என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "David Warner"

    • ராபின்வுட் படத்தில் டேவிட் வார்னர் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்
    • ராபின்வுட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க டேவிட் வார்னர் ஐதராபாத் வந்தடைந்தார்.

    தெலுங்கில் ராபின்வுட் என்ற படத்தில் நிதின் மற்றும் ஸ்ரீ லீலா நடித்துள்ளனர். இந்த படத்தை வெங்கி குடுமுலா இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படம் மார்ச் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது.

    இந்த இப்படத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்

    இந்நிலையில், ராபின்வுட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க டேவிட் வார்னர் இன்று ஐதராபாத் வந்தடைந்தார்.

    இதனிடையே விமானியே இல்லாததால் ஏர் இந்தியா விமானத்தில் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டதாக தனது எக்ஸ் பக்கத்தில் வார்னர் வேதனையுடன் பதிவிட்டிருந்தார்.

    அவரது பதிவில், விமானத்தை இயக்க விமானி இல்லை என தெரிந்தும் ஏன் பயணிகளை உள்ளே ஏறச் சொல்கிறீர்கள்? என காட்டமாக தெரிவித்திருந்தார்.

    மோசமான வானிலை காரணமாகவே விமானம் தாமதமாக புறப்பட்டதாக வார்னரின் குற்றசாட்டிக்கரு ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

    • தெலுங்கில் ராபின்வுட் படத்தில் நிதின் மற்றும் ஸ்ரீ லீலா நடித்து வருகின்றனர்.
    • ராபின்வுட் படம் மார்ச் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது

    தெலுங்கில் ராபின்வுட் படத்தில் நிதின் மற்றும் ஸ்ரீ லீலா நடித்து வருகின்றனர். இந்த படத்தை வெங்கி குடுமுலா இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படம் மார்ச் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த இப்படத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

    வார்னர், கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் போது மைதானத்தில் வைத்தே புஷ்பா பட ஸ்டைலை செய்து காட்டி இந்திய ரசிகர்களை கவர்ந்தவர். இந்த நிலையில் டேவிட் வார்னர் தெலுங்கு திரைபடத்தில் நடிக்க உள்ளதாக நீண்டகாலமாக தகவல்கள் வெளியாகி வந்தன.

    அதன்படி டேவிட் வார்னர் நடித்துள்ள திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கிரிக்கெட் மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்த வார்னர், தற்போது திரைபடங்களில் களமிறங்கி ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கும் இன்றைய போட்டியின் மூலம் டேவிட் வார்னர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
    • தொடக்க வீரர் வார்னர் 32 ரன்னில் களத்தில் உள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 100-வது டெஸ்ட்டில் களமிறங்கியுள்ளார். எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் டெஸ்ட் கிரிகெட்டில் 100 போட்டிகள் என்பது மிகப்பெரிய சாதனையாக அமையும். இதுவரை வெகுசிலரே அந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

    இந்நிலையில் இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கும் பாக்ஸிங் டே போட்டியில் டேவிட் வார்னர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

    முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 189 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் கிரீன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கி ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் வார்னர் 32 ரன்னில் களத்தில் உள்ளார்.

    இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7922 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 24 சதங்கள் அடங்கும்

    • 100-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது தொடக்க வீரர் மற்றும் 14-வது ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர்.
    • ஜனவரி 2020-க்குப் பிறகு இது அவரது முதல் டெஸ்ட் சதம்.

    ஆஸ்திரேலியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி கிரீன் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 68.4 ஓவரில் 189 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்தது. வார்னர் 32 ரன்னுடனும் லபுஸ்சேன் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வார்னர் தனது 25-வது டெஸ்ட் சதத்தையும், 45-வது சர்வதேச சதத்தையும் அடித்து, சமீபத்திய விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். ஜனவரி 2020-க்குப் பிறகு இது அவரது முதல் டெஸ்ட் சதம்.

    100-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது தொடக்க வீரர் மற்றும் 14-வது ஆஸ்திரேலியா வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார். போட்டிக்கு முன், வார்னர் 71.20 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 45.52 சராசரியுடன் 7922 ரன்கள் எடுத்திருந்தார்.

    • 8 ஆயிரம் ரன்னை எடுத்த 7-வது ஆஸ்திரேலிய வீரர் வார்னர் ஆவார்.
    • வார்னர் இரட்டை சதம் அடித்ததும் மைதானத்தில் இருந்து காயத்தால் வெளியேறினார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்து இருந்தது. வார்னர் 32 ரன்னும், லபுஷேன் 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. வார்னர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 78-வது ரன்னை எடுத்தபோது 8 ஆயிரம் ரன்னை தொட்டார். தனது 100-வது டெஸ்டில் (183 இன்னிங்ஸ்) வார்னர் 8 ஆயிரம் ரன்னை எடுத்து முத்திரை பதித்தார்.

    8 ஆயிரம் ரன்னை எடுத்த 7-வது ஆஸ்திரேலிய வீரர் வார்னர் ஆவார். ரிக்கி பாண்டிங் (13,378) ரன், ஆலன் பார்டர் (11,174), ஸ்டீவ் வாக் (10,927), கிளார்க் (8643), மேத்யூ ஹேடன் (8,625), ஸ்டீவ் சுமித் (8,543) ஆகியோர் வரிசையில் அவர் இணைந்தார்.

    வார்னர் அபாரமாக ஆடி சதமும் அடித்தார். அவர் 144 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். வார்னருக்கு இது 25-வது சதமாகும். அவர் ஆலன் பார்டரை தொட இன்னும் இரண்டு சதமே தேவை.

    லபுசேன் 14 ரன்னில் வெளியேறினார். அவர் இடத்துக்கு வந்த சுமித் வார்னருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுமித் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரை சதத்தை எடுத்தார்.

    36 வயதான வார்னர் சத்ததை இரட்டை சதமான மாற்றினார். இதன் மூலம் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தி உள்ளார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடிக்காத வார்னர் அதை இரட்டை சதமாக மாற்றி அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 3வது இரட்டை சதத்தை வார்னர் அடித்துள்ளார்.

    இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு அடிலெய்ட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 335 ரன்னும் (அவுட் இல்லை), 2015-ம் ஆண்டு பெர்த் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 253 ரன்னும் எடுத்து இருந்தார்.

    மேலும், ஜோ ரூட்டுக்குப் பிறகு தனது 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை வார்னர் படைத்துள்ளார். கடந்த ஆண்டு சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான தனது 100-வது டெஸ்டில் ரூட் 218 ரன்கள் எடுத்திருந்தார்.

    வார்னர் இரட்டை சதம் அடித்ததும் மைதானத்தில் இருந்து காயத்தால் வெளியேறினார். ஸ்டீவ் சுமித் 85 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    • ஸ்மித் சதத்தை நெருங்கிய வேளையில் 85 ரன்னில் அவுட் ஆனார்.
    • 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை வார்னர் படைத்தார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதலில் தென்ஆப்பிரிக்காவை பேட்டிங் செய்ய பணித்தார். இதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 68.4 ஓவர்களில் 189 ரன்னில் சுருண்டது.

    அந்த அணி தரப்பில் வெரைன் 52 ரன், ஜேன்சன் 59 ரன் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேமரூன் கிரீன் 10.4 ஓவர்கள் பந்து வீசி 3 மெய்டனுடன் 27 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 45 ரன் எடுத்திருந்தது. வார்னர் 32 ரன்னுடனும், லபுஸ்சேன் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    தொடர்ந்து 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து ஆடிய லபுஸ்சேன் 14 ரன்னில் ரன் அவுட் ஆனார். இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் ரன் சேகரிப்பில் கவனம் செலுத்தினர். நிதானமான ஆடிய வார்னர் முதலில் சதத்தை பதிவு செய்தார். இதற்கிடையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித் சதத்தை நெருங்கிய வேளையில் 85 ரன்னில் அவுட் ஆனார்.

    தனது சதத்தை அடித்த பின்னர் அதிரடி காட்டிய டேவிட் வார்னர் இரட்டை சதம் அடித்து அசத்தினார். தனது 100-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய வார்னர் அதில் இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்தார். 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை வார்னர் படைத்தார். இதற்கு முன் ஜோ ரூட் இந்த சாதனையை படைத்துள்ளர். இரட்டை சதம் அடித்த பின் வார்னர் காயம் காரணமாக 'ரிட்டயர்ட் ஹர்ட்' மூலம் வெளியேறினார்.

    அவர் 254 பந்தில் 16 பவுண்டரி, 2 சிக்சருடன் 200 ரன்கள் குவித்தார். இதற்கடுத்து களம் இறங்கிய க்ரீன் 6 ரன்னில் காயம் காரணமாக வெளியேறினார். இதையடுத்து டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் ஹேரி ஜோடி மேற்கொண்டு ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

    இறுதியில் அந்த அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இதுவரை 197 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணி தரப்பில் ஹெட் 48 ரன்னுடனும், ஹேரி 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    • இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றுவோம் என டேவிட் வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    • இந்தியாவில் நாக்பூர், டெல்லி, தர்மசாலா மைதானங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை.

    பிப்ரவரியில் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

    தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் மற்றும் 2-வது டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது. இதையடுத்து 3-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 4ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதன்பின்னர் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.

    2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் இரட்டை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். நீண்ட நாட்களாக தடுமாறி வந்த அவர், மீண்டும் ஃபார்மிற்கு வந்திருப்பதால் ஆஸ்திரேலிய அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிப்ரவரியில் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றுவோம் என டேவிட் வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் நாக்பூர், டெல்லி, தர்மசாலா மைதானங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. இந்த மைதானங்களில் நாங்கள் ஏற்கனவே விளையாடி இருக்கிறோம்.

    இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் மிகுந்த சவாலாக இருக்கும். இருப்பினும் இந்த தொடரை நாங்கள் போராடி வெல்வோம். தற்போது பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் ஆஸ்திரேலிய அணி நல்ல ஃபார்மில் உள்ளது. நாதன் லயன் போன்ற உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் எங்களிடம் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் தரவரிசை பட்டியல் இன்று அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 78.57 வெற்றி சதவீதத்துடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் 58.93 வெற்றி சதவீதத்துடன் இந்திய அணி 2ஆம் இடத்தை பிடித்துள்ளது.

    3-ம் இடத்தில் 53.33 சதவீதத்துடன் இலங்கை அணியும், 50 வெற்றி சதவீதத்துடன் தென்னாப்பிரிக்கா 4ஆம் இடத்திலும் உள்ளன.

    இதற்கு அடுத்தடுத்த இடங்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேச அணிகள் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

    முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணி இறுதிப்போட்டியில் பங்கேற்கும். அந்த வகையில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இறுதி போட்டியில் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ரிஷப் பண்ட் மற்றும் டேவிட் வார்னர் ஐபிஎல்லில் டெல்லி அணிக்காக விளையாடி வருகின்றனர்.
    • இப்போதைக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் விளையாட வாய்ப்பில்லை என தெரிகிறது.

    மெல்போர்ன்:

    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 30-ந் தேதி டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கீ நகருக்கு காரில் சென்றார்.

    அப்போது கார் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு கம்பியில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் ரிஷப் பண்ட் படுகாயத்துடன் உயிர் தப்பினார். முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றார். நெற்றியில் ஏற்பட்ட காயத்துக்கு உடனடியாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. கால் முட்டு மற்றும் கணுக்காலில் ரிஷப் பண்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டு தசை நார் கிழிந்து இருக்கிறது.

    குறிப்பாக முழங்காலில் ஏற்பட்டு இருக்கும் காயத்துக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டி உள்ளது. எனவே பாதிப்பின் தன்மையை அறிந்து அதற்கு தகுந்த உயர்தர சிகிச்சை அளித்து அவர் விரைவில் குணமடைய இந்திய கிரிக்கெட் வாரியம் துரித நடவடிக்கை எடுத்தது.

    இதனால் ரிஷப் பண்ட் மேல் சிகிச்சைக்காக டேராடூனில் இருந்து மருத்துவ வசதியுடன் கூடிய ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள விளையாட்டு மருத்துவ பிரிவின் தலைவரும், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் தின்ஷா பர்திவாலா நேரடி மேற்பார்வையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தேவைப்பட்டால் அவரை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆபரேஷனுக்கு பிறகே 25 வயதான ரிஷப் பண்ட் களம் திரும்புவதற்கு எத்தனை மாதங்கள் ஆகும் என்பது உறுதியாக தெரிய வரும். இப்போதைக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் விளையாட வாய்ப்பில்லை என தெரிகிறது.

    இந்நிலையில் ஐபிஎல்லில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் சீக்கிரம் குணமடைய வேண்டும் என ஐபிஎல்லில் டெல்லி அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் டேவிட் வார்னர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , நலமுடன் வாருங்கள் சகோதரர் ரிஷப் பண்ட். நாங்கள் அனைவரும் உங்கள் பின்னால் என அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

    • டெல்லி டெஸ்டின் போது வார்னருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது.
    • டெஸ்ட் தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளில் வார்னர் இடம்பெறமாட்டார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

    இந்திய அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்டில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது.

    இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் வருகின்ற மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். டெல்லியில் நடந்த டெஸ்டின்போது முகமது சிராஜ் வீசிய பந்தில் வார்னரின் கையில் காயம் ஏற்பட்டு தற்போது தீவிரமானது. அதற்காக உரிய சிகிச்சை பெற வார்னர் ஆஸ்திரேலியா திரும்ப இருக்கிறார்.

    டெஸ்ட் தொடரை தொடர்ந்து நடைபெறும் ஒருநாள் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் வார்னர் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

    டெல்லி டெஸ்டின் போது வார்னருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளில் வார்னர் இடம்பெறமாட்டார்.

    என்று தெரிவித்தது.

    வார்னர் விளையாடாத நிலையில், கவாஜாவுடன் தொடக்க ஆட்டக்காரராக யார் களமிறங்குவார்கள் என்பதை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால் வருகிற டெஸ்ட் போட்டிகளில் கவாஜாவுடன் தொடக்க வீரராக டிராவிஸ் ஹெட் மட்டுமே களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

    டெல்லி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில், வார்னர் பேட்டிங் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது, ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் ஹெட்டை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது.

    • ரிஷப் பண்டுக்கு விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியவில்லை.
    • வார்னர் ஏற்கனவே ஐபிஎல்-ல் ஐதராபாத் அணியை வழிநடத்தி கோப்பை வென்றுக்கொடுத்த அனுபவம் இருக்கிறது.

    மும்பை:

    2023-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி வரும் மார்ச் 31-ம் தேதியன்று அகமதாபாத்தில் லீக் போட்டிகள் தொடங்குகின்றன. இறுதிப்போட்டி மே 28-ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக அனைத்து அணிகளும் முதற்கட்ட பயிற்சிகளுக்காக ஏற்பாடு செய்து வருகின்றன. நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கனவே அகமதாபாத்தில் பயிற்சி முகாமை தொடங்கிவிட்டது.

    அனைத்து அணிகளும் வீரர்களை தயார்படுத்த தொடங்கிய சூழலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டனையே அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு கடந்த மாதம் கார் விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியவில்லை. எனவே அணியை வெற்றிகரமாக வழிநடத்தி செல்ல டேவிட் வார்னரை போன்ற அனுபவ வீரரை தேர்வு செய்துள்ளனர்.

    வார்னர் ஏற்கனவே ஐபிஎல்-ல் ஐதராபாத் அணியை வழிநடத்தி கோப்பை வென்றுக்கொடுத்த அனுபவம் இருக்கிறது. அணியின் துணைக்கேப்டனாக நட்சத்திர ஆல்ரவுண்டர் அக்ஷர் பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    • தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற போட்டியுடன் அவர் விடை பெற்றிருக்க வேண்டும்.
    • பேட்ஸ்மேனாக இருக்கும் நீங்கள் ரன்களை அடிக்கவில்லை என்றால் நீங்களாகவே உங்களது இடத்தை காலி செய்ய வேண்டும்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரன் குவிக்க திணறினார். முதல் டெஸ்டில் 2 இன்னிங்சிலும் சேர்த்து 11 ரன்னே எடுத்தார். 2-வது டெஸ்டில் முதல் இன்னிங் சில் 15 ரன் எடுத்த அவர் காயம் காரணமாக 3-வது டெஸ்டில் விலகினார்.

    இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெற வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்தால் அவர் தனது 100-வது போட்டியை மெல்போர்னில் விளையாடி இரட்டை சதம் அடித்த பிறகு ஓய்வு பெற்றிருக்க வேண்டும். சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் ஓய்வு பெறும் சிறந்த தருணத்தை அவர் தவற விட்டு விட்டார். அனைத்து வீரர்களும் இதைதான் விரும்புவார்கள். ஆனால் இந்த வாய்ப்பு வார்னருக்கு வராமல் கூட போகலாம். ஏனென்றால் அதற்கு இன்னும் 12 மாதங்கள் இருக்கிறது.

    தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, ஆஷஸ் தொடருக்கு முன்பாக நடைபெற உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் வார்னரை விளையாட வைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரும்பும் என்று கருதுகிறேன்.

    அதே போல் ஆஷஸ் தொடரின் கடைசி போட்டி வரை அவர் விளையாட வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் ரன்களை அடிக்கவில்லை என்றால் நீங்களாகவே உங்களது இடத்தை காலி செய்ய வேண்டும். இதுபோன்ற நிலைமை என்னை போன்றவர்களுக்கும் நடந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு வார்னர் இந்நேரம் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிட்னியில் நடந்த போட்டியுடன் அவர் விடை பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் மெல்போர்னில் தனது 100-வது போட்டியில் இரட்டை சதம் அடித்திருந்தார். சொந்த ஊரான சிட்னியில் தனது 101-வது போட்டியில் சிறப்பாக தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்திருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    36 வயதான டேவிட் வார்னர் 103 டெஸ்டில் 8,158 ரன்கள் எடுத்துள்ளார். 25 சதம், 34 அரை சதம் அடித்துள்ளார்.

    • இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் தொடர் மார்ச் 17-ந் தேதி தொடங்குகிறது.
    • இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

    ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. முதல் டெஸ்ட் மற்றும் 2-வது டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் மற்றும் விளையாடிய வார்னர் காயம் காரணமாக விலகி உள்ளார்.

    அடுத்ததாக ஒருநாள் தொடர் மார்ச் 17-ந் தேதி தொடங்குகிறது. இதில் காயம் காரணமாக விலகி இருந்த டேவிட் வார்னர் இடம் பெற்றுள்ளார். இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் டேவிட் வார்னர் மும்பையில் உள்ள ஒரு தெருவில் கிரிக்கெட் விளையாடியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    இதை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கிரிக்கெட் விளையாட அமைதியான இடம் கிடைத்துள்ளது என தலைப்பிட்டிருந்தார்.

    ×