என் மலர்
நீங்கள் தேடியது "Caution"
- வெண்ணாறு ஆறுகளின் கரையோர கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆற்றில் இறங்காமல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
- கால்நடைகளை குளிப்பாட்டுவதற்காகவும், மேய்ச்சலுக்காகவும் ஆற்றுப்பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம்.
திருவையாறு:
திருவையாறு தாசில்தார் பழனியப்பன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன், ஊராட்சி ஒன்றிய் ஆணையர்கள் நந்தினி, கென்னடி, பேரூராட்சி தலைவர் கஸ்தூரி நாகராஜன், மற்றும் செயல் அலுவலர் சோமசுந்தரம் ஆகியோர் மழை, வெள்ளப் பெருக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்களுக்கு கூறியுருப்பதாவது,
தற்போது கர்நாடக மாநிலத்திலும் தமிழ்நாட்டிலும் தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் காவிரியில் அதிகமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் மேட்டூர் அணையிலிருந்து தமிழக காவிரி ஆற்றில் 1,85,000 கனஅடி அளவு தண்ணீர் திறக்கப்பட்டு கரைபுரண்டு வந்துகொண்டிருக்கிறது.
இதனால், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டாரத்தில் ஓடுகிற கொள்ளிடம், காவிரி, குடமுருட்டி, வெட்டாறு, மற்றும் வெண்ணாறு ஆகிய ஆறுகளில் அதிகளவு வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது.
எனவே, திருவையாறு பேரூராட்சி எல்லைக்குட்பட்ட ஸ்ரீராம் நகர், 15 மண்டபத்தெரு, புதுஅக்ரஹாரம், புஷ்யம ண்டபத்தெரு, திருமஞ்சனவீதி, செவ்வாய்க்கிழமைத் தெரு, தியாகராஜர் காலனி, மற்றும் அகிலாண்டபுரம் ஆகிய காவிரிக் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், திருவையாறு வட்டாரத்தில் கொள்ளிடம், காவிரி, குடமுருட்டி, வெட்டாறு மற்றும் வெண்ணாறு ஆகிய ஆறுகளின் கரையோரங்களைச் சார்ந்த கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களும் ஆற்றில் இறங்காமல் முன்னெச்ச ரிக்கையுடன் இருக்குமாறும்.
கால்நடைகளை குளிப்பாட்டுவதற்காக ஆற்றில் இறக்க வேண்டாம் என்றும், மேய்ச்சலுக்காக கால்நடைகளைஆற்றுப் பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும், ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படும்போது மேட்டுப்பாங்கான இடங்களு க்கும், அரசுத்துறையினரின் வழிகாட்டுதலின்படி அருகாமையில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாயக் கூடங்களுக்கும் சென்று பாதுகாத்துக் கொள்ளுமாறும், ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் நேரிட்டால் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஊராட்சி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கவும் வேண்டுமாறும் கூறியுள்ளனர்.
- பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு உணவுகள் வருவாய்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
- அளக்குடி பகுதியில் தடுப்பு சுவரில் ஏற்பட்ட பள்ளங்களை மணல் மூட்டைகள் கொண்டு அடைக்கப்படும் பணிகளை பார்வையிட்டார்.
சீர்காழி:
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் கொள்ளிடத்தில் 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து சென்று பழையாறு கடலில் கலந்து வருகிறது.
இந்த வெள்ளத்தால் திட்டு கிராமங்களான வெள்ளை மணல், நாதல்படுகை, முதலைமேடு திட்டு ஆகிய கிராமங்களை முழுமையாக தண்ணீர் சூழ்ந்து கிராமத்தின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் பலர் தங்கள் கால்நடைகள் மற்றும் உடமைகளுடன் கரைப்பகுதியில் தங்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு உணவுகள் வருவாய்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடைய கொள்ளிடம் ஆறு அளக்குடி பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிகை நடவடிக்கை பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வீட்டு வசதி நகர் வளர்ச்சி அரசு முதன்மை செயலர் கித்தேஸ்குமார் மக்வானா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காட்டூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்று நீர் கரையை அரித்து உள்ளே புகும் அபாய நிலை உள்ளதை நேரில் பார்வையிட்ட கித்தேஷ்குமார் அப்பகு தியில் கருங்கல் கொட்டி கரையை பலப்படுத்திட கூறினார். தொடர்ந்து அளக்குடி பகுதியில் தடுப்பு சுவரில் ஏற்பட்ட பள்ளங்களை மணல் மூட்டைகள் கொண்டு அடைக்கப்படும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் முகாமில் தங்கி உள்ள மக்களை சந்தித்து உணவுகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் வழங்கப்படுகிறதாஎன அரசு முதன்மை செயலாளர் கேட்டறிந்தார். ஆய்வின் போது மயிலாடுதுறை கலெக்டர் லலிதா, ஆர்.டி.ஓ அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் உடன் இருந்தனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
- மண்சுவர் வீடுகளில் தங்கியிருப்பவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொ ள்ள வேண்டிய முன்னெ ச்சாரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.
இதில் கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
பருவமழை காலத்தின் போது நீர்நிலைகளில் சிறிது உடைப்பு ஏற்பட்டாலும் அதனை உடனடியாக சரி செய்திட வேண்டும். பொதுமக்கள் பாதிப்பு அடையாமல் இருப்பதற்காக அந்த இடத்திலிருந்து மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து, தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்.
ஒவ்வொரு கிராமத்தி ற்கும் முதல்நிலை மீட்பாள ர்களாக குறைந்தது 5 தன்னார்வலர்களை கண்டறிந்து அவர்க ளின் பட்டியலை வைத்திருக்க வேண்டும். மண்சுவர் வீடுகளில் தங்கியிருப்பவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டும். நீர்வள ஆதார அமைப்பினர் நீர் செல்லும் பாதைகளுக்கு மேல் சாலை அமைத்திருந்தால் பாலங்களில் அடைப்பு இல்லாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். நீர்நிலைகளில் கரைகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதென கண்டறியப்படும் கண்மா ய்களில் மணல் மூட்டைகள், சவுக்கு மூட்டைகளை தேவையான அளவிற்கு வைத்துக் கொள்ள வேண்டும்.
சாலையில் சேதம் ஏற்படும் பட்சத்தில் அவற்றிற்கு மாற்று வழி செய்திட ஜே.சி.பி., மின்அறுவை எந்திரங்கள், வாகனங்கள் மற்றும் பணியாளர்களை நெடுஞ்சாலைத்துறையினர் தயாராக வைத்திருக்க வேண்டும்.
அலுவலர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டு பொதுமக்கள் தென்மேற்கு பருவமழையி னால் பாதிப்பு அடையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட வன அலுவலர் பிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் இளஞ்செழியன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் காமாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மங்களநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், உதவி ஆணையர் (கலால்) கண்ணகி, மாவட்ட சமூக நல அலுவலர் அன்புகுளோரியா, தாட்கோ மேலாளர் முத்துச்செல்வி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.