என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "customs"

    • பயணத்தின் நோக்கம், இ-மெயில் முகவரி உள்ளிட்ட விவரங்களை விமானம் கிளம்புவதற்கு 24 மணி நேரத்துக்கு முன் தெரிவிக்க வேண்டும்.
    • பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் பயணம் செய்யும் வெளிநாட்டு பயணிகளின் விவரங்களை இந்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் சுங்கத்துறை உத்தரவிட்டு உள்ளது. அந்த பயணிகளின் செல்போன் எண்கள், அவர்கள் பயணத்துக்கு கட்டணம் செலுத்திய முறை, டிக்கெட் வழங்கிய தேதி, பயணத்தின் நோக்கம், இ-மெயில் முகவரி உள்ளிட்ட விவரங்களை விமானம் கிளம்புவதற்கு 24 மணி நேரத்துக்கு முன் தெரிவிக்க வேண்டும்.

    இந்த நடைமுறை ஏப்ரல் 1-ந்தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தவறும் விமான நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    இதற்காக விமான நிறுவனங்கள் அதாவது இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கும் விமானம் இயக்கும் நிறுவனங்கள் தேசிய சுங்க இலக்கு மையத்தில் வருகிற 10-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

    கப்பலூர் சுங்கச்சாவடிைய நீக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    திருமங்கலம்

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க கோட்ட  முதல் மாநாடு திருமங்கலத்தில் நடைபெற்றது. இதில் செயலாளர் கண்ணன் மற்றும் பரமேஸ்வரன் சங்க கொடியேற்றி வைத்தனர்.

    இந்த மாநாட்டிற்கு கோட்ட தலைவர் பாண்டி யன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினர். மாவட்ட தலைவர் தினகரசாமி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் சோலைமலை தொடக்க உரையாற்றினார்.கோட்ட செயலாளர் ராஜேந்திரன் அறிக்கை வாசித்தார். 

    இந்த மாநாட்டில் மத்திய-மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை  குறைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். திருமங்கலம்- மதுரை சாலையில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    திருமங்கலம் நகரில் உள்ள பஸ் நிலையத்தை  விரிவாக்கம் செய்திட விரைவில் உறுதி செய்திட வேண்டும். ெரயில்வே மேம்பாலம் கட்டிட வரைபடம் உறுதி செய்யப்பட்ட நிலையில் பணிகள் தொடங்க இருப்பதால் உடனடியாக விரைந்து பணிகள் நடைபெற செய்ய வேண்டும். 

     ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டிட அலுவலகத்தின் பின்புறம் உள்ள 42 சென்ட் இடத்தினை விரைவாக பெற்றுக் கட்டுமானப் பணி யினை நிறைவு செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள்   நிறைவேற்றினர்.

    முடிவில் பொருளாளர் சோமசுந்தரம்   நன்றி கூறினார்.
    ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ரூ.45 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் கடத்தி வந்த 2 பேரை சுங்க அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.#Customsseized #foreigncurrency
    ஜெய்ப்பூர்:

    ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இன்று காலை சுங்க அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரண்டு பயணிகளின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களது உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர்.

    இந்த சோதனையில் வெளிநாட்டு பணம் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது. அவர்களிடமிருந்து இந்திய மதிப்பில் ரூ.45 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். பணத்தை கடத்தி வந்த இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



    இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் இந்தியா முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆந்திராவில் உள்ள பீமாவரம் பகுதியில் ஒருவரிடமிருந்து இன்று ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் 40 மதுபாட்டில்களை கைப்பற்றினர். அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #Customsseized #foreigncurrency
    துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ஆப்கானிஸ்தான் நாட்டு ஆசாமியிடம் இருந்து 10.81 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். #KochiAirport #AfghanNational #ForeignCurrency
    திருவனந்தபுரம்:

    துபாயில் இருந்து கேரளவின் கொச்சி விமான நிலையத்துக்கு இன்று காலை பயணிகள் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. அதில் இறங்கி வந்த பயணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு வந்த ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரிடம் அமெரிக்க டாலர்கள் மற்றும் சவுதி அரேபியாவின் ரியால் என வெளிநாட்டு பண நோட்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.

    அவரிடம் இருந்த சுமார் 10.61 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு பண நோட்டுகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக விமான நிலைய சுங்கத்துறையினர் கூறுகையில்,  இந்த நிதியாண்டில் வெளிநாட்டு பணம் மற்றும் தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக சுமார் 254 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். இதில் சுமார் 87 கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளோம்  என தெரிவித்துள்ளனர். #KochiAirport #AfghanNational #ForeignCurrency
    ×