என் மலர்
நீங்கள் தேடியது "Collector Ravichandran"
- சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
- தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
சுரண்டை:
சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நெல்லை வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் சின்னத்தாய் வாழ்த்துரை வழங்கினார். கவுரவ விரிவுரையாளர் ராஜதுரை வரவேற்றார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்து, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி விழாவில் பேசியதாவது:-
நான் கிராமப் பகுதியில் இருந்த கலைக் கல்லூரியில் இயற்பியல் துறையில் படித்தேன். இன்று இந்த நிலைக்கு உயர்ந்து உள்ளேன். அதுபோல் நீங்களும் உயர வேண்டும். மருத்துவம் மற்றும் பொறியாளர் மட்டுமே உயர்ந்த படிப்பு அல்ல .சிவில் சர்வீஸ் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு பட்டப் படிப்பு படித்தால் மட்டுமே போதும். நாம் எந்தவிதமான படிப்பை படித்தாலும் அதில் திறமையாக படித்து, உங்கள் கல்லூரி மற்றும் ஊரில் உள்ள நூலகங்களை பயன்படுத்தினால் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடையலாம், நீங்கள் வேலை தேடுபவராக இல்லாமல் வேலை கொடுப்பவராக உயர வேண்டும் என்பது எனது விருப்பம்.
மேலும் இயற்கை எழில் சூழ்ந்த தென்காசி மாவட்டத்தில் விரைவில் தொழில் நுட்ப பூங்கா அமைய இருக்கிறது. எனவே அனைவரும் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து வேலை வாய்ப்பு குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டல் நிலைய உதவி இயக்குனர் ஹரி பாஸ்கர்,தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரம்யா, தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள், தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் ஜார்ஜ் பிராங்கிளின் ஆகியோர் சிறப்புரையாற்றினார். வீரகேரளம்புதூர் தாசில்தார் தெய்வசுந்தரி, துணை தாசில்தார் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் மார்த்தாண்ட பூபதி நன்றி கூறினார்.
- குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
- கூட்டத்தில் மொத்தம் 316 மனுக்கள் பெறப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஒரு மாற்றுத்திறனாளிக்கு மடக்கு சக்கர நாற்காலி, வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ஒரு பயனாளிக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானியத்தில் பவர் டில்லர் எந்திரத்தினையும் வழங்கினார்.
தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதி மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகள் 2022-23-ல் நடைபெற்ற பேச்சு போட்டிகள், கட்டுரை போட்டிகள், ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு கேடயங்களையும் கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
மேலும், கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 316 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர நாராயணன், உதவி கமிஷனர் (கலால்) ராஜமனோகரன் பொறுப்பு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்
- தென்காசி மாவட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கல்லூரி மாணவர்க ளிடையே பேச்சாற்றாலையும், படைப் பாற்றாலையும் வளர்க்கும் நோக்கில் தென்காசி மாவட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் வருகிற 19-ந்தேதி காலை 9.30 மணிக்கு குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ- மாணவிகளும் கலந்து கொள்ளலாம்.
ஒரு கல்லூரியில் இருந்து ஒரு போட்டிக்கு 2 மாணவர்கள் வீதம் 3 போட்டிகளுக்கு 6 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரின் பரிந்துரையுடன் உரிய படிவத்தினை நிறைவு செய்து இப்போட்டி நடைபெறும் நாளில் அளிக்க வேண்டும்.
தென்காசி மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக இரண்டாம் தளத்தில் செயல்பட்டு வரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.
தென்காசி மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவிகள் இப்போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூட்டத்தில் மொத்தம் 280 மனுக்கள் பெறப்பட்டது.
- மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ரவிச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்திதரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 280 மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா? என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதார ர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொறுப்பு) நடராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி கமிஷனர் (கலால்) ராஜமனோகரன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- குரூப்-பி மற்றும் குரூப்-சி நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி நாள் 4.5.2023 ஆகும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு தொடர்பான அறிவிப்பினை கடந்த 3-4-2023 அன்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப்-பி மற்றும் குரூப்-சி நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது.
இத்தேர்வில் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வு திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விவரங்கள் https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/noticeCG LE03042023.pdf என்ற இணையதள முகவரியிலும் உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்
இந்த பணிக்காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 3.5.2023 மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 4.5.2023 ஆகும்.
தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு ஜூலை 2023ல் ஆந்திரபிரதேச மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் 3 மையங்களிலும் ஆக மொத்தம் 21 மையங்களில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன.
பயிற்சி வகுப்புகள்
இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த இணையதளத்தில் TN Career Services Employment மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் AIM TN என்ற யூ-டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்விற்கான காணொளிகளை கண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே, இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாடியூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- அச்சங்குட்டம் ஊராட்சி யில் பழனி நாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொது மக்களிடையே தேவைகளை கேட்டறிந்தார்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று மே தின சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.
வாடியூர் ஊராட்சி
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாடியூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவர் ஸ்நாபக அந்தோணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் முத்துலெட்சுமி மற்றும் ஒன்றியக் குழு தலைவர் திவ்யா மணி கண்டன் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் மரக்கன்று நட்டார். அதனைத்தொடர்ந்து கிராமசபை கூட்டத்தில் 19 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அதில், "எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம்" என்ற உறுதிமொழி மற்றும் "பெண் குழந்தை களை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் தென்காசி, திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), பிரான்சிஸ் மகாராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் திலகராஜ், விஜயகணபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சில்லரைப்புரவு ஊராட்சி
தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சில்லரைப்புரவு ஊராட்சி யில் உழைப்பாளர் தின சிறப்பு கிராமசபைக்கூட்டம் தலைவர் நா.குமார் தலைமையில் நடைபெற்றது தென்காசி உதவிதிட்ட அலுவலர், (மகளிர் திட்டம்) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ), வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) ஆகியோரும் துணைத் தலைவர் வெ.முத்துச் செல்வி, உறுப்பினர்கள் தங்க மாரியப்பன், தாமரைச் செல்வன், பார்வதி, கணேசன், மகேஸ்வரி,கிராம நிர்வாக அலுவலர், மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் செண்பகராஜன் பல்வேறு தீர்மானங்களை வாசித்து நன்றிகூறினார்.
அச்சங்குட்டம் ஊராட்சி
அச்சங்குட்டம் ஊராட்சி யில் மே தினம் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவி வெங்கடேஸ்வரி முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் கலந்து கொண்டு பொது மக்களிடையே தேவைகளை கேட்டு கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் ஊராட்சி செயலர்மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆவுடையானூர் ஊராட்சி
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையானூர் ஊராட்சியில் மேதினத்தில் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்கராஜன் தலைமையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அரசு அதிகாரிகளால் நிறுத்தம் செய்யப்பட்ட 2022-2023ம் ஆண்டின் 15வது நிதிகுழு மானிய நிதியில் நடைபெறும் பணிகளை அதிகாரிகள் நிறுத்தம் செய்ததை கைவிட்டு மீண்டும் அத்திட்டத்தில் பணிகள் தொடர அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்றும் இது தொடர்பாக நடைபெறும் இந்த கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட்கட்சி (மார்க்சிஸ்ட் லெலின்ஸ்ட்) சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஊராட்சி பகுதிகளில் இருந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து பொதுமக்களின் முழு ஆதர வுடன் தீர்மானம் உடனடி யாக நிறைவேற்றப்பட்டது. மேலும் தீர்மானம் நிறை வேற்றிட உறுதுணையாக இருந்த அனைத்து பொது மக்களுக்கும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் முருகன் நன்றியை தெரிவித்தார்.
- சாரல் அக்ரோ ப்ராடக்ட் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை மத்திய, மாநில அரசு மானியத்தில் இயங்கி வருகிறது.
- கலெக்டர் ரவிச்சந்திரன் தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள பூலாங்குளத்தில், மத்திய, மாநில அரசு மானியத்தில் சாரல் அக்ரோ ப்ராடக்ட் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையை புதிய தொழில் நுட்பத்தில் மேம்படுத்துவதற்காக அதன் நிர்வாக இயக்குனர் கே.ஆர். பால்துரை தலைமையில் பங்குதாரர்கள், தென்காசி கலெக்டரை சந்தித்து மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் கலெக்டர் ரவிச்சந்திரன் அந்த தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தவிட்டில் இருந்து எண்ணெய் தயாரிக்கும் முறைகள் குறித்தும், புதிய தொழில் நுட்பத்தில் மேம்படுத்துவது குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர் கே.ஆர். பால்துரை, பங்குதாரர்கள் வெண்ணிநாடார், ராஜன், தொழில்மைய மேலாளர் மாரியம்மாள் மற்றும் கே.ஆர்.பி. இளங்கோ, சஜனா, பரமசிவன், அலுவலர்கள் சேகர், தட்சணா மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 2-ந்தேதி வெளியிடப்பட்டது.
- வாக்குப்பதிவு தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் நடைபெறும்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகரப்பகுதி உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மாவட்ட அளவில் செயல்படுத் தப்படும் பல்வேறு திட்டங்களை ஒருங்கி ணைத்தல் ஆகிய பணிகளுக்காக மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட உள்ளது.
இதைமுன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்களின் விவரங்கள் அடங்கிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 2-ந்தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல், வாக்காளர் பதிவு அலுவலர், மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட்டது.
இத்தேர்தலில் ஊரகப் பகுதியில் 14 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து 7 உறுப்பினர்களும், நகரப்பகுதிகளில் 180 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் 260 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து 5 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வாக்குப்பதிவு இருக்கு மானால் வாக்குப்பதிவு தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) முத்துகுமார், அலுவலக மேலாளர் (வளர்ச்சி) சண்முகசுந்தரம், செங்கோட்டை நகராட்சி ஆணையர் ஜெயபிரியா, செயல் அலுவலர் (குற்றாலம்) சுஷ்மா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு பாதுகாவலர் நியமன சான்றிதழை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
- பட்டாமாறுதல் உள்பட மொத்தம் 303 மனுக்கள் கூட்டத்தில் பெறப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நல துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 1 மாற்றுத்திறனாளிக்கு காதொலி கருவி, தேசிய உள்ளூர் குழு (எல்.சி) வாயிலாக 1 மாற்றுத்திறனாளிக்கு பாதுகாவலர் நியமன சான்றிதழையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நல துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு மாற்றுத் திறனாளிக்கு காதொலி கருவி ரூ. 8,500 மதிப்பில் உதவி உபகரணம் மற்றும் தேசிய உள்ளுர் குழு (எல்.எல்.சி.) வாயிலாக ஒருவருக்கு பாதுகாவலர் நியமன சான்றுகளையும் வழங்கினார்.
மேலும் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டாமாறுதல் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 303 மனுக்கள் பெறப்பட்டது.
கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந் தப்பட்ட அனைத்துத்துறை அலுவ லர்களுக்கும் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், வட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர நாராயணன், உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராம சுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பணி முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
- அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தென்காசி மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு தலைமையில், தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம், தென்காசி மாவட்டத்தில் நடைமுறை யில் உள்ள திட்டங்களான நில எடுப்புகள், பட்டா மாறுதல், இல்லம் தேடி கல்வி திட்டம், மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம், புதுமைப்பெண் திட்டம், அரசு விடுதிகள், உணவு தர கட்டுப்பாடு, சுரங்கத்துறை பணிகள், மருத்துவமனையில் மருந்துகளின் இருப்பு, முதல்- அமைச்சரின் சிறப்பு திட்டமான பள்ளிகளில் காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பணி முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அனைத்து அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார். மேலும் தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது.
- மனுதாரர்களுக்கு உரிய பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
- 6 பேருக்கு ஒளிரும் மடக்கு குச்சிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
தென்காசி:
தென்காசியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. 265 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
இந்த மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனு தாரர்களுக்கு உரிய பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.8,500 செலவில் காதொலி கருவிகளும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 6 பேருக்கு ஒளிரும் மடக்கு குச்சிகள் தலா ரூ.8,500 செலவிலும் ஆக மொத்தம் ரூ.68 ஆயிரம் மதிப்பில் உதவி உபகரணங்களை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், மாவட்ட வழங்கள் அலுவலர் சுதா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் நடராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கோழிக் கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருத்தல் வேண்டும்.
- மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் ரூ. 1,50,825 மாநில அரசால் வழங்கப்படும்.
தென்காசி:
தென்காசி கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாட்டுக் கோழி
நாட்டுக் கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள் அலகு) நாட்டுக் கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் தென்காசி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
தேர்வு செய்யப்பட வேண்டிய பனாளிகளின் தகுதிகள். ஆதார் நகல் சமர்ப்பிக்க வேண்டும்.
கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ள மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளாக இருத்தல் வேண்டும். நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு உபக ரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு) மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் ரூ. 1,50,825 மாநில அரசால் வழங்கப்படும்.
50 சதவீதம் மானியம்
திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும். ஒவ்வொரு பயனா ளிக்கும் 250 எண்ணிக்கையின 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படும்.
பயனாளிகளுக்கு கோழிக் கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருத்தல் வேண்டும். இத்தப்பகுதி மனிதக் குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா, அடங்கல் நகல் வைத்திருக்க வேண்டும். பயனாளி அக்கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி யினத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். 2022-23-ம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்புத்திட்டத்தின்கீழ் பயனாளி பயனடைந்து இருக்க கூடாது.
தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்கு குறையாமல் பண்ணையை பராமரித்திட உறுதி அளித்திடல் வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட திட்ட மிடப்பட்ட வங்கி கூட்டுறவு வங்கி பயனாளிக்கு நிதியளிக்க தயாராக இருக்க வேண்டும். அல்லது பயனாளி சொந்தமாக முதலீடு செய்ய முன்வந்தால் திட்டத்திற்கு நிதியளிப்பற்கான அவரது நிதி நிறன்களின் சான்றுகளை அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக உதவி மருத்துவர்களை அணுகி உடன் விண்ணப்ப ங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.