என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "check fraud"

    • வங்கதேசத்தை ஆண்ட அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஷகிப் அல் ஹசன் இருந்தார்.
    • வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அவர் தற்போது வரை வங்கதேசத்திற்கு திரும்பவில்லை.

    கடந்தாண்டு ஜூலை மாதம் வங்கதேசத்தில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்தனர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தது அடுத்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

    மாணவர்கள் போராட்டத்திற்கு முன்பு வரை வங்கதேசத்தை ஆண்ட அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஷகிப் அல் ஹசன் இருந்தார். பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அவர் தற்போது வரை வங்கதேசத்திற்கு திரும்பவில்லை.

    இதனிடையே கிட்டத்தட்ட ரூ.3 கோடி மதிப்பிலான செக் மோசடியில் ஈடுபட்டதாக வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசன் உட்பட 4 பேர் மீது IFIC வங்கி புகார் அளித்திருந்தது.

    இதுதொடர்பான வழக்கில் ஷகிப் அல் ஹசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து டாகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு வங்கதேசம் திரும்பாத ஷகிப் அல் ஹசன், இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிமன்றம் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

    நிலக்கோட்டை அருகே காசோலை மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    நிலக்கோட்டை:

    வேடசந்தூர் வ.உ.சி. நகரைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் பாலமுருகன் (வயது 41). இவருக்கு சொந்தமான வீடு நிலக்கோட்டை தாலுகா அம்மையநாயக்கனூரில் உள்ளது. இந்த வீட்டில் ராஜதானியைச் சேர்ந்த வேல்முருகன் (48) என்பவர் ரூ.4 லட்சத்துக்கு ஒத்திக்கு குடியிருந்து வந்தார்.

    இந்த வீட்டை விற்க முடிவு செய்து பாலமுருகன் கடந்த 2016-ந் தேதி வீட்டை காலி செய்யுமாறு அவரிடம் கூறியுள்ளார். அதற்கு வேல் முருகன் தானே இந்த வீட்டை வாங்கிக் கொள்வதாக கூறினார். ரூ.20 லட்சத்துக்கு விலை பேசி முதல் தவணையாக ரூ.15 லட்சத்துக்கான காசோலையை 18.5.16-ந் தேதி வேல்முருகன் கொடுத்துள்ளார்.

    அதனை 5 மாதங்கள் கழித்து வங்கியில் செலுத்தி பணம் எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். 5 மாதங்கள் கழித்து வங்கியில் பணம் எடுக்க சென்ற போது அது திரும்பி வந்துள்ளது.

    இதனிடையே பால முருகனின் தந்தை சுப்புராஜ் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அதன் பிறகு சில மாதங்கள் கழித்து பாலமுருகன், வேல்முருகனிடம் சென்று கேட்டபோது உனது தந்தை சுப்புராஜிடம் பணத்தை கொடுத்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

    அதற்கு எனக்கு தெரியாமல் என் தந்தை பணம் வாங்கி இருக்க மாட்டார் என உறுதியாக கூறினார். வேல் முருகனும் அவரது மனைவி வனிதாவும் பாலமுருகனை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இது குறித்து நிலக்கோட்டை டி.எஸ்.பி.யிடம் பாலமுருகன் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பண மோசடியில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்த வேல்முருகன் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×