என் மலர்
நீங்கள் தேடியது "committed suicide by"
- மன வேதனையில் இருந்த பாரூக் சம்பத்தன்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பி.பி.அக்ரஹாரம், பூம்புகார் நகரை சேர்ந்தவர் அப்துல்பாரூக் (68). இவரது மனைவி ஆயிஷா. அப்துல் பாரூக்கு நீண்ட வருடமாக இருதய நோய் பிரச்சனை இருந்து வந்தது.
இதனால் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்த பாரூக் சம்பத்தன்று தற்கொலை செய்ய முடிவு எடுத்து பி.பி.அக்ரஹாரம் காயிதே மில்லத் தெருவில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாரூக் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தண்டபாணி வீட்டில் சமையல் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு கொண்டார்.
- இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு, நசியனூர் ரோடு, காந்திஜி நகர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (77). ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை ஊழியர். வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வயிற்றில் அதிக வலி ஏற்பட்டதால் மனம் உடைந்த தண்டபாணி வீட்டில் சமையல் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு கொண்டார்.
அதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே தண்டபாணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுப்பிரமணி சம்பவத்தன்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டின் முன் வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.
- கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள சுண்டப்பாளை யம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (58). இவரு க்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் சுப்பிரமணி யத்துக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் சுப்பிர மணியம் தொடர்ந்து மது அருந்தி வந்தார்.
இதனால் அவருக்கு அடிக்கடி வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்து உள்ளார். ஆனால், நோய் குணமாகாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் சுப்பிரமணி சம்பவத்தன்று பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டின் முன் வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.
இதை கண்ட அவரது மகன் நாகராஜன் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கோபிசெட்டி பாளையத்தில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியம், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது மகன் நாகராஜன் அளித்த புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கடந்த ஒரு ஆண்டாக சீதாலட்சுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளன.
- இதனால் விரக்தியடைந்த சீதாலட்சுமி தான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என கூறி வந்துள்ளர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தை அடுத்துள்ள சதுமுகை பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (65). இவரது மனைவி சீதாலட்சுமி (60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.
இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக சீதாலட்சுமிக்கு நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளன. இதனால் விரக்தியடைந்த சீதாலட்சுமி தான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என கடந்த சில நாட்களாக கூறி வந்துள்ளர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் சீதாலட்சுமி வீட்டில் இருந்து மாயமானார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்ததில் சீதாலட்சுமி வீட்டில் இருந்து வெளியேறி, கொடிவேரியை நோக்கி நடந்து செல்வது பதிவாகி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கொடிவேரி-அரக்கன் கோட்டை பகுதியில் தேடியும் சீதாலட்சுமி கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அரக்கன் கோட்டை வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டதையடுத்து டி.ஜி.புதூர் நால்ரோட்டுக்கும், ஏழூருக்கும் இடையில் கந்தப்ப கவுண்டர் என்பவரது நெல் வயல் அருகில் வாய்க்காலில் சாய்ந்திருந்த கருவேல மரத்தில் சீதா லட்சுமியின் உடல் சிக்கி இருப்பது தெரியவந்தது.
இது குறித்த தகவலின் பேரில் பங்களாபுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சீதாலட்சுமியின் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தென்னை மரத்தின் கீழ் மாரசாமி அசைவின்றி கிடந்துள்ளார்
- சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்துள்ள எலவமலை சென்ன நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மாரசாமி (72). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பொன்னம்மாள் (60). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
கணவன், மனைவி இருவரும் தங்களது மூத்த மகன் சரவணனுடன் வசித்து வந்தனர். மாரசாமிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. கடந்த 2 வருடங்களாக மாரசாமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வலி அதிகரித்து காணப்பட்டதால் ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.
ஆனால் அவரது நோய் தீராததால் கடும் அவதிக்குள்ளாகி வந்த மாரசாமி தன்னால் வலி தாங்க முடிய வில்லை என குடும்பத்தாரிடம் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்த ன்று வழக்கம் போல அனைவரும் வேலை க்கு சென்று விட்டனர். மாலை யில் அனைவரும் வீடு திரும்பிய போது தங்களது தோட்டத்தில் மாரசாமியின் சைக்கிள் நிறுத்தியிருப்பதை பார்த்து அங்கு சென்று பார்த்துள்ள னர்.
அப்போது அங்குள்ள தென்னை மரத்தின் கீழ் மாரசாமி அசைவின்றி கிடந்துள்ளார். அவரிடமி ருந்து பூச்சிக் கொல்லி மருந்து (விஷம்) வாடை வீசியுள்ளது.
உடனடியாக அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை க்கு பின் உயர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த மாரசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சம்பவத்தன்று தாமோதரனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
- இதனால் மனமுடைந்து எலி பேஸ்ட் தின்று மயங்கி கிடந்தார்
ஈரோடு:
மொடக்குறிச்சி அடுத்துள்ள பூமாண்டம் வலசு கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (40). இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. தாமோதரன் இருசக்கர வாகன மெக்கானிக் கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் குடிப்பழ க்கத்திற்கு அடிமையான தாமோதரன் தினமும் குடித்து வந்ததால் வயிறு, தொண்டை ஆகிய இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஈரோடு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று குண மடைந்தார்.
இதனையடுத்து சம்பவத்தன்று திடீரென்று தாமோதரனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்து எலி பேஸ்ட் (விஷம்) தின்று மயங்கி கிடந்தவரை மீட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி தாமோதரன் இறந்தார்.
இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணிகண்டன் தனக்கு மயக்கம் வருவதாக கூறினார்.
- பெற்றோர் உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த அம்மன் கோவில் கைகாட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (22). அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
மணிகண்டனுக்கு கடந்த 6 மாதமாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் நாட்டு வைத்தியம் பார்த்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன் தனக்கு மயக்கம் வருவதாக கூறினார். இது குறித்து அவரது பெற்றோர் கேட்ட போது தான் குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து குடித்து விட்டதாக கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக மணிகண்டனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 2 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.
பின்னர் மீண்டும் மணிகண்டனுக்கு உடல்நிலை மோசமானது. இதனையடுத்து அவரை நாமக்கல் அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேல்முருகன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
- குடிபோதையில் பிளேடால் அறுத்து கொண்டது தெரிய வந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிவகிரி தாண்டாம்பா ளையம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (52). அப்பகுதியில் உள்ள ஸ்பின்னிங் மில் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி விஜயா (42). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். வேல்முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு.
இந்த நிலையில் சம்பவத்தன்று மனைவி விஜயாவும், மகனும் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வேல்முருகன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
மேலும் அவர் குடிபோதையில் கைகள் இரண்டையும் பிளேடால் அறுத்து கொண்டது தெரிய வந்தது.குடிபோதையில் வேல்முருகன் இதுபோல அடிக்கடி ஏதாவது செய்து கொள்வது வழக்கமாம்.
இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே வேல்மு ருகன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.
- வயிற்று வலி காரணமாக பாட்டமூப்பன் குருணை மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
- கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த ஒடையகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாட்டமூப்பன் (76). தனது மருமகள், பேரனுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலை வயிற்று வலி காரணமாக பாட்டமூப்பன் வீட்டில் இருந்த குருணை மருந்தை (விஷம்) சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார்.
வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாட்டமூப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
- தயானந்தன் பேன் மாட்டும் கொக்கியில் தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மகன் தயானந்தன் (20). இவர் கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 10 வருடங்களாக அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து படித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தயானந்தன் தங்கி இருக்கும் வீட்டின் உறவினரான யுவராஜ் என்பவரின் செல்போன் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் தயானந்தன் இரவு 1 மணிக்கு இறந்து விடுவதாக காண்பித்து உள்ளது. உடனே யுவராஜ் தயானந்தனின் தந்தை மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து தயானந்தன் இருந்த வீட்டின் அறை கதவை தட்டி உள்ளனர்.
கதவு தாழ்ப்பாள் போட்டு இருந்ததால் ஜன்னல் வழியே பார்த்த போது தயானந்தன் பேன் மாட்டும் கொக்கியில் கயிற்றில் தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே உறவினர்கள் கதவின் தாழ்ப்பாளை உடைத்து தயானந்தனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தயானந்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில் தயானந்தன் சிறு வயது முதலே அதிகமாக யாரிடமும் பேசாமல் தனிமையாக இருந்து வந்ததாக தெரிகிறது. விரக்தியில் இருந்து வந்த தயானந்தன் வாழ பிடிக்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- தண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டு உடல் மிதப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
- இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பவானி:
பவானி அருகே உள்ள ஒலகடம், எட்டிக்குட்டை பாலக்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (57). இவர் பி.எஸ்.என்.எல். டி.டி.ஆக பணியாற்றி தற்போது விருப்ப ஓய்வு பெற்று மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் ரங்கசாமி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில் அந்த தொழிலில் மிகுந்த நஷ்டம் காரணமாக கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது மனைவியிடம் வெளியே சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து சென்றார். பின்னர் இரவு வரை ரங்கசாமி வீட்டிற்கு வராததால் அவரை உறவினர்கள் மற்றும் மகன் சந்தோஷ் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
அப்போது குட்ட முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் சந்தோசுக்கு போன் செய்து ரங்கசாமி தந்தை பவானி அருகில் உள்ள ஜீவா நகரையொட்டி காவிரி ஆற்றில் உடைகளை ஒரு பாறையில் வைத்து விட்டு தண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டு உடல் மிதப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து சந்தோஷ் பவானி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவயிடம் சென்று காவிரி ஆற்றில் பிணமாக மிதந்த ரங்கசாமி உடலை மீட்டு பவானி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சந்திரசேகரன் வீட்டில் கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
- போலீசார் நடத்திய விசாரணையில் பங்கு சந்தையில் முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டது தெரியவந்தது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பூசாரியூரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 33). தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரட்டடிபாளையம் காலேஜ் பிரிவு அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.
இந்த நிலையில் சந்திர சேகரன் தங்கி இருந்த வீட்டில் கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி கோபிசெட்டி பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சந்திரசேகரன் பங்கு சந்தையில் முதலீடு செய்து அதில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.