என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "commission"

    திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார். #LSPolls
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

    ஆரணி மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வந்தவாசியில் நாளை மாலை 4.45 மணிக்கு பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர், செய்யாறில் மாலை 5.30 மணிக்கும், ஆரணியில் மாலை 6.30 மணிக்கும், போளூரில் இரவு 7.30 மணிக்கு பிரசாரம் செய்கிறார்.

    பின்னர், திருவண்ணாமலை மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கலசப்பாக்கத்தில் இரவு 8 மணிக்கு பிரசாரம் செய்கிறார். இதையடுத்து, திருவண்ணாமலையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முதல்-அமைச்சர் சிறப்புரையாற்றுகிறார். அதன் பிறகு, திருவண்ணாமலையில் முதல்-அமைச்சர் தங்குகிறார்.

    இதைத் தொடர்ந்து மறுநாள் 29-ந் தேதி காலை 8.30 மணிக்கு கீழ்பென்னாத்தூரில் பேசுகிறார்.

    பின்னர், திருவண்ணாமலை மாவட்டத்தில் தனது பிரசாரத்தை முடித்து கொண்டு விழுப்புரம் மாவட்டம் செல்கிறார்.

    முதல்-அமைச்சரின் பிரசாரம் நடைபெறும் இடம் மற்றும் அவர் செல்லும் வழித்தடம், பொதுக்கூட்டம் நடைபெற உள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். #LSPolls
    நாட்டில் தேசிய மகளிர் ஆணையம் செயல்படுவதைப்போல் ஆண்களுக்கும் தனியாக ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என அரசு சாரா தொண்டு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. #NGO
    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி சர்வதேச தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், நாட்டில் நடைபெற்ற தற்கொலைகள் தொடர்பாக ஆய்வு செய்த ஒரு அரசு சாரா தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று ‘நாட்டில் தேசிய மகளிர் ஆணையம் செயல்படுவதைப்போல் ஆண்களுக்கும் தனியாக ஆணையம் உருவாக்கப்பட வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளது.

    பெண்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள பல சட்டங்களை சில பெண்கள் தவறான முறையில் கணவர்களை பழிவாங்கும் போக்கில் பயன்படுத்துவதால் இதில் இருந்து ஆண்களை பாதுகாக்கும் வகையில் தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என இந்த தொண்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கை அறிவுறுத்தியுள்ளது.

    பிள்ளைகளை கூட்டாக பராமரிக்கும் உரிமைகள் தொடர்பான செயல்பாட்டில் ஈடுபட்டுவரும் World's Rights Initiative for Shared Parenting (CRISP) இந்த தொண்டு நிறுவனம் தேசிய குற்றப்பதிவுகள் ஆவணத்தின் அடிப்படடையில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற தற்கொலை சம்பவங்களை ஆய்வு செய்து இந்த முடிவுக்கு வந்துள்ளது.

    நாடு முழுவதும் கடந்த 2015-ம் ஆண்டில் நிகழ்ந்த 1,33,623 தற்கொலை சம்பவங்களில் அதிகபட்சமாக 91,528 (68 சதவீதம்) ஆண்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    இவர்களில் திருமணமான  86,808 பேரில் தற்கொலை செய்த ஆண்களின் எண்ணிக்கை மட்டும் 64,534 (74 சதவீதம்) என்று புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த ஆண்களில் பெரும்பாலானவர்கள் தங்களது குழந்தைகளை சந்திக்க முடியாத மனவிரக்தியில் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மனைவிகளால் துன்புறுத்தப்படும் ஆண்கள் புகார் அளிக்கவும் அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கவும் தேசிய ஆண்கள் ஆணையம் அமைத்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக இந்த அமைப்பின் நிறுவனர் குமார் ஜஹ்கிர்தர் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், மனைவியரிடம் சிக்கி கொடுமைக்குள்ளாகும் ஆண்களை பாதுகாப்பதற்கு தனியாக ஒரு ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்கள் ஹரி நாராயண் ராஜ்பர் மற்றும் அன்ஷுல் வெர்மா ஆகியோர் சமீபத்தில் வலியுறுத்தி இருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

    சில ஆண்டுகளுக்கு முன்னர் போலீசில் முன்னாள் மனைவி அளித்த புகாரில் சிக்கி பல பிரச்சனைகளை அனுபவித்த நடிகர் பிரசாந்தும் இதே கோரிக்கையை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #NGO
    கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து கமி‌ஷன் வாங்குவதற்கு 8 வழி பசுமை சாலையை போடுகிறார்கள் என்று முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். #mutharasan #chennaisalemgreenexpressway

    சேலம்:

    சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு, மாநில அரசு சேர்ந்து கொண்டு சேலத்திற்கும் சென்னைக்கும் விரைவாக செல்லக்கூடிய 8 வழிச்சாலை என்ற பெயரில் 5 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளுடைய நிலங்களை அபகரித்து 10 ஆயிரம் ரூபாய் கோடி செலவில் சாலை அமைக்க திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள்.

    ஒரு திட்டத்தை அறிவிக்கிறபோது, சம்பந்தப்பட்ட விவசாயிகளுடைய, பொதுமக்களுடைய கருத்தறிந்து அதற்கு பிறகு செயல்படுத்த முன்வர வேண்டும். அல்லது அறிவித்த பிறகு மக்கள் கூறிய கருத்துக்களுக்கு செவி கொடுத்து கேட்க வேண்டும்.

    அதற்கு மாறான முறையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மிக கடுமையான அடக்குமுறைகளை மேற்கொண்டு விவசாயிகளை அச்சுறுத்தி பெண்களை அச்சுறுத்தி நிலங்களை கையகப்படுத்தி கல் ஊன்றுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்கிறார்கள்.

    கல் ஊன்றுகின்ற இடத்தில் அனைத்திலும் பெண்களே முன்னின்று கல்களை அகற்றுகின்ற போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

    இந்த 8 வழிச்சாலை திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாங்கள் திரும்ப, திரும்ப வலியுறுத்தி கூறிகின்றோம். அதற்கான முறையில் தான் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நடைபெறுகிறது.

    அரசு இந்த திட்டத்தை கைவிடவில்லை என்று சொன்னால் 5 மாவடங்களிலும் இந்த போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் மற்றும் ஒரே கருத்துக்கள் உடைய அரசியல் கட்சிகள், அமைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து பிரமாண்டமான போராட்டங்கள் நடத்துவதற்கு ஆயத்த ஆவோம்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையிலும் சரி, வெளியிலும் சரி பொய் சொல்கிறார். நேற்று வரை விவசாயிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். சிலர் ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறார்கள்.

    ஆகவே தானாகவே விவசாயிகள் முன்வந்து 90 சதவீத நிலத்தை கொடுத்து விட்டார்கள் என்று முதல்-அமைச்சர் கூறுவது அப்பட்டமான பொய்.

    8 வழி பசுமைச்சாலையில் 7, 8 மலைகள் பறிபோகிறது. இந்த மலைகளை உடைத்து அதில் இருக்கிற விலை மதிக்க முடியாத கனிம வள செல்வங்களை கொள்ளையடிப்பதற்காக தான் இந்த சாலையே போடப்படுகிறது என்பதை பகிரங்கமாக தெரிவிக்கிறோம்.

    கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து இவர்கள் கமி‌ஷன் வாங்குவதற்கு இந்த சாலையை போடுகிறார்கள். பொதுமக்களுக்காக அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார். #mutharasan #chennaisalemgreenexpressway

    ரூ. ஆயிரம், ரூ.2 ஆயிரம் கோடி கமி‌ஷனுக்காக சென்னை- சேலம் 8 வழி சாலை அமைக்கப்படுகிறது என்று திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார். #thirunavukkarasar #chennaisalem8wayproject

    தாம்பரம்:

    காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் ரூபி மனோகரன் தலைமையில் தாம்பரத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை சுமார் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்று குதிரை வண்டியில் அழைத்து வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கிய திருநாவுக்கரசர் மக்கள் பணிகள் எதுவாக இருந்தாலும் அந்தந்த பகுதி காங்கிரஸ் நிர்வாகிகள்தான் முதலில் நின்று உதவ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சேலம் 8 வழி சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் காட்டு மரங்களை விளை நிலங்களை குன்றுகளை அழித்து சாலை அமைக்க வேண்டிய அவசியம் என்ன. தமிழகத்தில் சாலையே இல்லாத இடங்கள் மற்றும் ஒரு வழிசாலை இரு வழி சாலை ஆகியவற்றை மேம்படுத்தலாம்.

    ரூ. ஆயிரம், ரூ.2 ஆயிரம் கோடி கமி‌ஷன் பெற ஒரு சிலரிடம் காண்ட்ராக்ட் கொடுத்து 10 ஆயிரம் கோடி செலவில் சாலை அமைக்கும் பெயரில் மக்களுக்கு தொல்லை கொடுக்க கூடாது. போராடும் மக்களை கைது செய்வது பாசிச நடவடிக்கை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. மக்கள் தொகைக் கேற்ப காவலர்களை நியமித்து அவர்கள் பணியாற்ற சுதந்திரம் தந்து மக்களை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாதனை புத்தகத்தை திருநாவுக்கரசர் வெளியிட முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் பிரின்ஸ் தேவசகாயம், மாவட்ட பொருளாளர் சிவா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #thirunavukkarasar #chennaisalem8wayproject

    ×