search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "comet star"

    • சூரியனை கோள்கள் சுற்றி வருவது போல் ஏராளமான வால் நட்சத்திரங்களும் வலம் வருகின்றன.
    • சூரியனை நீள்வட்டபாதைகளில் ஒவ்வொரு கோள்களும் சுற்றி வருகின்றன.

    ஊட்டி:

    நவீன அறிவியல் நாள்தோறும் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் மனிதனால் தொடமுடியாத இயற்கையின் பாகங்கள் எத்தனையோ உள்ளன.

    அவை ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் அள்ளித் தருபவை என்பது தான் சுவாரசியம். அதில் ஒன்று வானில் தோன்றும் வால்நட்சத்திரங்கள். சூரியனை கோள்கள் சுற்றி வருவது போல் ஏராளமான வால்நட்சத்திரங்களும் வலம் வருகின்றன.

    சூரியனை நீள்வட்டபாதைகளில் ஒவ்வொரு கோள்களும் சுற்றி வருகின்றன. அதேபோல் தூசி, கற்கள், பனிக்கட்டி உள்ளிட்டவை இணைந்த ஏராளமான கலவைகளும் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. இதனை தான் வால்நட்சத்திரம் என்கிறோம்.

    இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி மாலை 6 மணியளவில் மேற்குதொடர்ச்சி மலையொட்டிய ஊட்டியில் மேற்கு வானப்பகுதியில் அரிய வால்நட்சத்திரம் ஒன்று தென்பட்டுள்ளது.

    10 நிமிடங்கள் வானில் தென்பட்ட இந்த வால்நட்சத்திரமானது நன்றாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. இதனை வெறும் கண்ணால் பார்க்க முடிந்தது. ஆனால் அது என்ன என்பது பலருக்கும் தெரியவில்லை. ஏதோ ஒரு இயற்கை நிகழ்வு அல்லது வானவில் என்று மட்டுமே நினைத்தனர்.

    ஆனால் நாசா ஆராய்ச்சியாளரான ஜனார்த்தன் நஞ்சுண்டன் என்பவர் தான் இது இயற்கை நிகழ்வு அல்ல. வானில் தென்பட்டது 80 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரிய வால்நட்சத்திரம் என தெரிவித்துள்ளார்.

    ஊட்டியில் உள்ள மேற்கு வானத்தில் கடந்த 1-ந் தேதி மாலை நேரத்தில் ஒரு அரிய நிகழ்வு காணப்பட்டது. இது வழக்கமான இயற்கை நிகழ்வாக இருக்கும் என்று நினைத்தேன்.

    மேலும் அது வானவில் நிறங்களை போன்று பல வண்ணங்களில் இருந்ததால் அது வானவில்லாக இருக்கும் என்று தான் நான் முதலில் நினைத்திருந்தேன்.

    ஆனால் ஆராய்ச்சி செய்து பார்த்த பின்னர் தான் ஊட்டியில் தென்பட்டது 80 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய வால்நட்சத்திரம் என்பது தெரியவந்தது. இந்த வால்நட்சத்திரமானது பூமியில் இருந்து 129.6 மில்லியன் கி.மீ தொலைவில் இருந்தது.

    மாலை 6 மணியளவில் வானில் தெரிந்த வால்நட்சத்திரமானது 10 நிமிடங்கள் வானவில் அழகாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.

    கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி சீனாவில் இந்த அரிய வால்நட்சத்திரம் தெரிந்ததை சீனாவில் உள்ள பர்பிள் மவுண்டன் அப்சர்வேட்டரி கண்டுபிடித்தது. மேலும் சீனாவை சேர்ந்த வானியல் புகைப்பட நிபுணரான உபேந்திரா பின்னெல்லி என்பவர் இதனை புகைப்படம் எடுத்து உறுதி செய்துள்ளார். ஒரு மாதத்திற்கு பிறகு தென் ஆப்பிரிக்காவில் தெரிந்தது. தற்போது இது மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியான நீலகிரியில் தெரியவந்துள்ளது.

    இந்த வால் நட்சத்திரமானது சூரியன் வருவதற்கு முந்தைய நேரத்திலோ அல்லது சூரியன் மறையும் நேரத்திலோ தெரியும்.

    இந்த வால்நட்சத்திரமானது மீண்டும் வருகிற 12-ந் தேதி வானில் தென்பட வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கொடைக்கானலில் வானில் தோன்றிய அதிசய நிகழ்வான வால் நட்சத்திரத்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

    கொடைக்கானல்:

    விண் வெளியில் அவ்வப்போது வால் நட்சத்திரங்களின் நகர்வு இருப்பது வழக்கம். தற்போது 46பி விர்ட்டியன் வால் நட்சத்திரம் பூமி பாதையில் நகர்ந்தது.

    இந்நிகழ்வு கடந்த 16-ந் தேதி முதல் வானில் தோன்றும் என்றும் இதனை சாதாரண கண்களால் பார்க்கலாம் என்றும் கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி மையம் அறிவித்தது.

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே பனி மற்றும் மேக மூட்டம் அதிக அளவில் இருந்ததால் முதல் நாள் வானமே தெரியாத நிலை ஏற்பட்டது.

    17-ந் தேதி அன்று வானம் தெளிவான நிலையில் இருந்தது. அதன்பின்னர் வால் நட்சத்திரம் சிறிது நேரம் தோன்றி விட்டு மறைந்தது. 3-வது நாள் தெளிவாக தெரிந்தது.

    பூமிக்கு அருகில் வடகிழக்கு திசையில் நீல வண்ணத்தில் சுடர்விட்டு நகர்ந்த இதனை தொலைநோக்கு கருவி இன்றி சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்தனர்.

    இது குறித்து கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சியாளர் கூறியதாவது:-

    தற்போது தென்பட்ட வால் நட்சத்திரம் கார்ல் விர்ட்டியன் என்பவர் 1948-ம் ஆண்டு கண்டுபிடித்தார். இது ஜூபிட்டர் என்னும் வியாழன் குடும்பத்தை சேர்ந்தது. இதனுடைய விட்டம் 600 மீட்டர் ஆகும்.

    1950-க்கு பிறகு பூமிக்கு வரக்கூடிய வால் நட்சத்திரங்களின் தொலைவில் இது 10-வது குறைந்தபட்ச தொலைவாகும். இந்த நட்சத்திரம் கடந்த 15-ந் தேதி பூமியில் இருந்து 0.078 வானவியல் அலகு தூரத்தில் வந்தது. இது பூமியில் இருந்து சந்திரனின் தொலைவை போல 30 மடங்காகும். இனி அடுத்த 20 ஆண்டுகளுக்கு பிறகுதான் இதுபோன்று பிரகாசமாக தெரியும்.

    பெய்ட்டி புயல் காணரமாக வானில் 2 நாட்கள் அதிக அளவு மேக மூட்டம் இருந்ததால் இதனை பெரும்பாலானோர் காண முடியவில்லை. இருந்தபோதும் 3-வது நாள் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் டெலஸ் கோப் மூலம் ஏராளமான சுற்றுலா பயணிகள் இதனை கண்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×