என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "crowding"
- கும்பமேளா பகுதியில் அனைத்து வாகனங்கள் நுழைய தடை.
- கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு ரெயில்கள், பஸ்கள் இயக்க ஏற்பாடு.
பிரயாக்ராஜ்:
உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளா நெரிசலில் சிக்கி நேற்று 30 பேர் பரிதாபமாக இறந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கவும் முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
அதன்படி கும்பமேளா பகுதியில் அனைத்து வாகனங்களும் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிரயாக்ராஜை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் பிப்ரவரி 4-ந் தேதி வரை மாவட்ட எல்லையிலேயே நிறுத்தப் பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வி.வி.ஐ.பி. பாஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கும்பமேளா பகுதியில் போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்யவும், தேவையற்ற நிறுத்தங்களை தவிர்க்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2025/01/30/8740174-newproject24.webp)
தெருவோர வியாபாரிகளை காலி இடங்களுக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கும்பமேளா பகுதியில் ரோந்து பணியை அதிகரிக்கவும், அயோத்தி-பிரயாக்ராஜ், கான்பூர்-பிரயாக்ராஜ், பதேபூர்-பிரயாக்ராஜ், லக்னோ-பிரதாப்கர்-பிரயாக்ராஜ் மற்றும் வாரணாசி-பிரயாக்ராஜ் போன்ற வழித்தடங்களில் போக்குவரத்து தடைபடாமல் இருப்பதை உறுதிசெய்யவும் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு ஏற்ப பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு முறையாக உணவும், குடிநீர் வசதியும் ஏற்படுத்தித் தர வேண்டும். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், கும்பமேளா பகுதியில் சரியான வாகன நிறுத்து மிடத்தை உறுதி செய்யவும் தடுப்புகளை முறையாக பயன்படுத்தவும் அதிகாரி களுக்கு முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
புனித நீராடி ஊர் திரும்பும் பக்தர்களுக்கு கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கூடுதல் சிறப்பு ரெயில்கள் மற்றும் கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 3-ந்தேதி வசந்த பஞ்சமியை முன்னிட்டு அமிர்த ஸ்னான் (அரச குளியல்) நடைபெற உள்ளதால் (வியாழக்கிழமை) கும்பமேளாவின் ஏற்பாடுகளை மறுபரிசீலனை செய்யுமாறு தலைமைச் செயலாளர் மற்றும் போலீஸ் இயக்குநருக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் உத்தரவிட்டுள்ளார்.
- விருதுநகர் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
- சுகாதார பேரவையை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடந்தது. சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பேசியதாவது:-
பொது சுகாதாரத் துறையின் சேவைகள் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால், சமுதாயத்தின் பங்களிப்பு முக்கியமானதாகும். அனைத்து குடிமக்களின் சுகாதார உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய புரிந்துணர்வு மேம்பாட்டிற்காக மாநில மற்றும் மாவட்ட சுகாதார பேரவையை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்தந்த சமுதாயத்தில் உள்ள சுகாதார சிக்கல்கள் மற்றும் தேவைகளை கண்டறிதலும், சுகாதார பங்கீட்டாளர்களுக்கும் சமுதாயத்திற்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துதலும் இதன் முக்கியமான நோக்கம் ஆகும். ஒவ்வொரு மருத்து வர்களும், வட்டார மருத்துவர்களும் ஊராட்சி பணியாளர்கள், அங்கன் வாடி பணியாளர்கள் உள்ளிட்ட களப்பணி யாளர்களின் கருத்துக்களை பெற்று, முன்னுரிமை அடிப்ப டையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவமனை களில் இருக்கக்கூடிய வசதிகளை வைத்து, சிறப்பான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும். பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்து முன்னுரிமை அடிப்படையில் தங்களது வட்டாரங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் குறித்தும் அத்தியாவசிய மருத்துவ உட்கட்டமைப்பு வசதி குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருத்தியமைக்கப்பட்ட காசநோய் திட்டம், தேசிய தொழுநோய் திட்டம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மற்றும் பொது சுகாதாரத்துறை ஆகிய துறைகள் மூலம் விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில் அரசு மருத்து வக்கல்லூரி முதல்வர் சங்குமணி, இணை இயக்குநர் முருகவேல், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) யசோதாமணி(விருதுநகர்), கலுசிவலிங்கம்(சிவகாசி), துணை இயக்குநர் (குடும்ப நலப்பணிகள்) கவுசல்யாதேவி, துணை இயக்குநர் (காசநோய்) ராஜன், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சசிகலா, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் விவேகன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அங்கு உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்கள் எப்போதும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக தலைநகர் டோக்கியோவில் உள்ள டோசாய் மெட்ரோ ரெயில் நிலையத்தில் காலை வேளையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் வருவதால் அந்த ரெயில் நிலையம் திக்குமுக்காடி போகிறது.
இதற்கு தீர்வு காண ஜப்பான் மெட்ரோ ரெயில் நிறுவனம் புதிய உத்தியை கையாள முடிவு செய்திருக்கிறது. ஆதாவது டோசாய் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் தொடங்குவதற்கு முன்பாக வரக்கூடிய பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 2000 முதல் 3000 பயணிகளுக்கு இலவச உணவு வழங்க வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. #Tokyo #MetroTrain #FreeFood #Crowding