என் மலர்
நீங்கள் தேடியது "Coonoor Sims Park"
- நீலகிரியில் கோடை சீசன் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது.
- பல்வேறு வகையான மலர்ச்செடிகளை நடவு செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசன் ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெறும். அப்போது விடுமுறை காலம் என்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம்-மாவட்டம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி மற்றும் குன்னூருக்கு திரண்டு வருவர்.
தொடர்ந்து அவர்கள் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பூங்காக்களில் நடைபெறும் மலர்சீசனை கண்டுகளித்தும், இதர சுற்றுலா தலங்களை பார்வையிட்டும் விடுமுறையை கொண்டாடி செல்வது வழக்கம்,
அந்த வகையில் நீலகிரியில் கோடை சீசன் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை பூங்காக்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில், அங்கு தற்போது பல்வேறு வகையான மலர்ச்செடிகளை நடவு செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.
இதில் ஒருபகுதியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு 5 லட்சம் மலர் செடிகளை நடவுசெய்வதென தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இதற்காக அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து 35-க்கும் மேற்பட்ட மலர் செடி வகைகள் மற்றும் 130 வகையில் மலர்நாற்றுகள் வரவழைக்கப்பட்டு உள்ளன.
தொடர்ந்து சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்கான மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணிகளின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலாமேரி கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதில் குன்னூர் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பிரபு, துணை இயக்குனர் அப்ரேஸ்பேகம், தோட்டக்கலைத்துறை அலுவலர் லட்சுமணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சால்வியா, டேலியா, ஆண்ட்ரினம், பால்சம், பெகோனியா, மேரிகோல்ட், பிரெஞ்ச் மேரிகோல்ட், பேன்சி, காஸ்மாஸ், டேலியா, ஜினியா, லூபின், கேலன்டுல்லா உள்ளிட்ட பல்வேறு வகையான மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணிகளில் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- 2-வது சீசனுக்காக தயாராகி வருகிறது குன்னூர் சிம்ஸ் பூங்கா.
- சீசனுக்காக மலர் நாற்றுகள் நடப்பட்டன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் இரண்டாம் சீசன் நடைபெறும். குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்காக மலா் நாற்றுகள் நடவுப் பணியை தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் சிபிலா மேரி தொடங்கிவைத்தாா்.
இதில் பெடுனியா, ஆன்டிரினம், பால்சம், பெகோனியா, டையான்தஸ், பேன்சி, சால்வியா, அலிசம், ஜினியா, மேரி கோல்டு, பிரஞ்ச் மற்றும் ஒற்றை மற்றும் இரட்டை அடுக்கு டேலியாவில், லட்சுமி, பாலா, சச்சின், இந்திரா உள்ளிட்ட 75 வகையான மலா் செடி ரகங்கள் நடப்பட உள்ளன.
அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, நெதா்லாந்து போன்ற நாடுகளை தாயகமாக கொண்ட டேலியா, சால்வியா, பிளாக்ஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, டெல்பினியம், ஜெராேனியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், ஸ்வீட்வில்லியம் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள விதைகளின் மூலம் உருவாக்கப்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் மலா் நாற்றுகள் பூங்காவில் நடவு செய்யும் பணிகள் தொடங்கின.
இதில் தோட்டக்கலை உதவி இயக்குநா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.