என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CPIM"

    • இந்து சமய அறநிலையத்துறையை அழிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் - பாஜக துடிக்கிறது.
    • கோயில் சொத்துக்களை கொள்ளையடிப்பதே ஆர்எஸ்எஸ் - பாஜகவின் நோக்கம்.

    தமிழ் கடவுளான முருகபெருமானின் 3-ம் படை வீடான பழனியில் இன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது. மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    தமிழ்நாடு அரசு நடத்திய முத்தமிழ் முருகன் மாநாடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "மதத்திலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடிப்படை. எந்த ஒரு மதத்தையும் பரப்புவது, பின்பற்றுவது அரசின் பணியாக இருக்கக் கூடாது; மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பேணி பாதுகாக்கப்பட வேண்டும்.

    இந்து சமய அறநிலையத்துறையை அழிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் - பாஜக துடிக்கிறது. கோயில் சொத்துக்களை கொள்ளையடிப்பதும், சாதிய படிநிலையை பாதுகாப்பதுமே ஆர்எஸ்எஸ் - பாஜகவின் நோக்கம். இதை முறியடிக்கும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை பணிகளை மேற்கொள்வது நல்லது. மத அடிப்படையிலான விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
    • தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார். 

    கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். 2005 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சீதாரம் யெச்சூரி மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். 

    • பல முறை ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி பிறந்த சீதாரம் யெச்சூரி நிமோனியா பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சீதாராம் யெச்சூரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சென்னையில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர் சீதாராம் யெச்சூரி. இவரது பெற்றோர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். மாணவ பருவத்தில் இருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்து வரும் சீதாராம் யெச்சூரி மேற்கு வங்க மாநிலத்தில் பல முறை ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக 32 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். மாநிலங்களவையில் பல்வேறு விவகாரங்களில் தனது ஆற்றல் மிக்க பேச்சால் உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தவர் சீதாராம் யெச்சூரி. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

     


    ஐதராபாத்தில் வளர்ந்த யெச்சூரி ஆல் செயின்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். அதன்பிறகு தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கக் கோரிய போராட்டம் காரணமாக 1969 ஆம் ஆண்டு யெச்சூரி டெல்லிக்கு சென்றார். அங்கு பிரெசிடன்ட் எஸ்டேட் பள்ளியில் உயர்நிலைக் கல்வி பயின்ற சீதாராம் யெச்சூரி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தேசிய அளவில் முதல் மதிப்பெண் பெற்று அசத்தினார்.

    அதன்பிறகு டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதார பாடப்பிரிவில் பி.ஏ. பட்டமும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டமும் பெற்றுள்ளார். பிறகு இதே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். அதன்பிறகு எமர்ஜன்சி காலக்கட்டத்தில் கைதாகி சிறை சென்றார்.

    1974 ஆம் ஆண்டு எஸ்.எஃப்.ஐ. மாணவர் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட யெச்சூரி, அதன்பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். எமர்ஜன்சியை தொடர்ந்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பு தலைவராக யெச்சூரி மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து எஸ்.எஃப்.ஐ. அமைப்பில் ஈடுபட்டு வந்த யெச்சூரி, 1984 ஆம் ஆண்டு சி.பி.ஐ. எம் மத்திய குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டார்.

     


    1986 ஆம் ஆண்டு எஸ்.எஃப்.ஐ. அமைப்பில் இருந்து விலகிய சீதாராம் யெச்சூரி 14 ஆவது காங்கிரஸ் தலைமை குழுவில் தேர்வு செய்யப்பட்டார். பிறகு 1992 ஆம் ஆண்டு சி.பி.ஐ.எம். கட்சியின் 5-ஆவது பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீதாராம் யெச்சூரி மீண்டும் சி.பி.ஐ.எம். கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் யெச்சூரி மேற்கு வங்கத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பாராளுமன்றத்தில் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசுவதில் பெயர்பெற்றவராக யெச்சூரி திகழந்தார். மேலும், ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி பேசுவதில் யெச்சூரி கைத்தேர்ந்தவர் ஆவார்.

    இந்திய அரசியலில் தனது கொள்கை, மக்கள் பிரச்சினை குறித்து பேச தயங்காதவராக சீதாராம் யெச்சூரி அறியப்படுகிறார். மக்கள் பிரச்சினைகள் மற்றும் ஆளும் கட்சி ஆட்சியில் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதோடு அவற்றை சரிசெய்ய தொடர்ந்து குரல் கொடுப்பவர்களில் யெச்சூரி முதன்மையானவர்.

    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
    • 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில், கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கத்திற்காக, மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர்.

    2005 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சீதாரம் யெச்சூரி மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.

    • உடல்நலக் குறைவு காரணமாக சீதாரம் யெச்சூரி காலமாணார்.
    • கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார். சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்த எக்ஸ் தள பதிவில், "இடதுசாரி இயக்கத்தின் தலைவரும் இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமையுமான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது."

    "தோழர் சீதாராம் யெச்சூரி அச்சமற்ற தலைவராக இருந்தவர், சிறு வயதிலிருந்தே, மாணவர் தலைவராக தைரியமாக அவசரநிலைக்கு எதிராக நின்றதால், நீதிக்கான அர்ப்பணிப்பு வெளிப்பட்டது. தொழிலாளர் வர்க்கம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் முற்போக்கான விழுமியங்கள் ஆகியவற்றிற்கான அவரது அர்ப்பணிப்பு எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு சிறப்பான வாழ்க்கையை வடிவமைத்தது."

    "அவருடன் நான் கொண்டிருந்த ஆழமான உரையாடல்களை நான் எப்போதும் போற்றுவேன். இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரெட் சல்யூட், காம்ரேட்!," என குறிப்பிட்டுள்ளார்.

    • உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.
    • சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.

    இந்நிலையில், சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    "மூத்த சிபிஐ-எம் தலைவர் சீதாராம் யெச்சூரியின் மறைவால் ஆழ்ந்த வருத்தம். இந்திய அரசியலில் அவர் ஆற்றிய தாக்கம் என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கல்கள். ஓம் சாந்தி!" - ஆளுநர் ரவி.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சிகிச்சை பலன் இன்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.
    • முற்போக்கு அரசியலில் சீதாராம் யெச்சூரி ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில், கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கத்திற்காக, மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர்.

    இந்நிலையில் சீராம் யெச்சூரியின் மறைவுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவரது எக்ஸ் பதிவில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைகிறேன். முற்போக்கு அரசியலில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
    • தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார். சீதாராம் யெச்சூரி மறைவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



    இது குறித்த பதிவில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவு குறித்து அறிந்து வருத்தம் அடைந்தேன். முதலில் மாணவர் தலைவராகவும், பின்னர் தேசிய அரசியலிலும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் தனித்துவம் வாய்ந்த, செல்வாக்கு மிக்க குரலாக இருந்தவர். உறுதியான சித்தாந்தவாதியாக இருந்தாலும், கட்சி எல்லைகளைக் கடந்து நண்பர்களை வென்றார். அவரது குடும்பத்தினருக்கும் சக ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்," என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.



    "சீதாராம் யெச்சூரியின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் இடதுசாரிகளின் முன்னணி வெளிச்சமாக இருந்தார். அரசியல் ஸ்பெக்ட்ரம் முழுவதையும் இணைக்கும் திறனுக்காக அறியப்பட்டார். திறமையான நாடாளுமன்ற உறுப்பினராகவும் முத்திரை பதித்தார். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும், பின்தொடர்வோருடனும் உள்ளன, ஓம் சாந்தி," என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

    • உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.
    • சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.

    சீதாராம் யெச்சூரி மறைவுக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக நாளை மறுநாள் (செப்.14) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வைக்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது. 

    • சிபிஎம் கட்சிக்கு மட்டுமல்லாமல் எங்களுக்கும் சொந்தமானவர், அனைவருக்கும் சொந்தமானவர்.
    • கூட்டணி பேச்சுவார்த்தையில் பிரச்சினை ஏற்பட்டாலும் சீதாராம் யெச்சூரி முடித்து தருவார்.

    சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில், மறைந்த சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் படத்திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    பிறகு அவர் உரையாற்றியதாவது:-

    சீதாராம் யெச்சூரியின் மறைவு என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. அவரது உடல்நலம் குறித்து விசாரித்து கொண்டே இருந்தேன்.

    சிபிஎம் கட்சிக்கு மட்டுமல்லாமல் எங்களுக்கும் சொந்தமானவர், அனைவருக்கும் சொந்தமானவர்.

    கருணாநிதி ஆட்சியின்போது கோவையில் நடந்த மாநாட்டில் சீதாராம் யெச்சூரி பேசினார். கருணாநிதி இல்லாமல் தமிழ்நாடு இல்லை என பேசியவர் சீதாராம் யெச்சரூரி.

    கருணாநிதி எழுதிய தாய் காவியம் குறித்து புகழ்ந்து பேசியவர். சீதாராம் யெச்சூரி பேச்சுக்கு கருணாநிதி பாராட்டு தெரிவித்தார். நாட்டின் கருத்தியல் அடையாளமாக விளங்கியவர் சீதாராம் யெச்சூரி.

    கூட்டணி பேச்சுவார்த்தையில் பிரச்சினை ஏற்பட்டாலும் சீதாராம் யெச்சூரி முடித்து தருவார்.

    சீதாராம் யெச்சூரி சிரிப்பை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தந்த தலைவர்களில் அவரும் ஒருவர்.

    தேவகவுடா, குஜ்ரால் ஆட்சியின்போது இடதுசாரி பங்கில் யெச்சூரியே முக்கிய காரணம்.

    இடது சாரிகளையும், ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்தவர். காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவாக்க முக்கிய காரணமானவர். தற்போது, பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி உருவாகவும் முக்கியமாக இருந்தவர். இளைய சமூதாயத்திற்கு எடுத்துகாட்டாக விளங்கியவர்.

    சீதாராம் யெச்சூரி விட்டுச்சென்ற பணிகளை நாம் தொடர வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உமர் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஆகிறார்.
    • 7838 வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் யூசூப் தாரிகாமி வெற்றி

    காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 90 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

    ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால், இதன் முடிவுகள் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    காங்கிரஸ் தேசிய மாநாடு கூட்டணி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக தேர்தலை எதிர்கொண்டன.

    ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 56 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 38 இடங்களிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒரு தொகுதிலும் போட்டி யிட்டன. தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. உமர் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஆகிறார்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் யூசூப் தாரிகாமி, குல்காம் தொகுதியில் தொடர்ந்து 5வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

    1996, 2002, 2008, 2014 தேர்தல்களில் வென்ற இவர் தற்போது நடந்த தேர்தலில் 7838 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

    • நேரடியாக இந்தியாவில் தேசிய பாதுகாப்பை பாதிக்கிறது.
    • தேசிய நலனைப் பாதுகாப்பதில் இந்திய அரசு கடமைப்பட்டுள்ளது.

    இந்தியா எதிர்ப்பு காலிஸ்தான் அமைப்பின் ஆதரவு பெற்ற சிறு குழுக்கள் கனடாவில் செயல்பட்டு வருகிறது. காலிஸ்தான் தலைவர் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான ராஜாங்க ரீதியிலான நட்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளும் தூதர்களை திருப்பி அனுப்பும் நடிவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் கனடாவில் காலிஸ்தான் செயல்பாடுகள் இந்தியாவுக்கு மிகவும் கவலை அளிக்கக்கூடிய விசயம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் "கனடாவில் இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் அமைப்பின் ஒரு பகுதியினரின் செயல்பாடுகள் மிகவும் கவலை அளிக்கக்கூடிய விசயம். இது நேரடியாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பை பாதிக்கிறது. தேசிய நலனைப் பாதுகாப்பதில் இந்திய அரசு கடமைப்பட்டுள்ளது. இதற்கு இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் முழுவதும் ஆதரவு உள்ளது.

    இந்தியாவுக்கு எதிராக கனடா அரசின் பல்வேறு அதிகாரப்பூர்வ அதிகாரிகளால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை இந்திய அரசு நிராகரித்துள்ளது. லாரன்ஸ் பிஷ்னாய் கிரிமினல் கும்பலின் பங்கு உள்பட இந்த விவகாரங்களில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை இந்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுடுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×