என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cargo van"

    • கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு 16 மாடுகளை ஏற்றிகொண்டு சரக்கு வேன் தடை செய்யப்பட்ட சோதனைச் சாவடியை கடந்து சென்றுள்ளது.
    • இது குறித்து தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.தாளவாடியில் இருந்து தலமலை வழியாக சத்தியமங்கலம் செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இச்சாலையில் உள்ளூர் மக்கள் மட்டுமே சென்றுவர அனுமதி உள்ளது.

    உள்ளூர் கிராம மக்கள் தவிர வேறு வாகனங்கள் செல்ல வனத்துறையால் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக மகாராஜன்புரம் மற்றும் தலமலை ,திம்பம் பகுதியில் வனத்துறையினர் 3 சோதனைசாவடி அமைத்துள்ளனர். வாகனங்கள் சோதனைக்கு பின்னே அனுமதிக்கப்படும்.

    இந்தநிலையில் நேற்று மாலை கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு 16 மாடுகளை ஏற்றிகொண்டு சரக்கு வேன் தடை செய்யப்பட்ட சோதனைச் சாவடியை கடந்து சென்றுள்ளது. இந்த சோதனைச் சாவடி அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருந்துள்ளனர்.

    இந்நிலையில் இது பற்றி ஆசனூர் வனகோட்ட புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தடை செய்யப்பட்ட வனச்சாலையில் மாடுகளை ஏற்றி சென்ற சரக்கு வேனை பறிமுதல் செய்ய வனத்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

    அதன் பேரில் தலமலை வனச்சரகர் சதீஷ் (பொறுப்பு) சம்பவ இடத்துக்கு சென்று தடை செய்யப்பட்ட வனச்சாலையில் சென்ற சரக்கு வேனை மாடுகளுடன் பறிமுதல் செய்து தாளவாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக அரசு வாகனம் மற்றும் சரக்கு வேன் மோதி கொண்டது. இதில் அரசு வாகன டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • இது குறித்து ஆசனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஓசூர் கிராமத்தில் ஹீமோ குளோ பினோபதி திட்ட விரிவாக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    இந்த விழாவுக்காக ஈரோட்டில் இருந்து தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட அரசு வாகனம் கொண்டு வரப்பட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் மாலை அந்த அரசு வாகனம் ஈரோடு சென்றது.

    அந்த அரசு வாகனம் ஆசனூர் தேசிய நெடுஞ் சாலை செம்மண்திட்டு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகருக்கு ஒரு சரக்கு வேன் சென்றது.

    அப்போது ஒரு வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக அரசு வாகனம் மற்றும் சரக்கு வேன் மோதி கொண்டது. இதில் அரசு வாகன டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அப்போது நிகழ்ச்சி முடித்து கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அந்த வழியாக வந்தார். விபத்து குறித்து அமைச்சருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து அமைச்சர் சம்பவ இடத்தில் இறங்கி விபத்து குறித்து கேட்டறிந்தார்.

    இது குறித்து ஆசனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×