என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cargo"

    • 30-க்கும் மேற்பட் டோர் சரக்கு வாகனத்தில் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அவர்களது குல தெய்வமான அய்யனார் கோவிலுக்கு ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வழிபாடு நடத்துவதற்காக சென்றனர்.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் திடீரென ரோட்டில் கவிழ்ந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள சீராப்பள் ளியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் உள்பட 30-க்கும் மேற்பட் டோர் சரக்கு வாகனத்தில் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அவர்களது குல தெய்வமான அய்யனார் கோவிலுக்கு ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வழிபாடு நடத்துவதற்காக சென்றனர்.

    அங்கு அவர்கள் வழி பாடு நடத்திவிட்டு நேற்று மாலை 6.30 மணியளவில் அதே சரக்கு வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி வந்தனர். சீராப்பள்ளி யைச் சேர்ந்த தர்மலிங்கம் (வயது 50) சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தார். ராசிபுரம்-நாம கிரிப்பேட்டை சாலையில் சீராப்பள்ளி அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் வந்து கொண்டி ருந்த போது திடீரென்று ஸ்டேரிங் லாக் ஆகிவிட்ட தாக கூறப்ப டுகிறது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் திடீரென ரோட்டில் கவிழ்ந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் அப்போது கூச்ச லிட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடிவந்து காயம் பட்ட வர்களை 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராசி புரம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 14 பெண்கள் உட்பட 22 பேர் காயம் அடைந்தனர். இவர்க ளில் 17 பேர் ராசிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர். அவர்கள் விவரம் பின்வருமாறு:-

    வனிதா (26), ராமாயி (65), பாப்பு (48), சரஸ்வதி (22), கல்பனா (46), அத்தாயி (70), லட்சுமி (58), சின்ன பொன்னு (65), ஜெயம்மாள் (44), ருகமணி(40), இளைய நிலா (13), பரிமளா (45), சிவா(13), தங்கமணி (48), இளங்கோ (45), தஸ்வின் (10), கோல் வேந்தன் (3) இவர்கள் அனைவரும் தனியார் ஆஸ் பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    விசாரணை

    மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த நந்தகுமார் (17), கவிதா (36), பவுன் (55), சிவகாமி (55), ஆதித்தன் (8) உள்பட 5 பேர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர். இதில் பவுன் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி னார். டிரைவர் தர்ம லிங்கம் காயம் இன்றி தப்பிய தாக கூறப்படுகிறது. விபத்தில் காயம் அடைந்த வர்கள் அனைவரும் சீராப் பள்ளியை சேர்ந்தவர்கள் ஆவர். விபத்து குறித்து நாம கிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கடத்தப்பட்ட கப்பலில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    டாக்கா:

    சோமாலிய கடற்கொள்ளையர்கள் அடிக்கடி வணிக கப்பல்களை கடத்தி செல்கிறார்கள். அரபிக் கடலில் செல்லும் கப்பல்களை கடத்திச் சென்று பிணைத் தொகை கேட்டு மிரட்டுகிறார்கள்.

    கடற்கொள்ளையர்களின் அட்டூழியங்களை ஒடுக்க இந்திய கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்திலும் சோமாலிய கடற்கொள்ளையர் கடத்திய கப்பலை இந்திய கடற்படை மீட்டது.

    இந்த நிலையில் இந்திய பெருங்கடல் அருகே வங்காளதேச நாட்டின் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர்.


    அந்த கப்பலை மறித்து ஆயுதங்களுடன் 22 பேர் ஏறியுள்ளனர். கப்பலில் இருந்த ஊழியர்களை மிரட்டி சிறை பிடித்துள்ளனர். தற்போது கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இங்கிலாந்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்பு கூறும்போது, கடத்தப்பட்ட கப்பலில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கப்பலில் ஆயுதங்களுடன் 22 பேர் உள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

    கப்பலில் எத்தனை ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் எந்தெந்த நாடுகளை சேர்ந்தவர்கள் போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

    • துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய சரக்குகளையும் துரிதமாக ஏற்றி இறக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
    • சர்வதேச சரக்கு விமான போக்கு வரத்தில், சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கக்கூடியது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆலந்தூர்:

    அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் நேஷ்னல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சரக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த, பெரிய ரக சரக்கு விமானங்களில் ஒன்றான 747-400 ரக சரக்கு விமானம், ஜோர்டான் நாட்டின் அம்மான் விமான நிலையத்தில் இருந்து, சுமார் 124 டன் சரக்குகளுடன் புறப்பட்டு, சென்னை சர்வதேச விமான நிலைய சரக்ககம் பகுதிக்கு வந்து தரை இறங்கியது.

    வானத்தின் இளவரசி என்று அழைக்கப்படும் இந்த மிகப்பெரிய சரக்கு விமானம் சென்னையில் தரை இறங்கியது சென்னை விமான நிலைய சரக்கக பகுதியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக சரக்கக பகுதி ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, விமானத்தில் வந்த சரக்குகளை இறக்கினர்.

    மேலும் சென்னையில் இருந்து துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய சரக்குகளையும் துரிதமாக ஏற்றி இறக்கும் பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் அந்த சரக்கு விமானம் சென்னையில் இருந்து துபாய் வழியாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு புறப்பட்டு சென்றது.

    இந்த சரக்கு விமானம் சுமார் 125 டன் சரக்குகளை ஒரே நேரத்தில் கையாளக்கூடியது.

    அதுமட்டுமின்றி இது பயணிகள் விமானமாகவும் இயக்கக்கூடியது. பயணிகள் விமானமாக இயங்கும் போது, ஒரே நேரத்தில் 660 பயணிகள் செல்ல கூடிய விமானமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    சென்னை விமான நிலையம் சரக்குகளை திறம்பட கையாளுவதில் தற்போது உலக அளவில் சிறந்த சரக்கக விமான நிலையமாக செயல்படுவதால் இதைப்போல் வெளிநாடுகளில் இருந்து, மிகப்பெரிய ரக சரக்கு விமானங்கள், சென்னைக்கு வந்து செல்கின்றன. இது சர்வதேச சரக்கு விமான போக்கு வரத்தில், சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கக்கூடியது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிவகங்கை அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    • சரக்கு வாகனத்தின் டயர் வெடித்து வாகனம் ரோட்டில் கவிழ்ந்தது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சீரணி அரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தினசரி மதுரையிலிருந்து திருப்பத்தூருக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் பர்னிச்சர், பெயிண்ட், ஆட்டோ மொபைல், எலக்ட்ரிகல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை ரெகுலர் சர்வீஸ் செய்யும் சரக்கு வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு மதுரையிலிருந்து சரக்குகளை ஏற்றி கொண்டு நேற்று காலை 6.30 மணி அளவில் மதுரையில் இருந்து திருப்பத்தூருக்கு வரும் வழியில் கருப்பூர் அருகே வேட்டங்குடி பட்டி பறவைகள் சரணாலயம் பகுதியில் சரக்கு வாகனத்தின் டயர் வெடித்து வாகனம் ரோட்டில் கவிழ்ந்தது.

    இதில் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக டிரைவர் ராஜா உயிர் தப்பினார். இதனை கண்ட பொதுமக்கள் திருப்பத்தூர் நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இனஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம், திருப்புத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஆனந்த் சுப்பிரமணியம் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரக்கு வாகனத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    மேலும் விபத்தில் காயமடைந்த டிரைவர் ராஜாவை போலீசார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    ×