என் மலர்
நீங்கள் தேடியது "caste certificate"
ஊத்துக்கோட்டை:
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் மெய்யூர் ஊராட்சிக்கு உள்பட்ட வெம்பேடு பகுதியில் 45 இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாதி சான்று இல்லாததால் தமிழக மற்றும் மத்திய அரசுகளின் சலுகைகள் பெற முடியவில்லை.
இதனை கருத்தில் கொண்டு சாதி சான்று வழங்ககோரி இப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி திருவள்ளூர் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கோட்டாட்சியர் ஊத்துக்கோட்டை தாசில்தாருக்கு இது குறித்து பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் ஊத்துக்கோட்டை தாசில்தார் சாதி சான்று வழங்காமல் விசாரணை என்ற பெயரில் அலைக் கழிக்கிறார் என்று வேம்பேடு பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனை கண்டித்தும், சாதி சான்று உடனே வழங்க கோரியும் வேம்பேடு பகுதி மக்கள் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் பூண்டி ஒன்றியம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட பொருளாளர் குமரவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழரசு, தலைவர் சின்னதுரை, ஒன்றிய துணைத் தலைவர் முருகன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை மூலம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்ட்ட காட்டுமலையனூர் நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து உயர் நிலைப் பள்ளி திறப்புவிழா காட்டுமலையனூரில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். வனரோஜா எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கீழ்பென்னாத்தூர் கு.பிச்சாண்டி, கலசபாக்கம் பன்னீர்செல்வம், செய்யாறு தூசி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு தரம் உயர்த்தப்பட்ட பள்ளியை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.
2017-18ம் கல்வியாண்டில் தமிழகத்தில் 100 அரசு பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 100 அரசு பள்ளிகள் உயர் நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தபட்டுள்ளது. மேலும் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறது. எதிர்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.
அதன்படி, கீழ்பென்னாத்தூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி வைத்த கோரிக்கையான கீழ்பென்னாத்தூர் தொகுதியில் வாழும் பழங்குடி இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை, தமிழக முதல்வரிடம் பரிந்துரை செய்து சான்றிதழ் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசினார்.
வீட்டில் இருந்தபடியே சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை பெறும் வகையிலான புதிய செயலியை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அதன் சந்தாதாரர்களுக்கு உயர் வரையறை தரத்தில் மிக துல்லியமான சேவை ‘எச்.டி செட்டாப் பாக்ஸ்’ வாயிலாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சந்தாதாரர்களுக்கு ‘எச்.டி செட்டாப் பாக்ஸ்கள்’ வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 சந்தாதாரர்களுக்கு ‘எச்.டி செட்டாப் பாக்ஸ்களை’ வழங்கினார். அத்துடன் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் ‘எச்.டி.’ டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையையும் தொடங்கி வைத்தார்.
தற்போது ‘எஸ்.டி செட்டாப் பாக்ஸ்கள்’ விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. ‘எச்.டி’ ஒளிபரப்பு சேவை உயர்சந்தை தேவையை பூர்த்தி செய்வதால், இச்சேவையை விரும்பும் அனைத்து சந்தாதாரர்களுக்கும் ‘எச்.டி. செட்டாப் பாக்ஸ்கள்’ குறைந்த விலையான ரூ.500-க்கு உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வாயிலாக வழங்கப்படும். மேலும், தற்போது தொடங்கப்பட்டுள்ள எச்.டி. ஒளிபரப்பு சேவையில், மூன்றாவது தொகுப்பாக 380 ‘எஸ்.டி.’ சேனல்களுடன், 45 ‘எச்.டி.’ சேனல்களும் சேர்த்து மொத்தம் 425 சேனல்கள் ரூ.225 மற்றும் ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து மாத கட்டணத்தில் வசூலிக்கப்படும்.
இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும், தேசிய மின் ஆளுமை திட்டத்தின் மூலம் புதிய செல்போன் செயலி தேசிய அளவில் உருவாக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு துறைகள் முதல் உள்ளாட்சி துறைகள் வரை நாடு முழுவதும் மின் ஆளுமை மூலம் வழங்கப்பட்டு வரும் சேவைகளை ஒரே தரவுதளத்தின் கீழ் இந்த செயலி வழங்கும்.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மூலம் மின்மாவட்ட திட்டத்தின் கீழ் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, வருவாய் துறையை சேர்ந்த 3 சேவைகளான சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் பிறப்பிட, இருப்பிட சான்றிதழ் ஆகியவை ( UM-A-NG ) செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, 24 மணி நேரம் வீட்டில் இருந்தபடியே சான்றிதழ்களை பெற முடியும்.
பொதுமக்களுக்கான அரசு துறைகளின் 63 சேவைகள் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பொதுசேவை மையங்கள் மற்றும் இ-சேவை மையங்கள் வழியாக மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இங்கு கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில், சேவைகளை இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் எளிதில் விண்ணப்பித்து பெற முடியும். ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் www.tnsev-ai.tn.gov.in/cit-iz-en என்ற திறந்தநிலை சேவைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக வருவாய் துறையின் 20 சான்றிதழ் சேவைகள் வழங்கப்பட உள்ளது. இந்த பொதுமக்களுக்கான திறந்தநிலை சேவை தளத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #EdappadiPalanisamy #AIADMK
ஈரோடு:
ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று பர்கூர் மலைப்பகுதி மற்றும் காளிமலை பகுதியை சேர்ந்த பழங்குடி மக்கள் மாநில தலைவர் வரதராஜு தலைமையில் திரண்டனர். மொத்தம் 800-க்கும் மேற் பட்டவர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
28 ஆண்டுகளாக குடியிருந்து வரும் எங்களுக்கு இதுவரை சாதி சான்றிதழ்கள் தரவில்லை. இதனால் எங்களால் அரசு சலுகை, மானியம் என எதுவும் பெற முடியவில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் தங்களுக்கு பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்களும் தங்களது குழந்தைகளுடன் வந்து கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்கள் கூறும் போது, ‘‘28 ஆண்டு காலமாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். சாதி சான்றிதழ் கேட்டு பல முறை மனுக்கள் கொடுத்து விட்டோம். இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்’’ என்று கூறினர்.