என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dealers arrested"

    • மதுரையில் போலி வயர்களை விற்ற வியாபாரிகள் கைது செய்யப்பட்டார்.
    • அலுவலக உபயோகத்துக்காக மதுரை கிளாஸ்கார தெருவில் உள்ள எலக்ட்ரிகல் கடையில் வாங்கியுள்ளார்.

    மதுரை

    விழுப்புரம் மாவட்டம், அவரப்பாக்கத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 33). மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் அலுவலக உபயோகத்துக்காக பிராண்டட் நிறுவனத்தின் வயர்களை மதுரை கிளாஸ்கார தெருவில் உள்ள எலக்ட்ரிகல் கடையில் வாங்கியுள்ளார். அந்த வயர்களை பரிசோ தித்தபோது அவை போலி என்பது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அவர் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று பணத்தை திருப்பித் தரும்படி கேட்டார்.அவர்கள் தர மறுத்து விட்டனர். இதுகுறித்து வினோத் திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லோகேசுவரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தெற்கு ஆவணி மூல வீதியைச் சேர்ந்த தால்பர்ட் (39), அவரது சகோதரர் தீக்சித் (21) ஆகிய 2 வியாபாரிகளை கைது செய்தார்.

    • போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என கருங்கல்பாளையம், அந்தியூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஈரோடு-பவானி மெயின் ரோடு, அந்தியூர் சுற்றுவட்டார பகுதியில் தடை செய்ய ப்பட்ட போதை பொரு ட்களை விற்பனை செய்து கொண்டிருந்த சேலம் மாவ ட்டம் எடப்பாடி மூலப்பா றைக்காடு பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் முருகன் (வயது 30), அந்தியூர் நகலூர் ரங்கசாமி மகன் முத்து (53) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட போதை பொரு ள்களை போலீசார் பறிமு தல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதைப்போல் ஈரோடு வீரபத்திர தெரு, குட்டப்பா ளையம் ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த ஈரோடு வீரப்பன்சத்திரத்தை ேசர்ந்த சின்னக்கண்ணு மகன் கனகராஜ் (52), சென்னிமலை குட்டப்பா ளையம் துரைசாமி மனைவி துளசி மணி (63) ஆகியோர் மீது ஈரோடு வடக்கு, சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சங்கராபுரம் பகுதியில் சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
    • 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டியன் தலைமையிலான போலீசார் சங்கராபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொ ண்டிரு ந்தனர். தியாகராஜபுரம் ஏரிக்கரை அருகில் சாராயம் விற்ற அதே கிராமத்தை சேர்ந்த மீனாட்சி (வயது 40), மற்றும் வீட்டின் அருகில் சாராயம் விற்ற நெடுமானூர் கிராமத்தைச்சேர்ந்த முத்தம்மாள் (34), மொட்டையம்மாள் (58), சங்கராபுரத்தை சேர்ந்த ஏழுமலை (54) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின் அவர்களை கைது செய்து அவர்களிடம் 41 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து அழித்தனர்.இதே போன்று வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொ ண்டிருந்தனர். அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மூலக்காடு பகுதியை சேர்ந்த குமார் (48), கொடியனூர் வெள்ளையன் (40), சின்னபுளியங்கொட்டை பிரபு (31), ரங்கப்பனூர் ராஜேந்திரன்(55) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின் அவர்களிடம் இருந்து 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    ×