என் மலர்
நீங்கள் தேடியது "candidate list"
- பாஜக நிர்வாகிகள் கூட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது.
- பாராளுமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்.
கோவை:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதனையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி வருகின்றன.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தலை சந்திக்க பல்வேறு வியூகங்கள் அமைத்து களத்தில் இறங்கி உள்ளனர். பா.ஜ.கவும் தேர்தல் பணியை தமிழகத்தில் தீவிரப்படுத்தி உள்ளது.
கடந்த முறையை விட இந்த முறை தங்களது வாக்கு வங்கியை அதிகரிக்க முடிவு செய்துள்ளதுடன், தமிழகத்தில் இருந்து எம்.பி.க்களை தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்துக்கு அனுப்பும் வகையில் தீவிர பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக பா.ஜ.க மூத்த நிர்வாகிகளுடனான மத்திய குழு கூட்டம் கோவையில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் பங்கேற்றார். மத்திய மந்திரி எல்.முருகன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், எச்.ராஜா, கே.டி.ராகவன், ஜி.கே.நாகராஜ், கரு.நாகராஜன் மற்றும் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
நேற்று கோவையில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக பா.ஜ.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க விலகியதை அடுத்து, தங்கள் கூட்டணியில் எந்தெ ந்த கட்சிகளை சேர்க்கலாம். யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம். தமிழகத்தில் நமக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என பல்வேறு விஷயங்களை தமிழக பா.ஜ.க நிர்வாகிகளிடம் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் கேட்டறிந்தார்.
மேலும் நமக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? தேர்தல் அறிக்கையை எப்படி தயாரிப்பது? அதில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற வைக்கலாம் என்பது குறித்தும் நிர்வாகிகளிடம் கேட்டார். அவர்களும் பல்வேறு கருத்துக்களை தேசிய அமைப்பு பொதுச்செயலாளரிடம் தெரிவித்தனர்.
நிர்வாகிகள் கூறிய அனைத்து கருத்துக்களையும் கேட்டு கொண்ட தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் பாராளுமன்ற தேர்தல் பணிகளை துரிதப்படுத்துங்கள் என கூறியதோடு, வெற்றிக்கான சில வழிகளையும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தொகுதி வாரியாகவும், வார்டு வாரியாகவும் சென்று கட்சியினர் மக்களை நேரில் சந்திக்க வேண்டும். அவர்களிடம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள், செயல்படுத்திய திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்து கூறி வாக்குகளை சேகரியுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களிடமும் அவர்களுக்கு ஏதாவது குறைகள் இருக்கிறதா? என்று கேட்டு, அதனை உடனே நிறைவேற்று வதற்கான நடவடிக்கையும் எடுங்கள். அடிக்கடி மக்களை சந்தித்து கொண்டே இருங்கள்.
வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் மட்டுமின்றி அனைத்து தொகுதிகளிலும் அந்தந்த நிர்வாகிகள் தங்கள் முழு பலத்தையும் இறக்கி தேர்தல் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தாக தெரிகிறது.
மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும் எனவும் நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிலும் குறிப்பாக பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தமிழகத்தில் போட்டியிடக் கூடிய முக்கிய வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும், தமிழகத்தில் பா.ஜ.கவின் வாக்கு விகிதத்தை அதிகரிக்கவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பா.ஜ.க கோவை, நீலகிரி உள்பட பல்வேறு தொகுதிகளை குறி வைத்து தேர்தல் பணியாற்றி வருகிறது. குறிப்பாக நீலகிரி தொகுதியில், மத்திய மந்திரியாக இருக்க கூடிய எல்.முருகன் போட்டியிட உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் எல்.முருகனும், நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முகாமிட்டு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருவதுடன், மக்களையும் அடிக்கடி சந்தித்து வருகிறார்.
இதையெல்லாம் பார்க்கும் போது, அவர் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
நேற்று நடந்த கூட்டத்தில் பா.ஜ.க தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் விரைவில் முதற்கட்ட வேட்பாளர் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். அந்த பட்டியலில் மத்திய மந்திரி எல்.முருகனின் பெயர் உள்பட இன்னும் சில முக்கிய தலைவர்களின் பெயர்களும் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.
- முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் போட்டியிடுகிறார்.
மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. அதனால், தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகள் அதற்கு ஆயத்தமாகி வருகின்றன.
இதில், INDIA கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கும் தனித்து போட்டியிடுகிறது.
இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
42 வேட்பாளர்களையும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.
42 பேர் கொண்ட பட்டியலில், மஹூவா மொய்த்ரா, பெர்ஹாம்பூர் தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை எதிர்த்து யூசுப் பதான் போட்டியிடுகிறார்.
- திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.
- மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த விட மாட்டேன்
அண்மையில் ராஜினாமா செய்த தேர்தல் ஆணையர் அருண் கோயலுக்கு சல்யூட் செய்கிறேன் என்று மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. அதனால், தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகள் அதற்கு ஆயத்தமாகி வருகின்றன.
இதில், இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.
இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 42 வேட்பாளர்களையும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.
இந்நிகழ்வில் பேசிய அவர், மேற்கு வங்கத்தில் தேர்தல் நடத்துவது, கூடுதல் மத்திய படைகளை நிறுத்துவதற்கு டெல்லி தலைவர்களும், அதிகாரிகளும் கொடுத்த அழுத்தத்திற்கு பணியாத அருண் கோயலுக்கு சல்யூட் செய்கிறேன். மக்களவை தேர்தலில் வாக்குகளை கொள்ளையடிக்க பாஜக முயற்சிக்கிறது.
மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த விட மாட்டேன். பாஜகவை தோற்கடிப்பதில் முழு நாட்டிற்கும் திரிணாமுல் காங்கிரஸ் வழிவகுக்கும்
தேர்தலுக்கு முன்பு பாஜக சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்துள்ளது. தேர்தலுக்கு பிறகு 100 ரூபாய் உயர்த்துவார்கள். சிலிண்டர் விலை உயர்வு மூலம் ரூ.70,000 கோடி சம்பாதித்துள்ளனர் என்று மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- ஜெயலலிதா இருந்தவரை அ.தி.மு.க. எத்தனை தொகுதி போட்டியிடும்? அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை முதல் ஆளாக வெளியிடுவார்.
- தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முக்கிய தொகுதிகளில் யார்-யாரை நிறுத்துவது என்பதை ஏற்கனவே டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்து விட்டனர்.
சென்னை:
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என்பதை ஏற்கனவே அறிந்து இருந்த தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகளின் தலைவர்கள் ஏற்கனவே எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதை 90 சதவீதம் தீர்மானித்து விட்டனர்.
அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களையும் கடந்த வாரமே தேர்வு செய்து முடித்து விட்டனர்.
காங்கிரசில் 2 தொகுதிகளில் மட்டுமே இழுபறி உள்ளது. அதுவும் நாளை காலை தீர்க்கப்பட்டு விடும். அதன் பிறகு நாளையே தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் மட்டும்தான் தமிழகத்தில் அந்த கட்சி போட்டியிடும் 9 வேட்பாளர்கள் யார்-யார் என்பதை முடிவு செய்வதில் கடும் சவால் நிலவுகிறது. அந்த 9 தொகுதிகளில் 6 தொகுதி வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியிட்டு எம்.பி. ஆனவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
திருநாவுக்கரசர், ஜோதிமணி ஆகிய இருவருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மனுதாக்கல் நிறைவுபெறும் 27-ந்தேதி வரை காங்கிரசில் இழுபறி நீடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. சேருமா? என்பதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதால் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் உள்ளது. ஜெயலலிதா இருந்தவரை அ.தி.மு.க. எத்தனை தொகுதி போட்டியிடும்? அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை முதல் ஆளாக வெளியிடுவார்.
தற்போது அந்த சூழ்நிலை இல்லாத நிலையில் பா.ம.க., தே.மு.தி.க. வந்தால் எந்த தொகுதிகள் கொடுப்பது என்பது பற்றி அ.தி.மு.க.வில் ஒருமித்த கருத்து முடிவாகாத நிலை உள்ளது. என்றாலும் அ.தி.மு.க. வேட்பாளர்களும் 90 சதவீதம் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் தயாராக உள்ளது.
பா.ம.க., தே.மு.தி.க. தொகுதி பங்கீடு சுமூகமாக தீர்க்கப்பட்டால் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலையும் நாளை அல்லது நாளை மறுநாள் எடப்பாடி பழனிசாமி வெளியிட வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.
பாரதிய ஜனதா கூட்டணியிலும் இதே நிலைதான் நிலவுகிறது. பா.ம.க., தே.மு.தி.க. தலைவர்களுடன் பாரதிய ஜனதா தலைவர்கள் தொடர்ந்து ரகசியமாக பேசி வருவதால் தொகுதி பங்கீடு முடிவாகவில்லை. என்றாலும் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முக்கிய தொகுதிகளில் யார்-யாரை நிறுத்துவது என்பதை ஏற்கனவே டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்து விட்டனர்.
எனவே பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களும் இன்னும் 2 நாட்களில் தெரிய வாய்ப்பு உள்ளது. பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் 39 வேட்பாளர்களும் ஒரே நாளில் அறிவிக்கப்படுவார்கள் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதன் மூலம் தி.மு.க. கூட்டணியிலும், அ.தி.மு.க. கூட்டணியிலும், பாரதிய ஜனதா கூட்டணியிலும் 80 சதவீத வேட்பாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. தொகுதி பங்கீடு நிறைவு பெற்றதும் வேட்பாளர் பட்டியல் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிகிறது.
வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டால் தமிழக தேர்தல் மேலும் சூடு பிடிக்கும்.
- வேட்பாளர் பட்டியலில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் புதுமுகங்களும் இடம்பெறுகின்றனர்.
- தி.மு.க. தேர்தல் அறிக்கையையும் நாளையே வெளியிட ஏற்பாடு செய்து வருகின்றனர்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கி உள்ள தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, பெரம்பலூர், தஞ்சை, தேனி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. சீனியர் எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதுடன் புதுமுகங்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கும் என்று தெரியவந்துள்ளது.
இதில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலுவும், மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறனும், தென்சென்னையில், தமிழச்சி தங்கபாண்டியனும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
இதே போல் நீலகிரி தொகுதியில் ஆ.ராசா, தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி, அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன் எம்.பி.யும் போட்டியிடுகிறார்கள்.
இதே போல் ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்கள் யார் என்று முடிவாகி விட்டது. வேட்பாளர் பட்டியலில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் புதுமுகங்களும் இடம்பெறுகின்றனர். பெண்களுக்கும் இதில் கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
21 தொகுதிகளுக்கும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதால் இந்த வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை வெளியிடுகிறார். இதைத் தொடர்ந்து தி.மு.க. தேர்தல் அறிக்கையையும் நாளையே வெளியிட ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்த தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய வாக்குறுதிகள் இடம்பெற செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. பெண்களை கவரும் வகையிலான வாக்குறுதிகளும் இதில் இடம்பெற்று உள்ளதாக தெரிகிறது.
- கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே யார்-யார் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்பது பற்றிய விவரங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.
- வேட்பாளர் பட்டியல் கசிந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள டெல்லி மேலிட தலைவர்கள் அது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்கள் 11 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியானது. கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே யார்-யார் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்பது பற்றிய விவரங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.
முதலில் இந்த பட்டியல் போலியானது என்றே கூறப்பட்டது. இந்த நிலையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அந்த வேட்பாளர் பட்டியல் கசிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வேட்பாளர் பட்டியல் கசிந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள டெல்லி மேலிட தலைவர்கள் அது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:-
1 தென்சென்னை-தமிழிசை சவுந்தரராஜன், 2 கோவை-ஏ.பி.முருகானந்தம், 3 கரூர்- அண்ணாமலை குப்புசாமி, 4 திருச்சி-ஆசீர்வாதம் ஆசாரி, 5 கோவை-தடா பெரியசாமி, 6 சிவகங்கை-எம்.சத்தியானந்தன், 7 ராமநாதபுரம்-எம்.முருகானந்தம், 8 தூத்துக்குடி-ராதிகா சரத்குமார், 9 தென்காசி-ஆனந்தன் அய்யாசாமி, 10 திருநெல்வேலி-நைனார் பாலாஜி, 11 கன்னியாகுமரி-விஜயதாரணி.
- அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பெண்கள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு விசயங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அ.தி.மு.க. கூட்டணியில் பெரிய கட்சிகள் சேராத நிலையில் சிறிய கட்சிகள் சிலவற்றுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து உள்ளார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராகி வருகிறது. தே.மு.தி.க.வுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் நாளைக்குள் தே.மு.தி.க.வுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் நாளை மறுநாள் (21-ந்தேதி) வெளியாக உள்ளது. அன்றைய தினம் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையும் வெளியாகும் என்று தெரிகிறது. ஒருவேளை தேர்தல் அறிக்கை அன்று வெளியாகாவிட்டால் வருகிற 24-ந்தேதி திருச்சியில் நடைபெறும் தேர்தல் பிரசார தொடக்க விழா மேடையில் தேர்தல் அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பெண்கள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு விசயங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பெரிய கட்சிகள் சேராத நிலையில் சிறிய கட்சிகள் சிலவற்றுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து உள்ளார்.
தே.மு.தி.க. தவிர மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.
- தென் சென்னை தொகுதியில் ஜெயவர்த்தன் போட்டி.
- ஆரணி தொகுதியில் கஜேந்திரன் போட்டி.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
தென்சென்னை- ஜெயவர்த்தன்
வடசென்னை- ராயபுரம் மனோ
காஞ்சிபுரம்- ராஜசேகர்
ஆரணி-கஜேந்திரன்
விழுப்புரம் பாக்கியராஜ்
மதுரை- சரவணன்
சேலம் -விக்னேஷ்
ஈரோடு-ஆற்றல் அசோக்குமார்
அரக்கோணம்- ஏ.எல்.விஜயன்
கிருஷ்ணகிரி-ஜெயபிரகாஷ்
நாமக்கல்- நாங்கள் தமிழ்மணி
கரூர் - தங்கவேல்
நாகை -கர்ஜித் சங்கர்
தேனி- நாராயணசாமி
ராமநாதபுரம்- ஜெயபெருமாள்
சிதம்பரம்- சந்திரகாசன்
- அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
- புதிய தமிழகம் கட்சிக்கு 1 தொகுதி, எஸ்டிபிஐ 1 தொகுதி என ஒதுக்கப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிடுவோர் இன்று காலை 11 மணி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். இந்நிலையில், தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அதன்பின் பேசிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறியுள்ளார். புதிய தமிழகம் கட்சிக்கு 1 தொகுதி, எஸ்டிபிஐ-க்கு 1 தொகுதி என ஒதுக்கப்படுகிறது.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தொகுதி உடன்பாட்டிற்கு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அதன்பின் இருவரும் தொகுதி உடன்பாட்டிற்கு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதில் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி மீண்டும் போட்டி.
- கள்ளக்குறிச்சி தொகுதியில் மலையரசன் போட்டி.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்விவரம் வருமாறு
வடசென்னை- கலாநிதி வீராச்சாமி
தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்
மத்தியசென்னை- தயாநிதிமாறன்
ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு
காஞ்சிபுரம்- க.செல்வம்
அரக்கோணம்- ஜெகத்ரட்சகன்
வேலூர்- கதிர்ஆனந்த்
தூத்துக்குடி- கனிமொழி
தேனி- தங்க தமிழ்ச்செல்வன்
நீலகிரி- ஆ.ராசா
கள்ளக்குறிச்சி- மலையரசன்
பெரம்பலூர்- அருண் நேரு
சேலம் - செல்வகணபதி
தஞ்சாவூர்- முரசொலி
தென்காசி- ராணி
பொள்ளாச்சி- கே.ஈஸ்வரசாமி
கோவை- கணபதி பி.ராஜ்குமார்
ஈரோடு- கே.இ.பிரகாஷ்
ஆரணி- தரணி வேந்தன்
திருவண்ணாமலை- சி.என்.அண்ணாதுரை
தருமபுரி- அ.மணி
வேட்பாளர் பட்டியலில் 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 21 பேரில் 3 பேர் பெண்கள், 19 பேர் பட்டதாரிகள் ஆவர்.
- தேசிய காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசனைக்கு பிறகு இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை இரவுக்குள் வெளியிடப்படும்.
- ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்கள் பெயரை பரிந்துரை செய்துள்ளோம்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழக காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நாளை இரவுக்குள் வெளியிடப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
மேலும் செல்வப்பெருந்தகை கூறியதாவது:- தேசிய காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசனைக்கு பிறகு இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை இரவுக்குள் வெளியிடப்படும். ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்கள் பெயரை பரிந்துரை செய்துள்ளோம் என்றார்.
- வருகிற 22-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
- 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பெண்கள் இடம்பெறவில்லை.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்டு இருந்தார். மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்து ஆனது.
இதனிடையே விருதுநகர், தருமபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, மத்திய சென்னை ஆகிய 5 தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்து ஆகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகிறது. வருகிற 22-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. அன்றே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியிடப்பட்ட 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பெண்கள் இடம்பெறவில்லை. அதனால் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் பெண்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.