என் மலர்
நீங்கள் தேடியது "collections"
- ரெட்ரோ திரைப்படம் முதல் நாளில் ரூ.46 கோடி ரூபாயை தாண்டியது.
- சூர்யா நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக ரெட்ரோ உருமாறியுள்ளது.
நடிகர் சூர்யாவின் 44-வது படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
முதல் நாள் வசூலாக திரைப்படம் உலகளவில் 46 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. சூர்யா நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக ரெட்ரோ உருமாறியுள்ளது.
இந்நிலையில் ரெட்ரோ படம் உலக அளவில் ரூ.104 கோடி வசூலை கடந்துள்ளது. இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர், ரெயில்கள், ஸ்டேஷன்களில் தொடர் ஆய்வு நடத்துகின்றனர்.
- ‘லக்கேஜ்’ எடுத்து வந்தவர்களிடம் 3.55 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு ள்ளது.
சேலம்:
சேலம் ரெயில்வே கோட்டத்தில் முதுநிலை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர், ரெயில்கள், ஸ்டேஷன்களில் தொடர் ஆய்வு நடத்துகின்றனர்.
கடந்த 2022 ஏப்ரல் முதல், 2023 மார்ச் வரையான நிதியாண்டில் டிக்கெட் சோதனையின் போது, 15 கோடியே 57 லட்சத்து 14 ஆயிரத்து 685 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக டிக்கெட் இல்லாமல் பயணித்த 2 லட்சத்து 821 பேரிடம், 14 கோடியே 10 லட்சத்து 7,028 ரூபாய், முறையற்ற பயணம் செய்தவர்களிடம் 1.43 கோடி ரூபாய், கூடுதல் 'லக்கேஜ்' எடுத்து வந்தவர்களிடம் 3.55 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு ள்ளது.2021-22ம் நிதியாண்டில், 11.27 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதை விட, 4.30 கோடி ரூபாய் அதிக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
- குற்ற வழக்குகள் உள்பட மொத்தம் 411 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.
- இந்த நீதிமன்றத்தில் ரூ.6 லட்சத்து 93 ஆயிரத்து 800 வசூல் செய்யப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் கோர்ட்டில் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமான அப்துல் கனி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள், குடும்ப வன்முறை வழக்குகள் குற்ற வழக்குகள் உட்பட மொத்தம் 411 வழக்குகள் சமரசத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில் 206 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மேலும் இந்த நீதிமன்றத்தில் ரூ 6 லட்சத்து 93 ஆயிரத்து 800 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
இதில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் போலீசார்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் வட்டச் சட்டப் பணிகள் குழு நிர்வாக உதவியாளர் மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.