என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "C.V. Ananda Bose"
- கவர்னர் மாளிகையான ராஜ் பவனில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆளுநர் ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
- எனது கேரக்டருக்கு மம்தா போன்ற ஒருவர் களங்கம் விளைவிக்க முடியாது.
கடந்த மே 2 ஆம் தேதி மேற்கு வங்க கவர்னர் மாளிகையான ராஜ் பவனில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆளுநர் ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக கல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/06/30/2978503-mamtha1.webp)
இந்நிலையில் கடந்த ஜூன் 27 இல் தலைமைச் செயலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, 'சமீப காலங்களாக எழுந்துள்ள புகார்களால் ராஜ் பவனுக்கு செல்லவே தங்களுக்கு பயமாக இருப்பதாக பெண்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்' என்று பேசியிருந்தார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/06/30/2978538-mamtha2.webp)
இதைத்தொடர்ந்து தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக மம்தா மீதும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் ஆனந்தா போஸ் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் தற்போது மம்தாவின் கருத்து குறித்து பேசியுள்ள ஆனந்தா போஸ், மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் மம்தாவை நான் மதிக்கிறேன்.அதுபோல மம்தாவும் நாகரீகமான முறையில் பேச வேண்டியது அவசியம். யாரை வேண்டுமானாலும் சீண்டலாம் என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார்.
எனது கேரக்டருக்கு மம்தா போன்ற ஒருவர் களங்கம் விளைவிக்க முடியாது. எனது சுய மரியாதையில் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். மம்தா என்னை சீண்டவோ பயமுறுத்தவே முடியாது. அந்த அளவுக்கு அவர் வளரவில்லை.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/06/30/2978539-mamtha3.webp)
ஒரு முதலமைச்சராக சட்டப்படி என்னை அவர் எதிர்க்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னைக் குறித்து பொய்களைப் பரப்பி எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் மம்தா மேனியாவை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. நான் மம்தா என்ற தனி நபர் மீதே அவதூறு வழக்கு தொடர்ந்தேன். அந்த தனி நபர் முதலமைச்சராக உள்ளார் அவ்வளவுதான் என்று தெரிவித்துள்ளார்.
- ஆளுநர் ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார்.
- நேற்று முன் தினம் தலைமைச் செயலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்க வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி மீது அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்தா போஸ் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மீதும் ஆனந்தா போஸ் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த மே 2 ஆம் தேதி மேற்கு வங்க கவர்னர் மாளிகையான ராஜ் பவனில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆளுநர் ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக கல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/06/29/2955454-mamtha1.webp)
இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் மெல்ல புகைந்து கொண்டிருந்த நிலையில் நேற்று முன் தினம் தலைமைச் செயலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, 'சமீப காலங்களாக எழுந்துள்ள புகார்களால் ராஜ் பவனுக்கு செல்லவே தங்களுக்கு பயமாக இருப்பதாக பெண்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்' என்று பேசியிருந்தார். மேலும் ஆளுநர் மீதான குற்றச்சாட்டு குறித்து திரிணாமுல் கட்சித் தலைவர்களும் பலமுறை பொதுவெளியில் கருத்து தெரிவித்து வந்துள்ளனர்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/06/29/2955456-mamtha2.webp)
இந்த நிலையில்தான் ஆளுநர் ஆனந்தா போஸ் தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக மம்தா மீதும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் நேற்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக பார்க்கமுடிகிறது. தமிழகம் மற்றும் கேரளாவைப் போல் மேற்கு வங்கத்திலும் ஆளுநருக்கும் ஆளும் கட்சிக்கும் இடையில் சமீப காலங்களாக மோதல் போக்கு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
- இடைத்தேர்தலில் இரண்டு திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
- அவர்களுக்கு ஆளுநர் மாளிகையில் பதவி பிரமாணம் செய்து வைப்பதாக ஆளுநர் பிடிவாதம்.
மேற்கு வங்காளத்தில் சயந்திகா பந்தியோபாத்யாய் மற்றம் ரயத் ஹொசைன் சர்கார் ஆகிய இருவரும் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றனர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கவர்னர் பரிந்துரை அல்லது ஒப்புதலுடன் சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொள்வார்கள். இதுதான் நடைமுறை வழக்கம்.
ஆனால் மேற்கு வங்காள ஆளுநர் சிவி ஆனந்த போஸ் சட்டமன்றத்தில் அவர்கள் இருவரும் பதவி ஏற்பதை மறுத்து விட்டார். கவர்னர் மாளிகையில் பதவி ஏற்க வேண்டும் என்றார்.
ஆனால் சட்டசபையில்தான் பதவி ஏற்போம். நீங்கள் சட்டமன்றத்திற்கு வந்து பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி கடிதம் எழுதினர்.
இன்று பதவி ஏற்பதற்கான கடைசி நாள். இருவரும் சட்மன்ற வளாகத்தில் அமர்ந்திருந்தனர். மாலை 4 மணி நேரம் வரை காத்திருந்த நிலையில், திடீரென கவர்னர் சிவி ஆனந்த போஸ் டெல்லி சென்றுவிட்டதாக தகவல் வெளியானது.
இதனால் இரண்டு பேரும் ஏமாற்றம் அடைந்தனர். அத்துடன் சட்டமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக பந்த்யோபாத்யாய் கூறுகையில் "கவர்னர் டெல்லிக்கு சென்று விட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. நாங்கள் நியமனம் செய்யப்பட்டவர்கள் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். நாங்கள் மக்களுக்கு பதில் கூற வேண்டியவர்கள். சட்டசபையில் பதவி பிரமாணம் எடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
மேற்கு வங்காள சட்டமன்ற சபாநாயகர் பிமன் பானர்ஜி கூறுகையில் "கவர்னர் சட்டமன்றத்திற்கு வருவார் என்று நாங்கள் காத்திருந்தோம். ஆனால் அவர் வரவில்லை. இதுபோன்ற தடை ஏற்படுத்துவதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர் ஈகோ பிரச்சனைக்குள் திரும்பியுள்ளார். அவருடைய அதிகாரித்தை பயன்படுத்தி கொண்டிருக்கிறார். என்னுடைய அதிகாரிகம் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்துவேன்" என்றார்.
மேலும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்ததாக எந்தவிதமான சம்பவத்தையும் நாங்கள் கேட்டதில்லை.
- மேற்கு வங்க மாநிலத்தில் கவர்னராக இருப்பவர் சி.வி. ஆனந்தபோஸ்.
- இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரம், மே.5-
மேற்கு வங்க மாநிலத்தில் கவர்னராக இருப்பவர் சி.வி. ஆனந்தபோஸ். இவர் மீது கவர்னர் அலுவலக பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் சி.வி. ஆனந்தபோஸ், கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள ஆலுவா வழியாக சென்றார். அப்போது அவருக்கு எதிராக கேரள இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)