என் மலர்
நீங்கள் தேடியது "Car"
- மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்களில் CNG கிட் வசதியை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- மாருதி கார்களை தொடர்ந்து நெக்சா பிராண்டு மாடல்களிலும் தற்போது CNG கிட் வழங்கப்பட உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் பலேனோ மற்றும் XL6 கார்களில் CNG கிட் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் நெக்சா பிராண்டு மாடல்களில் CNG வசதி பெறும் முதல் கார் மாடல்களாக இவை இருக்கும். பலேனோ பிரீமியம் ஹேச்பேக் மற்றும் XL6 எம்பிவி மாடல்கள் ஒரே மாதிரியான பவர்டிரெயின் வழங்கப்பட இருக்கிறது.
மேலும் அதிக கார்களில் CNG வசதியை வழங்கும் நோக்கில், மாருதி சுசுகி லிமிடெட் நிறுவனம் பலேனோ மற்றும் XL6 CNG மாடல்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. மாருதி சுசுகி நிறுவன வாகனங்களில் அதிக மைலேஜ் வழங்கும் திறன் இருப்பதே அதிக வாடிக்கையாளர்களை ஈட்ட முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இதுவரை மாருதி சுசுகி நிறுவனம் ஒன்பது கார்களில் CNG கிட் வசதியை வழங்கி இருக்கிறது.

இந்த வரிசையில் தற்போது பலேனோ மற்றும் 6-சீட்டர் எம்பிவி மாடலான XL6 இணைய இருக்கிறது. CNG பிரிவில் மாருதி சுசுகி நிறுவனம் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களும் CNG கிட் வசதியை வழங்கி வருகின்றன. வழக்கமான பெட்ரோல், டீசல் எரிபொருள்களுக்கு மாற்றாக குறைந்த விலையில் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான தேர்வாக CNG விளங்குகிறது.
இவை மட்டுமின்றி CNG கிட் பொருத்தப்பட்ட கார்கள் வழக்கமான பெட்ரோல், டீசல் மாடல்களை விட அதிக மைலேஜ் வழங்கி வருகின்றன. ஏற்கனவே பல்வேறு கார்களில் CNG கிட் வழங்கி வருவதை அடுத்து பலேனோ மற்றும் XL6 மாடல்களில் CNG கிட் வழங்குவது ஆச்சரியமாக பார்க்கப்படவில்லை.
- ஹோண்டா நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் டீசல் என்ஜின் கார்களின் விற்பனையை நிறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- முற்றிலும் புது எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்யும் பணிகளிலும் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. புதிய சிட்டி மாடல் சோதனையின் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன. இது 5th Gen சிட்டி மாடலின் பேஸ்லிபிட் வெர்ஷன் ஆகும். புதிய ஹோண்டா சிட்டி பேஸ்லிப்ட் மாடல் தாய்லாந்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாடல் முதற்கட்டமாக தாய்லாந்திலேயே அறிமுகம் செய்யப்படலாம்.
புதிய பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புற டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. எனினும், பவர்டிரெயின் ஆப்ஷன்கள் தற்போது விற்பனை செய்யப்படும் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். ஸ்பை படங்களின் படி ஹோண்டா சிட்டி பேஸ்லிப்ட் மாடலில் ரி-ஸ்டைல் செய்யப்பட்ட முன்புற பம்ப்பர், புதிய பாக் லேம்ப் ஹவுசிங், ஏர் டேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

ஸ்பை படங்களில் காரின் பின்புறம் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், இதில் ரி-ஸ்டைல் செய்யப்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். காரின் உள்புறம் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மாற்றப்பட்டு அதிக உபகரணங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
ஹோண்டா சிட்டி பேஸ்லிப்ட் மாடலிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் ஹோண்டா சிட்டி மாடலில் டீசல் என்ஜின் நீக்கப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது விற்பனை செய்யப்படும் டீசல் என்ஜின் கார்களும் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் விற்பனைக்கு கிடைக்காது என்றே தெரிகிறது.
இவைதவிர ஹோண்டா ஜாஸ், WR-V மற்றும் 4th Gen சிட்டி மாடல்களின் விற்பனை விரைவில் நிறுத்தப்படும் என ஹோண்டா ஏற்கனவே அறிவித்து விட்டது. அமேஸ் மற்றும் சிட்டி மாடல்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் நிலையில், புதிய எஸ்யுவி மாடலை ஹோண்டா அறிமுகம் செய்ய இருக்கிறது.
- மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது CNG மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது.
- மாருதி சுசுகி செலரியோ, வேகன் ஆர் மற்றும் இக்னிஸ் மாடல்களை ரிகால் செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் வேகன்ஆர், செலரியோ, இக்னிஸ் கார்களின் 9 ஆயிரத்து 925 யூனிட்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ஆகஸ்ட் 3, 2022 முதல் செப்டம்பர் 1, 2022 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்கள் ரிகால் செய்யப்படுகின்றன.
ரிகால் செய்யப்படும் கார்களின் ரியர் பிரேக் அசெம்ப்லி பின் பாகத்தில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அசெம்ப்லி பின் உடைந்து, வித்தியாசமான சத்தம் எழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆகும். வேகன்ஆர் மற்றும் செலரியோ மாடல்கள் மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்கள் ஆகும். இக்னிஸ் மாடல் மட்டும் நெக்சா பிராண்டிங்கில் விற்பனை செய்யப்படுகிறது.

"ரியர் அசெம்ப்லி பின் பாகத்தில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை சரிசெய்ய தவறும் பட்சத்தில் அசெம்ப்லி பின் உடைந்து வித்தியாசமான சத்தம் எழ வாய்ப்புகள் உண்டு. நாளடைவில் காரின் பிரேக்கிங் திறன் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். வாடிக்கையாளர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நிறுவனம் சார்பில் பாதிக்கப்பட்ட யூனிட்களை ரிகால் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் பாதிக்கப்பட்ட கார்கள் ரிகால் செய்யப்பட்டு இலவசமாக சரி செய்யப்படும்," என மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
ரிகால் செய்யப்படும் கார்களில் புதிதாக வழங்க மாற்று பாகங்கள் தயாராகி வருகின்றன. அதிகாரப்பூர்வ விற்பனை மையங்கள் சார்பில் பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளப்படுவர். அதன் பின் கார் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, பிரச்சினைகள் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக சரி செய்யப்படும்.
- மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் CNG கார் மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
- முதல் முறையாக நெக்சா பிராண்டிங் காரிலும் CNG கிட் வசதியை மாருதி சுசுகி நிறுவனம் வழங்கி இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய பலேனோ மாடலில் CNG கிட் வசதியை வழங்கி இருக்கிறது. புதிய மாருதி சுசுகி பலேனோ CNG மாடல் விலை ரூ. 8 லட்சத்து 28 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பலேனோ CNG மாடலை மாதாந்திர சந்தா முறையில் வாங்கும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பலேனோ மாடலுடன் XL6 CNG காரும் அறிமுகமாகி இருக்கிறது.
புதிய பலேனோ CNG மாடலில் 1197சிசி, NA, நான்கு சிலண்டர்கள் கொண்ட டூயல் ஜெட் டூயல் VVT பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 89 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இந்த என்ஜின் 76 ஹெச்பி பவர், 98.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

மாருதி சுசுகி பலனோ CNG மாடல் லிட்டருக்கு 30.61 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது. புதிய பலேனோ CNG செயல்திறனும் ஸ்விப்ட் CNG மாடலின் செயல்திறனும் ஒரே அளவில் உள்ளன. பலேனோ CNG மாடலில் 7-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்மார்ட்பிளே ப்ரோ, எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 40-க்கும் அதிக கனெக்டெட் கார் அம்சங்கள், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 6 ஏர்பேக், ரியர்வியூ கேமரா, பார்க்கிங் சென்சார்கள் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டிஎப்டி டிஸ்ப்ளே, என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச், ரியர் டி-ஃபாகர், யுஎஸ்பி டைப் ஏ மற்றும் சி போர்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
- மாருதி சுசுகி நிறுவனம் தனது XL6 காரில் S-CNG கிட் வழங்கி இருக்கிறது.
- புதிய மாருதி சுசுகி XL6 S-CNG ஒற்றை வேரியண்டில் அறிமுகமாகி இருக்கிறது.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் XL6 S-CNG மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாருதி சுசுகி XL6 S-CNG மாடலின் விலை ரூ. 12 லட்சத்து 24 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த கார் ஸீட்டா MT எனும் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதே காருடன் பேலனோ CNG மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மாருதி சுசுகி XL6 S-CNG மாடலில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 99 ஹெச்பி பவர், 136 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இந்த என்ஜின் 87 ஹெச்பி பவர், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய XL6 S-CNG மாடல் லிட்டருக்கு 26.32 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த காரில் 7 இன்ச் ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, குரூயிஸ் கண்ட்ரோல், எல்இடி டிஆர்எல்கள், நான்கு ஏர்பேக், ESP மற்றும் ஹில் ஹோல்டு அம்சம், எல்இடி பாக் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த கார் மாதாந்திர சந்தா முறையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.
- டொயோட்டா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய இன்னோவா கார் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
- புது இன்னோவா மாடலில் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
டொயோட்டா நிறுவனம் முற்றிலும் புது இன்னோவா ஹைகிராஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. இதனை டொயோட்டா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் இந்த (நவம்பர்) மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
இந்திய வெளியீட்டுக்கு முன் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முற்றிலும் புது பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் இன்னோவா ஹைகிராஸ் மாடல் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெயின் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

முந்தைய பாடி ஆன் லேடர் ஆர்கிடெக்ச்சருக்கு மாற்றாக புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் மோனோக் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதில் முன்புற டிரைவ் வசதி கொண்ட ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் ஏற்கனவே இன்னோவா டீசல் என்ஜின் கொண்ட வேரியண்ட் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. அந்த வகையில், டீசல் என்ஜினுக்கு மாற்றாக 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலில் ஹெக்சகோனல் முன்புற கிரில், மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள், அலாய் வீல்கள் ரி-டிசைன் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. மேலும் பானரோமிக் சன்ரூப் இந்த எம்பிவி மாடலில் முதல் முறையாக வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
புதிய ஹைகிராஸ் மாடலின் இண்டீரியர் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இது தற்போது விற்பனை செய்யப்படும் மாடலை விட மேம்பட்ட அம்சங்கள் மற்றும் வசதிகளை கொண்டிருக்கும் என தெரிகிறது. இதில் பெரிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் பேட், வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள் வழங்கப்படலாம்.
- கியா இந்தியா நிறுவனம் அக்டோபர் மாத விற்பனை விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
- கியா நிறுவனத்தின் EV6 எலெக்ட்ரிக் மாடலின் வினியோகம் கடந்த மாதம் துவங்கியது.
கியா இந்தியா நிறுவனம் 2022 அக்டோபர் மாதத்தில் மட்டும் 23 ஆயிரத்து 323 யூனிட்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இதுதவிர 2022 நிதியாண்டில் கியா கார் விற்பனையில் இரண்டு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. 2021 நிதியாண்டில் கியா நிறுவனம் 18 ஆயிரத்து 583 யூனிட்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கியா நிறுவனம் அறிமுகம் செய்த EV6 எலெக்ட்ரிக் காரின் வினியோகத்தை ஜூன் மாத வாக்கில் துவங்கியது. கியா இந்தியா நிறுவனம் வருடாந்திர விற்பனையில் 43 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கியா நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார்களில் செல்டோஸ் மாடல் முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து சொனெட் மற்றும் கரென்ஸ் மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
மூன்று கார்களும் முறையே 9 ஆயிரத்து 777, 7 ஆயிரத்து 614 மற்றும் 5 ஆயிரத்து 479 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. கடந்த ஆண்டு கியா இந்தியா நிறுவனத்தின் கார்னிவல் மாடல் 301 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. சமீபத்திய புதுவரவு எலெக்ட்ரிக் கார் கியா EV6 மாடல் இதுவரை 152 பேருக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
- ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புது மைக்ரோ எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புது மைக்ரோ எஸ்யுவி ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் ஹேச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
டாடா பன்ச் மைக்ரோ எஸ்யுவி-க்கு போட்டியை ஏற்படுத்தும் புது காரை ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஹூண்டாய் மைக்ரோ எஸ்யுவி மாடல் 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இந்த கார் கிராண்ட் ஐ10 பிளாட்பார்மில் உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதன் வெளியீடு அடுத்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 பிளாட்பார்மில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் கார்களான கிராண்ட் ஐ10 நியோஸ் ஹேச்பேக் மற்றும் ஆரா காம்பேக்ட் செடான் மாடல்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. புதிய மைக்ரோ எஸ்யுவி மாடல் கிராண்ட் ஐ10 பிளாட்பார்மை பயன்படுத்தும் மூன்றாவது கார் மாடல் என்ற பெருமையை பெறும். இந்த கார் Ai3 எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது.

புதிய மைக்ரோ எஸ்யுவி மாடல் காம்பேக்ட் யுடிலிட்டி வாகனமாக நிலை நிறுத்தப்படும். இது எஸ்யுவி பிரிவில் குறைந்த விலை மாடலாக இருக்கும். பட்ச் ஸ்டைலிங் மற்றும் அதிகளவு கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளிட்டவை ஹூண்டாய் மைக்ரோ எஸ்யுவி காரின் முக்கிய அம்சங்களாக இருக்கும். தோற்றத்தில் இந்தகார் கேஸ்பர் மாடலை போன்றே காட்சியளிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
புதிய கேஸ்பர் மாடலை ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் குறைந்த விலை எஸ்யுவி மாடலாக புதிய மைக்ரோ எஸ்யுவி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆரா மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
- கியா இந்தியா நிறுவனத்தின் கரென்ஸ் எம்பிவி மாடல் இந்திய விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
- புதிய கரென்ஸ் எம்பிவி விலை இந்தியாவில் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.
கியா இந்தியா நிறுவனம் தனது கரென்ஸ் எம்பிவி மாடல் விலையை இந்திய சந்தையில் இரண்டாவது முறையாக அதிகரித்து இருக்கிறது. முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் கியா கரென்ஸ் விலை முதல் முறையாக உயர்த்தப்பட்டது. அப்போது கியா கரென்ஸ் அறிமுக விலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு புதிய விலை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கரென்ஸ் மாடல் விலை ரூ. 70 ஆயிரம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், கியா கரென்ஸ் விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. கியா கரென்ஸ் புதிய விலை நவம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி கரென்ஸ் மாடல் விலை தற்போது ரூ. 50 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. கியா கரென்ஸ் 1.5 லிட்டர் NA பெட்ரோல் பிரெஸ்டிஜ் வேரியண்ட் விலை ரூ. 50 ஆயிரம் அதிகரித்துள்ளது.

கரென்ஸ் 1.5 லிட்டர் NA பெட்ரோல் பிரீமியம் வேரியண்ட் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் லக்சரி வேரியண்ட் விலை முறையே ரூ. 40 ஆயிரம் மற்றும் ரூ. 15 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. 1.5 லிட்டர் லக்சரி வேரியண்ட் விலை ரூ. 35 ஆயிரமும், மற்ற டீசல் வேரியண்ட் விலை ரூ. 30 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.
கியா கரென்ஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட பிரெஸ்டிஜ் பிளஸ் டிசிடி, லக்சரி+ 6எஸ், லக்சரி+ 7எஸ், லக்சரி+ 6எஸ் டிசிடி மற்றும் லக்சரி+ 7எஸ் டிசிடி விலை ரூ. 20 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று பிரீமியம், பிரெஸ்டிஜ் மற்றும் பிரெஸ்டிஜ் பிளஸ் வேரியண்ட்களின் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய விலை உயர்வை அடுத்து கியா கரென்ஸ் மாடலின் துவக்க விலை தற்போது ரூ. 10 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- ஹோண்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய WR-V மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- புது தலைமுறை ஹோண்டா WR-V ஏராளமான ADAS அம்சங்களை கொண்டிருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி முற்றிலும் புதிய WR-V மாடலை இந்தோனேசியா சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தோனேசியாவில் இருந்தபடி புதிய ஹோண்டா WR-V சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஹோண்டா WR-V எஸ்யுவி அளவில் பெரியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ADAS உள்பட ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஸ்டைலிங் மற்றும் டிசைனை பொருத்தவரை புதிய WR-V மாடல் தோற்றத்தில் ஸ்போர்ட் கார் போன்று காட்சியளிக்கிறது. இதன் முன்புறம் க்ரோம்-ஸ்டட் செய்யப்பட்ட முன்புற கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட டிஆர்எல்-கள், முன்புறம் பம்ப்பர் மாற்றப்பட்டு ரி-டிசைன் செய்யப்பட்ட ஃபாக் லேம்ப் ஹவுசிங், பிளாக் அவுட்லைன் இடம்பெற்று இருக்கிறது. புதிய WR-V மாடல் 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், பின்புறம் ஸ்ப்லிட் ரக எல்இடி டெயில் லேம்ப்கள், ரூப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் கொண்டுள்ளது.

ஹோண்டா WR-V மாடலின் கேபின் இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் அமேஸ் மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில் புதிய WR-V உள்புறம் ஆல்-பிளாக் தீம், ஸ்டீரிங் வீல், டேஷ்போர்டு, டோர் பேட் உள்ளிட்டவைகளில் ரெட் ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரில் 7 இன்ச் தொடு திரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ரியர் வியூ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
சர்வதேச சந்தையில் ஹோண்டா WR-V மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 119 ஹெச்பி பவர், 145 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் சிவிடி யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹோண்டா WR-V இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்திய சந்தைக்காக முற்றிலும் புது எஸ்யுவி மாடலை உருவாக்கும் பணிகளில் ஹோண்டா ஈடுபட்டு வருகிறது.
- ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்துள்ளது.
- புது சலுகைகள் கார் மாடல், வேரியண்ட் மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுபடும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆட்டோ உற்பத்தியாளரான ஹோண்டா நவம்பர் மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது. கார் மாடல், வேரியண்ட் மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுபடும். புதிய சலுகைகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை பொருந்தும்.
நவம்பர் மாத சலுகைகளை பொருத்தவரை ஹோண்டா WR-V மாடலுக்கு அதிகபட்ச பலன்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஹோண்டா WR-V வாங்குவோர் ரூ. 63 ஆயிரத்து 144 வரையிலான பலன்களை பெறலாம். இதில் ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி அல்லது ரூ. 36 ஆயிரத்து 144 மதிப்புள்ள இலவச அக்சஸரீக்கள், பழைய கார் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, கூடுதலாக ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஹோண்டா சிட்டி 5th Gen மாடலுக்கு ரூ. 59 ஆயிரத்து 292 வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி அல்லது ரூ. 32 ஆயிரத்து 292 மதிப்புள்ள இலவச அக்ச்ஸரீக்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய கார் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதன் பெட்ரோல் சிவிடி மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் சள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், பழைய கார் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 7 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஹோண்டா ஜாஸ் மாடலை வாங்கும் போது ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் கார் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.
ஹோண்டா அமேஸ் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி அல்லது ரூ. 11 ஆயிரத்து 896 மதிப்பிலான அக்சஸரீக்கள், ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ் மற்றும் ரூ. 3 ஆயிரம் மதிப்பிலான கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹோண்டா சிட்டி 4th Gen வாங்கும் போது ரூ. 5 ஆயிரம் லாயல்டி பலன்கள் மட்டும் வழங்கப்படுகிறது. இதுதவிர வேறு எந்த பலன்களும் இந்த மாடலுக்கு வழங்கப்படவில்லை.
- டொயோட்டா நிறுவனம் விரைவில் கிளான்சா CNG வேரியண்டை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புது CNG காருக்கான முன்பதிவுகள் துவங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டொயோட்டா நிறுவனம் தனது கிளான்சா CNG மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. முன்னதாக மாருதி சுசுகி நிறுவனம் தனது பலேனோ S-CNG வெர்ஷன் விலையை இந்தியாவில் அறிவித்து இருந்தது. புதிய பலேனோ S-CNG மாடல் விலை இந்தியாவில் ரூ. 8 லட்சத்து 28 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
மாருதி சுசுகியை தொடர்ந்து டொயோட்டா நிறுவன விற்பனையாளர்கள் புதிய கிளான்சா CNG மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய கிளான்சா CNG மாடல் கிளான்சா e-CNG பெயரில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த முன்பதிவுகள் விற்பனையாளர்கள் தரப்பில் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது.

இந்த நிலையில், புதிய டொயோட்டா கிளான்சா CNG மாடலின் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் டொயோட்டா கிளான்சா CNG மாடல் S, G மற்றும் V என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
புதிய டொயோட்டா கிளான்சா e-CNG மாடலில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் CNG கிட் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த கார் பெட்ரோல் மோடில் 89 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இந்த கார் 76 ஹெச்பி பவர், 98.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.