என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "constipation"

    • கர்ப்பமாக இருக்கும் போது, இவ்வாறான வலிகள் ஏற்படுவது சாதாரணம் தான்.
    • கரு உருவாகும் போது, ஒருவிதமான வலி அடிவயிற்றில் ஏற்படும்.

    கர்ப்ப காலத்தில் குழந்தை வளரும் போது குழந்தைக்கு ஏற்றவாறு உடல் மாறும் போது கர்ப்பிணிகளுக்கு மேல் வயிற்றில் வலி ஏற்படும். பொதுவாகவே இந்த வயிற்று வலிக்கு அபாயகரமான காரணங்கள் இல்லை என்றாலும் சில தீவிரமானதாக இருக்கலாம்.

    கர்ப்பத்தின் ஒன்பது மாதங்களில் ஒரு கட்டத்தில் வயிற்று வலி அல்லது பிடிப்புகள் வருவது இயல்பானது. கர்ப்ப காலத்தில் வயிறு வலியே வரக்கூடாது, என்று நினைக்க கூடாது. வயிற்று வலி அல்லது பிடிப்புகள் இயல்பானது.

    பெரும்பாலான நேரங்களில் அது சாதாரணமாக இருக்கும். ஏனெனில் குழந்தையை வயிற்றில் சுமக்கும் போது தசைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் அதீத அழுத்தம் உங்கள் வயிற்றை சில நேரங்களில் அசெளகரியமாக உணர்த்தலாம்.

    பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது அடிக்கடி வலி ஏற்பட்டால், மிகவும் பயமாக இருக்கும். அதிலும் முதல் தடவை லேசான வலி ஏற்பட்டாலே, அனைவரும் பதட்டம் அடைவோம். ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது, இவ்வாறான வலிகள் ஏற்படுவது சாதாரணம் தான். அதற்காக சாதாரணமாக இருந்துவிடக் கூடாது. ஏனெனில் சில சமயங்களில் சிக்கலான பிரசவம் நடைபெறப்போகிறது என்பதற்கான அறிகுறியாகவும் அடிவயிற்றி வலி ஏற்படும்.

    மேலும் இத்தகைய வலி, கர்ப்ப காலத்தில் எந்த நேரத்திலும் ஏற்படும். சொல்லப்போனால், கர்ப்பத்தில் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமான வலி அடிவயிற்றில் ஏற்படும். அதிலும் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் வலிகளை விட, இரண்டாம் கட்டத்தில் ஏற்படும் வலியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரி, இப்போது அத்தகைய வலி அடிவயிற்றில் ஏற்படுவதற்கான காரணத்தை பற்றி பார்க்கலாம்....

    * கர்ப்பத்தின் 2 முதல் 6 வாரங்களில், கருவானது உருவாக ஆரம்பிக்கும். அவ்வாறு அவை உருவாகும் போது, ஒருவிதமான வலி, அடிவயிற்றில் ஏற்படும். சொல்லப்போனால், இந்த காலத்தில் மாதவிடாய் சுழற்சி ஏற்படப்போவது போன்று உணர்வு இருக்கும். ஆனால் உண்மையில், இந்த காலத்தில் வலி ஏற்பட்டால், கரு உருவாக ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்.

    * கர்ப்பமாக இருக்கும் போது ஹார்மோன்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இத்தகைய ஹார்மோன் மாற்றங்களாலும், வயிற்றில் வலி அல்லது ஒருவித பிடிப்பு ஏற்படும். இது கூட, கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் தான் உண்டாகும்.

    * சில சமயங்களில் கருமுட்டையானது கருப்பையில் இல்லாமல், பெல்லோப்பியன் குழாய்களில் இருந்தால், அது வளரும் போது மிகவும் கடுமையான வலியானது ஏற்படும். இந்த நிலையில் மருத்துவரிடம் சென்றால், நிச்சயம் கருவை அகற்றிவிட வேண்டும். இல்லையெனில் கருச்சிதைவு ஏற்படும். இந்த மாதிரியான வலி, 4-6 வாரங்களில் ஏற்படாது. ஆனால் அதற்கு பின்னர் வலியானது ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும். ஏனெனில் கரு வளரும் போது, குழாயும் விரிவடைந்து கடும் வலி ஏற்படும்.

    * கர்ப்பமாக இருக்கும் போது வலியுடன் கூடிய ரத்தப்போக்கு ஏற்பட்டால், அது கருச்சிதைவிற்கான அறிகுறியாகும். அதிலும் ரத்தப்போக்கு அதிகமாக இருந்து, வலி தொடர்ந்து அரை மணிநேரத்திற்கு இருந்தால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

    * பொதுவாகவே 36 வாரங்கள் முடிந்ததும், எந்த நேரத்திலும் பிரசவ வலி ஏற்படலாம். சில நேரங்களில் அவை பிரசவ வலியாக இல்லாவிட்டாலும், சில சமயங்களில் குறை பிரசவத்தை ஏற்படுத்தும். அதிலும் 7 அல்லது 8 -வது மாதத்தில், இந்த மாதிரியான வலி ஏற்பட்டால், அது குறைபிரவத்திற்கான அறிகுறியாக இருக்கும்.

    * நஞ்சுக்கொடி சிதைவு என்பது உயிருக்கு ஆபத்தான நிலை. இதில் குழந்தை பிறப்பதற்கு முன்பே நஞ்சுக்கொடி கருப்பையிலிருந்து பிரிந்துவிடும். இதன் அறிகுறியே நிலையான இடைவிடாத வயிறு வலி தான். இது உங்கள் வயிற்றில் நிவாரணம் இல்லாமல் நீண்ட காலத்துக்கு கடினமாக இருக்கும்.

    மற்றொன்று ரத்தம் தோய்ந்த திரவம் அல்லது பனிக்குட நீர் கசிவு. கூடுதல் அறிகுறிகளில் உங்கள் அடிவயிற்றில் மென்மை, முதுகுவலி, அல்லது ரத்தத்தின் தடயங்களை உள்ளடக்கிய திரவ வெளியேற்றம் ஆகியவை அடங்கும்.

    • முக்கனிகளில் பிரபலமான கனி வாழை.
    • அனைத்து காலநிலைகளிலும் கடைகளில் எளிதில் கிடைக்கும்.

    முக்கனிகளில் பிரபலமான கனி வாழையாக கருதப்படுகிறது. அனைத்து காலநிலைகளிலும் கடைகளில் எளிதில் கிடைக்கக் கூடியதாக உள்ளது. வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

    இரும்புச்சத்து வாழைப்பழத்தில் அதிகம் இருப்பதால், இதனை உட்கொள்வதால், ரத்த சோகை நீங்கி, ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    வாழைப்பழத்தில் உள்ள ஃபுருக்டோஸ், குளுக்கோஸ், மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு ஆற்றலையும் சுறுசுறுப்பையும் உடனடியாகக் கொடுக்கும். இதனால் தான் விளையாட்டு வீரர்கள் அடிக்கடி வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர்.

    வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது, வாழைப்பழம். 100 கிராம் பழத்தில் 90 கலோரியை இது தருகிறது. தவிர, வைட்டமின்கள், தாது உப்புக்கள் இதில் நிறைவாக உள்ளன.

    உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தினசரி வாழைப்பழம் கொடுப்பது நல்லது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள வைட்டமின் பி-6, ரத்தசோகை போன்ற

    குறைபாடுகள் நெருங்காமல் பார்த்துக்கொள்ளும். இதய ரத்தக்குழாய் பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும்.

    தாது உப்புக்களைப் பொறுத்த வரையில், தாமிரம், மெக்னீசியம், மாங்கனீஸ் ஆகியவை குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளன. மெக்னீசியம் நம் எலும்புகளின் உறுதிக்கும், இதய பாதுகாப்புக்கும் அவசியமான தாது உப்பு.

    100 கிராம் வாழைப்பழத்தில் 358 கிராம் பொட்டாசியம் உள்ளது. இது, இதயத்துடிப்பை கட்டுக்குள் வைத்திருப்பது, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றை செய்கிறது.

     மசித்த வாழைப்பழத்தில் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், வயிற்றுக்கடுப்பிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். மது அருந்தியதால் ஏற்படும், தலைபாரத்தை போக்குவதற்கு வாழைப்பழ மில்க் ஷேக் சாப்பிட வேண்டும். இதனால் வாழைப்பழம் மற்றும் பாலானது உடலை அமைதிப்படுத்தி, உடலை சீராக இயங்க வைக்கும்.

    ஒவ்வாமையால் கஷ்டப்படுபவர்கள் வாழைப்பழத்தை உட்கொள்வது மிகவும் நல்லது. இதில் அமினோ ஆசிட்டுகள் நிறைந்திருப்பதால், இது ஒவ்வாமை ஏற்படுவதைத் தடுக்க உதவும்.

    தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான அல்சர் பிரச்சினை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும்.

    வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ ஆசிட், மூளையில் உற்பத்தியாகும் செரோடோனின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தைப் போக்கி, உள்ளத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

    • உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவில் இருந்துதான் கிடைக்கிறது.
    • விரைவாக சாப்பிடுவது பசியை கட்டுப்படுத்த உதவும்.

    நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உணவில் இருந்துதான் கிடைக்கிறது. எனவே அந்த உணவை நிதானமாகவும், ஆரோக்கியமான உணவாக சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

    நம்மில் சிலர் நேரம் போய்விட்டது என்று நினைத்து அவசர அவசரமாக சாப்பிடுவது வழக்கம். உண்மையில் அப்படி சாப்பிடுவதால் உடலுக்கு தீங்கு தான் விளைவிக்கும். அந்தவகையில் வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

    வயிறு உப்புதல், வாய் துர்நாற்றம், மலச்சிக்கல், நாக்கில் மாவு படிதல், செரிமானக்கோளாறு, நெஞ்செரிச்சல், உண்ட மயக்கம் இதுபோன்ற விளைவுகள் அவசர அவசரமாக சாப்பிடுவதால் மட்டுமே ஏற்படுகிறது. ஏனென்றால் இந்த உணவுகள் எளிதில் செரிமானம் ஆகாது. செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் ஆகும் என்பதால் இந்த வகையான பிரச்சினைகள் வரும்.

    எனவே உணவை சாப்பிடும் போது கீழே உட்கார்ந்து சம்மணம் போட்டு பொறுமையாக, நிதானமாக வாயில் அசைபோட்டு தான் சாப்பிட வேண்டும். உதாரணத்துக்கு நாம் பிரியாணியை மட்டும் எப்படி நிதானமாக ரசித்து, ருசித்து சாப்பிடுகிறோமோ அதேபோன்று சாப்பிட வேண்டும்.

    ஏனென்றால் வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்களில் முக்கியமான ஒன்று எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஆகும். விரைவாக சாப்பிடுவது பசியை கட்டுப்படுத்த உதவும். குடல் ஹார்மோன்களை சீர்குலைத்து உங்களுக்கு முழுமையான உணர்வை ஏற்படுத்தும்.

    வேகமாக சாப்பிடுகிறவர்களுக்கு இன்சுலின் பாதிப்பு ஏற்படும். இதனால் உங்கள் உடல் இன்சுலினை திறம்பட பயன்படுத்த தவறுகிறது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படலாம்.

    வேகமாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களுக்கு விரைவில் வளர்ச்சிதை மாற்ற நோய் வந்தது. குறிப்பாக வேகமாக சாப்பிடுகிறவர்களுக்கு நல்ல கொழுப்பு எனப்படும் HDL கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகும். இதனால் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

    வேகமாக சாப்பிடுவது இரைப்பை அழற்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் குடல் வீக்கம், கடுமையான வயிற்றுப்புண் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது

    வேகமாக உணவு சாப்பிடுகிறவர்கள் உணவை சாப்பிடுவதில்லை மாறாக முழுங்கவே செய்கிறார்கள். இதனால் மூச்சுக்குழல் அடைப்பு ஏற்பட கூட வாய்ப்புள்ளது. 

    • குழந்தைகள் இரண்டு வாரங்கள் வரை கூட மலம் கழிக்காமல் இருப்பார்கள்.
    • மலம் கழிக்கும் போது வாயு திரட்சியால் வயிறு வீங்குவது.

    மலச்சிக்கல் என்பது பெரியவர்களுக்கு மட்டும் அல்ல. பிறந்த குழந்தைகளுக்கு கூட வரலாம். குழந்தைகளின் அழுகை, மலம் கழிக்கும் போது அலறல் மற்றும் முக மாற்றம் போன்ற அறிகுறிகளோடு மலச்சிக்கலை பெற்றோர்கள் அறியலாம்.

    பிறந்தது முதல் 6 மாதம் வரை உள்ள குழந்தைகள் தாய்ப்பால் மட்டும் குடிப்பவர்களாக இருந்தால் அவர்கள் மலம் கழித்தல் என்பது தாய்ப்பாலுக்கு பிறகு இருக்கும். நாள் ஒன்றுக்கு இரண்டு முறை. சில நேரங்களில் பிறந்த உடன் 5 முதல் 7 வரை இருக்கலாம். இது இயல்பானது.

    குழந்தைகள் இரண்டு வாரங்கள் வரை கூட மலம் கழிக்காமல் இருப்பார்கள் அல்லது தாமதமாகலாம். எனினும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்குமான மலச்சிக்கலின் அறிகுறிகள் மாறுபடும். சில நாட்கள் வரை குழந்தைகள் மலம் கழிக்காமல் இருக்கலாம்.

    அறிகுறிகள்:

    * மலம் வெளியேற்றும் போது குழந்தை சிவந்த முகத்துடன் 10 நிமிடங்களுக்கு மேல் கஷ்டப்படலாம். இது மலம் கழிப்பதில் சிரமத்தை குறிக்கிறது.

    * மலம் கழிக்கும் போது குழந்தை குழப்பமடையலாம். இது வலியுடன் இருப்பதை குறிக்கிறது.

    * மலம் கழிக்கும் போது வாயு திரட்சியால் வயிறு வீங்குவது. வாயு வெளியேற்றம் கடினமாக இருப்பது.

    * மலம் வெளியேறாமல் ஆசனவாய் வாய்பகுதியில் நீண்ட நேரம் இருப்பது.

    * குழந்தையின் வயிறு வழக்கத்திற்கு மாறாக வீங்கியதாகவும் தொடுவதற்கு கடினமாகவும் இருக்கலாம்.

    * கடுமையான மலச்சிக்கல் என்கோபிரெசிஸை ஏற்படுத்தலாம் இது குழந்தையின் டயபர் அல்லது உள்ளாடைக்குள் ஒரு சிறிய அளவு திரவ மலம் தன்னிச்சையாக கசிவை உண்டாக்கலாம்.

    * கடுமையான சந்தர்ப்பங்களில் குழந்தை நகரும் போது மலத்தில் ரத்தப்போக்கு உண்டாகலாம். குழந்தை மலத்தை வெளியேற்ற சிரமப்படலாம். மலம் கழிக்கும் வழக்கத்தில் மாற்றங்கள் தொடர்ந்து இருந்தால் மலச்சிக்கல் இருக்கலாம்.

    மலச்சிக்கல் உண்டாக காரணம்:

    * குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்கவில்லை என்றால் அரிதாக கடினமான மலத்தை கவனிக்கலாம்.

    * தண்ணீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படலாம்.

    * திட உணவில் குறைந்த நார்ச்சத்து இருப்பதால் மலத்தை கடினப்படுத்தலாம்.

    * மலச்சிக்கல் உண்டாவது இரைப்பை குடல் நோய்த்தொற்றின் விளைவாக இருக்கலாம்.

    • கர்ப்ப காலத்தில் செரிமானம் மெதுவாகக் கூடும்.
    • செரிமானப் பிரச்சனை இருக்கும் பெண்கள் உணவை பிரித்து எடுத்துக்கொள்வது நல்லது.

    கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களும் மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்திருப்பார்கள். கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள், கர்ப்பப்பை அழுத்தம், இரும்புச்சத்து போன்றவையே இதற்கு காரணம்.

    கர்ப்ப காலத்தில் புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் அதிகரிக்கத்தொடங்கும் இதனால் செரிமானம் மெதுவாகக் கூடும். இதனால் தான் தொடர்ந்து மலச்சிக்கல் உண்டாகிறது.


    கர்ப்ப காலத்தில் செரிமானப் பிரச்சனை இருக்கும் பெண்கள் உணவை பிரித்து எடுத்துக்கொள்வது நல்லது. தினசரி 3 வேளை உணவை 6 வேளையாக பிரித்து எடுத்துக்கொள்ளலாம்.

    அதிக அளவு உணவு ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளும் போது வயிற்றுக்கு சுமை கூடும். இது செரிமானத்தை கடினமாக்கும். நீங்கள் எடுத்துக்கொள்ளும், உணவும் மலச்சிக்கலை உண்டாக்கும்.

    நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மலச்சிக்கலை தடுக்க உதவும். கர்ப்பிணிகளுக்கு வைட்டமின்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்களை இவை அளிக்கிறது.

    நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், கீரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள், பீன்ஸ், பட்டாணி, பயறு வகைகள், தானியங்கள் மற்றும் பழங்களில் ஆப்பிள், வாழைப்பழங்கள், அத்திப்பழம், ரோஸ்பெர்ரி போன்றவை எடுத்துக் கொள்ளலாம்.


    கர்ப்ப காலத்தில் நாள் ஒன்றுக்கு 8 முதல் 12 டம்ளர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். உடலில் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் அது குடலை மென்மையாகவும், செரிமான பாதையை சீராக்கவும் செய்ய உதவும்.

    கால்சியம் நிறைந்த உணவு, அதாவது பால் பொருட்களை அதிகம் சேர்க்கும் போது மலச்சிக்கல் உண்டாகலாம் எனவே அதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    கர்ப்பிணி பெண்கள் இயன்றவரை மலச்சிக்கலுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்வதை தவிர்ப்பதே நல்லது. அதேநேரம் அதிக மலச்சிக்கலை சந்திக்கும் போது மலம் இளகி வெளியேற மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள்.


    இவை குடலை இயக்கி மலத்தை இளக்கி எளிதாக வெளியேற்ற உதவும். ஆனாலும் தொடர்ச்சியாக மருந்துகள் மூலமே மலத்தை வெளியேற்ற முயலக்கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கர்ப்ப கால மலச்சிக்கலுக்கு தீர்வு மருந்துகள் தான் என்றில்லாமல் கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலை தவிர்க்க சிறந்த வழிகள் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை என்பதை மனதில் கொள்ளுங்கள். 

    • மலச்சிக்கல் இருந்தால் உடலில் ஏராளமான பிணிகள் வரும்.
    • செரிமான மண்டலத்தின் மெதுவான அசைவால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

    மலம் கழிப்பது என்பது செரிமான அமைப்பின் கடைசி நிலை ஆகும். தொடர் மலச்சிக்கல் இருந்தால் உடலில் ஏராளமான பிணிகள் வரும்.


    மலச்சிக்கலுக்கான காரணங்கள்:

    1) நாம் உண்ணும் உணவில் இருந்து பெருங்குடல் அதிகப்படியான தண்ணீரை உறிஞ்சும் போது மலச்சிக்கல் ஏற்படுகிறது. செரிமான மண்டலத்தின் மெதுவான அசைவால், பெருங்குடலில் அதிக நீர் உறிஞ்சப்படுகிறது. இதன் விளைவாக மலம் உலர்ந்து மலம் கழித்தல் கடினமாகவும், வலியாகவும் மாறுகிறது.

    2) உணவில் போதிய நார்ச்சத்து சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது.

    3) நமது பரபரப்பான வாழ்க்கை முறைகள், மன அழுத்தம், மனக்கவலை, பயம் போன்ற உளவியல் பிரச்சனைகள்.

    4) சரியான உடற்பயிற்சி இல்லாமல் ஒரே இடத்தில் நிலையாக இருந்து வேலை செய்வது.

    5) மலம் வரும் போது அதை கழிக்காமல் அடக்குவது.

    6) மாவுச்சத்து நிறைந்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள், சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பது, தண்ணீர் குறைவாக குடிப்பது, தொடர் பயணங்கள், உடல் சூடு போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.


    உணவுப் பழக்கவழக்கங்கள்:

    1) உடல்சூடு குறைய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    2) தினமும் 6-7 மணிநேரம் தொடர்ச்சியாக தூங்க வேண்டும்.

    3) வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.

    4) கிழங்கு வகைகள், காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

    5) கோழிக்கறி சாப்பிடுவது உடல் வெப்பத்தை அதிகரிக்கும். ஆகவே கோழிக்கறி சாப்பிடும் போது எலுமிச்சை பழச்சாறு எடுப்பது நல்லது.

    6) நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், இளநீர், தர்பூசணி சாறு, முலாம் பழச்சாறு, மோர் இவைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    7) சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். வயிற்றில் வாயு உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    8) மாவு பதார்த்தங்களை அளவாக எடுக்க வேண்டும்.

    9) காலையில் எழுந்தவுடன் 2 டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு நடைப்பயிற்சி, ஆசனவாய் தசைகளை உறுதிபடுத்தும் பயிற்சிகள் செய்ய வேண்டும்.

    10) சீரகம், கொத்தமல்லி, ஓமம் இவைகளை சிறிதளவு சேர்த்துக் கொதிக்க வைத்த தண்ணீரை காலை, இரவு குடித்து வர வேண்டும்.


    சித்த மருந்துகள்:

    சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கீழ்கண்ட ஏதாவது ஒரு மருத்துவ முறையை கையாளலாம்.

    1) திரிபலா சூரணம் ஒரு டீஸ்பூன், இரவு உறங்கும் முன் வெந்நீரில் எடுக்க வேண்டும்.

    2) நிலவாகை சூரணம் ஒரு டீஸ்பூன், இரவு உறங்கும் முன் வெந்நீரில் எடுக்க வேண்டும்.

    3) மூலக்குடார நெய் 5-10 மி.லி. வீதம் இரவு தூங்கும் முன் எடுக்க வேண்டும்.

    • குளுட்டன் நிறைந்த உணவுகள் மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கும்.
    • பசும்பாலில் உள்ள புரோட்டீன் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

    மூல நோய் என்பது ஆசனவாய் மற்றும் கீழ் மலக்குடலில் உள்ள வீங்கிய நரம்புகளைக் குறிப்பிடும் ஒரு மருத்துவ நிலை.


    மூலம் நோய் ஆபத்தானவை அல்ல. இருப்பினும், இது கடுமையானது மற்றும் மீண்டும் மீண்டும் ஏற்படக்கூடியது. இந்த பைல்ஸ் பிரச்சனைக்கு முக்கிய காரணம் மலச்சிக்கல். இந்த மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே கவனித்தால், பைல்ஸ் பிரச்சனையை குணப்படுத்தலாம்.

    சில உணவுகள் மலச்சிக்கலை உண்டாக்கி மூல நோய் பிரச்சனையை தீவிரப்படுத்தும். அந்த உணவுகளைத் தவிர்த்து வந்தாலே, பைல்ஸ் வராமல் தடுக்கலாம்.


    குளுட்டன் உணவுகள்

    குளுட்டன் அதிகம் நிறைந்த உணவுகள் மலச்சிக்கல் மற்றும் மூல நோய் பிரச்சனையை உண்டாக்கும். இந்த குளுட்டன் கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் அதிகம் காணப்படுகிறது.

    குளுட்டன் சிலருக்கு ஆட்டோ இம்யூன் நோய்க்கு வழிவகுப்பதோடு, சிலருக்கு நோயெதிர்ப்பு அமைப்பு செரிமானத்தை கடுமையாக சேதப்படுத்துகிறது. இது மலச்சிக்கலைத் தூண்டி பின்னர் மூல நோயை உண்டாக்கும்.


    பசும்பால் அல்லது பால் பொருட்கள்

    சிலருக்கு பசும்பால் அல்லது பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் பிரச்சனையை உண்டாக்கும். ஏனெனில் பசும்பாலில் உள்ள புரோட்டீன் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

    மேலும் இது பல ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றால் பசும்பாலுக்கு பதிலாக சோயா பாலை பயன்படுத்தலாம்.


    மாட்டிறைச்சி

    மாட்டிறைச்சியை சாப்பிடுவதும் பைல்ஸ் நோயை உண்டாக்கலாம். ஏனெனில் மாட்டிறைச்சியில் மிகவும் குறைவான அளவில் நார்ச்சத்து உள்ளது மற்றும் இதில் கொழுப்பு அதிகமாக உள்ளது. ஆகவே மாட்டிறைச்சியை உட்கொண்டால், அது எளிதில் ஜீரணிக்காமல், உடலில் அப்படியே தேங்கி, மலச்சிக்கலை ஏற்படுத்தும். ஆகவே தான் பைல்ஸ் நோயாளிகள் மாட்டிறைச்சியை அறவே தொடக்கூடாது.


    வறுத்த உணவுகள்

    எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அதிகமாக உட்கொண்டால், அது பைல்ஸ் பிரச்சனையை வரவழைக்கும். ஏனெனில் மாட்டிறைச்சியைப் போலவே, இந்த உணவுகளிலும் நார்ச்சத்து குறைவாகவும், கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளன. ஆகவே வறுத்த உணவுகளுக்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.


    ஆல்கஹால்

    ஆல்கஹால் உடலில் நீரின் அளவைக் குறைத்து, நீரிழப்பை ஏற்படுத்தும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், அது மலச்சிக்கலை தீவிரமாக்கும். மலச்சிக்கல் தீவிரமாக இருந்தால், நீண்ட காலமாக மலம் எளிதாக வெளியேறாமல் அதிக அழுத்தம் மலக்குடலுக்கு கொடுக்கப்பட்டு, தீவிர பைல்ஸ் நோயை ஏற்படுத்தும். ஆகவே ஆல்கஹாலை அறவே தவிர்க்க வேண்டும்.

    • மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
    • இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றன.

    சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரக்கூடியது அத்திப்பழம். ஒரு அத்திப்பழத்தில் 30 கலோரிகள், 9 கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் சர்க்கரை, ஒரு கிராம் நார்ச்சத்து உள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, சி, இரும்பு சத்து, நியாசின், போலேட், மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன.


    அத்திப்பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், நார்ச்சத்து ஆகியவை இன்சுலின் சுரப்பதை மேம்படுத்தி அதன் செயல்பாட்டை ஒழுங்குபடுத்த உதவுகிறது. இது ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.

    அத்திப்பழம் 35 என்ற மிகக்குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்டுள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற பழமாகும். அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தடுத்தும், குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

    இதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றன. அத்திப்பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய்கள் வராமலும் தடுக்க துணை புரிகிறது.

    மேலும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது, கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் பிரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களை பாதுகாக்கின்றன.


    மேலும் ஆன்டி ஆக்சிடன்ட் குளோரோஜெனிக் அமிலம் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. அத்திப்பழத்தில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு வலுசேர்க்கிறது.

    சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு 2 அத்திப்பழங்கள் சாப்பிடலாம். ரத்த உறைவை தடுக்கும் மாத்திரைகளை உட்கொள்பவர்கள் டாக்டரின் ஆலோசனை பெற்ற பின்னரே அத்திப்பழங்களை சாப்பிடவேண்டும். இத்தகைய நன்மைகள் நிறைந்த அத்திப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் பயமின்றி உட்கொள்ளலாம்.

    மலச்சிக்கலை சரிப்படுத்த நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த உணவுகளை சரியான விகிதத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
    குழந்தைகளுக்கு உணவு தருவதில் மட்டுமே கவனமாக இருந்தால் போதாது. சாப்பிட்ட உணவு சரியாக செரிமானமாகி, மலமாக வெளியேறுகிறதா எனக் கவனிப்பதும் முக்கியம். ஏனெனில் செரிக்கப்பட்ட உணவிலிருந்து சத்துகள் உறிஞ்சப்பட்ட பின் மீதமுள்ள கழிவானது உடலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இது சரியாக நடக்காவிட்டால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும். மலம் வெளியேறாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு மலச்சிக்கலைத் தவிர்க்கும் வழிகளை முறையாக பின்பற்றினாலே போதும். மலச்சிக்கல் பிரச்னை நீங்கிவிடும்; குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

    மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?

    பொதுவாகவே ஒரு வயதுக்கு கீழ் தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தைகளுக்கு மலம் கழிப்பதில் பெரிதாக சிக்கல் ஏற்படுவதில்லை. தாய்ப்பால் குடிக்கும் குழந்தை மலம் கழிக்காவிட்டால் அது குழந்தைக்கு சரியாகப் பால் கிடைக்காததன் அறிகுறியாக இருக்கலாம். பசும்பால், பாக்கெட் பால் மற்றும் இதர உணவுகளைக் குழந்தைச் சாப்பிட தொடங்கியவுடன்தான்  மலச்சிக்கல் ஆரம்பமாகிறது.

    எப்படிக் கண்டுபிடிப்பது?

    தொடர்ச்சியாக 2 அல்லது 3 நாள்கள் மலம் கழிக்காமல் இருத்தல்
    மலம் கழிக்கும்போது, வலி ஏற்பட்டு அழுவது
    மலம் கழிக்க மறுத்து, ஆத்திரமடைவது
    மலம் கழிக்க வேண்டுமென்ற பயத்தில் சாப்பிட மறுப்பது
    பசியின்மை
    எடை குறைவு
    மலம் கழிக்கும்போது முகத்தைச் சுருக்கி முக்குவது
    மலம் கழிக்க முயற்சி செய்தும் மலம் வெளியேற முடியாமல் குழந்தை அழுவது
    மலம் இறுகி வெளியேறும்போது அதில் காணப்படும் ரத்தக் கசிவு
    அடிவயிற்றில் வலி
    இது போன்ற அறிகுறிகள் இருந்தால் அது மலச்சிக்கலாக இருக்கலாம்.

    மலச்சிக்கலைத் தீர்க்க எளிய வழிகள்

    உணவு மாற்றம் அவசியம்:

    மலச்சிக்கலை சரிப்படுத்த நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த உணவுகளை சரியான விகிதத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

    கேரட், முருங்கைக்காய், தினம் ஒரு கீரை வகைகளோடு நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துள்ள காய்களான வெண்டைக்காய், அவரைக்காய், சுரைக்காய், முள்ளங்கி போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு மேற்சொன்ன காய்களை நன்கு மசித்துத் தரலாம். பற்கள் இருக்கும் குழந்தைகளுக்கு நன்கு மென்று சாப்பிட சொல்லி வலியுறுத்துங்கள்.

    வாழைப்பழம் சிறந்த மலமிலக்கியாக செயல்படும். வாழைப்பழத்தை தனியாகச் சாப்பிட பிடிக்காத குழந்தைகளுக்கு பாலுடன் சேர்த்து தரலாம். குழந்தைகளின் மலச்சிக்கலைத் தீர்க்க மலை வாழைப்பழம் பெஸ்ட்.

    இரவு ஊறவைத்த 5-10 உலர்திராட்சைகளைக் காலை மற்றும் மாலையில் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

    பேரீச்சை – 2, அத்திப்பழம் – 1 ஆகியவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து காலையில் நன்கு மசித்துக் கொடுக்கலாம்.

    கேரட்டை அரைத்து சாறெடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து தரலாம்.

    அரிசி உணவை மட்டுமே கொடுக்காமல் உணவில் சிறுதானியங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    மைதாவால் செய்யப்பட்ட பரோட்டா மற்றும் துரித உணவுகளைக் கட்டாயமாகக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது.

    மலச்சிக்கலைத் தடுக்கும் தண்ணீர்:

    விளையாட்டு ஆர்வத்தில் குழந்தைகள் தண்ணீர் குடிக்க மறந்தாலும்கூட தேவையான தண்ணீரைக் குடிக்க பழக்க வேண்டியது அவசியம்.

    தினமும் தூங்கி எழுந்த பின் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிக்க கொடுங்கள். இதனால் வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும். உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்துக்கு பிறகு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் கொடுக்கலாம். இது குழந்தையின் செரிமானத்தைத்  தூண்டி மலச்சிக்கலைத் தடுக்கும்.
    இன்றைய சூழலில் பலதரப்பட்ட அயல்நாட்டு உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்கள் காரணமாக மலச்சிக்கல் ஏற்படுகிறது. மலச்சிக்கலை சரி செய்ய சித்த மருத்துவம் கூறும் சில அரிய குறிப்புகளை பார்ப்போம்.

    இன்றைய சூழலில் பலதரப்பட்ட அயல்நாட்டு உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்கள் காரணமாக நமது உடலில் பல நோய்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் மலச்சிக்கல்.

    மலச்சிக்கல் ஏற்பட காரணம்: பீட்ஸா, பர்கர் போன்ற அயல் நாட்டு உணவுகளை உண்பது, பால் சம்மந்தமான உணவுகளை அதிகம் உண்பது, பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு வகைகளை உண்பது, தண்ணீரை அதிகம் பருகாமல் இருப்பது போன்ற பல காரணங்களால் மலசிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு. அதே போல நாம் பிற நோய்களுக்காக சாப்பிடும் சில மருந்துகளின் பக்க விளைவுகளால் கூட மலசிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மலச்சிக்கலை சரி செய்ய சித்த மருத்துவம் கூறும் சில அரிய குறிப்புகளை பார்ப்போம்.

    குறிப்பு 1 : மலச்சிக்கல் நீங்க கடுக்காய் பொடி பெரிதும் உதவுகிறது. அதிகாலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் கடுக்காய் பொடியை சுடுதண்ணீரில் கலந்து தினமும் குடித்து வர மலச்சிக்கல் குணமாகும்.

    குறிப்பு 2 : மலச்சிக்கல் குணமாக திரிபலா பொடி ஒரு சிறந்த மருந்தாகும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் அரைத்து உருவாக்கும் பொடியே திரிபலா பொடி. இந்த பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை தினமும் இரவில் அரை ஸ்பூன் சாப்பிட்டால் மலச்சிக்கல் சரியாகும்.

    குறிப்பு 3 : மலச்சிக்கல் தீர பப்பாளி மற்றும் அத்திப்பழம் பெரிதும் துணைபுரிகிறது. உலர்ந்த அத்தி பழத்தை இரவில் நீரில் ஊறவைத்து காலையில் உட்கொண்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். அதே போல உணவை உண்பதற்கு முன்போ அல்லது பின்போ பப்பாளி பழத்தை உண்டால் மலச்சிக்கல் குணமாகும்.

    குறிப்பு 4 : குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் மாலையில் ஐந்து முதல் பத்து உலர்ந்த திராட்சையை நீரில் மூன்று மணி நேரம் ஊறவைத்து அதை நீரில் நன்கு பிசைந்து கொடுத்தால் மலச்சிக்கல் விரைவில் நீங்கும்.

    குறிப்பு 5 : நார்சத்து அதிகம் உள்ளன உணவுகளை அதிகம் உட்கொண்டால் மலச்சிக்கல் தீரும். கொத்தமல்லி, மிளகாய், ஓமம், மிளகு போன்றவற்றில் நார் சத்து அதிகம் உள்ளது. ஆகையால் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. அதே போல பசலைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் நீங்கும்.
    கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்சனை மலச்சிக்கல். இந்த மலச்சிக்கல் தீர என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்.
    கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்சனை மலச்சிக்கல். அப்போது சிரமப்பட்டு மலம் கழிக்கக்கூடாது.

    நிறைய கீரை சாப்பிடுவதும், பழங்கள் சாப்பிடுவதும்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு. பழச்சாறு சாப்பிடுவதைவிட பழமாக சாப்பிடுவது நல்லது. அதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும். பழங்களில், பப்பாளியையும் அன்னாசியையும் தவிர்ப்பது நல்லது. இந்தப் பழங்களால் கரு கலைந்துவிடும் என்ற கருத்து விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் படவில்லை என்றாலும், மருத்துவர்கள் இவற்றை பரிந்துரைப்பது இல்லை. 15 வாரங்கள் ஆனதும் நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும்.

    கால்சியம் சத்து நிறைய தேவைப்படுகிறது என்பதால், கர்ப்பிணிகள் ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு லிட்டர் பால் அருந்த வேண்டும். கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தாலும், மாத்திரையைவிட பால் நல்லது. அதில் பால்புரதம், கால்சியம், தேவையான தாது உப்புகள் இருக்கின்றன.



    தயிர், பால்பொருள்கள், கொண்டக்கடலை, பட்டாணி சாப்பிடலாம். பொதுவாக, எண்ணெய், அதிக மசாலா, காரம் இல்லாமல் உணவு இருப்பது நலம். ஊறுகாய் சாப்பிடவேண்டும் போல் இருந்தாலும் அதில் இருக்கும் அதிகப்படியான உப்பும் எண்ணெயும் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் என்பதால் தவிர்ப்பது நல்லது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிக உப்பு ஆகாது.

    சிலருக்கு இந்த சமயத்தில் கால் வீங்கும். வீக்கம் இருப்பின் சிறிது உயரமான ஸ்டூலில் கால்களைத் தூக்கி வைத்துக் கொள்ளலாம். இதெல்லாம் கர்ப்பிணிகளுக்கு வரும் சாதாரண பிரச்சனைதான். பயப்பட வேண்டாம். இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி இரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
    பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. பழைய சோறு உடல் சூடு ஏற்படாமல் தடுக்கவும், மலச்சிக்கல் பிரச்சனை நீக்கவும், வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.
    பழைய சோறு... தமிழர்களின் பாரம்பரிய உணவு. கஞ்சி உணவு அரிசிச் சோறும் தண்ணியும் கலந்த ஒரு கலவை. கஞ்சியில் உள்ள நீரை மட்டும் காலையில் அருந்துவார்கள். இதை நீராகாரம் என்பார்கள். பழைய கஞ்சியை நீராகாரம், பழங்கஞ்சி, பழந்தண்ணி, புளிச்ச கஞ்சி, பழஞ்சோறு, பழையது, கஞ்சித்தண்ணி என்பார்கள்.

    பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த இந்த உணவில் உள்ள நல்ல பாக்டீரியா உடல் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும். நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த இந்த உணவு செரிமானக்கோளாறுகளைப் போக்கி செரிமான மண்டலம் சிறப்பாகச் செயல்பட உதவும்.

    நீண்டநாள் இளமையுடன் இருக்கவும், முதுமை ஏற்படாமல் தடுக்கவும், எலும்புகளை வலிமைப்படுத்தவும், உடல் சூடு ஏற்படாமல் தடுக்கவும், மலச்சிக்கல் பிரச்சனை நீக்கவும், சோர்வு நீக்கி சுறுசுறுப்பு தரவும், இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தவும், வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கவும், வாதம், பித்தக் கோளாறுகளில் இருந்து விடுதலை தரவும் உதவக்கூடியது பழைய சோறு.

    சத்துகள் நிறைந்த, தாது உப்புகள் நிறைந்த பழைய சோற்றுக்கு சம்பா அரிசி ஏற்றது. அதிலும் கைக்குத்தல் அரிசி மிகவும் சிறப்பு. முதல் நாள் வடித்த சோற்றில் நீர் ஊற்றி வைத்து மறுநாள் உண்ணக்கூடியதே பழைய சோறு.



    முதல் நாள் சமைத்த உணவில் நீர் ஊற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சோற்றுடன் சின்ன வெங்காயம் சேரும்போது நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளிக்கொடுக்கும். பழைய சோற்றைச் சாப்பிட்டு வந்தால் எந்தவிதக் காய்ச்சல்களும் நம்மை நெருங்காது.

    கோடை காலத்தில் கண் நோய்கள், அம்மை, மஞ்சள் காமாலை மற்றும் பல நோய்கள் பாதிக்காமல் இருக்க பழைய சோறு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. நோய்கள் வரும்முன் காக்க சிறந்த உணவு.

    அரிசி சோறு மட்டுமல்ல கேழ்வரகு, கம்பு போன்றவற்றை இடித்து மாவாக்கி காலையில் ஊற வைத்து மாலையில் நீர் விட்டுக் கரைத்து உப்பு சேர்த்துக் காய்ச்ச வேண்டும். முதல்நாள் காய்ச்சி வைத்த மாவை மறுநாள் காலை எடுத்து தண்ணீர் அல்லது மோர் சேர்த்துக் கரைத்து துவையல், ஊறுகாய் சேர்த்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும். கோடை காலத்தில் ஆற வைத்தும் குளிர்காலத்தில் சூடாகவும் சாப்பிடலாம். மண்பானையில் செய்து வைத்துக் கொண்டால் நான்கு நாள் வரை கூட இதைப் பயன்படுத்தலாம்.

    ×