிகமாகும். இது கிறிஸ்துமஸ் விழாவுக்காகவே தயாரிக்கப்படும் கேக் என்பதால் இதற்கான விழா எப்போதுமே எல்லா நட்சத்திர ஓட்டல்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும்

    அதன்படி 25-வது ஆண்டாக ஜெம் பார்க் ஹோட்டலில் கேக் மிக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஓட்டலின் இருப்பிட இயக்குநர், சுரேஷ்நாயர் உணவு மேலாளர் பிரதீப்குமார், சிறப்பு செப் சுரேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஓட்டலின் முக்கிய வாடிக்கையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இது குறித்து இருப்பிட இயக்குநர் சுரேஷ்நாயர், உணவு மேலாளர் பிரதீப்குமார் ஆகியோர் கூறியதாவது:-

    தற்போது நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சுமார் 60 கிலோ எடையிலான முந்திரி, உலர் திராட்சை, அத்திப் பழம், பேரீச்சம் பழம், பாதாம், பிஸ்தா உள்ளிட்ட 30 வகை பருப்புகளுடன், 7 வகையான மது, அன்னாசிப்பூ, இலவங்கம், ஜாதிக்காய் உள்ளிட்ட மருத்துவ மூலிகைகளும் சேர்த்து கலக்கப்பட்டு, மூடிவைக்கப்பட்ட மரக்குடுவையில் 30 நாள்களுக்கு இருட்டறை யில் வைக்கப்படும். இதை அவ்வப்போது திறந்து கிளறியும் வைக்க வேண்டும்.

    30 நாள்களுக்குப் பின்னர் இந்தக் கலவை யுடன் மைதா, முட்டை, நெய், தேன் உள்ளிட்டவற்றை சேர்த்து கேக் தயாரிக்க ப்படும். அப்போது 120 கிலோ எடையிலான கேக் கிடைக்கும். இது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் விருந்தினர்களுக்கு வினியோகிக்கப்படும்.

    ஐரோப்பியர்கள் தொடக்க காலத்தில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும்போது மது வகைகளை மட்டுமே அதிக அளவில் பயன்படுத்தினர். ஆனால், அவர்கள் இந்தியாவுக்குள் வந்த பின்னர்தான் இந்திய மசாலாப் பொருள்க ளையும் சேர்த்து கேக் தயாரிக்க ஆரம்பித்தனர். தற்போது ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய கேக் வகைகளே பிரதான இடத்தில் உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதேபோல ஊட்டியில் உள்ள பல்வேறு நட்சத்திர ஓட்டல்களிலும் கேக் மிக்சிங் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    • முக்கிய பிரமுகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
    • 5 நட்சத்திர ஓட்டல்களிலும் ஊடுருவி விட்டது.

    ஊட்டி,

    டிசம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிடும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கேக் தயாரிப்பது நீலகிரி மாவட்டத்தில் ஒரு விழாவாகவே கொண்டாடப்படுகிறது. பல வகை கேக்குகள் கடைகளில் கிடைத்தாலும், நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பாரம்பரியம் மிக்க 'ரிச் பிளம் கேக்' உலகளவில் பிரபலமானது. நீலகிரியில் கேக் மிக்ஸிங் செரிமனி என்பது வீடுகளில் சிறிய அளிவில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது இந்த கொண்டாட்டம் 5 நட்சத்திர ஓட்டல்களிலும் ஊடுருவி விட்டது. அனைத்து ஓட்டல்களிலும் கடைபிடிக்கப்படுகிறது. ஓட்டல் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், சுற்றுலா பயணிகள் இந்த விழாவில் பங்கேற்று கேக் தயாரிப்புக்காக உலர் பழங்களான பேரீச்சம் பழம், டூட்டி ப்ரூட்டி, பாதாம், பிஸ்தா, அரைக்கப்பட்ட வாசனை திரவியங்கள் ஆகியவை கொண்டு கலவை தயாரிக்கின்றனர். இந்த கலவை பதப்படுத்த மர பீப்பாயில் ஒரு மாத காலம் வைக்கப்படும். பின்னர், மைதா மாவு, சர்க்கரை கலந்து கேக் தயாரிக்கப்பட்டு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அன்று வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். இந்த விழா ஊட்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊட்டி நகர முக்கிய பிரமுகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செப் ஆந்தோ னி,வெங்கட்ராவ்,செல்வம் ஓட்டல் மேலாளர் முரளிகுமார் உள்ளிட்ட ஓட்டல் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

     

    ×