என் மலர்
நீங்கள் தேடியது "Clean City"
- தூய்மை நகரத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் நகராட்சி, வைமா இளம்படை மாணவர்கள் மற்றும் கேசா டி மிர் இணைந்து தூய்மை நகரத்தி ற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தொடங்கி வைத்தார்.
வைமா வித்யாலயா பள்ளி முதல்வர் கற்பகலட்சுமி தலைமை தாங்கினார். வைமா இளம்படை இணை ஒருங்கிணைப்பாளர் ராமராதா வரவேற்றார். ஜே.சி.ஐ. ராஜபாளையம் கேசா டி மிர் தலைவர் தேவி நிகழ்ச்சியை அறிமுகம் செய்தார். இளம்படை ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி, இளம்படை மாணவர்களை அறிமுகம் செய்தார். இளம்படை மாணவர்கள் ''எனது குப்பை எனது பொறுப்பு'' என்ற தலைப்பில் பாடல் பாடினர். 4-ம் வகுப்பு மாணவர் ஆதேஷ் ''மக்கும் குப்பை மக்காத குப்பை'' என்ற தலைப்பில் பேசினார். குப்பையை தரம் பிரித்தல் பற்றி வைமா இளம்படை மாணவர்கள் பொதுமக்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தனர். வைமா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் திருப்பதிசெல்வன், மேனேஜிங் டிரஸ்டி அருணா திருப்பதி செல்வன் வழிகாட்டுதலின்படி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் தூய்மை நகரங்களை பட்டியலிட்டு அறிவித்து வருகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் 4,237 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து ஆய்வு செய்யப்படுகிறது. அதற்காக ஆன்-லைன் மூலம் பொதுமக்கள் கருத்தும் கேட்கப்படுகிறது. 1 கோடியே 40 லட்சம் மக்கள் பங்கேற்று கருத்து தெரிவிக்கிறார்கள். ஒவ்வொரு கேள்விக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படுகிறது. மொத்தம் 5 ஆயிரம் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அவற்றில் அதிகபட்ச மதிப்பெண் பெறும் நகரங்களை வரிசைப்படுத்தி தூய்மை நகரங்கள் என பட்டியலிடப்படுகிறது.
திருச்சி மாநகராட்சி கடந்த 2015-ம் ஆண்டு 14.25 புள்ளிகள் பெற்று இந்தியாவில் தூய்மை நகரங்கள் பட்டியலில் 2-வது இடத்தை பெற்றது. 2016-ம் ஆண்டில் 3-வது இடமும், 2017-ம் ஆண்டு 7-வது இடமும் பெற்றது. கடந்த ஆண்டு பட்டியலில் மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டு 13-வது இடத்தை பெற்றது. இருப்பினும் தமிழ்நாட்டில் முதலிடம் என்று ஆறுதல் அடைய செய்தது.
இந்த ஆண்டுக்கான தூய்மை நகரங்கள் பட்டியலில் இடம் பிடிக்க, ஆன்-லைன் மூலம் மக்கள் கருத்து கேட்டு மதிப்பெண் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டது. அதற்காக திருச்சி மாநகராட்சி சார்பில் புதிய செயலி (ஆப்) அறிமுகப்படுத்தப்பட்டது. அது மட்டுமல்லாது முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து தளங்களையும் பயன்படுத்த ஊக்குவிப்பு பணிகளில் ஈடுபட்டது. அதன் பயனாக திருச்சி மாநகராட்சி தூய்மை நகரங்கள் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.
புள்ளி விவரங்கள் அடிப்படையில் இந்தியாவில் தூய்மை நகரங்கள் பட்டியலில் ஐதராபாத் முதலிடத்தையும், நொய்டா 2-வது இடத்தையும், தெற்கு டெல்லி 3-வது இடத்தையும், திருச்சி மாநகராட்சி 4-வது இடத்தையும் பிடித்துள்ளன. தினமும் சராசரியாக 10 ஆயிரம் பேர்வரை, ஆன்-லைன் மூலம் திருச்சி மாநகராட்சி நடவடிக்கைகள் தொடர்பாக கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.