என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Counseling"

    • 1433 இடங்களுக்கு 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன.
    • நாளை மறுநாள் முதல் கலந்தாய்வு தொடங்குகிறது

    கோவை,

    கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை மறுநாள் (29-ந் தேதி) தொடங்குகிறது.

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணை யவழி விண்ணப்பப்பதிவு தொடங்கியது. கோவை அரசு கலைக் கல்லூரியில் 23 இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தமுள்ள 1433 இடங்களுக்கு 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    இதையடுத்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கலந்தாய்வு நடை முறை நாளை மறுநாள் (29-ந் தேதி) தொடங்குகிறது. அன்றைய தினம் சிறப்பு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூன் 1-ந் தேதி வணிகப்பிரிவு பாடங்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

    ஜூன் 2-ந் தேதி கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணிதம், அறிவியல் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வும், ஜூன் 3 -ந் தேதி பொருளாதாரம், வரலாறு, பொது நிர்வாகம் உள்ளிட்ட பாடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. இறுதியாக ஜூன் 5 -ந் தேதி தமிழ், ஆங்கில இலக்கிய பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது.மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடர்பான மேலும் விவரங்களுக்கு கல்லூரியின் இணையதளத்தைக் காணலாம் என்று முதல்வர் உலகி தெரிவித்துள்ளார்.

    • அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது என அறிவிக்கபட்டுள்ளது
    • கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    அரியலூர்,

    அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024-ம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (மே.30) முதல் நடைபெறுகிறது. நாளை (மே.30) ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தேசிய மாணவர் படை வீரர்கள் முதலான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூன்.1-ம் தேதி வணிகவியல் (பி.காம்.,), ஜூன்.2-ம் தேதி இளம் அறிவியல் (பிஎஸ்ஸி.,) கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், சுற்றுச்சூழல் அறிவியல், புள்ளியியல், ஜூன்.5-ம் தேதி மொழிப்பாடம் (பி.ஏ.,) தமிழ், ஆங்கிலம், ஜூன்.6-ம் தேதி (பி.ஏ.,) வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுகளுக்கு முதற்கட்ட மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    இது குறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜோ.டோமினிக் அமல்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இணைய தளம் மூலம் விண்ணப்பித்த மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், இணைய வழி விண்ணப்பத்தின் நகல், 10, +2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான உரிய சான்றிதழ், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள் -2, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ – 4, வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் –2 ஆகிய அனைத்து சான்றிதழ்களும் அசல் மற்றும் நகல்களுடன் பெற்றோருடன் நேரில் வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புகளுக்கான கலந்தாய்வு வரும் மே 31 தொடங்கி ஜூன் 6ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • அசல் மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் இல்லாமல் இருப்பின் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.

    இது குறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:- சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் மே 31 தொடங்கி ஜூன் 6ந் தேதி வரை நடைபெறுகிறது. தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ள நிலையில், விண்ணப்பித்தவா்களின் தரவரிசைப் பட்டியல் கல்லூரியின் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

    ஆகவே விண்ணப்பித்துள்ள மாணவா்கள் தங்கள் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு தங்கள் தரவரிசையை அறிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கும், கைப்பேசி எண்ணுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். இதனடிப்படையில் மாணவா்கள் கல்லூரியில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். கலந்தாய்வுக்கு அடுத்தடுத்த தரவரிசையில் இருந்தே அழைக்கப்படுவா். அழைக்கப்படுபவா்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும். மாற்றுத்திறனாளி, விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தேசிய மாணவா் படை 'ஏ' சான்றிதழ் பெற்றவா்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவா் சோ்க்கை புதன்கிழமை காலை 9.30 மணி அளவில் நடைபெறுகிறது.

    இந்த சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் சேர விரும்பும் விளையாட்டு வீரா்கள் சா்வதேச, தேசிய, மாநில, மாவட்ட அளவில் விளையாட்டில் சிறப்பிடம் பெற்றவா்கள் உரிய சான்றிதழ்களை எடுத்துவர வேண்டும். மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவா்களின் சான்றிதழ் மாவட்ட விளையாட்டு அலுவலரால் கையொப்பமிடப்பட்டவை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். பள்ளியில் தேசிய மாணவா் படையில் 'ஏ' சான்றிதழ் பெற்றவா்கள் சிறப்பு ஒதுக்கீட்டில் பங்கு பெறலாம். முன்னாள் மற்றும் தற்போதைய ராணுவத்தினரின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், அந்தமான் நிகோபாா் தீவுகளின் தமிழா்கள் ஆகியோா் சிறப்பு ஒதுக்கீட்டில் கலந்து கொள்ள உரிய அசல் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

    கலந்தாய்வில் பங்கேற்க கல்லூரிக்கு வருவோா் கட்டாயம் பெற்றோா் உடன் வரவேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தைக் கட்டாயம் கொண்டு வரவேண்டும். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல்பக்கம் ஆகியவற்றின் 2 நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் கொண்டுவர வேண்டும். பாஸ்போா்ட் அளவிலான 6 புகைப்படம் மற்றும் கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணத் தொகையுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம். அதே வேளையில், அசல் மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் இல்லாமல் இருப்பின் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது.

    உரிய நேரத்தில் கலந்தாய்வில் பங்கேற்காமல் தாமதமாக வந்தால் அந்த நேரத்தில் பாடப் பிரிவுகளில் இருக்கும் இடங்களின் அடிப்படையிலேயே தகுதியுள்ள பிரிவுகளில் சோ்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெரம்பலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது
    • 2ம் கட்ட பொது கலந்தாய்வு வரும் 12ம்தேதி முதல் நடைபெறுகிறது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டின் இளங்கலை பட்டப்படிப்பிற்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவ,மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான பொது கலந்தாய்வில் முதல் கட்டமாக இன்று (1ம்தேதி) தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும், 2ம்தேதி வணிகவியல் பாடப்பிரிவுக்கும், 3ம்தேதி அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 6ம்தேதி அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

    முதல் பொது கலந்தாய்வில் 2ம் கட்டமாக வரும 7ம்தேதி தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும், 8ம் தேதி வணிகவியல் பாடப்பிரிவுக்கும், 9ம்தேதி அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 10ம் தேதி அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ,மாணவிகள் இணையதள விண்ணப்ப நகல், மாற்று சான்றிதழ், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் 5 நகல் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்ப படிவ நகல், 5 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் கல்லூரிக்கு 9.30 மணிக்குள் வர வேண்டும். 2ம் கட்ட பொது கலந்தாய்வு வரும் 12ம்தேதி முதல் நடைபெறுகிறது. அதற்கான தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுதொடங்கியது
    • நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், அறிவியல் பாடப்பிரிவுகளில் 20 பேருக்கு இடம் கிடைத்தது. பெரம்பலூர் குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கு முதலாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு சேர்க்கைக்கான முதல் பொது கலந்தாய்வு முதல் கட்டமாக கடந்த 30-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று இளங்கலை அறிவியல் பாடப்பிரிவுகளான பி.எஸ்.சி. கணிதம், வேதியியல், இயற்பியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள் மற்றும் பி.டெக் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடந்தது.

    தலா 40 இடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களில் 560 மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மாணவ-மாணவிகளின் கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்டவை பேராசிரியர்களால் சரி பார்க்கப்பட்டது. கலந்தாய்வில் கணிதம், வேதியியல் பாடப்பிரிவுகளை தவிர மற்ற பாடப்பிரிவுகளில் மொத்தம் 20 பேருக்கு இடம் கிடைத்தது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

    • மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெற்று வருகிறது.
    • மாணவர்கள் பெற்றோர்களை அழைத்து வரவேண்டும்.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பொதுப் பிரிவு மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது.இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கி.கல்யாணி கூறியதாவது:- 2023- 2024 -ம் கல்வி ஆண்டிற்கு இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெற்று வருகிறது.

    இதுவரை நடைபெற்ற கலை மற்றும் வணிகவியல் பிரிவில் மொத்தமாக 326 பேர் சேர்ந்து உள்ளனர்.தொடர்ந்து நேற்று இளநிலை அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.இதில் இயற்பியல் பாடப்பிரிவில் 3 மாணவர்களும்,வேதியியல் பாடப்பிரிவில் 27 மாணவர்களும், கணிதவியல் பாடப்பிரிவில் 7 மாணவர்களும், புள்ளியியல் பாடப்பிரிவில்2 மாணவர்களும், தாவரவியல் பாடப்பிரிவில் 7 மாணவர்களும், அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 14 மாணவர்களும், கணினிஅறிவியல் பாடப்பிரிவில் 47 மாணவர்களும்,தமிழ் இலக்கியம், ஆங்கிலம் இலக்கியம் மற்றும் பிபிஏ பாடப்பிரிவில் தலா ஒருவரும் ஆக மொத்தம் 110 பேர் சேர்ந்து உள்ளனர்.இன்று அறிவியல் பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது.

    பிற்பகல் 2 மணியளவில் தமிழ்இலக்கியப் பாடப்பிரிவு மாணவர்களுக்கும் தொடர்ந்து ஆங்கில இலக்கியப் பாடப்பிரிவு மாணவர்கள் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.கலந்தாய்வுக்கு வருகை தரும் மாணவர்கள் 10,11,12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் , மாற்று சான்றிதழ், ஆதார் அட்டை , சாதிச்சான்றிதழ் ஆகிய அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் 3 நகல்கள் , பாஸ்போர்ட் சைஸ் 6 புகைப்படம் , இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல் , தரவரிசை நகல் , கல்லூரிக்கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டு வரவேண்டும்.மாணவர்கள் பெற்றோர்களை அழைத்து வரவேண்டும் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

    • ஜூன் 8 மற்றும் 9ம் தேதி இரு நாட்கள் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது.
    • காலியாக இருக்கும் இடங்களுக்கு அடுத்தடுத்து மாணவர்கள் அழைக்கப்படுவர்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் ஜூன், 8 மற்றும், 9ம் தேதி இரு நாட்கள் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. இக்கல்லூரியில், இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை, முதல் கட்ட கவுன்சிலிங் மே, 31ல் துவங்கி, நேற்று (ஜூன், 6) வரை நடந்தது. மொத்தமுள்ள, 835 இடங்களுக்கு, 8,190 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    நாளை (8ம் தேதி) மற்றும், 9ம் தேதி இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. வணிகவியல் பாடங்களான பி.காம்., பி.காம்., சி.ஏ., படிப்புக்கு ஜூன், 8ம் தேதி காலை, 9:30 க்கும், பி.காம்., ஐ.பி., பி.பி.ஏ., படிப்புகளுக்கு காலை, 11:30 மணிக்கும், வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுக்கு மதியம், 1:30 மணிக்கும் கவுன்சிலிங் நடக்கும். வரும், 9ம் தேதி காலை, 9:30 மணிக்கு இயற்பியல் பாடப்பிரிவு கவுன்சிலிங் நடக்கிறது. வேதியியல், விலங்கியல் பாடங்களுக்கு காலை, 11:30 மணிக்கும், கணிதம், கணிணி அறிவியல், கணிணி பயன்பாடு, ஆடைவடிவமைப்பு நாகரீகம், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம் பாடங்களுக்கு மதியம், 1:30 மணிக்கும் கவுன்சிலிங் நடக்கிறது. அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை, விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப்பட்டில் www.cgac.in என்ற கல்லூரியின் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு தங்கள் தரவரிசையை அறிந்து கொள்ளலாம். காலியாக இருக்கும் இடங்களுக்கு அடுத்தடுத்து மாணவர்கள் அழைக்கப்படுவர்.

    கவுன்சிலிங்கில் பங்கேற்க கல்லுாரிக்கு வருவோர் கட்டாயம் பெற்றோர் உடன் வருதல் வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும். அனைத்து சான்றிதழின் இரண்டு நகல், அசல் சான்றிதழ் கொண்டுவர வேண்டும்.

    உரிய நேரத்தில் கவுன்சிலிங்கில் பங்கேற்பது அவசியம். தாமதமாக வந்தால், அந்த நேரத்தில் பாடப்பிரிவுகளில் இருக்கும் இடங்கள் அடிப்படையிலேயே தகுதியுள்ள பிரிவுகளில் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு, கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

    • அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு தொடங்கப்பட்டது
    • வருகிற 12-ம் தேதி வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    அரியலூர்,

    அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொ) டோமினிக் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரியலூர் அரசு கலை கல்லூரியில் நிகழாண்டில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு இணையதள வாயிலாக விண்ணப்பித்த மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியது. இன்று தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், நாளை (சனிக்கிழமை) அறிவியல் பாடப்பிரிவுக்கும், வருகிற 12-ம் தேதி வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    முதற்கட்ட கலந்தாய்வுகளில் கலந்து கொண்டு இடம் கிடைக்காத மாணவ, மாணவிகளும், கலந்து கொள்ளாதவர்களும் இந்த 2-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவிகள் இணையதள விண்ணப்பத்தின் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் 3 நகல்கள், 3 புகைப்படம், கல்லூரி கட்டணத்துடன் நேரடியாக தங்களது பெற்றோருடன் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை 14, நாளை மறுநாள் 15 -ந் தேதிகளில் நடைபெறவுள்ளது.
    • தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும்.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பிரிவுகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை 14, நாளை மறுநாள் 15 -ந் தேதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2023-24 ம் ஆண்டுக்கான இளநிலைப்பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஏற்கனவே முடிவடைந்துள்ளது.இந்நிலையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 14, 15 -ந் தேதிகளில் நடைபெறுகிறது.

    இக்கலந்தாய்வின் முதல்நாளான ஜூன் 14 ந் தேதி காலை 9.30 மணிக்கு பி.காம், பி.காம்.சி.ஏ. ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், பி.காம்.ஐபி, பி.பி.ஏ., ஆகிய பாடப் பிரிவுகளுக்கு காலை 11 மணிக்கும், வரலாறு, பொருளியல், ஆடை வடிவமைப்பு நாகரிகம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு பிற்பகல் 12.30 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    இரண்டாம் நாளான ஜூன் 15 ந் தேதி காலை 9.30 மணிக்கு இயற்பியல், வேதியியல், விலங்கியல் பாடப் பிரிவுகளுக்கும், காலை 11 மணிக்கு கணிதம், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், பிற்பகல் 1.30 மணிக்கு தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும். விண்ணப்பித்தோரின் காத்திருப்போா் தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சரிபார்ப்பு பணிகள் நடந்து வருவதாக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.
    • கலந்தாய்வு கடந்த 19-ந் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது

    திருப்பூர் : 

    கோவை வேளாண் பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்து வருவதாக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

    வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 18 உறுப்பு கல்லூரிகளில் 2,555 இடங்களும் 28 இணைப்பு கல்லூரிகளில் 2,806 இடங்கள் உட்பட மொத்தம் 5,361 இடங்கள் கலந்தாய்வு வாயிலாக நிரப்பப்படவுள்ளன. சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு கடந்த 19-ந் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது. ராணுவ வீரர்களுக்கான சிறப்பு பிரிவில் 20 பேர், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம், விளையாட்டு பிரிவில் 20 இடங்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் 403 பேர் இக்கலந்தாய்வு வாயிலாக சேர்க்கப்படுவார்கள்.

    இதுகுறித்து துணைவேந்தர் கீதாலட்சுமி கூறுகையில், சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த 19ந் தேதி முதல் நடந்து வருகிறது. பொது கலந்தாய்வு வரும் வாரம் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் கலந்தாய்வு குறைந்த மாணவர்கள் என்பதால் ஆப்லைன் முறையில் நடத்தவுள்ளோம் என்றார்.

    • சி.சி.டி.வி. கேமரா பொருத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆலோசனை வழங்கினார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 91-வது வார்டுக்கு உட்பட்ட ஓம்சக்தி நகர், வ.உ.சி. தெரு, சேஷாத்திரி தெரு ஆகிய பகுதிகளில் இடம்புரி செல்வ விநாயகர் கோவில் சங்கத்தின் சார்பாக 16 சி.சி.டி.வி. காமிரா பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவனி–யாபுரம் போலீஸ் இன்ஸ் பெக்டர் பார்த்திபன் கலந்து– கொண்டு நிகழ்ச்சி யை துவக்கி வைத்தது பொது –மக்களுக்கு ஆலோச னை வழங்கினார்.

    அப்போது அவர் பேசு–கையில், பொதுமக்கள் குற்ற செயல்கள் எதுவும் நடை–பெறாமல் இருக்க இனி வரும் காலங்களில் வீடு தோறும் சி.சி.டி.வி. பொருத் தும் சூழ்நிலை ஏற்படும் என்றும், இது போன்று தெருக்களில் பொதுநல அமைப்புகள் சி.சி.டி.வி. காமிரா பொ ருத்துவதினால் குற்றவாளி களை போலீசார் விரைந்து பிடிப்பதற்கும் குற்ற செயல்கள் நடைபெறா–மல் இருக்கவும் மிக அவ–சியமாக இருக்கிறது.

    மேலும் மாணவ, மாண–விகள், பொதுமக்கள் இந்த பகுதிகளில் போதை பொருட்கள் யாரேனும் விற்றால் அல்லது சந்தேகப்ப–டும் படி புதிய நபர்கள் யாரேனும் தெருக்களில் வந்து சென்றால் உடனடி–யாக காவல்துறையிடம் தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ தெரி–விக்க வேண்டும்.

    அவ்வாறு தெரியப்ப–டுத்தும் அவர்களின் ரகசி–யங்கள் காக்கப்படும். இதன் மூலம் குற்றச்செயல் புரியும் நபர்களை போலீசார் உடனே கைது செய்து நடவ–டிக்கை எடுக்க உதவியாக இருக்கும் என்று தெரிவித் தார். முன்னதாக நற்பணி மையத்தின் தலைவர் கர்ணா வரவேற்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர்கள் சக்தி மணிகண்டன், பாண்டி மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் சந்திரன், குணசேகரன், மோகன், பாஸ்கரன், பரதன், கண் ணன், சரவணன், பிரக–தீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழில்முறைக் கல்வி பாடப்பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
    • கலந்தாய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

    கோவை,

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டு இளம் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான இணையதள வழி கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.

    7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின்படி, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.

    தொழில்முறைக் கல்வி பாடப்பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு நேற்று தொடங்கியது. நாளை (16-ம் தேதி) வரை நடக்கிறது. இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 18-ம் தேதி நடக்கிறது. பொதுப்பிரிவினருக்கான இணையவழி முதல்கட்ட கலந்தாய்வு வரும் 17-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடக்கிறது.

    கலந்தாய்வில் பங்கேற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 20-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடக்கிறது. பொதுப்பிரினருக்கான நகர்வு முறை மற்றும் இணையதள வழி 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 26-ம் தேதி மற்றும் 27-ம் தேதிகளில் நடக்கிறது.

    பொதுப்பிரிவில் இணையதள வழி இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 28-ம் தேதி மற்றும் 29-ம் தேதி நடக்கிறது. இணையதள வழி கலந்தாய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×