என் மலர்
நீங்கள் தேடியது "Conductors"
- அரசு பஸ்களில் டிஜிட்டல் பெயர் பலகை இல்லாததால் 20 கண்டக்டர்களுக்கு மெமோ கொடுத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
- ஓமலூர், வாழப்பாடி, எருமாபாளையம், ராசிபுரம், பணிமனை பஸ்களில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சேலம்:
சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக வணிக பிரிவு மேலாளர் செல்வகுமார் தலைமையில் பயண சீட்டு பரிசோதகர்கள் கடந்த 12-ந்தேதி காலை 5.30 மணிக்கு சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் ஓமலூர், வாழப்பாடி, எருமாபாளையம், ராசிபுரம், பணிமனை பஸ்களில் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டவில்லை. மழை நீர் ஒழுகுகிறது. டிஜிட்டல் போர் பிட்டிங் செய்யவில்லை. வழிதட எண், ஊர் பெயர் கையால் எழுதப்பட்டுள்ளது உள்ளிட்ட குறைகள் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக 20 பஸ்களின் கண்டக்டர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டது.
அதிகாரிகளின் இந்த நடவடிக்கை டிரைவர்கள், கண்டக்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- மாணவர்கள் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
- அறிவுரைக்கு பின்னும் ஆபத்தான பயணம் மேற்கொண்டால், அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.
சென்னை:
பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவுரை வழங்கி உள்ளார். மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
* மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும்.
* அரசு பேருந்துகளில் பயணிகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
* மாணவர்கள் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
* முன் மற்றும் பின் பக்கங்களில் உள்ள படிக்கட்டுகளின் அருகே உள்ள ஜன்னல்களுக்கு கண்ணாடி நிரந்தரமாக பொருத்த வேண்டும்.
* ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும்.
* அறிவுரைக்கு பின்னும் ஆபத்தான பயணம் மேற்கொண்டால், அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.
* பேருந்து சாலை சந்திப்பு, கூட்ட நெரிசல் பகுதிகளில் மெதுவாக செல்லும்போது இறங்க முயற்சிக்கும் பயணிகளுக்கு நடத்துநர் எச்சரிக்கை செய்ய வேண்டும்.
* பேருந்து நிறுத்தம் வருவதை நடத்துநர் குரல் மூலம் முன் கூட்டியே தெரிவித்து பயணிகளை இறக்க தயார்ப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிலர் பேட்ஜ் அணியாமல் பணி செய்வது குறித்து புகார் பெறப்பட்டுள்ளது.
- சீருடை பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும்.
சென்னை:
டிரைவர்-கண்டக்டர் கள் பணியின்போது சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது சம்பந்தமாக அனைத்து கிளை மேலாளர்கள்-மண்டல மேலாளர்களுக்கு மாநகர போக்கு வரத்து கழக மேலாண் இயக்குனர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை வருமாறு:-
மாநகரப் போக்குவரத்து கழகத்தை சார்ந்த அனைத்து பணிமனைகளிலும் பணி புரியும் டிரைவர்கள் கண்டக்டர்கள் கட்டாயம் சீருடை பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும். சிலர் பேட்ஜ் அணியாமல் பணி செய்வது குறித்து புகார் பெறப்பட்டுள்ளது.
எனவே டிரைவர்-கண்டக்டர்கள் சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிகிறார்களா என்பதை கிளை மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பேருந்து படியில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர்.
- தாக்குதலுக்கு உள்ளான கண்டக்டர் நாராயணசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி மாணவர்கள் பேருந்து படியில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். அவர்களை பேருந்துக்குள் வருமாறு கண்டக்டர் கூறி உள்ளார். இதனையடுத்து அவர்கள் கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து பேருந்துகளை சாலையில் நிறுத்தி டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டம் நடத்தினர். பேருந்துகளை சாலையிலேயே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான கண்டக்டர் நாராயணசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், படியில் நின்று கொண்டிருந்த மாணவர்களை பேருந்துக்குள் வருமாறு கண்டக்டர் கண்டித்ததால் தாக்குதல் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
- பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.
- செல்போனில் நிகழ்வுகளை பார்ப்பதை முற்றிலும் தவிர்க்கவும் வேண்டும்.
சென்னை :
தமிழகத்தில் அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கண்டக்டர்கள் பயணச்சீட்டு வழங்கிவிட்டு முன்புற இருக்கையில் அமர்ந்து கொண்டு செல்போனில் நிகழ்வுகளை பார்த்தவண்ணம் இருப்பது அல்லது தூங்கியபடி இருப்பதாக பயணிகளிடம் இருந்தும், பயிற்சிக்கு வரும் டிரைவர்களிடம் இருந்தும் புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இச்செயல் மிகவும் வருந்தத்தக்கதாகும். எனவே நமது கண்டக்டர்கள் பகல் பணியின்போது பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கிவிட்டு பயணிகள் மற்றும் தங்களது பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பஸ்களின் இரு படிக்கட்டுகளும் தங்களது பார்வையின் கட்டுப்பாட்டில் இருக்கும்படி பஸ்சின் பின்பக்கத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இருக்கையில் இருந்து பணிபுரிய வேண்டும்.
இரவுநேர நீண்டதூர வழித்தடங்களில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கிவிட்டு பஸ்சின் முன்புறம் உள்ள இருக்கையில் அமர்ந்து டிரைவர் விழிப்புணர்வுடன் பஸ்சை இயக்கும்வண்ணம் நடந்துகொள்ளவும், செல்போனில் நிகழ்வுகளை பார்ப்பதை முற்றிலும் தவிர்க்கவும் வேண்டும்.
பஸ் வழித்தட பரிசோதனையின்போது இந்தக் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும். இதுதொடர்பாக அனைத்து கிளை மேலாளர்களும் கண்டக்டர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு போக்குவரத்துத்துறை அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி உள்ளது.
சென்னையில் தமிழக அரசு சார்பில் 2013-ம் ஆண்டு பயணிகள் வசதிக்காக ‘சுமால்’ பஸ்கள் தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னை மாநகர போக்குவரத்து கழக கட்டுப்பாட்டின் கீழ் 200 ‘சுமால்’ பஸ்கள் குறுகிய சாலை தெருக்கள் வழியாக இயக்கப்பட்டது. இதனால் பயணிகள், பொதுமக்கள் எளிதில் போக்குவரத்து வசதியை பெற்று பயன் அடைந்து வந்தனர். ஒரு ‘சுமால்’ பஸ்சுக்கு 2 டிரைவர், 2 கண்டக்டர்கள் ‘ஷிப்ட்’ அடிப்படையில் பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிலையில் ‘சுமால்’ பஸ் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மட்டுமே வருவாய் வந்தது. பராமரிப்பு செலவு, டீசல் செலவு, டிரைவர், கண்டக்டர் சம்பளம் உள்ளிட்ட அனைத்து செலவுகளால் ‘சுமால்’ பஸ்கள் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க நிர்வாகி ஆறுமுகம் நயினார் கண்டக்டர்கள் இன்றி ‘சுமால்’ பஸ்களை இயக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். நடைமுறைக்கு இது ஒத்து வராது. மோட்டார் வாகன சட்டப்படி கண்டக்டர்கள் இன்றி ‘சுமால்’ பஸ்களை இயக்க கூடாது. டிரைவர்களுக்கு இது கூடுதல் பணிச்சுமையை உருவாக்கும் என்று அவர் கூறி உள்ளார். #Tamilnadu #SmallBus