search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cricketer"

    • முதலில் பேட்டிங் செய்த எம்.பி. டைகர்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் குவித்தது.
    • உபி பிரிஜ் ஸ்டார்ஸ் அணி 168 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    பிக் கிரிக்கெட் லீக் 2024 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று உபி பிரிஜ் ஸ்டார்ஸ் மற்றும் எம்.பி. டைகர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.

    அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த எம்.பி. டைகர்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய உபி பிரிஜ் ஸ்டார்ஸ் அணி 168 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    இப்போட்டியில் எம்.பி. டைகர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பவன் நேகி வீசிய ஒரு பந்தில் உபி பிரிஜ் ஸ்டார்ஸ் வீரர் சிராக் காந்தி கிளீன் போல்டானார். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஸ்டம்பின் மேல் இருந்த பைல்ஸ் கீழே விழவில்லை. இதனால் அவர் நூலிழையில் ஆட்டமிழக்காமல் தப்பித்ததார்.

    இந்த சம்பவம் நடந்தபோது சிராக் காந்தி 98* (52) ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து அவர் ஆட்டமிழக்காமல் 58 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார்.

    • தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கிப்ஸ் தான் தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று விராட் கோலி தெரிவித்திருந்தார்.
    • கிப்ஸ் பற்றி விராட் கோலி பேசிய அந்த பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    2008 ஆம் ஆண்டு 19 வயதிற்குப்பட்டோருக்கான உலகக்கோப்பையை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது.

    அப்போது, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கிப்ஸ் தான் தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று விராட் கோலி தெரிவித்திருந்தார்.

    கிப்ஸ் பற்றி விராட் கோலி பேசிய அந்த பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்நிலையில் விராட் கோலியின் இந்த வீடியோ குறித்து தென்னாபிரிக்க வீரர் கிப்ஸ் இடம் கேள்வி எழுப்பட்டபோது.

    அதற்கு பதில் அளித்த அவர், கோலியின் இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு பலரும் என்னை டேக் செய்கிறார்கள். அப்போது தன அந்த வீடியோவை நான் பார்த்தேன். எனக்கு அது இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. நான் விராட் கோலியின் தீவிர ரசிகன். சர்வதேச கிரிக்கெட்டில் அவருடைய சிறப்பான விளையாட்டால் அவருக்கு சிறப்பான மரியாதையை கிடைத்துள்ளது.

    குறிப்பாக ஒருநாள் கிரிக்கெ போட்டியின் சேஸிங்கில் ரன்களை துரத்தி வெற்றி பெறுவதில் அவர் காட்டும் உத்வேகம் தான் மற்ற வீரர்களை விட கோலியை தனித்துவமானவராக காட்டுகிறது" என்று தெரிவித்தார்.

    • டெண்டுல்கர் 6 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார்
    • மொத்தம் 34,347 ரன்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்

    சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 51 - வது பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு கிரிக்கெட் உலக வீரர்கள்,மற்றும் நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

    டெண்டுல்கர் 24- 4- 1973-ம் ஆண்டு மும்பையில் பிறந்தார். டெண்டுல்கருக்கு தற்போது 51 வயதாகிறது. கிரிக்கெட்டின் கடவுள் என்று சச்சின் அழைக்கப்படுகிறார்.சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் வருமாறு :-




    டெண்டுல்கர் 11 வயதில் கிரிக்கெட் விளையாட்டில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். அவரது மூத்த சகோதரர் அஜித் டெண்டுல்கர் அவரை ஊக்குவித்தார்.

    1988 -ல், 15 வயதில் சச்சின் டெண்டுல்கர், குஜராத்திற்கு எதிராக ரஞ்சி டிராபி ஆட்டத்தில் பம்பாய்க்காக முதல் தடவையாக கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் சதம் அடித்த அவர், முதல்தர போட்டியில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.




    ரஞ்சி டிராபி, இரானி டிராபி மற்றும் தியோதர் டிராபி ஆகிய 3 உள்நாட்டுப் போட்டிகளிலும் அறிமுகத்திலேயே சதம் அடித்த ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமான இளம் வீரர் இவர்.

    டெண்டுல்கர் 6 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியவர் சச்சின் டெண்டுல்கர். அவர் 664 போட்டிகளில் ஆடியுள்ளார்.

    மொத்தம் 34,347 ரன்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச வரலாற்றில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் இவர் தான். 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது இணையற்ற பேட்டிங் நுட்பங்களால் கிரிக்கெட் உலகில் ஜொலித்தார்.



    இவரது சாதனைகளுக்காக இந்திய அரசு டெண்டுல்கருக்கு பல விளையாட்டு விருதுகளை வழங்கி கவுரவித்தது. 1994 -ல் அர்ஜுனா விருது, 1997 -ல் கேல் ரத்னா விருது, 1998 -ல் பத்மஸ்ரீ, 2008 -ல் பத்ம விபூஷன் ,2013 -ல் பாரத ரத்னா விருதுகளை பெற்றுள்ளார்.

    ×