என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delhi assembly"

    • அமலாக்கத்துறை தன்னை கைது செய்ய வாய்ப்புள்ளது என கெஜ்ரிவால் கூறிவருகிறார்.
    • அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார்.

    டெல்லியில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கு 62 இடங்களும், பா.ஜ.க.வுக்கு 8 இடங்களும் உள்ளன.

    தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தி வந்தாலும் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க. முயற்சித்து வருகிறது என ஆம் ஆத்மி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

    இதற்கிடையே டெல்லி மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பியது. இதுவரை 5 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத கெஜ்ரிவாலுக்கு 6-வது முறையாக சம்மன் அனுப்பி 19-ம் தேதி ஆஜராகுமாறு கூறியுள்ளது.

    இந்நிலையில், டெல்லி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீதான விவாதம் நாளை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

    அமலாக்கத்துறை தன்னை கைது செய்யலாம் என கெஜ்ரிவால் கூறிவரும் நிலையில் , நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளதாக அறிவித்துள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக தனித்தனியாக போட்டியிடுகின்றன.
    • டெல்லியில் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் ஜீவன் ரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

    மூத்த காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

    முன்னதாக டெல்லியில் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கும் 'பியாரி திதி யோஜனா' திட்டத்தை காங்கிரஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.
    • டெல்லியில் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் ஜீவன் ரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வரும் ஜனவரி 13-ம் தேதி டெல்லியில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார் என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

    • டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக தனித்தனியாக போட்டியிடுகின்றன.
    • டெல்லியில் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    டெல்லியில் ஆட்சி அமைத்தால் ஜீவன் ரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

    இந்நிலையில், டெல்லியில் ஆட்சி அமைத்தால் 'யுவ உதான் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வருடத்திற்கு 8,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    • ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும்
    • பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கப்படும்.

    டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    டெல்லி தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகிறது.

    அவ்வகையில், ஜீவன் ரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் யுவ உதான் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வருடத்திற்கு 8,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

    இந்நிலையில், டெல்லியில் ஆட்சி அமைத்தால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    • டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.
    • 2020 தேர்தலில் 62 இடங்களில் வென்று ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியை பிடித்தது.

    டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பல ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்.

    கமலா நகர் வார்டில் இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்ட கபில் நாகர்,  டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவருடன் 100க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களும் பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங்கும் கலந்து கொண்டார்.

    2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி 62 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 8 இடங்களில் மட்டும் தான் வெற்றியை பெற்றது.

    • டெல்லி சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி நியமனம் தொடர்பாக ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது.
    • எதிர்க்கட்சி தலைவராக அதிஷியை ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர்.

    டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியானாலும் கடந்த 19ம் தேதி இரவுதான் முதல்வர் யார் என்பதை பாஜக அறிவித்தது.

    அதன்படி. ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ.-வை முதல்வராக அறிவித்ததை அடுத்து, ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    இதைதொடர்ந்து, டெல்லி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி நியமனம் தொடர்பாக ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவராக அதிஷியை ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர்.

    டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை எதிர்கொள்ள ஒரு வலுவான பெண் தலைமை தேவை. அதற்கு அதிஷி தகுதியானவர் என எம்.எல்.ஏக்கள் தங்களது கருத்தை முன்வைத்தனர். கூட்டத்தில் கெஜ்ரிவால் மற்றும் 22 எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.

    மேலும், அதிஷி இதன்மூலம் சட்டமன்றத்தில் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    • ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
    • நாட்டின் வரலாற்றில் இது போன்று ஒருபோதும் நடந்தது இல்லை.

    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24-ந் தேதி தொடங்கியது. அன்று எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். 2-வது நாளான நேற்று முன்தினம் அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர், பகத்சிங் புகைப்படங்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார்.

    இந்த நிலையில் டெல்லி சட்டசபை முன்பு அதிஷி தலைமையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டசபை வளாகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி அவர்கள் அம்பேத்கர் படத்துடன் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதுகுறித்து முன்னாள் முதல் மந்திரியும், எதிர்க் கட்சி தலைவருமான அதிஷி கூறியதாவது:-

    ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சட்டமன்ற வளாகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள். சபாநாயகரின் உத்தரவின் பேரில் எங்களை சட்டமன்ற வளாகத்துக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை.

    நாங்கள் (ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்) சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளோம். எனவே சட்டசபை வளாகத்தில் நுழைய கூட அனுமதிக்கமாட்டோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    நாட்டின் வரலாற்றில் இது போன்று ஒருபோதும் நடந்தது இல்லை. எங்களை எப்படி தடுக்க முடியும்? சபாநாயகரிடம் பேச முயற்சித்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பா.ஜ.க. எம்.எல்.ஏ. சதீஷ் உபத்யாய் கூறும் போது, 'சபை சட்டப்படி இயங்கும் எதிர்க்கட்சி கள் அவையில் கூச்சல், குழப்பங்களையும் ஏற்படுத்தினால் சபாநாயகர் ஒரு முடிவை எடுப்பார். சபாநாயகர் எடுக்கும் முடிவு இறுதியானது என்றார்.

    • ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஆம் ஆத்மி மந்திரிகளை பதவி நீக்கம் செய்யும்படி பாஜக வலியுறுத்தல்
    • அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் அவைக்காலவர்களால் வெளியேற்றப்பட்டனர்.

    புதுடெல்லி:

    டெல்லியில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாஜகவுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையிலான வார்த்தைப்போர் தீவிரமடைந்துள்ளது. சட்டசபையில் இந்த விவகாரம் எதிரொலித்தது. அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். நேற்று விடிய விடிய இரு கட்சிகளின் உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இரண்டாவது நாளாக இன்றும் சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஆம் ஆத்மி மந்திரிகள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். பதிலுக்கு ஆம் ஆத்மி உறுப்பினர்களும் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பாஜக எம்எல்ஏக்கள் அவைக்காலவர்களால் வெளியேற்றப்பட்டனர்.

    இதையடுத்து சட்டசபை வளாகத்தில் இரண்டாவது நாளாக இன்றும் பாஜக எம்எல்ஏக்கள் போராட்டத்தை தொடர உள்ளனர். 

    டெல்லி தலைமை செயலாளராக உள்ள அன்ஷு பிரகாஷை பதவியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என அம்மாநில அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. #DelhiAssembly #AamAadmi
    புதுடெல்லி:

    டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு பல்வேறு முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொறுத்தும் திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு கொண்டு வந்தது. ஆனால், துணை நிலை ஆளுநரின் முட்டுக்கட்டை காரணமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது.

    சமீபத்தில் டெல்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததை தொடர்ந்து பல திட்டங்களை ஆம் ஆத்மி அரசு விரைவு படுத்தியுள்ளது. தூசி படிந்து கிடந்த சிசிடிவி திட்டத்துக்கு கடந்த வாரம் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    ஆனால், அம்மாநில தலைமை செயலாளராக உள்ள அன்ஷு பிரகாஷ் சிசிடிவி திட்டத்தின் மீதான கேபினட் ஒப்புதல் முடிவு மிக அவசரமானது என குறிப்பு அனுப்பினார். இதன் காரணமாக அன்ஷு பிரகாஷை தலைமை செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அம்மாநில சட்டசபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

    சில மாதங்களுக்கு முன்னர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தன்னை தாக்கியதாக புகார் அளித்து அன்ஷு பிரகாஷ் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
    மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை போற்றும் வகையில் அவரது உருவப்படம் டெல்லி சட்டசபையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. #AbdulKalam
    புதுடெல்லி:

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை போற்றும் வகையில் அவரது உருவப்படம் டெல்லி சட்டசபையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால், சபாநாயகர், ராம் நிவாஸ் கோயல் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

    லால்பகதூர் சாஸ்திரியின் உருவப்படமும் திறந்து வைக்கப்பட்டது. விழாவில் இரு தலைவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். #AbdulKalam
    ×